search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "threatens"

    • கல் குவாரிகளுக்கான ஏலத்தின்போது பங்கேற்க வந்த பா.ஜ.க. கவுல்பாளையம் ஊராட்சி தலைவர் கலைசெல்வன் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
    • நடவடிக்கை எடுத்து எங்களது உயிரும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும்.

    பெரம்பலூர

    பெரம்பலூரில் கடந்த திங்கட்கிழமை நடந்த 31 கல் குவாரிகளுக்கான ஏலத்தின்போது அதில் பங்கேற்க வந்த பா.ஜ.க. கவுல்பாளையம் ஊராட்சி தலைவர் கலைசெல்வன், அதை தடுக்க வந்த போலீசார், அரசு ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தி.மு.க.வினர் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட கவுல்பாளையம் ஊராட்சி தலைவர் கலைசெல்வன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் 30-ந்தேதி நடந்த கல் குவாரிகளுக்கான மறைமுக ஏலத்திற்கான ஒப்பந்தம் கோரி விலைபுள்ளி அளிக்க சென்ற என்னையும், எனது தம்பி முருகேசன், தொழில்துறை பிரிவு மாவட்ட தலைவர் முருகேசன் ஆகியோரை தி.மு.க.வினர் தடுத்தனர். பின்னர் அலுவலகத்திற்குள் புகுந்து எங்களிடமிருந்த ஒப்பந்த படிவத்தை பிடிங்கி கிழித்து எறிந்து சாதி பெயரை கூறி தகாத வார்த்தையால் திட்டி அரை நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கினர்.

    இதனால் நாங்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம். மேலும் தி.மு.க.வினர் எங்களது வீட்டுகளுக்கு வந்து தேடி வருகின்றனர். இதனால் நாங்கள் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறோம். தி.மு.க.வினர் எங்களை கொலை செய்யும் நோக்குடன் தொடர்ந்து எங்களை தேடிவருகின்றனர்.

    எனவே எங்களை தாக்கியவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து எங்களது உயிரும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    எங்கள் நாட்டின்மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்காவிட்டால் மீண்டும் அணு ஆயுதப் பாதைக்கு செல்வோம் என வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. #NorthKoreathreatens #NorthKorea
    பியாங்யாங்:

    சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேசினர். உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சம்மதம் தெரிவித்தார்.



    இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அவர் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும், வடகொரியா அணுகுண்டு சோதனையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையோ நடத்தவில்லை.

    கடந்த சில தினங்களுக்கு முன் டிரம்பை மீண்டும் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து கிம் ஜாங் அன் கடிதம் எழுதினார். அதன் எதிரொலியாக அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ வடகொரியாவுக்கு வந்து கிம் ஜாங் அன்-னை சந்தித்து பேசினார். விரைவில் இரண்டாவது முறையாக இருநாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில், அமெரிக்கா அரசு முன்னர் உறுதியளித்ததைப்போல் வடகொரியாவின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் எதுவும் இன்னும் விலக்கப்படவில்லை.

    இந்நிலையில், அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாவிட்டால் தங்கள் நாட்டின் ‘பியாங்ஜின்’ (pyongjin) கொள்கைப்படி அணு ஆயுத பலத்தை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு திரும்பப் போவதாக வடகொரியா எச்சரித்துள்ளது. #NorthKoreathreatens  #NorthKorea
    ×