search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலி சித்த மருத்துவர் எலும்புகளை சுடுகாட்டில் வீசி தாடையை வீட்டில் மறைத்து வைத்தார்
    X

    கைதான சித்த மருத்துவர் கேசவ மூர்த்தி.

    போலி சித்த மருத்துவர் எலும்புகளை சுடுகாட்டில் வீசி தாடையை வீட்டில் மறைத்து வைத்தார்

    • அவைகளை சேகரித்த போலீசார் பரிசோதனைக்காக தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்தனர்.
    • மூலிகை பொடி கொடுத்து கொலை செய்து வீட்டில் பின்புறம் புதைத்துள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தை சேர்ந்தவர் போலி சித்த மருத்துவர் கேசவமூர்த்தி (வயது 47).

    இவரிடம் அதே பகுதியை சேர்ந்த அசோக்ராஜ் (27) என்பவர் சிகிச்சைக்காக சென்றார்.

    அப்போது மூலிகை மருந்து கொடுத்து அசோக்ராஜூடன், கேசவமூர்த்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார். அப்போது அசோக்ராஜ் மயங்கி விழவே அவரை கொலை செய்து வீட்டில் புதைத்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கேசவமூர்த்தியை கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து நேற்று முன்தினம் கேசவமூர்த்தி வீட்டில் பள்ளம் தோண்ட தோண்ட எலும்பு துண்டுகள் கிடைத்தன.

    அவைகளை சேகரித்த போலீசார் பரிசோதனைக்கா தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில்

    கூறியிருப்பதாவது:-

    கைது செய்யப்பட்ட போலி சித்த மருத்துவர் கேசவமூர்த்தி ஓரினச்சேர்க்கை பழக்கம் உடையவர். இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருணம் ஆகியுள்ளது. குழந்தையின்மையால் இருவரையும் பிரிந்து வாழ்ந்தார். சென்னையில் கட்டிடப்பணி அசெய்து வந்த காலத்தில் நாட்டு வைத்தியர் ஒருவரிடம் உதவியாளராக பணியாற்றியதில் நாட்டுவைத்தியம், மூலிகை செடிகள் பற்றி தெரிந்து கொண்டு சொந்த ஊரான சோழபுரத்திற்கு வந்து தானும் மருத்துவர் தான் என கூறி சித்த வைத்தியம் பார்த்து வந்துள்ளார்.

    குறிப்பாக இளைஞர்களுக்கு போதை மற்றும் பாலுணர்வை தூண்டும் மருள் ஊமத்தை செடியால் தயாரித்த மூலிகைப் பொடியை கொடுத்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அசோக்ராஜீடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அசோக்ராஜ், தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்வதாக கூறியுள்ளார். எனவே இனி அவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட முடியாது என கருதிய கேசவமூர்த்தி, அசோக்ராஜை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கடந்த 13-ந் தேதி இரவு அளவுக்கதிகமாக மூலிகை மருந்தை கொடுத்து மயங்கிய நிலையில் அசோக்ராஜை கொலை செய்து உடல் பாகங்களை தனிதனியே அறுத்து வீட்டின் பின்புறம் , கழிவறை உள்ளிட்ட இடங்களில் புதைத்துள்ளார். தற்போது உடல்பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டு சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு சோழபுரத்தில் காணாமல் போன முகமது அனாசுடனும், கேசவமூர்த்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அசோக்ராஜ் போலவே முகமது அனாசும், ஒரு பெண்ணை திருமணம் செய்யும் முடிவை கேசவமூர்த்தியிடம் தெரிவித்தார். இதனால் கேசவமூர்த்தி ஆத்திரம் அடைந்து முகமது அனாசுக்கு மூலிகை பொடி கொடுத்து கொலை செய்து வீட்டில் பின்புறம் புதைத்துள்ளார்.

    பின்னர் சிறிது நாட்களுக்கு பின் புதைத்த இடத்தை தோண்டி எலும்புகளை சுடுகாட்டில் வீசிவிட்டு தாடை, எலும்பு, வெள்ளி செயின் இரண்டை மட்டும் எடுத்து வீட்டினுள் மறைத்து வைத்திருந்தார். இதனால் முகமது அனாஸ் மாயமான வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

    மேலும் கேசவமூர்த்தியிடம் சிகிச்சை பெற்ற நபர்கள், அவருடன் தொடர்பில் இருந்த நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு விசாரணை நடத்து வருகிறது. மேலும் கேசவமூர்த்தியிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×