search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fever Camp"

    • தமிழக அரசால் நடத்தப்பட்ட 6 ஆயிரம் முகாம்கள் மூலம் மக்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.
    • 7 லட்சம் பேர் பருவ மழை தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்றனர்.

    மிச்சாங் புயல் வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நோய் தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்க காய்ச்சல் முகாம்கள் நடத்தப் பட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் 4 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. தமிழக அரசால் நடத்தப்பட்ட 6 ஆயிரம் முகாம்கள் மூலம் மக்கள் பரிசோதனை மேற்கொண்டனர். 6 ஆயிரம் பேருக்கு காய்ச்சல், 70 ஆயிரம் பேருக்கு சளி, இருமல் பாதிப்பு இருந்து சிகிச்சை பெற்றதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    அக்டோபர் 29-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் மழைக்கால காய்ச்சல் முகாம் நடந்து வருகிறது. 7 லட்சம் பேர் பருவ மழை தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்றனர். மேலும் வருகிற 16, 23 மற்றும் 30-ந் தேதிகளில் காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    • முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் டாக்டர் குருசாமி தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.
    • சித்த மருத்துவ பிரிவு சார்பில் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

    சாத்தான்குளம்:

    தற்போது பருவமழை பெய்து வருவதால் மழைக்கால காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெற்று வருகிறது.

    அதன்படி தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகளின் துணை இயக்குனர் டாக்டர் பொற்செல்வன் உத்தரவின் பேரில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஐலின் சுமதி ஆலோச னையின் பேரில் சாத்தான்குளம் வட்டாரத்தில் வாலத்தூர், பொத்தகாலன்விளை, மனோ ரம்மியபுரம், சங்கரன் குடியிருப்பு, புத்தன்தருவை, பெரியதாழை ஆகிய 6 இடங்களில் மழைக்கால சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடைபெற்றது .

    முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் டாக்டர் குருசாமி தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்றனர். காய்ச்சல் போன்ற சிறு உபாதைகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில் ஏராளமான நோயாளிகள் பயன்பெற்றனர். சித்த மருத்துவ பிரிவு சார்பில் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

    முகாமில் சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ், கிராம சுகாதார செவிலியர் மாலதி, செவிலியர் பவித்ரா, மக்களை தேடி மருத்துவ திட்ட செவிலியர் ஷேர்லி, ஆஷா பணியாளர்கள் மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கிராம ஊராட்சி மூலம் ஓட்டு மொத்த துப்புரவு பணி செய்ய ஆலோசனைகள் வழங்கப்பட்டது .குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி குடிநீரில் குளோரின் அளவு பரிசோதனை செய்யப்பட்டது. வாலத்தூர், பொத்தகாலன் விளை கிராம பகுதிகளில் டெங்கு மஸ்தூர் பணியா ளர்கள் மூலம் கொசுப்புழு ஒழிப்பு பணியும் மேற்கொள் ளப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் இதே போன்று காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

    • பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடையே காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
    • மாணவர்களுக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தெரியவரும் பட்சத்தில் அதற்கான சிகிச்சையை வழங்க வேண்டும்.

    சென்னை:

    அனைத்து மாவட்ட சுகாதார இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு சில மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்பேரில் தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 1-ந்தேதி முதல் (நாளை) ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும்.

    குறிப்பாக, காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட கிராமங்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் இந்த காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும்.

    காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம்கள் நடத்தப்பட வேண்டும். பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடையே காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தெரியவரும் பட்சத்தில் அதற்கான சிகிச்சையை வழங்க வேண்டும். மறு உத்தரவு வரும் வரை காய்ச்சல் முகாம்களை தொடர்ந்து நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் விதமாக டெங்கு பாதிப்பை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து பொது சுகாதாரத்துறை உத்தரவுவிட்டுள்ளது.

    அதன்படி, டெங்கு பாதிப்பை கண்காணிக்க 2 இணை இயக்குனர்களும், 7 கூடுதல் இயக்குனர்கள் என மொத்தம் 9 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 45 சுகாதார மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அதிகாரிக்கும் 4 முதல் 5 மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    • மருத்துவ ரீதியாக காய்ச்சலின் தாக்கத்தை பொறுத்து 3 வகையாக பிரித்து உள்ளார்கள்.
    • ஏ-டைப் லேசான காய்ச்சல், பி-டைப் மிதமான காய்சல், சி-டைப் தீவிரமான காய்ச்சல்.

    சென்னை:

    பருவ காலங்களில் வழக்கமாக வைரஸ் காய்ச்சல் பரவும். ஆனால் தற்போது 'எச்.3 என்2' என்ற புதிய வகை வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி காய்ச்சலை உருவாக்குகிறது.

    இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இடைவிடாத இருமல், தொண்டை வலி, உடல் வலிகளாலும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

    இந்த காய்ச்சல் பரவுவது பற்றியும், கட்டுப்படுத்துவது பற்றியும் மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தியது.

    தமிழகத்திலும் இந்த வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருவது பொது சுகாதாரத்துறை ஆய்வில் தெரியவந்தது. இந்த வைரஸ் காய்ச்சல் சிறுவர்களையும், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்த முதியவர்களையும் அதிகம் பாதிக்கிறது.

    இந்த காய்ச்சல் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் வேகமாக பரவி வருவது தெரிய வந்திருக்கிறது. மருத்துவ ரீதியாக இந்த காய்ச்சலின் தாக்கத்தை பொறுத்து 3 வகையாக பிரித்து உள்ளார்கள். ஏ-டைப் லேசான காய்ச்சல், பி-டைப் மிதமான காய்சல், சி-டைப் தீவிரமான காய்ச்சல்.

    இதில் சி-டைப் காய்ச்சல் வயதானவர்களிடம் தான் காணப்படுகிறது. இவர்களுக்கு சுவாச பிரச்சினையையும் ஏற்படுத்துவதால் கட்டாயம் ஆஸ்பத்திரிகளில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படும்.

    சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் இருமல், உடல் வலி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி ஒன்றிரண்டு வாரங்கள் வரை சிரமப்பட வைப்பதால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாதிப்பு இருப்பவர்களை கண்டறிந்து உரிய சிகிச்சைகள் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

    அதன்படி இன்று காலை 8 மணிக்கு அனைத்து இடங்களிலும் முகாம்கள் தொடங்கியது. சைதாப்பேட்டை ரசாக் தெருவில் காய்ச்சல் சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    முகாம்களுக்கு வரும் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா? என்பதை மருத்துவ குழுவினர் உறுதி செய்தனர். காய்ச்சல் இருந்தவர்களுக்கு தேவையான மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    மற்றவர்களிடம் இந்த காய்ச்சல் வந்தால் அறிகுறிகள் எப்படி இருக்கும்? எப்படி முன்எச்சரிக்கையாக இருப்பது என்பது பற்றி ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    சாதாரணமாக ஜூரம், தலைவலி என்றாலே மாத்திரையை தேடக்கூடாது. உடலில் நீர்சத்து குறைவதால் கூட காய்ச்சல் வரும். பயணம் செய்யும் போதோ, அதிகமாக தண்ணீர் குடிக்காமல் இருக்கும் போதோ நீர்சத்து குறைந்து உடல் சூடாகி, சோர்வு ஏற்பட்டு காய்ச்சல் போல்தான் இருக்கும்.

    இதற்கும் நாமே மாத்திரை எடுத்துக் கொண்டால் பாதிக்கும். பொதுவாக எல்லா மாத்திரைகளுமே கல்லீரல் மற்றும் கிட்னி வழியாக கிரகித்து மலம் மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறும். அப்படி இருக்கும்போது கல்லீரலுக்கும், கிட்னிக்கும் நாமே ஆபத்தை தேடி கொடுத்தது போல் ஆகிவிடும்.

    பொதுவாக காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு இருந்தால் முதலில் நீர்சத்து நிறைந்த ஏதாவது உணவை எடுத்துக் கொண்டு வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். இவ்வாறு செய்யும்போது உடல் புத்துணர்ச்சி பெறும். இதில் சரியாகாவிட்டால் மாத்திரையை தேடலாம்.

    உடலில் கிருமித்தொற்று ஏற்பட்டாலே முதலில் காய்ச்சல் தான் வரும். எனவே காய்ச்சல் எதனால் வந்திருக்கிறது என்பதை அறிந்து மருந்து எடுத்துக் கொள்வது நல்லது என்று பொதுமக்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

    காய்ச்சல் முகாமை தொடங்கி வைத்த பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் ரைவஸ் காய்ச்சல் பரவலை தடுக்க 1000 இடங்களில் இன்று காய்ச்சல் முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவிற்கு மருந்து, மாத்திரைகள் கையிருப்பு உள்ளன. அதனால் பதட்டம் கொள்ள தேவையில்லை.

    காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, உடல்வலி உள்ளவர்கள் 3, 4 நாட்கள் ஓய்வு எடுத்துக்கொண்டால் குணமாகும். இந்த பாதிப்புடன் வெளியே வந்தால் இருமல் வரும்போதும், தும்மல் வரும்போதும் அதில் இருந்து வெளியே வரும் நீர்துவாளைகள் மூலம் மற்றவர்களுக்கு பரவக் கூடும். அதனால் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் கொரோனா மிதமான பாதிப்பு கூடி வருகிறது. ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்புதான். தமிழகத்தில் கொரோனா தொற்று கூடினாலும் பாதிப்பு பெரிதாக இல்லை. ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனா பாதிப்பு 2ஆக குறைந்தது. தற்போது 20, 25 ஆக உயர்ந்து இருக்கிறது. மிதமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வைரஸ்தான். அதனால் பதட்டம் அடைய தேவையில்லை.

    தொடர் கண்காணிப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தனிப்பட்ட ஒவ்வொருவரின் பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணிந்து வெளியில் சென்றால் நல்லது. காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தால் 380 நடமாடும் மருத்துவ வாகனம் பயன்படுத்தப்படும். தேவை ஏற்பட்டால் முகாம்கள் 1500ஆக அதிகரிக்கப்படும். இந்த வைரஸ் சமூக தொற்றாக மாறாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் ராணிப்பேட்டை பகுதியில் நடைபெறும் முகாம்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

    ×