search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "throat"

    • பள்ளியில் படிக்கும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் 250 பேருக்கு இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • மாணவர்களுக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் போயம்பாளையம் ஸ்ரீ சரண் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் தோட்டத்துப்பாளையம் ஏ.பி.எஸ். அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம் ஏ.பி.எஸ். பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமை பள்ளி தலைவர் பட்டுலிங்கம் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் ஸ்ரீ சரண் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் முழுநேர காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் டாக்டர் பழனிசாமி மற்றும் டாக்டர் சுகன்யா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு, ஆலோசனைகளை வழங்கினார்கள்.

    இதில் பள்ளியில் படிக்கும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் 250 பேருக்கு இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒரு சில மாணவர்களுக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. முகாமில் ஏ.பி.எஸ். பள்ளி தாளாளர் சரவணக்குமார், நிர்வாக அலுவலர் யோகேந்திரன், பள்ளி முதல்வர் மணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த இலவச சிறப்பு மருத்துவ முகாம் ஏ.பி.எஸ். பள்ளியில் அடுத்தடுத்த சனிக்கிழமைகளிலும், அதைத்தொடர்ந்து மற்ற பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர்களின் நலன் கருதி நடத்தப்படும் என்று டாக்டர் பழனிசாமி தெரிவித்தார்.

    14 வயது சிறுமியின் தொண்டையில் உணவுக்குழாயை சுற்றி இருந்த 9 ஊசிகளை மருத்துவர்கள் மிக கவனமாக அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்துள்ளனர்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம் கிரிஷ்னாகர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கடும் தொண்டை வலி காரணமாக கடந்த திங்கள் அன்று அங்குள்ள நில் ரதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாய்பேச முடியாமல் இருந்த அந்த சிறுமியின் தொண்டை பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    தொண்டையில் உணவுக்குழாயை சுற்றிலும் 9 ஊசிகள் இருந்துள்ளன. இதனை அடுத்து, சுமார் 4 மணி நேரம் மிக கவனமாக அறுவை சிகிச்சை செய்து ஊசிகளை வெளியே எடுத்து சிறுமியை காப்பாற்றினர். எனினும், ஊசி எப்படி தொண்டைக்குள் சென்றது என்பது குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை.

    சிறுமியின் குடும்பத்தினர் இது தொடர்பாக எந்த தகவலும் கூற மறுக்கின்றனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், விளையாட்டுத்தனமாக அந்த சிறுமி ஊசியை விழுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. 
    திருக்கோவிலூர் அருகே தொண்டையில் மீன் சிக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருக்கோவிலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அருங்குறிக்கை கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 55), தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் சிலருடன் சித்தலிங்கமடம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு சென்றார்.

    பின்னர் அவர் ஏரியில் தூண்டில் மூலம் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது அண்ணாமலையின் தூண்டிலில் மீன் ஒன்று சிக்கியது. இதையடுத்து அந்த மீனை எடுக்க அவர் முயன்றபோது தூண்டிலில் சிக்கிய மீன் வரவில்லை.

    இதனால் அவர் அந்த மீனை தனது வாயில் கவ்விப் பிடித்துக் கொண்டு, தூண்டில் முள்ளை எடுக்க முயன்றார்.

    அப்போது அண்ணாமலை தான் வாயில் கவ்வியிருந்த மீனை, எதிர்பாராதவிதமாக விழுங்கி விட்டார். இதில் அவரது தொண்டையில் மீன் சிக்கிக் கொண்டது. இதனால் அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார்.

    இதனை பார்த்த அங்கிருந்த நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருடைய தொண்டையில் இருந்த மீனை டாக்டர்கள் எடுக்க முயன்றனர். ஆனால் சிறிதுநேரத்தில் அண்ணாமலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×