search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 4.5 லட்சம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனை
    X

    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 4.5 லட்சம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனை

    • தமிழக அரசால் நடத்தப்பட்ட 6 ஆயிரம் முகாம்கள் மூலம் மக்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.
    • 7 லட்சம் பேர் பருவ மழை தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்றனர்.

    மிச்சாங் புயல் வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நோய் தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்க காய்ச்சல் முகாம்கள் நடத்தப் பட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் 4 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. தமிழக அரசால் நடத்தப்பட்ட 6 ஆயிரம் முகாம்கள் மூலம் மக்கள் பரிசோதனை மேற்கொண்டனர். 6 ஆயிரம் பேருக்கு காய்ச்சல், 70 ஆயிரம் பேருக்கு சளி, இருமல் பாதிப்பு இருந்து சிகிச்சை பெற்றதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    அக்டோபர் 29-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் மழைக்கால காய்ச்சல் முகாம் நடந்து வருகிறது. 7 லட்சம் பேர் பருவ மழை தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்றனர். மேலும் வருகிற 16, 23 மற்றும் 30-ந் தேதிகளில் காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×