search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nose"

    • சேலம் பொன்னம்மாப்பேட்டை அண்ணா நகர் 4-வது கிராஸ் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பொன்னுத்தாயை தாக்கி அவரது மூக்கில் இருந்த தங்க மூக்குத்தியை பறித்து கொண்டு தப்பி ஓடினார்.
    • போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் பொன்னம்மாப்பேட்டை அண்ணா நகர் 4-வது கிராஸ் பகுதி சேர்ந்த வர் பெருமாள். மனைவி பொன்னுத்தாயி (வயது 95). இவருக்கு 7 மகன்கள் உள்ளனர்.

    அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வரு கின்றனர். இந்த நிலையில் பொன்னுத்தாயி தனது 6-வது மகன் ஆனந்தனுடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று மாலை ஆனந்தன் மற்றும் அவரது மனைவி பரிமளா ஆகியோர் வெளியே சென்று இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 47) என்பவர் வீட்டில் தனியாக இருந்த பொன்னுத்தாயை தாக்கி அவரது மூக்கில் இருந்த தங்க மூக்குத்தியை பறித்து கொண்டு தப்பி ஓடினார்.

    அப்போது பொண்ணு தாயின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை விரட்டிச் சென்று பிடித்து அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பள்ளியில் படிக்கும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் 250 பேருக்கு இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • மாணவர்களுக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் போயம்பாளையம் ஸ்ரீ சரண் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் தோட்டத்துப்பாளையம் ஏ.பி.எஸ். அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம் ஏ.பி.எஸ். பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமை பள்ளி தலைவர் பட்டுலிங்கம் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் ஸ்ரீ சரண் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் முழுநேர காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் டாக்டர் பழனிசாமி மற்றும் டாக்டர் சுகன்யா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு, ஆலோசனைகளை வழங்கினார்கள்.

    இதில் பள்ளியில் படிக்கும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் 250 பேருக்கு இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒரு சில மாணவர்களுக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. முகாமில் ஏ.பி.எஸ். பள்ளி தாளாளர் சரவணக்குமார், நிர்வாக அலுவலர் யோகேந்திரன், பள்ளி முதல்வர் மணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த இலவச சிறப்பு மருத்துவ முகாம் ஏ.பி.எஸ். பள்ளியில் அடுத்தடுத்த சனிக்கிழமைகளிலும், அதைத்தொடர்ந்து மற்ற பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர்களின் நலன் கருதி நடத்தப்படும் என்று டாக்டர் பழனிசாமி தெரிவித்தார்.

    • சேலம் டவுன் பகுதியில் போக்குவரத்து போலீஸ் ஏட்டாக இருப்பவர் பாண்டியன் இன்று காலை மோட்டார் சைக்கிளில் செல்போன் பேசிய படியே வந்தார்.
    • இதனைப் பார்த்த பாண்டியன் அவரை பஸ் நிலையம் அருகில் இப்படி செல்போனில் பேசிக்கொண்டு மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்லலாமா என்று கேட்டார். வாக்குவாதம் முற்றிலும் ஆத்திரமடைந்த கோகுல்ராஜ், பாண்டியன் மூக்கில் ஓங்கி குத்தினார் .

    சேலம்:

    சேலம் டவுன் பகுதியில் போக்குவரத்து போலீஸ் ஏட்டாக இருப்பவர் பாண்டியன். இவர் இன்று காலை பழைய பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சேலம் அம்மாபேட்டை சேர்ந்த கோகுல்ராஜ் என்பவர் மோட்டார் சைக்கிளில் செல்போன் பேசிய படியே வந்தார்.

    இதனைப் பார்த்த பாண்டியன் அவரை பஸ் நிலையம் அருகில் இப்படி செல்போனில் பேசிக்கொண்டு மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்லலாமா என்று கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது .வாக்குவாதம் முற்றிலும் ஆத்திரமடைந்த கோகுல்ராஜ், பாண்டியன் மூக்கில் ஓங்கி குத்தினார் .

    இதில் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் .பின்னர் சம்பவம் குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் ஏட்டு பாண்டியனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோகுல் ராஜனை சேலம் டவுன் போலீசார் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் போலீஸ் ஏட்டு கோகுல்ராஜ் சேலம் போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா சந்தித்து நலம் விசாரித்தார்.

    சேலம் மாநகரில் போக்குவரத்து போலீசாரை வாலிபர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சில பெண்களுக்கு மூக்கின் மேல் இருக்கும் பிளாக் ஹெட்ஸ் முகத்தின் அழகை கெடுக்கும். இன்று எளிய முறையில் மூக்கின் அழகை பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது, ரெகுலரான பேஷியல் கூட போதும். வீட்டிலேயே பேஷியல் செய்வது போல் எண்ணெய்ப் பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் கிரீமை மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும். மூக்கில் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் மூக்கின் பக்கவாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வேர்க்கும் வரை ஆவி பிடிக்க வேண்டும்.

    இப்போது வெளிச்சமான இடத்தில் அமர்ந்து, கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் ஹெட் ரிமூவரால் (பேஷியல் கிட்டில் இருக்கும்) மெதுவாக அழுத்த வேண்டும். இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட் ஹெட்ஸ் முழுவதுமாக நீக்கி விடலாம்.

    இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவினால் போதும். மூக்கிற்கு மேக்கப்போடும் போது நமது மூக்கு ஷேப்பை கவனித்து அதற்கு தகுந்தாற்போல் மேக்கப் செய்யவேண்டும். சப்பையான மூக்கு உள்ளவர்கள் முகத்திற்கு பவுண்டேஷன் மற்றும் பவுடர் அப்ளை செய்த பிறகு, முகநிறத்தை விடகொஞ்சம் ஒரு ஷேடு குறைவான டார்க் நிறத்தில் உள்ள ரூஜை மூக்கின் இரு ஓரங்களிலும், அதாவது இருபுருவத்தின் ஆரம்பங்களிலிருந்தும் மூக்கு அடி வரை, நேராக தடவ வேண்டும்.

    இப்போது நடுபக்கம் மட்டும் லைட்டாகவும், ஓரங்கள் பளிச்சென்று தெரியாதது போலவும் இருக்கும். சப்பை மூக்கு என்று பார்த்தால் தெரியாது. இதே போல் ஒரு பக்கம் சிறிது அகலமாகவும், ஒரு பக்கம் சரியாகவும் உள்ள மூக்கு தோற்றமுள்ளவர்கள் ஒரு பக்கம் மட்டும். நார்மலான மூக்கு ஷேப் உள்ளவர்களும் செய்து கொள்ளலாம், மூக்கு அழகாக தெரியும்.

    ×