search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபோதை"

    • யாராவது பணிக்கு வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு.
    • ஊழியர்கள் மீது மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு நடவடிக்கையாக மதுபோதையில் யாராவது பணிக்கு வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.

    இதன்பேரில் கேரள அரசு போக்குவரத்து துறை, கடந்த 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை துறை ஊழியர்களிடம் சோதனை நடத்தியது. அப்போது மது அருந்தியவர்கள், மதுபானம் வைத்திருந்தவர்கள் கண்டறியப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 74 நிரந்தர ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 26 தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை கேரள போக்குவரத்து துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கேரள போக்குவரத்து துறையில் மதுபோதையில் பணியாற்றிய மேலும் 97 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும், 40 தற்காலிக ஊழியர்களும் பணி நீக்கம் செய்துள்ளனர்.

    கடந்த 14ம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்களிடம் பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதன் நடவடிக்கையாக, மதுபோதையில் பணியாற்றிய ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்தனர்.

    • போதையில் இருந்த மணமகன் திருமணத்தை நடத்துவதற்காக வந்திருந்த பாதிரியாரிடமும், மணமகளின் உறவினர்களிடம் தகராறு செய்தார்.
    • இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து அங்கிருந்த சிலர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி அருகே தடியூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    திருமணத்தன்று காரில் இருந்து இறங்கிய மணமகன் மதுபோதையில் தள்ளாடியபடி மணமேடை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.

    இதை பார்த்த மணப்பெண் உள்பட அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் போதையில் இருந்த மணமகன் திருமணத்தை நடத்துவதற்காக வந்திருந்த பாதிரியாரிடமும், மணமகளின் உறவினர்களிடம் தகராறு செய்தார்.

    இதனை நேரில் பார்த்து கொண்டிருந்த மணமகள் அதிர்ச்சியடைந்தார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த மணமகள் 'தனக்கு இந்த திருமணமே வேண்டாம்' என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் திருமணம் நின்றது.

    இதுதொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து அங்கிருந்த சிலர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மணமகளின் குடும்பத்தினர், தங்களுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்றும் திருமணத்துக்காக பெரும் தொகை செலவு செய்ததால் மணமகனின் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் திருமணத்துக்காக செலவு செய்த தொகையை நஷ்டஈடாக தரவேண்டும் என்றனர்.

    இதை தொடர்ந்து நஷ்ட ஈடாக ரூ.6 லட்சம் கொடுக்க மணமகன் வீட்டார் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருமணத்துக்காக தயார் செய்திருந்த உணவு அனைத்தும் வீணானது.

    இதற்கிடையே மதுபோதையில் ரகளை செய்ததாக மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரள அரசு போக்குவரத்து துறை, கடந்த 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை துறை ஊழியர்களிடம் சோதனை நடத்தியது.
    • அதிரடி நடவடிக்கை கேரள போக்குவரத்து துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு நடவடிக்கையாக மதுபோதையில் யாராவது பணிக்கு வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.

    இதன்பேரில் கேரள அரசு போக்குவரத்து துறை, கடந்த 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை துறை ஊழியர்களிடம் சோதனை நடத்தியது. அப்போது மது அருந்தியவர்கள், மதுபானம் வைத்திருந்தவர்கள் கண்டறியப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 74 நிரந்தர ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 26 தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை கேரள போக்குவரத்து துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் போக்குவரத்து இடையூறாக நின்றுக் கொண்டும், படுத்துக் கொண்டும் இருந்தார்.
    • சுசீலாவை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள நகைக்கடையின் பின்புறம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு ஓட்டை போட முயற்சித்துள்ளனர்.

    கடையின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சி அடிப்படையில் பழைய போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த ஜெகநாதன், விக்னேஷ் மற்றும் கண்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் பழைய போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த சுசிலா (வயது55) என்பவர் மது போதையில் போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் போக்குவரத்து இடையூறாக நின்றுக் கொண்டும், படுத்துக் கொண்டும் இருந்தார். வாகன ஓட்டிகள் மீறி செல்ல முயன்றால் அவர்களை மிரட்டி வாகனத்தை தடுத்து நிறுத்தினார்.

    இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றன. விபரம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போச்சம்பள்ளி போலீசார் சுசீலாவை சமாதானம்பபடுத்த முயன்றனர். அப்போது எனது மகன்களான ஜெகநாதன், விக்னேஷ் மற்றும் எனது மருமகன் கண்ணன் ஆகிய 3 பேர் மீது பொய் வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்பியதாக வாதாடினார். மகன்கள் மற்றும் மருமகன் ஆகியோரை போலீசார் கைது செய்ததால் அவ்வப் போது மதுபோதையில் போலீஸ் நிலையம் சென்று வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டு வந்த நிலையில் போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் போக்கு வரத்துக்கு இடையூறாக செயல்பட்டார். பின்னர் சுசீலாவை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில் நிலைய நடைபாதையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் பல்லக்கு மாநகர் பகுதியில் மயிலை ரயில் நிலையம் எதிரே உள்ள கூவம் ஆற்றில் ஒருவர் மது போதையில் இறங்கி தரையில் அமர்ந்து கொண்டு நீண்ட நேரம் அங்கேயே இருந்தார்.

    இதுபற்றி அப்பகுதியில் வசிப்பவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று மயிலாப்பூர் தீயணைப்பு துறையினர் அந்த நபரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரிடம் விசாரணை செய்த போது, கள்ளகுறிச்சி மாவட்டம் கொக்கரபாளையம் நாவலூரை சேர்ந்த அமோஷ் என்பது தெரியவந்தது. சென்னையில் மந்தைவெளி ரெயில் நிலைய நடைபாதையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார்.

    இவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதால் இது போன்று நடந்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணை முடிந்து பின்பு அந்த நபரை அனுப்பி வைத்தனர்.

    • மதுபோதையில் ஓட்டிவந்த டிரைவர் திடீரென லாரியை ரெயில் தண்டவாளத்தில் நிறுத்தினார்.
    • மக்கள் கொடுத்த சிக்னலால் ரெயில் டிரைவர் சாமர்த்தியமாக விபத்தை தவிர்த்தார்.

    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரில் லாரியை ஓட்டிவந்த டிரைவர் ஒருவர், திடீரென லாரியை ரெயில் தண்டவாளத்தில் நிறுத்திவிட்டுச் சென்றார். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனே அந்த வழியாக வந்த ரெயிலுக்கு சிக்னல் கொடுத்தனர்.

    இதனால் சுதாரித்துக் கொண்ட டிரைவர் ரெயிலின் வேகத்தைக் குறைத்து சாமர்த்தியமாக விபத்தை தவிர்த்தார். தொடர்ந்து, தண்டவாளத்தில் இருந்து லாரி அப்புறப்படுத்தப்பட்ட பின் ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். விசாரணையில் லாரியை ஓட்டிவந்த டிரைவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. அதன்பின் டிரைவரை கைதுசெய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுபோதையில் தண்டவாளத்தில் லாரியை நிறுத்திய டிரைவரால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    • 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் பள்ளி மாணவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
    • எல்லைமீறி செயல்படும் ரவுடிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர். நகர் நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் 3 வாலிபர்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தாங்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்களால் அடித்து நொறுக்கினர்.

    இதில் ஒரு கார், 16 ஆட்டோ, 10 மோட்டார் சைக்கிள்கள் என மொத்தம் 27 வாகனங்கள் சேதம் அடைந்தன. இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது பற்றி உதவி கமிஷனர் தமிழ்வாணன், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது குடிபோதையில் எல்லை மீறி ரகளையில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த ரவுடிகளான விஜய் என்ற ஜாக்கி, லாரன்ஸ் மற்றும் 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் என்பது தெரியவந்தது. விஜய்க்கு 22 வயதும், லாரன்சுக்கு 23 வயதும் ஆகிறது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். விஜய் மீது கொலை முயற்சி வழக்கு உள்பட 12 வழக்குகளும், லாரன்ஸ் மீது கொலை மிரட்டல் உள்பட 3 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் ஒருவனை அழைத்துக்கொண்டு அவனுக்கும் மது வாங்கி கொடுத்து ரகளையில் ஈடுபடச் செய்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் பள்ளி மாணவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். லாரன்ஸ், விக்கி இருவரும் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடியபோது தவறி விழுந்தனர். இதில் இருவருக்கும் வலது கை மற்றும் இடது கால் முறிவு ஏற்பட்டது. பலத்த காயம் அடைந்த 2 பேரையும் போலீசார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    லாரன்ஸ், விஜய் இருவருக்கும் கை மற்றும் கால் பெரிய கட்டு போடப்பட்டு உள்ளது. இதனால் நடக்க முடியாத நிலையில் இருவரும் வீல் சேரில் அழைத்துச் செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். போதையில் மோட்டார்சைக்கிள்களை அடித்து நொறுக்கிய 3 பேரும், அப்பகுதியில் குடியிருப்பு பகுதியில் மது அருந்தியதை சுரேஷ் என்பவர் தட்டிக் கேட்டதால் ரகளையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது.

    இதுபற்றி போலீசார் விஜயிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அப்பகுதியில் உள்ள பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், காதலியை தன்னுடன் பேச விடாமல் பெண் வீட்டார் வீட்டில் அடைத்து விட்டதாகவும் தெரிவித்து உள்ளனர்.

    இதனால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு மதுபோதையில் வாகனங்களை சேதப்படுத்தினேன் என்றும் விஜய் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறும்போது, "ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தனர். எனவே எல்லைமீறி செயல்படும் ரவுடிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

    • போலீசார் அதிரடி நடவடிக்கை
    • தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    தக்கலை :

    தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து பாண்டியன் தலைமையில் போலீசார் நேற்று மாலை பழைய பஸ் நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராமன்பறம்பு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 29) மற்றும் சடையமங்கலம் பகுதியை சேர்ந்த சிவகுமார் (45) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் மதுபோதையில் வந்தனர். இருவரும் போலீசாரை கண்டதும் பைக்கை நிறுத்தி விட்டு தப்பியோட முயற்சிக்கவும் அவர்களை போலீசார் பிடித்து தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    பரிசோதனையில் இவர்கள் இருவரும் மது அருந்தி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றது உறுதியானது. பின்னர் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் வீதம் ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    • 4 பேரும் கும்பகோணம் காவேரி ஆற்றின் சக்கரப்படித்துறையில் அமர்ந்து மது குடித்தனர்.
    • ஜெயகிருஷ்ணாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெருமாண்டி பகுதியை சேர்ந்தவர் பாலகுரு (வயது 48). கும்பகோணம் கருணைகொல்லை தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன்(43). அதே பகுதியை சேர்ந்தவர்கள் முருகன் (45), ஜெயகிருஷ்ணா (49). இவர்கள் 4 பேரும் கூலி தொழிலாளிகள்.

    நேற்று முன்தினம் இரவு 4 பேரும் கும்பகோணம் காவேரி ஆற்றின் சக்கரப்படித்துறையில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது போதை குறைவாக இருந்ததால் மதுவில் சானிடைசர் மற்றும் போதை மாத்திரைகளை கலந்து குடித்தனர். இதில் வீரியம் அதிகமாகி பாலகுரு, சவுந்தரராஜன் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து இறந்தனர்.

    மேலும் அவர்களுடன் மது அருந்திய முருகன், ஜெயகிருஷ்ணா கதி என்ன ஆனது என்று போலீசார் விசாரித்து வந்தனர்.

    இதற்கிடையே சம்பவம் நடந்த அன்று முருகன், ஜெயகிருஷ்ணா ஆகியோர் போதையில் தள்ளாடியபடி சென்று கும்பகோணம் காந்தி பூங்கா அருகே சாலையோரம் சுருண்டு விழுந்து கிடந்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. உடனே அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று முருகன் இறந்தார். ஜெயகிருஷ்ணாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அவர் கண் முழித்தால் தான் நடந்த முழு விவரங்கள் தெரியும் என்று போலீசார் கூறினர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் ரத்தக்கறையும் இருந்ததால் அது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மதுவில் சானிடைசர் கலந்து குடித்து 2 பேர் நேற்று பலியான நிலையில் இன்று மேலும் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்றிரவு மது அருந்தியுள்ளனர். கையில் சானிடைசர் வைத்திருந்ததாக தகவல்
    • இன்று காலை காவிரி படித்துறையில் இறந்த நிலையில் உடல் மீட்பு

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பெருமாண்டி பகுதியை சேர்ந்தவர் பாலகுரு (வயது 50). கும்பகோணம் கர்ண கொல்லை கீழத் தெருவை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (40). இவர்கள் இருவரும் நண்பர்கள். கூலி வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு கும்பகோணம் சுவாமிமலை செல்லும் வழியில் சக்கரப்படித்துறை அருகே பாலகுரு, சவுந்தர்ராஜன் ஆகியோர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

    இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா (பொறுப்பு) மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர்.

    பின்னர் இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறும்போது, பாலகுரு, சவுந்தர்ராஜனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இருவரும் நண்பர்கள் என்பதால் கடந்த சில நாட்களாக கை கழுவும் சானிடைஷர் பொருட்களை வைத்து கொண்டு சுற்றி திரிந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதன் காரணமாக போதைக்காக மதுவில் சானிடைஷர் கலந்து குடித்தபோது அதன் வீரியம் அதிகரித்து இருவரும் இறந்திருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். இருந்தாலும் சம்பவ இடத்தில் சானிடைசர் போன்ற பொருட்கள் எதுவும் தென்படவில்லை.

    மதுவில் போதை அதிகமாவதற்காக சானிடைசர் போன்ற பொருட்கள் கலந்து குடித்து இறந்தனரா? அல்லது வேறு போதை மாத்திரை எதுவும் காரணமா? என்று தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இருவரது மரணத்திற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தந்தை குடித்துவிட்டு குடும்ப செலவிற்கு பணம் தருவதில்லை.
    • நான் சமோசா விற்பனை செய்து குடும்பத்தை பார்த்து வருகிறேன்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த முல்லை நகரை சேர்ந்தவர் ஜாபர் கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி பரானா திருமணம் ஆகி சுமார் 18 ஆண்டுகள் ஆகின்றன.

    இவர்களுக்கு 5 ஆண் பிள்ளைகள் உள்ளனர். ஜாபர் குடித்துவிட்டு மனைவி பரானாவிடம் தினந்தோறும் தகராறு செய்து வந்தார். இதனால் நேற்று மனம் உடைந்து பரானா மருந்து குடித்தார். அவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனை தொடர்ந்து ஜாபர் குடித்துவிட்டு மகன்களை அடித்ததாக கூறப்படுகிறது.

    இதனைக் கண்ட ஜாபருடைய 2-வது மகன் நபில் (வயது 13) என்பவர் அவனது சிறிய சைக்கிளில் போலீஸ் நிலையம் சென்றான். போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதியிடம் தனது தந்தை தினமும் குடித்துவிட்டு ரகளை செய்வதாக புகார் தெரிவித்தான்.

    தந்தை குடித்துவிட்டு குடும்ப செலவிற்கு பணம் தருவதில்லை. என்னுடைய அண்ணன் கபில் (15) சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார்.

    நான் இங்கு சமோசா விற்பனை செய்து குடும்பத்தை பார்த்து வருகிறேன். என்னுடைய 3 தம்பிகளை பள்ளியில் படிக்க வைத்து வருகிறேன்.

    தந்தை தினம்தோறும் குடித்துவிட்டு அம்மாவிடம் தகராறில் ஈடுபட்டு அடிப்பதால் மனவேதனை அடைந்த என்னுடைய அம்மா நேற்று தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்துவிட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    என் தந்தையை தயவுசெய்து கைது செய்து ஜெயிலில் அடையுங்கள் என கூறினான். புகாரின் பேரில் ஜாபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து அறிவுரை கூறி பேலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

      வடவள்ளி:

      குடிபோதையில் தொழிலாளி ஒருவர் செய்த அட்டகாசத்தால் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கிராம மக்கள் நேற்று இரவு விடிய, விடிய தூங்காமல் தூக்கத்தை தொலைத்தனர்.

      இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

      தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாளியூர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (வயது 55). மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

      பூபதி குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். தினமும் குடித்து விட்டு வந்து ரகளையில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார். நேற்று மாலையும் அவர் மதுகுடித்து விட்டு வந்தார். வழக்கத்தை விட அதிக போதையில் இருந்த அவர் அட்டகாசத்தின் உச்சிக்கே சென்றார்.

      முதலில் அந்த பகுதியில் உள்ள நடராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீட்டுக்கு சென்றார். வீட்டின் மேற்கூரையில் போடப்பட்டிருந்த ஓடுகளை பிய்த்து எறிந்து ரகளையில் ஈடுபட்டார். இதை பார்த்து அந்த பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் பூபதியை கண்டித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன்பிறகும் பூபதியின் அட்டகாசம் தொடர்ந்து கொண்டே இருந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் பூபதியின் தொல்லை அதிகரிக்கவே எரிச்சல் அடைந்த ஒருவர் அவசர போலீஸ் எண் 100-க்கு போன் செய்தார்.

      உடனே தொண்டாமுத்தூர் போலீசாரும், ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்களிடமும் பூபதி, சண்டித்தனத்தை காட்டினார். அவர் போதையில் இருந்ததால் போலீசார் எச்சரித்து வீட்டில் போய் படுக்குமாறு கூறி விட்டு சென்றுவிட்டனர். போலீசாரை கண்டதும் பூபதி நல்லபிள்ளையாய் மாறி வீட்டில் போய் படுத்துக் கொண்டார். போலீசார் சென்ற சில நிமிடங்களில் மீண்டும் வீட்டில் இருந்து வெளியே வந்தார்.

      அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ஏறினார். மரம் ஏறும் தொழிலாளி என்பதால் சர, சரவென மின்கம்பத்தில் ஏறிவிட்டார். இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தார். அவரை கீழே இறங்கும்படி கூறி சத்தம் போட்டனர். யார் சொல்வதையும் கேட்காமல் மின் கம்பத்தில் ஏறினார். சுதாரித்துக் கொண்ட பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக பூபதி தப்பினார். மின்கம்பத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு கீழே இறங்க மாட்டேன் என அடம்பிடித்தார்.

      மீண்டும் போலீசுக்கு தகவல் பறக்க போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் பூபதியிடம் நைசாக பேசி அவரை கீழே வரச் செய்தனர். அதற்குள் விடிந்து அதிகாலை 3 மணி ஆகிவிட்டது. பின்னர் பூபதியை போலீசார் தொண்டாமுத்தூர் போலீஸ்நிலையம் கொண்டு சென்றனர்.

      இந்த சம்பவத்தால் பூபதி மட்டுமல்லாமல் அந்த பகுதி மக்களும் விடிய, விடிய தூங்காமல் தவிப்புக்கு ஆளானார்கள். பூபதியிடம் போலீசார் இன்று காலையில் விசாரணை மேற்கொண்டனர். 

      ×