search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபத்து"

    • உடல் எடை குறைக்கும் அறுவை சிகிச்சையில் அபாயங்கள் இருக்கின்றன.
    • அறுவை சிகிச்சை பற்றி பரவும் செய்திகளும் உயிரிழப்பும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    உடல் பருமனாக இருப்பவர்களை வேடிக்கையாகப் பார்த்து வியந்த காலம் மாறி, இன்று பெரும்பாலானோருக்கு அது பொதுப் பிரச்சனையாகிவிட்டது. வாழ்க்கை முறை மாற்றம், உணவுப்பழக்கம், வளரும் சூழல் என உடல் பருமனுக்கான காரணங்கள் நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. அதனால் இன்று உலகை ஆட்டுவிக்கும் பெரும் பிரச்னையாக உடல் பருமன் உருவெடுத்து நிற்கிறது.

    சாதாரணமாக உடல் எடையை குறைக்க மாத்திரை, டயட் என பல வழிமுறைகள் உண்டு. ஆனால், குறிப்பிட்ட உடல் எடையை தாண்டியவர்களுக்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வாக இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

    ஆனால், உடல் எடை குறைக்கும் அறுவை சிகிச்சையில் பல அபாயங்கள் இருக்கின்றன. மேலும் எல்லோருக்கும் இது பொருந்திப் போவதும் இல்லை. சில மருத்துவமனைகள் அந்த அபாயங்களை மறைத்து அனைவருக்கும் அறுவை சிகிச்சை செய்து காசு பார்ப்பதும் நடக்கிறது.

    உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை செய்து உடல் எடையைக் குறைக்க சோம்பல் படும் இளம் தலைமுறையை, இந்த அறுவை சிகிச்சை ஈர்க்கிறது. இச்சூழலில் அண்மைக்காலமாக இந்த அறுவை சிகிச்சை பற்றி பரவும் செய்திகளும், தற்போது ஏற்பட்டுள்ள உயிரிழப்பும் பெரும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.

     கொழுப்பை அகற்றும் சிகிச்சை முறைகள்

    கேஸ்ட்ரிக் பைபாஸ் அறுவை சிகிச்சையிலும் இரைப்பையின் அளவில் ஒரு பகுதி நீக்கப்பட்டு விடும். நாம் உண்ணும் உணவு சிறுகுடல்களில் தான் சத்துகளை உட்கிரக்கும். சிறுகுடலின் ஒரு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவதால், உணவின் மூலம் கிடைக்கக் கூடிய சத்துகள் குறைக்கப்படுகிறது. அதனால் எடை கட்டுக்குள் வரும்.

    உடலில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தேங்கியிருக்கும் கொழுப்பை நீக்க லைப்போசக்ஷன் (Liposuction) அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

    லைப்போசக்ஷன் சிகிச்சையின் மூலம் கை, வயிறு, இடுப்பு, தொடை, மார்புப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பு அகற்றப்படும்.

    அல்ட்ரா சவுண்ட் துணையுடனும், சாதாரண ஊசி மூலமாகவும் உடலில் உள்ள கொழுப்பு உறிஞ்சி எடுக்கப்படும்.

    பொதுவாக, உடல் பருமன் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு ஏற்கெனவே தைராய்டு, சர்க்கரைநோய், இதயம் தொடர்பான நோய்கள் இருக்கலாம். எனவே, அறுவை சிகிச்சைக்கு முன்பாக, அவரது உடல்நிலை தொடர்பான முழுமையான விவரங்களைக் கேட்டு, பரிசோதித்து அறிந்துகொள்ள வேண்டும்.

    யாரெல்லாம் செய்துகொள்ளலாம்?

    நாள்பட்ட டைப் 2 சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், இதயநோய், அதிகக்கொழுப்பு, தூக்கத்தில் மூச்சுத்திணறல், நீண்டநாள் செரிமானக் கோளாறுகள், சர்க்கரை நோய் போன்ற மருத்துவப் பிரச்னை உள்ளவர்களுக்கு பி.எம்.ஐ. அளவு 35-க்கு மேலும் இருந்தால் இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம். ஆனால், இந்த பி.எம்.ஐ அளவு குறைவாக இருக்கும் நிலையில், அழகுக்காக சிலர் இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்ள வருகிறார்கள்.

    உடல் எடையை குறைக்க, உடற்பயிற்சிக் கூடங்கள், உணவுக் கட்டுப்பாடுகள், நடைபயிற்சி, சைக்ளிங் போன்ற சில வழிகள் இருக்கின்றன. அவற்றை மேற்கொண்டு ஆரோக்கியமான முறையில் உடல் எடையை கட்டுக்குள் வைப்பதே சிறந்தது.

    • முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடுகிறார்கள்.
    • கடற்கரையை ஒட்டி கடல் நடுவே உள்ள ஆபத்தான பாறைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டில் பாலம், பத்ம நாபபுரம் அரண்மனை, வட்டக்கோட்டை, சங்கு துறை-சொத்தவிளை, கணபதிபுரம் உள்ளிட்ட கடற்கரைகள் என ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரை என பல இடங்கள் இருக்கும் கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, பல மாநிலங்களை சேர்ந்த வர்கள், வெளிநாட்டினர் சுற்றுலாவாக வருகிறார்கள்.

    சூரிய உதயம், அஸ்தமனம் இரண்டையுமே கன்னியாகுமரியில் பார்க்கலாம். குமரி மாவட்டத்துக்கு சுற்றுலா வருபவர்கள் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்க்க தவறுவதில்லை. அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடுகிறார்கள்.

    மேலும் கடலுக்கு நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்து மகிழ்வார்கள். அது மட்டுமல்லாமல் சிறந்த ஆன்மீக தலமாகவும் கன்னியாகுமரி திகழ்கிறது. இங்குள்ள பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கும் சுற்றுலா பயணி கள் செல்கின்றனர். கன்னியாகுமரியில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் இந்த மாதங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் மிக அதிக அளவில் இருக்கும். அதோடு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வருகையும் இந்த மாதங்களில் அதிகமாக இருக்கும்.

    இந்த ஆண்டும் சீசன் காலமான தற்போது கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. அதுவும் சபரிமலைக்கு செல்லக்கூடிய அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் கன்னியாகுமரியில் திரும்பிய இடமெல்லாம் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படுகிறது.

    அவர்கள் விவேகானந்தர் மண்டபத்தை காண படகு போக்குவரத்து தொடங்கு வதற்கு முன்பே படகு குழாம் முன்பு நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். பராமரிப்பு மற்றும் பாலம் பணிகள் காரணமாக திருவள்ளுவர் சிலையை பார்க்க சுற்றுலா பயணிகள் தற்போது அனுமதிக்கப்படுவதில்லை.

    சுற்றுலாவை ஆனந்தமாக கொண்டாடும் நோக்கத்தில் கன்னியாகுமரிக்கு வருபவர்களில் சிலர் ஆபத்தை உணராமல் செயல்படுவது தான் அதிர்ச்சிகரமான விஷயமாக உள்ளது. கன்னியாகுமரி கடலில் அவ்வப்போது ராட்சத அலைகள் எழும். காற்றின் வேகமும் அதிகமாகும்.

    இதனால் கடற்கரையை ஒட்டி கடல் நடுவே உள்ள ஆபத்தான பாறைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த பாறைகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறி சிலர் அங்கு சென்று விடுகிறார்கள்.

    அவ்வாறு தடையை மீறி செல்பவர்கள் பாறைகளில் அமர்ந்தும், நின்று கொண்டும் செல்போனில் செல்பி எடுக்கின்றனர். மேலும் சிலர் குரூப்பாக நின்று போட்டோ எடுக்கிறார்கள். அவர்கள் பாறைகளுக்கு செல்லும் வழியும், பாறைகள் மீது நிற்பதும் ஆபத்தானது என போலீசார் எச்சரித்துள்ள போதிலும் பலர் கண்டு கொள்வதில்லை.

    தற்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்று அதிகமாக அடித்து வரும் நிலையிலும் இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப, இளைஞர்கள் பலரும் ஆபத்தான பகுதிகளுக்கு சர்வசாதாரணமாக சென்று வருகின்றனர். அதனை தடுக்க அந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பை தீவிரப் படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    இந்த விஷயத்தில் போலீசார் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பது ஒரு புறம் இருந்தாலும், ஆபத்து என தெரிந்தும் அந்த பகுதிகளுக்கு செல்வோர் தங்களின் எதிர்காலம், குடும்பம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு கவனமாக செயல்படவேண்டும் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.

    • கல் குவாரிகளுக்கான ஏலத்தின்போது பங்கேற்க வந்த பா.ஜ.க. கவுல்பாளையம் ஊராட்சி தலைவர் கலைசெல்வன் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
    • நடவடிக்கை எடுத்து எங்களது உயிரும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும்.

    பெரம்பலூர

    பெரம்பலூரில் கடந்த திங்கட்கிழமை நடந்த 31 கல் குவாரிகளுக்கான ஏலத்தின்போது அதில் பங்கேற்க வந்த பா.ஜ.க. கவுல்பாளையம் ஊராட்சி தலைவர் கலைசெல்வன், அதை தடுக்க வந்த போலீசார், அரசு ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தி.மு.க.வினர் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட கவுல்பாளையம் ஊராட்சி தலைவர் கலைசெல்வன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் 30-ந்தேதி நடந்த கல் குவாரிகளுக்கான மறைமுக ஏலத்திற்கான ஒப்பந்தம் கோரி விலைபுள்ளி அளிக்க சென்ற என்னையும், எனது தம்பி முருகேசன், தொழில்துறை பிரிவு மாவட்ட தலைவர் முருகேசன் ஆகியோரை தி.மு.க.வினர் தடுத்தனர். பின்னர் அலுவலகத்திற்குள் புகுந்து எங்களிடமிருந்த ஒப்பந்த படிவத்தை பிடிங்கி கிழித்து எறிந்து சாதி பெயரை கூறி தகாத வார்த்தையால் திட்டி அரை நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கினர்.

    இதனால் நாங்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம். மேலும் தி.மு.க.வினர் எங்களது வீட்டுகளுக்கு வந்து தேடி வருகின்றனர். இதனால் நாங்கள் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறோம். தி.மு.க.வினர் எங்களை கொலை செய்யும் நோக்குடன் தொடர்ந்து எங்களை தேடிவருகின்றனர்.

    எனவே எங்களை தாக்கியவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து எங்களது உயிரும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குண்டாறு அணை கடந்த சில தினங்களுக்கு முன்பு முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
    • தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது குண்டாறு அணை. இந்த அணையானது கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டியுள்ளது. நடப்பா ண்டில் மட்டும் 2-வது முறை யாக நிரம்பி வழிந்து வருகிறது.

    இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குண்டாறு அணையில் நிரம்பி வழியும் தண்ணீரின் அளவு அதிகரித்து காணப்பட்டு வருகிறது. மேலும் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் அணையில் தண்ணீர் வழிந்தோடும் மேல்தளத்தில் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் குளித்து வருவதால் விபத்து ஏற்படும் நிலை காணப்படுகிறது.மேலும் அணைப்பகுதிக்குள் குதித்தும், 'டைவ்' அடித்தும் குளித்து வருகின்றனர். இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்ட ஒரு சில பேர் உயிரிழந்த சம்பவம் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ள நிலையில், மீண்டும் அது போன்ற சம்பவங்கள் நடை பெறாத வண்ணம் ஆபத்தான குளியலிடும் சுற்றுலா பணி களை தடுத்து நிறுத்த சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும், நிரம்பி வழியும் பகுதிக்கு யாரும் சொல்லாத வாறு தடுப்புகள் அமைத்து கண்காணிப்பதோடு அபராதம் விதித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஏ.டி.எம். மையத்தின் முகப்பில் வாறுகால் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
    • வயதானவர்கள் செல்லும்போது கால் தவறி கீழே விழும் நிலை நீடித்து வருகிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தின் கீழ் புறத்தில் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை ஓரம் இயங்கி வரும் எஸ்.பி.ஐ. வங்கியின் சார்பில் அதன் அருகே ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஏ.டி.எம். மையத்தின் முகப்பு பகுதியில் வாறுகால் அமைப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று முடிவு பெறாமல் இருக்கும் நிலையில் ஏ.டி.எம். மையத்திற்கு வாடிக்கை யாளர்கள் செல்வதற்காக மரத்தால் ஆன நடைமேடை அமைக்கப்ப ட்டுள்ளது. நடைமேடையும் தற்போது உடைந்து ஆபத்தான நிலையில் வாடிக்கையாளர்களை அச்சுறுத்தும் காட்சியளிக்கிறது. வயதானவர்கள் அதன் வழியே ஏறி செல்லும் பொழுது கால் தவறி கீழே விழும் நிலை நீடித்து வருகிறது. எனவே வாடிக்கை யாளரின் நலன் கருதி தரமான நடை மேடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • தினமும் நூற்றுக்கணக்கானோா் சிகிச்சைக்காக வருகின்றனா்.
    • ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் இந்த கட்டிடத்தின் அருகில் அமா்கின்றனா்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கானோா் சிகிச்சைக்காக வருகின்றனா். இங்குள்ள உள் நோயாளிகள் பிரிவு பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இந்தக் கட்டிடம் மிகவும் சேதமடைந்து மேற்கூரைகள் பெயா்ந்து எப்போது கீழே விழுமோ என்ற நிலையில் இருந்தது.

    இதையடுத்து பொதுப்பணித்துறையின் அறிவுரைப்படி 2016-ம் ஆண்டு முதல் இந்தக் கட்டடம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபா் 29--ந்தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், பொது சுகாதாரத் துறை இயக்குநா் ஆகியோா் இந்த சேதமடைந்த கட்டிடத்தை பாா்வையிட்டனா். அப்போது கட்டிடத்தை இடிக்க பொதுப்பணித்துறைக்கு பரிந்துரை செய்யுமாறு மருத்துவமனை நிா்வாகத்திடம் அறிவுறுத்தினா்.

    தொடா்ந்து கட்டிடத்தை இடித்து தருமாறு தாராபுரம் பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) உதவிப் பொறியாளருக்கு கடந்த ஆண்டு நவம்பா் 3-ல் வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் டி. ராஜலட்சுமி கடிதம் எழுதினாா். ஆனால் 10 மாதங்களாகியும் இதுவரை இந்த கட்டிடத்தை இடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் இந்த கட்டிடத்தின் அருகில் அமா்கின்றனா். இதனால் ஆபத்தான நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

    • குண்டாறு அணைக்கட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
    • அணையின் ஷட்டர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது.

    செங்கோட்டை:

    இயற்கை எழில் சூழ்ந்த தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அமைந்துள்ளது குண்டாறு நீர்த்தேக்கம். தென்மேற்கு, வடகிழக்கு மழையின் போது மாவட்டத்திலேயே முதன் முதலில் நிரம்புவது இந்த அணைதான். குண்டாறு அணைக்கட்டிற்கு நாள்தோறும் வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூங்கா, பச்சை பசேல் என்ற ரம்மியமான காட்சி, இயற்கை நெய்யருவி, 6-க்கும் மேற்பட்ட தனியார் அருவிகள் இப்பகுதியில் உள்ளதால் குண்டாறு அணைக்கட்டு பகுதியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் தற்போது படையெடுத்து வருகிறார்கள்.

    கடந்த சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் நேற்று சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் கடந்த 3 நாட்களளாக பொதுமக்களின் கூட்டத்தால் இப்பகுதி களைகட்டி காணப்பட்டது.

    இந்நிலையில் குண்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து உபரியாக வெளியேறும் பகுதியான அணைகளின் மதில் சுவர்களில் சில வாலிபர்கள் நீண்ட வரிசையில் உட்கார்ந்தும், அணைகளில் ஷட்டர்கள் திறக்க பயன்படுத்த நிறுவப்பட்டுள்ள தூண்கள் மேல் ஏறி டைவ் அடித்து குளித்து வருகின்றனர்.

    இந்த அணையின் ஷட்டர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது ஆபத்தை உணராமல் வாலிபர் டைவ் அடிப்பது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை தடுக்க துறையை சார்ந்த அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனனர்.இது தொடர்பாக சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

    தற்போது சீசனையொட்டி குற்றாலம், பழைய குற்றாலம், புலியருவி, ஐந்தருவிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் குண்டாறு நீர்த்தேக்கத்தைச் சுற்றி அதிகமான அருவிகள் உள்ளதாலும், கெடுபிடிகள் பெரிய அளவில் இல்லை. இங்கு அருவிகளில் நெரிசலின்றி குளிக்கவும், இங்கு ஓடும் ஆற்றில் நீராடவும் வசதியாக உள்ளது.

    பொதிகை மலையோரத்தில் ரம்மியமான சூழலில், வாகன இறைச்சலோ, போக்குவரத்து நெரிசலோ இல்லாமல் இப்பகுதி அமைந்திருப்பதால் குண்டாறு அணைக்கட்டு பகுதிக்கு வந்துள்ளோம். கடந்த சில நாட்களாக தொடர்ந்து இப்பகுதியில் மழைபெய்தது. இதனால் இங்குள்ள தனியார் அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதுடன் இப்பகுதி முழுவதும் தென்றலுடன் கூடிய ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    தற்போது இப்பகுதி ஊட்டியை போனறு காலநிலை நிலவுகிறது. இப்பகுதியில் போதிய பாதுகாப்பு வசதிகளை அரசு செய்து கொடுத்தால் சுற்றுலாப் பயணிகளை கூட்டம் மேலும் அதிகரித்து காணப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.




     


    • பொன்னியம்மாள் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.
    • ராமு (20) வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தையை கத்தியால் குத்தினார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (வயது 42). விவசாயி, இவருக்கு பொன்னியம்மாள் (35) என்ற மனைவியும் ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பொன்னியம்மாள் தனது மகன் மற்றும் மகள்களுடன் பழைய சிறுவங்கூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இயைடுத்து வேலு 2-வது திருமணம் செய்து கொண்டு கண்ணம்மாள் (30) மற்றும் மகன், மகள் ஆகியோருடன் ரங்கநாதபுரத்தில் வசித்து வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்னியம்மாள் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணச் செலவிற்கு பணம் வேண்டும் என தனது கணவர் வேலுவிடம் கேட்டுள்ளார். வேலு பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று அதிகாலை வேலுவின் மகன் ராமு (20) ரங்கநாதபுரத்திற்கு சென்றார். அங்கே வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தையை கத்தியால் குத்தினார். அப்போது வேலுவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனைக் கண்ட ராமு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனைத் தொடர்ந்து வேலுவை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலு சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து தப்பி ஓடிய ராமுவை வலை வீசி தேடி வருகின்றனர். சகோதரியின் திருமணத்திற்கு பணம் தராத தந்தையை மகன் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரு கிலோ எடைக்கு தினமும், 1.5 கிராம் புரோட்டீன் போதும்.
    • உடற்பயிற்சி செய்வோருக்கு புரோட்டீன் மிக அவசியம்.

    குடிமங்கலம் :

    சிக்ஸ் பேக்ஸ்' உடலுக்காக இன்றைய இளைஞர்கள் தங்களை வருத்திக் கொள்ள தயங்குவதில்லை.இதற்காக மணிக்கணக்கில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்கின்றனர்.தசைகளை சிறந்த முறையில் வலுப்பெற செய்ய, புரோட்டீன் சார்ந்த மருந்துகள் எடுத்துக் கொள்கின்றனர்.

    இது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் டாக்டர்கள். இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:- வயது மற்றும் எடைக்கு ஏற்ப தேவையான அளவு புரோட்டீனை எடுத்துக்கொ ண்டால் போதும்.ஒரு கிலோ எடைக்கு தினமும், 1.5 கிராம் புரோட்டீன் போதும். அதாவது ஒருவரின் எடை 50 கிலோ எனில் 75 கிராம் புரோட்டீன் போதும்.தொடர்ச்சியாக, உடற்பயிற்சி செய்வோருக்கு புரோட்டீன் மிக அவசியம். எளிதாக தசையை வலுப்பெற வைக்க உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் அதற்கு பின்னரும் ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவு முறையை பின்பற்ற வேண்டும். இத்துடன் சிறிது கார்போ ஹைட்ரேட், கொழுப்பு கொண்ட உணவு சாப்பிடலாம். தேவையின்றி அதிக புரோட்டீன் உட்கொள்ளும் போது சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.நாம் உண்ணும் உணவிலேயே புரோட்டீன் உள்ளது. காய்கறிகளில் புரோட்டீன் உள்ளவற்றை சாப்பிடலாம்.இதனால் எவ்வித பிரச்னையும் இல்லை. மாறாக அதிக புரோட்டீன் உள்ள உணவு உட்கொள்ளும் போது உடற்பயிற்சி செய்தாலும், செய்யாவிட்டாலும், சிறுநீரகம் பாதிப்படைவது உறுதி. உடற்பயிற்சி செய்பவர்கள் அதிக புரோட்டீன் தேவை என ஒரு சில புரோட்டீன் பவுடர்களை எடுத்துக் கொள்கின்றனர்.

    இது உடனடி பாதிப்பை ஏற்படுத்தா விட்டாலும் சிறிது காலத்துக்கு பின் பாதிப்பு ஏற்படும்.ஒரு சிலர் புரோட்டீன் உணவை தவிர வேறு எதையும் உட்கொள்வதில்லை. இதனால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு உயிருக்கு அபாயம் ஏற்படலாம் என்றனர்.

    • விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள் பலரும் பாறைக்குழிகளுக்கு சென்று குளிக்கின்றனர்.
    • விவரம் அறியாத நீச்சல் தெரியாத சிலர் இறங்கி குளித்து புதை சேறில் சிக்கிக் கொள்கின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள பாறைக்கு ழிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கறுகையில், திருப்பூரை சுற்றியுள்ள வீரபாண்டி, வெள்ளியங்காடு, போயம்பாளையம், சுகுமார் நகர், பாரப்பாளையம், பாப்பநாயக்க ன்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் பாறைக்குழிகள் உள்ளன. விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள் பலரும் இந்த பாறைக்குழிகளுக்கு சென்று குளிக்கின்றனர். குளிர்ச்சி யான நீரைக் கண்டதும் குளிக்க வேண்டும் என்ற ஆசையில், விவரம் அறியாத நீச்சல் தெரியாத சிலர் இறங்கி குளித்து புதை சேறில் சிக்கிக் கொள்கின்றனர். மேலும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் கொண்டவர்களும் பாறைக்குழிகளில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கி றார்கள். பாறை குழிகளுக்கு துணி துவைக்கச் செல்லும் பெண்களும் சில நேரங்களில் தண்ணீருக்குள் தவறி விழுந்து பலியாகின்றனர். அத்துடன் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மற்றும் குப்பைகள், இறைச்சி கழிவுகளை சிலர் கொட்டி செல்வதால் சுகாதரா சீர்கேடு ஏற்படுகிறது. சில நேரங்களில் கால்நடை களும் தாகம் தணிக்கச் சென்று அதில் விழுந்து சிக்கிக் கொள்கின்றன. திருப்பூரை சுற்றியுள்ள பாறைக்குழி களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பாறை குழிகளு க்கு பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். அல்லது முழுமையாக குழிகளை மூடி விட நடவடிக்கை வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து மேலும் பொதுமக்கள் கூறுகையில், திருப்பூர் நகராட்சி பகுதியில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிக அளவிலான பாறைக்குழிகள் உள்ளன. மழைக்காலத்தில் பெய்யும் மழையால் தண்ணீர் தேங்குவதால் நீரோடை போல் காட்சியளிக்கிறது. இன்னும் சில நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விட இருப்பதால் பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் சென்று குளிக்கிறார்கள். எளிதாக பாறைக்குழிகளில் ஆபத்தில் சிக்கிக்கொள்வார்கள். ஆகவே மாவட்ட நிர்வாகம் பாறைக்குழிகளை கணக்கெடுத்து நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- பாறைக்குழிகள் குறித்து அந்தந்த பகுதி மக்கள் புகார் அளித்தால் அது பற்றி மேயரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியே வெளியே அனுப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றனர்.

    • மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து சிதிலமடைந்து காணப்படுகிறது.
    • கோவிலின் வளாகத்திற்கு தினமும் சாமி தரிசனம் செய்ய பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குலசேகரப்பட்டி ஊராட்சி குறும்பலா பேரி கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் வளாகத்திற்குள் குறும்பலாபேரி கிராம மக்களுக்கு குடிநீர் சேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் சுமார் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டு அதன் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் அடியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் பில்லர்கள் அனைத்தும் கம்பிகள் வெளியில் தெரியும் வண்ணம் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுந்து சிதிலமடைந்து காணப்படுகிறது.

    கோவிலின் வளாகத்திற்கு தினமும் சாமி தரிசனம் செய்ய பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கிறார்கள். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு இடிந்து விழும் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய நீர் தேக்க தொட்டியை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறும்பலாபேரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மேட்டூர் வழித்தடத்தில் இயங்கும் ஒரு மினி பஸ் உடைந்த படிக்கட்டுகளுடன் இயங்கி வருகிறது.
    • கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் படிக்கட்டுகளில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    கடையம்:

    பாவூர்சத்திரத்திலிருந்து மேட்டூர் வழித்தடத்தில் இயங்கும் மினி பஸ் ஒன்று பராமரிப்பின்றி, உடைந்த நிலையில் உள்ள படிக்கட்டுகளு டன் ஆபத்தான நிலை யில் இயங்கி வருகிறது. சில மாதங்களாக இந்த நிலையிலே இயங்கி வருவதாக தெரிய வரு கிறது.

    பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் படிக்கட்டு களில் நின்றவாறு பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படு கிறது. இதனால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே போக்குவரத்துதுறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×