search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thirukovilur"

    • ஈசனை சனிபகவான் வழிபட்டு வரங்கள் பல பெற்றதாக வரலாறு.
    • சனிபகவான் மிகவும் வரப்பிரசாதியாய் வீற்றிருக்கிறார்.

    * சென்னை மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் அருளாட்சி புரிந்து வருகிறார், வட திருநள்ளாறு சனி பகவான். சனீஸ்வர பகவான் சாந்தமூர்த்தியாக காக வாகனத்தில் அமர்ந்து நீலாம்பிகையுடன் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். சனி பகவானின் தாக்கத்தில் இருந்து விடுபட இத்தலத்தில் பஞ்சமுக அனுமன், யக்ஞ விநாயகர் போன்றோரும் அருள்கின்றனர்.

    * திருக்கோவிலூரில் பெண்ணையாற்றின் எதிர்க்கரையில் உள்ளது அறையணிநல்லூர். இங்கு உள்ள பாடல்பெற்ற தலமான அறையணிநாதர் கோவிலின் பிராகாரத்தில் சனி பகவான் காகத்தின் மீது ஒரு காலை வைத்திருக்கும் நிலையில் தரிசனம் அளிக்கிறார்.

    * திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் உள்ளது, திருநெல்லிக்காவல் நெல்லிவனேஸ்வரர் கோவில். இங்கு அருளும் ஈசனை சனிபகவான் வழிபட்டு வரங்கள் பல பெற்றதாக வரலாறு. சனிபகவானால் ஏற்படும் தோஷங்கள் இத்தல ஈசனை வழிபட்டால் விலகும்.

    * முத்துப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் செல்லும் பாதையில் உள்ளது இடும்பாவனம் சிவன் கோவில். தன் பாவங்களைப்போக்கிக் கொள்ள இத்தலத்து ஈசனை சனி பகவான் வழிபட்டிருக்கிறார். ஆகவே இந்த தலமும் சனிதோஷப் பரிகாரத் தலமாக வழங்கப்படுகிறது.

    * ஈரோட்டில் இருந்து 39 கி.மீ. தூரத்தில் உள்ள கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்திலும் சனிபகவான் தனி சன்னிதி கொண்டு அருள்கிறார். இந்த இரண்டு தலங்களில் சனி பரிகாரம் செய்து கொள்ளலாம். சனிபகவான் அருள் கிட்டும்.

    * சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலூரில் உள்ளது அகஸ்தீஸ்வரர் ஆலயம். இத்தலத்தில் சனிபகவான் மிகவும் வரப்பிரசாதியாய் வீற்றிருக்கிறார். சனீஸ்வர பகவானே இத்தல இறைவனை பூஜித்து இங்குள்ள நள்ளார் தீர்த்தத்தில் நீராடி தன் தோஷம் நீங்கப் பெற்றதாக ஐதீகம். எனவே, இத்தலம் `வட திருநள்ளாறு' என அழைக்கப்படுகிறது. திருநள்ளாறுக்குச் சென்று பரிகாரம் செய்ய இயலாதவர்கள் இத்தல சனீஸ்வரனுக்கு அந்த பரிகாரங்களை செய்கின்றனர்.

    * சோழ மன்னன் ஒருவன் இப்பகுதியை அரசாண்டபோது சனிபகவானின் சஞ்சாரம் காரணமாக நாட்டில் கடும் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த மன்னன் சனிபகவானை நோக்கித் தவமிருந்து நாட்டில் பஞ்சம் வராத வரத்தைப் பெற்றான். அவன் வழிபட்ட சனிபகவான், மேகத்தைத் துளைத்து மழைபொழிய வைத்தாராம். அதை நிரூபிக்கும் வகையில் இங்குள்ள சனி பகவான் கையில் வில்லுடன் அற்புதமாக காட்சி தருகிறார்.

    * சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் ஆலயத்தில் சனி பகவான் விசேஷமாக அருள்கிறார். இவரை வழிபட்டால் சனி பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என்கிறார்கள்.

    * ஈரோடு மாவட்டம் குருமந்தூரில் உள்ளது திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயம். நாகை மாவட்டம் காரைக்காலில் உள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள சனி பகவானுக்குச் செய்வது போலவே எல்லா வழிபாடுகளும் இங்கும் செய்யப்படுகின்றன. இவரும் அனைத்து சனி தோஷங்களையும் நீக்கி நல்வாழ்வு மலர அருள்கிறார்.

    * விழுப்புரம் அருகே உள்ள கோவியலூர் வாலீஸ்வரர் ஆலயத்தில் சனிபகவான் தனிச் சன்னிதி கொண்டு அருள்கிறார். இவரை வணங்க சனி பாதிப்புகளில் இருந்து விலக்கு பெறலாம்.

    திருக்கோவிலூர் அருகே தொண்டையில் மீன் சிக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருக்கோவிலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அருங்குறிக்கை கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 55), தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் சிலருடன் சித்தலிங்கமடம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு சென்றார்.

    பின்னர் அவர் ஏரியில் தூண்டில் மூலம் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது அண்ணாமலையின் தூண்டிலில் மீன் ஒன்று சிக்கியது. இதையடுத்து அந்த மீனை எடுக்க அவர் முயன்றபோது தூண்டிலில் சிக்கிய மீன் வரவில்லை.

    இதனால் அவர் அந்த மீனை தனது வாயில் கவ்விப் பிடித்துக் கொண்டு, தூண்டில் முள்ளை எடுக்க முயன்றார்.

    அப்போது அண்ணாமலை தான் வாயில் கவ்வியிருந்த மீனை, எதிர்பாராதவிதமாக விழுங்கி விட்டார். இதில் அவரது தொண்டையில் மீன் சிக்கிக் கொண்டது. இதனால் அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார்.

    இதனை பார்த்த அங்கிருந்த நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருடைய தொண்டையில் இருந்த மீனை டாக்டர்கள் எடுக்க முயன்றனர். ஆனால் சிறிதுநேரத்தில் அண்ணாமலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    டி.வி. பார்க்க சென்ற மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரம் போலீஸ் சரகம் கடயம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் அந்த பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 22) வீட்டில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டி.வி. பார்க்க செல்வார். அவ்வாறு வீட்டுக்கு சென்று வந்த நிலையில் சுரேஷ், அந்த மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதனைக்கண்ட அவரது பெற்றோர் உடன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டுபோய் டாக்டரிடம் காண்பித்தனர். மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதை கேட்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே சிறுமியை மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து சிறுமியின் தாய் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையொட்டி சுரேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×