search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayurvedic"

    ஆயுர்வேதத்தில் பல வீட்டு வைத்தியம் உள்ளது. நீங்கள் இயற்கையான முறையில் பொடுகு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண சில வழிகள் உள்ளன. அவற்றை விரிவாக பார்க்கலாம்.
    ஆயுர்வேதத்தில் பல வீட்டு வைத்தியம் உள்ளது. நீங்கள் இயற்கையான முறையில் பொடுகு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண சில வழிகள் உள்ளன. அவற்றை விரிவாக பார்க்கலாம்.

    1. வேம்பு

    வேம்பு ஆன்டிவைரல் பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. அதன் ஆண்டிமைக்ரோபியல் குணங்கள் பொடுகுக்கு எதிராக போராட உதவும். வீட்டில் வேப்ப எண்ணெய் ஒன்றை நீங்களே தயாரிக்கலாம் அல்லது கடைகளில் வாங்கலாம். இன்னும் நீங்கள் உங்கள் கூந்தலுக்கு நல்ல பயனுள்ள வேப்பம் மாஸ்க் தயார் செய்யலாம். வேப்பங்காய்களை அரைத்து பேஸ்ட் செய்து, ஒரு கிண்ணத்தில் தயிர், உப்பு சேர்த்து அதை தலையில் தேய்த்து 15-20 நிமிடங்களுக்கு விட்டுவிட்டு பின்னர் கழுவலாம். இந்த மாஸ்க் அதிசயங்களைச் செய்யலாம்.

    2. முட்டை வெள்ளை மற்றும் எலுமிச்சை சாறு

    முட்டை வெள்ளையில் ப்ரோட்டீன் நிறைந்திருக்கும், இது முடி உதிர்வதை தடுக்க அவசியம். வைட்டமின் சி கூந்தலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. வைட்டமின் சி மேலும் ரத்த ஓட்டத்தை மற்றும் கொலாஜன் அதிகரிக்க உதவுகிறது, இது மேலும் ஸ்கெல்ப்பை ஆரோக்கியப்படுத்துகிறது.
     
    3. நெல்லி

    நெல்லி வைட்டமின் சி, அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டவை, ஸ்கெல்பில் பொடுகு உருவாவதை தடுக்கும். கூடுதலாக, இது பொடுகு காரணமாக ஏற்படும் அரிப்பை தடுக்க உதவும். நீங்களே நெல்லி கொண்டு ஒரு முடி மாஸ்க் செய்ய முடியும். தண்ணீரில் நெல்லி தூள் சேர்த்து ஒரு பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். இப்போது, சுமார் 8-10 துளசி இலைகளை சிறிது தண்ணீரில் அரைத்து, நெல்லி பேஸ்டில் கலக்கவும். உங்கள் உச்சந்தலையில் இந்த பேஸ்ட் பயன்படுத்தி நன்கு மசாஜ் செய்யுங்கள், அது சுமார் 30 நிமிடங்கள் விட்டுவிட்டு பின்பு அலசவும்.

    4. வெந்தய விதைகள்

    முடி உதிர்தல் மற்றும் பொடுகை தடுக்க உதவுகிறது, இந்த வெந்தயம் மாஸ்க் பயன்படுத்துவது மூலம் பொடுகை நீக்கலாம். தண்ணீரில் மூன்று தேக்கரண்டி வெந்தயத்தை இரவில் ஊறவைக்கவும். அடுத்த நாள் காலையில் அதை நன்கு அரைத்து கொள்ளவும். இப்போது, எலுமிச்சை பழச்சாறு ஒரு தேக்கரண்டி சேர்க்கவும். இந்த பேஸ்டை வைத்து உச்சந்தலையில் மற்றும் முடி முனைகளில் நன்கு அப்ளை செய்யவும். 30 நிமிடங்கள் உங்கள் கூந்தல் மீது விட்டு விடுங்கள். ஒரு லேசான ஷாம்பூ கொண்டு உங்கள் கூந்தலை அலசுங்கள். இந்த மாஸ்க் உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
    இன்றைய சூழலில் பலதரப்பட்ட அயல்நாட்டு உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்கள் காரணமாக மலச்சிக்கல் ஏற்படுகிறது. மலச்சிக்கலை சரி செய்ய சித்த மருத்துவம் கூறும் சில அரிய குறிப்புகளை பார்ப்போம்.

    இன்றைய சூழலில் பலதரப்பட்ட அயல்நாட்டு உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்கள் காரணமாக நமது உடலில் பல நோய்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் மலச்சிக்கல்.

    மலச்சிக்கல் ஏற்பட காரணம்: பீட்ஸா, பர்கர் போன்ற அயல் நாட்டு உணவுகளை உண்பது, பால் சம்மந்தமான உணவுகளை அதிகம் உண்பது, பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு வகைகளை உண்பது, தண்ணீரை அதிகம் பருகாமல் இருப்பது போன்ற பல காரணங்களால் மலசிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு. அதே போல நாம் பிற நோய்களுக்காக சாப்பிடும் சில மருந்துகளின் பக்க விளைவுகளால் கூட மலசிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மலச்சிக்கலை சரி செய்ய சித்த மருத்துவம் கூறும் சில அரிய குறிப்புகளை பார்ப்போம்.

    குறிப்பு 1 : மலச்சிக்கல் நீங்க கடுக்காய் பொடி பெரிதும் உதவுகிறது. அதிகாலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் கடுக்காய் பொடியை சுடுதண்ணீரில் கலந்து தினமும் குடித்து வர மலச்சிக்கல் குணமாகும்.

    குறிப்பு 2 : மலச்சிக்கல் குணமாக திரிபலா பொடி ஒரு சிறந்த மருந்தாகும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும் அரைத்து உருவாக்கும் பொடியே திரிபலா பொடி. இந்த பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை தினமும் இரவில் அரை ஸ்பூன் சாப்பிட்டால் மலச்சிக்கல் சரியாகும்.

    குறிப்பு 3 : மலச்சிக்கல் தீர பப்பாளி மற்றும் அத்திப்பழம் பெரிதும் துணைபுரிகிறது. உலர்ந்த அத்தி பழத்தை இரவில் நீரில் ஊறவைத்து காலையில் உட்கொண்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். அதே போல உணவை உண்பதற்கு முன்போ அல்லது பின்போ பப்பாளி பழத்தை உண்டால் மலச்சிக்கல் குணமாகும்.

    குறிப்பு 4 : குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் மாலையில் ஐந்து முதல் பத்து உலர்ந்த திராட்சையை நீரில் மூன்று மணி நேரம் ஊறவைத்து அதை நீரில் நன்கு பிசைந்து கொடுத்தால் மலச்சிக்கல் விரைவில் நீங்கும்.

    குறிப்பு 5 : நார்சத்து அதிகம் உள்ளன உணவுகளை அதிகம் உட்கொண்டால் மலச்சிக்கல் தீரும். கொத்தமல்லி, மிளகாய், ஓமம், மிளகு போன்றவற்றில் நார் சத்து அதிகம் உள்ளது. ஆகையால் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. அதே போல பசலைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் நீங்கும்.
    ஹார்மோன் சூழ்நிலை மாறுவதால் கருப்பை கட்டிகள் போன்ற பாதிப்புகள் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. ஆயுர்வேதத்தில் இதற்கான தீர்வை அறிந்து கொள்ளலாம்.


    மகளிர் தம்மைக் கவனித்துக் கொள்ளாமல், நேரம் தவறி உணவு எடுத்துக் கொள்வதால், பாதிப்புகள் அதிகம் வருகின்றன. உணவைச் செரிக்கும் ஹார்மோன் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் அதன் வேலையைச் செய்யும். உணவைக் குறிப்பிட்ட பொருளாக (குளுக்கோஸ்) மாற்றி திசுக்களுக்கு அனுப்பும். நேரந்தவறும் போது உணவு உடைந்து மாறும் பொருள் வேறு வடிவமைப்பில் வேறு பொருளாக மாறுகிறது.

    அதனை திசுக்கள் ஏற்காது. அவை கழிவாக திரும்ப ரத்தத்தில் எடுத்துச்செல்லப்படும். இந்த நிகழ்வு தான் நடக்குமே தவிர திசுக்களுக்குத் தேவையான சக்தி கிடைக்காது. அதனால் உடல் சோர்வு அடையும், போஷாக்கு குறைபாடு நேரும். நோய் வரும். ஹார்மோன் சூழ்நிலை மாறுவதால் கருப்பை கட்டிகள் போன்ற பாதிப்புகள் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.

    மூளையின் முக்கிய அங்கம் ஹைப்போதாலமஸ் என்பது, அங்கு உருவாகும் ஹார்மோன்கள் உடலின் எல்லா ஹார்மோன்களையும் கட்டுப்படுத்தும். ஹைப்மோதாலமஸ் ஹார்மோன் எதிர்மறை எண்ணங்களில் பாதிக்கப்பட்டால் பிட்யூட்ரி சுரப்பு பாதிக்கப்படும். அதனால் கருப்பை ஹார்மோன்கள் பாதிக்கப்படும். அதனால் சீக்கிரம் மெனோபாஸ் வரலாம். கருப்பைக்குள்ளேயே கருக்கள் தங்கிவிடும் நிலை ஏற்படும். கரு உருவாகும் கருமுட்டை விரையில் அதிகம் உற்பத்தியாகி உருவாதல் நின்றுபோய் சீக்கிரம் மெனோபாஸ் வரும்.

    மாதவிலக்கு வராத நிலையில்

    எள் 1 தேக்கரண்டி கொள்ளுப்பொடி 1 தேக்கரண்டியை 1 தேக்கரண்டி வெல்லம் கலந்து, 11/2 டம்ளர் நீரில் கொதிக்கவைத்து 3/4 டம்ளர் ஆகக் குறைந்ததும் பருகலாம்.

    மாதவிலக்கின் போது உதிரப்போக்கு பல நாட்களுக்கு தொடர்ந்து வந்தால்

    4 டம்ளர் தண்ணீருடன் 1 டம்ளர் பால் கலந்து அத்துடன் தென்னம்பூ 1 பிடியை சேர்த்துக்கு கொதிக்கவைத்து 1 டம்ளராக குறைந்ததும் பருகலாம்.

    மாதவிலக்கின்போது கடுமையான வலி இருப்பின் அதை தவிர்க்க


    ப்தஸாரம் கஷாயம்
    தில குலாதாதி கஷாயம்
    ஹிங்குவசாதி சூரணம் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

    மூன்று மாதங்களுக்கு மேல் மாதவிலக்கு வராதநிலையில்

    கல்யாணகம் கஷாயம்
    தில குலாதாதி கஷாயம்
    ஸ்ப்தஸாரம் கஷாயம்
    ராஜப்ரவர்த்தினி குளிகா ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

    மாதவிலக்கு பிரச்சனை உள்ள மகளிர் பிரச்சனைகளுடன் சேர்ந்து மெலிந்த உடல்வாகுடன் இருந்தால்


    அமிர்தப்ரஷாக்ருதம்
    தாத்ரயாதி க்ருதம்
    ஸதா வரயாதி க்ருதம் ஆகியனவும்
    பருமனான உடல்வாகுடன் இருந்தால்
    வாரணாதி கஷாயம்
    காஞ்சரண குளிகா

    கனஸ தாவடி கஷாயம் ஆகியனவும் பயன்படுத்தலாம்.

    அதிகமான உதிரப்போக்கு தொடர்ந்தால்
    முசலி கடிரடி கஷாயம்
    திராசாஷாதி கஷாயம்
    அசோகா அரிஷ்டம்
    அசோகா க்ருதம்
    புஷ்ய நுக சூரணம் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

    கருமுட்டை கட்டிகள் தவிர ஏற்கனவே உடலில் வேறு நோய்கள் இருப்பின் மருந்து எடுக்கும் போது அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் செயல்படுத்தல் வேண்டும்.

    மருந்துகள் தவிர முறையாக உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி சரியான உணவு முறை, நேரந்தவறாமை, போன்றவற்றையும் சேர்த்துக் கைப்பிடித்தல் ஆரோக்கியம் மேம்படும்

    நோய் வந்தபின் இவற்றையேல்லாம் யோசிக்காமல் குழந்தை பருவத்திலிருந்தே இவற்றை அனுசரிக்கும் பழக்கத்தை கொண்டு வருவது பெற்றோரது கடமையாகும்.

    குழந்தைக்கு கல்வி செல்வம் ஆகியனவைப் பெற்றுத்தர அவையில் முந்தி இருக்க செய்யும் அளவு உடல் ஆரோக்கியம் பேணப்படுவது பற்றிய அறிவு விழிப்புணர்வு மிகவும் குறைவு. ஆகவே அதை ஒரு சமூக கடமையாக எடுத்துக்கொள்ளப்படுவது எதிர்கால இந்தியாவின் ஆரோக்கியத்துக்குத் தேவை!

    -டாக்டர். ஜெ. விஜயாபிரியா
    (போன் 0422-2367200, 2313188, 2313194)
    பொடுகுத் தொல்லையை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், தலைமுடியை இழக்க வேண்டி வரும். பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் 5 ஆயுர்வேத குறிப்புகளை பார்க்கலாம்.
    பொடுகுத் தொல்லையை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், தலைமுடியை இழக்க வேண்டி வரும். சிலருக்கு தலைக்கு ஷாம்பு போட்டு அலசிய பின், தலைச்சருமத்தில் வெள்ளையாக தோல் உரியும். இதற்கு ஷாம்புவில் உள்ள கெமிக்கல் ஸ்கால்ப்பில் உள்ள எண்ணெய் பசையை முழுமையாக வெளியேற்றிவிடுவது தான் காரணம். மேலும் பொடுகுத் தொல்லை இருந்தால், தலைமுடியின் மேல் வெள்ளை நிறத்தில் தூசி படிந்தது போன்று அசிங்கமாக காணப்படும். ஆனால் ஆயுர்வேதத்தில் பொடுகுத் தொல்லையில் முழுமையாக விடுதலைத் தரும் வழிகள் உள்ளது.

    * எலுமிச்சையில் உள்ள அமிலம், ஸ்கால்ப்பில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் மற்றும் தேங்காய் எண்ணெய் ஸ்கால்ப்பிற்கு ஈரப்பசையூட்டும். எனவே இந்த கலவையைக் கொண்டு பொடுகைப் போக்க முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    * 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில், சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

    * தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம் ஓர் அற்புதமான கலவை. இதனைக் கொண்டு ஸ்கால்ப்பை பராமரித்தால், வறட்சி நீங்குவதோடு, கற்பூரத்தில் உள்ள ஆன்டி-பாக்டீயரில் தன்மை ஸ்கால்ப்பில் பொடுகை ஏற்படுத்திய கிருமிகளை அழிக்கும். தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை பொடி செய்து சேர்த்து கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் அதனை இரவில் படுக்கும் முன் ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அலச வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.



    * ஆயுர்வேதத்தின் படி, வினிகர் பொடுகைப் போக்கும் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வினிகர் ஸ்கால்ப்பை ஈரப்பசையூட்டவும் செய்கிறது. ஒரு கப்பில் சிறிது வினிகரை எடுத்து, அதனை ஒரு பஞ்சு பயன்படுத்தி ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

    * வெந்தயம் மயிர்கால்களை வலிமையடையச் செய்வதோடு, ஊட்டமளித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் வெந்தயத்தில் உள்ள கசப்புத்தன்மை ஸ்கால்ப்பில் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுத்து, முடி உதிர்வதையும் தடுக்கும். இரவில் படுக்கும் முன் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி 45 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

    * மிளகுத் தூளும் ஓர் அற்புதமான பொடுகைப் போட்டும் பொருள். இதில் உள்ள காரத்தன்மை நுண்கிருமிகள் மற்றும் பூஞ்சைகளை அழித்து, பொடுகு ஏற்படுவதைத் தடுத்து, ஸ்கால்ப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். சிறிது வால் மிளகை பொடி செய்து, நீரில் அல்லது தேங்காய் எண்ணெயில் கலந்து ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.
    நாமாத்ம ஜவாத வியாதி என்று பக்கவாதத்தை ஆயுர்வேதம் வகைப்படுத்தும். ஆகவே வாதத்தை இயல்பு நிலையிலிருந்து மாற்றும் உணவு முறை, செயல் முறை ஆகியன பக்கவாதத்துக்கு காரணமாகின்றன.
    நாமாத்ம ஜவாத வியாதி என்று பக்கவாதத்தை ஆயுர்வேதம் வகைப்படுத்தும். ஆகவே வாதத்தை இயல்பு நிலையிலிருந்து மாற்றும் உணவு முறை, செயல் முறை ஆகியன பக்கவாதத்துக்கு காரணமாகின்றன.

    அத்துடன் மனநிலை, விபத்து ஆகியனவும் காரணமாகலாம். இவை தவிர சில, பல சூழ்நிலைகளாலும் பக்கவாதம் வரலாம். வாதம் நிலை மாறுவது இரண்டு காரணங்களால் வரலாம்.

    1.அதன் பாதை தடைபடுவது. 2, எலும்பு, தசை, ரத்தம் போன்ற எல்லா திசுக்களும் நலிந்து போவது ஆகியன அவை.

    பாதை தடைபடுவது:

    உணவு உண்ணாமை, இலகுவான, வறட்சியான உணவுகள் ஆகியன ரத்த திசுக்களிலுள்ள ப்ளாஸ்மாவை குறைத்து விடும். இதனால் திசுக்களின் மாற்றம் நிகழ்ந்து, பாதைகள் அடைபட்டு, வாதத்தின் இயல்புநிலை பாதிக்கப்படுகிறது.

    திசுக்கள் நலிந்து போவது:

    இச்சைகளை அடக்குவது, இருமல் தும்மல், ஏப்பம், ஆகியனவற்றில் தொடங்கி எல்லாவிதமான இச்சைகளை அடக்குவதாலும், செரிக்காத கழிவுகள் வெளியேறாத நிலை (ஆமம்) ஆகியன காரணமாக தடை ஏற்படலாம்.

    பக்கவாதத்தில் பித்தம், கபம், தோஷத்துடன் சேர்ந்திருந்தாலும் பாத தோஷமே முக்கிய பங்கு வகிக்கிறது. பக்கவாதம் வரும் போது, வாதத்தின் உலர்ந்த, குளிர்ந்த, இலகுவான, சூட்சமமான குணங்கள் அதிகமாகி, தசைகள் சுருங்குதல், பாதிக்கப்பட்ட இடத்தில் உடல் வெப்பம் குறைதல் ஆகியன நேரிடும்.
    நேர்மாறாக வாதத்தின் முக்கிய குணமான இயக்கம் குறையும், அதனால் உடலில் அனிச்சை செயல்கள் நடைபெறாமல் பாதிக்கப்படுகிறது.

    வருமுன் காக்க

    பரம்பரையாக இந்நோய் வந்த குடும்பத்தில் உள்ளவர்கள், அதிக மன சோர்வு, மன அழுத்தம் தரும் வேலை, தொழில் செய்பவர்கள் போன்றோர் கீழ்க்கண்டவற்றை கடை பிடித்தால் இந்நோயிலிருக்கு தப்பிக்கலாம்.

    * உணவில் உளுந்து, கொள்ளு, வெங்காயம், பூண்டு, இஞ்சி, முள்ளங்கி, பூசணி, பச்சைப்பயறு ஆகியவற்றை தவறாமல் உண்பது.
    * மாம்பழம், திராட்சை, மாதுளை ஆகிய பழங்களை அடிக்கடி எடுப்பது.
    * அதிக நார்ச்சத்துள்ள, குறைவான கொழுப்பு சத்துடைய உணவுகளை உண்ணல்
    * ரசாயனம் எனப்படும் மருந்துகளை எடுத்துக் கொள்ளல் * உயர் ரத்த அழுத்தத்தை குறைத்தல்

    *  உடல் எடை, கொழுப்பின் அளவு ஆகியவற்றை குறைத்தல் * தகுந்த உடற்பயிற்சி * அதிக எண்ணெய், அதிக கொழுப்பு சத்து மிக்க உணவுகளை தவிர்ப்பது, அதிக காரம், அதிகத்துவர்ப்பு உணவுகளை தவிர்ப்பது. * பார்லி, பட்டாணி, கடலை பருப்பு ஆகியவற்றை தவிர்ப்பது. * அதிக உடற்பயிற்சி, அடிக்கடி உண்ணாநோன்பு ஆகியவற்றை தவிர்த்தல் * இரவில் தூக்கம் கெடாமல் இருப்பது * இயற்கையாக வரும் இச்சைகளை அடக்குவது. * புகை, மது ஆகியவற்றை தவிர்ப்பது * மருத்துவ ஆலோசனை பெறாமலேயே, ஏற்கனவே எடுத்து கொண்டிருக்கும் மருந்துகளை நிறுத்துவது என்பன நோய் வருவதை தடுப்பன.

    சிகிச்சை முறைகள்

    நோய் வருவதற்கான காரணங்களை அறிந்து, அவற்றை தடுப்பது, விபத்தை தடுப்பது.

    உடலை, உள் உறுப்புகளை சுத்தம் செய்வது ஆகியன மேற்கொள்ளப்படும்.
    1. எண்ணெய் தேய்ப்பது (மகாநாராயண தைலம், சஹஸ்ராதி தைலம், தன்வந்த்ரம் தைலம், கார்ப்பாச அஸ்தி யாதி தைலம், ஷீரபலா தைலம், பலா தைலம் மஹாம்ஈஷ தைலம், பிரபஞ்சன தைலம்.

    2. ஸ்வேதனம் (வியர்வை உண்டாக்கல்)
    நவரா அரிசி, பலா மூலம், அஸ்வகந்த மூலம், பால் ஆகியன பயன்படுத்தப்படும்.

    3. வயிறு சுத்தப்படுத்துதல் (விரையேச்சனம்)
    வாய் வழியாக மருந்து தருதல்
    மருந்தூட்டப்பட்ட விளக்கு எண்ணை அல்லது அவிபத்திகார சூரணம் அல்லது திரிவ்ரத லேகியம் ஆகியவற்றை உபயோகித்தல்.

    4. ஆசன வழியே எனிமா கொடுத்தல் (வஸ்தி)
    மாத்திரை வஸ்தி (நாராயண தைலம் பயன்படுத்தி 7-14 நாட்கள் கஷாய வஸ்தி 15 நாட்கள்.
    ஓரண்ட மூலவதம் - 480 மி, தைலா - 240 மி, தேன் - 240 மி, கல்கா - 30 கிராம், உப்பு - 15 கிராம்.
    ஷீரவஸ்தி 350 - 500மி, 7-14 நாட்கள்.

    5. மூக்கின் வழி நஸ்யம்
    பழைய நெய், நாராயண தைலம், ஹீரபலா தைலம் 6-8 சொட்டுகள் இரு மூக்கிலும்

    ஸ்ரோவஸ்தி
    தலை மீது தொப்பி போன்று அமைத்து அதில் இருந்து மருந்தூட்டப்பட்ட எண்ணை சீராக ஒழுகும் சிகிச்சை (7 நாட்கள் தினமும் 45 நிமிடம்)
    நாராயண தைலம், ஹீரபலா தைலம், சந்தனபலா லாஷிரி தைலம்.

    ஷிரோதாரா
    தலை மீது மருந்தூட்டப்பட்ட தைலம் ஒழுகு வைத்தல் (21 நாட்கள் - தினமும் 45 நிமிடம்)
    நாராயண தைலம், சந்தன பலா, ஷீதாதி, தைலம், ஷீபலா தைலம்
    மருந்துகள் (மருத்துவரின் ஆலோசனைப்படி)
    மஹாராசனாதி கஷாயம், காந்தர்வ ஹஸ்நாதி கஷாயம், மானஸ மித்ர வடகம், அஸ்வ கந்தாரிஷ்டம், ஷீரபலா தைலம்.
    முதுகுத்தண்டின் வட்டுக்களின் இடையே உள்ள திரவம் குறைந்து சுருங்கி விடுகிறது. கழுத்தில் ஏற்படும் காயங்கள் காரணமாக இந்நோய் வரலாம். இதற்கு ஆயுர்வேத சிகிச்சை முறையை பார்க்கலாம்.
    கழுத்து வலி வயதாகும்போது, முதுகுத்தண்டு, கழுத்து இவற்றை இணைக்கும் எலும்புகள், கார்டிலேஜ் எனப்படும் ஜவ்வுகள் ஆகியன பழுதடையும், கிழியும் நிலை ஏற்படலாம்.

    முதுகுத்தண்டின் வட்டுக்களின் இடையே உள்ள திரவம் குறைந்து சுருங்கி விடுகிறது. கழுத்தில் ஏற்படும் காயங்கள் காரணமாக இந்நோய் வரலாம், மதுப்பழக்கம் காரணமாக வரலாம்; பரம்பரை காரணமாக வரலாம்; கழுத்தை ஒரே நிலையில் அதிகநேரம் வைத்திருக்க வேண்டிய நிலையில் உள்ள தொழில் காரணமாக வரலாம்.

    65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவீத மக்களுக்கு இந்நோய் இருப்பதை கழுத்து எக்ஸ்ரேக்கள் காட்டுகின்றன. பலருக்கு இந்நோய் அதிக தீவிரமாகும் வரை, அறிகுறிகள் ஏதும் தென்படாது. திடீரென பாதிப்பு வரும். வலியும், இறுக்கமும் உண்டாகும்.

    முதுகுத்தண்டுக்கும், அதனுடே பயணிக்கும் நரம்புகளுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைவதால், நரம்போ, முதுகுத்தண்டோ அழுத்தப்படுவதால் வரலாம். அவ்வாறு அழுத்தப்படும்போது, கை, கால், தோள், பாதம் ஆகிய உறுப்புகளில் நடுக்கம், உணர்ச்சியின்மை, வலுவிழத்தல் ஆகியன நேரலாம். நடக்கச் சிரமம் ஏற்படும். உறுப்புகளுக்கிடையேயான தொடர்பு இணைப்பு பாதிக்கப்படலாம். சிறுநீர், மலம் கழிப்பதில் கட்டுப்பாடு இழக்க நேரிடும்.

    முதுகுத்தண்டின் ஒவ்வொரு கண்ணிக்கும் இடையே உள்ள வட்டு ஆனது அதிர்வைத் தடுக்கும் மெத்தை போல இயங்கும். 40 வயதாகும்போது, பெரும்பாலானவர்களின் முதுகுத்தண்டு வட்டு உலர்ந்து, சுருங்கி ஒரு வட்டு உடன் மற்றொன்று உராய்ந்து போகத் தொடர்கிறது.வட்டு இன் வெளிப்புறம் பாதிக்கப்படலாம். வெடிப்புகள் உண்டாகி, எலும்பு உப்பி விடுவோ அல்லது டிஸ்க் இடையே உள்ள ஜவ்வு இடம் பெயர்வதோ நடக்கிறது.

    அவை நரம்பு/முதுகுத்தண்டை அழுத்த நேரலாம். டிஸ்க் தேய்மானம் காரணமாக, நமது நோய் எதிர்ப்புத் திறன் சக்தியானது, முதுகுத்தண்டை பலப்படுத்தும் நோக்கில் கால்சியத்தை படியச் செய்யும். அது சரியான இடத்தில் படியாமல் அதிகப்படியான வளர்ச்சியாக உருவாகி, நரம்புகளை அழுத்தும். ஓர் எலும்பை மற்றொன்றுடன் இணைக்கும் திசுக்கள் வயதாவதால் இறுகிவிடும். அதனால் கழுத்தின் அசைவு சிரமமாகும். அதிகம் அழுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும்போது நிரந்தரமான பழுது/ பாதிப்பு ஏற்படும்.

    ஆயுர்வேத சிகிச்சை முறை:

    அடிப்படையில், ஆயுர்வேத சிகிச்சை முறையானது வாத, பித்தம் எனப்படும் 3 தோஷங்களையும் சமநிலையில் வைப்பதே ஆகும். ஆரோக்கியமான ஒருவருக்கு, இந்த 3 தோஷமும் சமநிலை ஆக இருக்கும். இவற்றின் முக்கிய வேலைகள், அசைவுகளில் மற்றும், வளர்ச்சி, வளர்ச்சிதை மாற்றம், ஸ்திரத்தன்மையைக் காத்தல் ஆகியன ஆகும்.

    இந்த 3 தோஷங்களின் சமநிலையில் மாறுதல் ஏற்படும் போது, ஆரோக்கியம் கெடுகிறது; நோய் வருகிறது சோதனா (சுத்திகரிப்பு/கழிவுநீக்கம்) சமனா. யோகா ஆகிய சிகிச்சைகள் ஆகியவற்றின் மூலம் தோஷங்களின் சீர்குலைவை மாற்றி, சமநிலைக்கு கொண்டுவருவதே ஆகும்.

    உணவுப்பழக்கம், வாழ்க்கை முறைமாற்றம் ஆகியனவற்றில் மாறுதல் கொண்டு வருவதன் மூலம் ஆன்மிகம், மனம், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை நல்லமுறையில் காக்கவும், முன்னேற்றம் காணவும் முடிகிறது.

    மூன்றுவித சிகிச்சை முறைகள்:

    சமன சிகிச்சை:

    பல்வேறு மருந்துகள், மூன்று தோஷங்களைச் சமநிலைப்படுத்துவதற்காகக் கொடுக்கப்படுகின்றன. சிறு குழந்தைகள், வயதானவர்கள், உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்ள முடியாதவர்கள், நடைமுறை மாற்றங்களை அனுசரிக்க முடியாதவர்கள் ஆகியோருக்கு பஞ்சகர்மா சிகிச்சை தர முடியாது; பஞ்சகர்மா சிகிச்சை தரமுடியாத போது, மருந்துகள் மூலமாக மட்டுமே, நோயைத் தீர்க்க முடியும்.

    சோதனா சிகிச்சை முறை:

    பஞ்சகர்மா சிகிச்சை மூலம், உடலில் இருக்கும், அதிகப்படியான தோஷங்களை நீக்குவதே சோதனா சிகிச்சை, இதை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். சரியான முறையில் இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால், விரைந்து குணம் கிடைக்கும் தவறு நேரும் பட்சத்தில் மிகுந்த பிரச்சனைகள், குழப்பங்கள் வரும்.

    பஞ்சகர்மா சிகிச்சை முன்பும், மருத்துவம் கூறும் உணவுமுறை, வாழ்வியல் முறையை அனுசரிக்க வேண்டும். பஞ்சகர்மா சிகிச்சை முறை சரியாக மேற்கொள்ளப்பட்டு, உணவுமுறை, பிறவாழ்வியல் முறை மாற்றங்களைப் பின்பற்றாவிட்டால், குழப்பங்கள் வரும்.



    ரசாயன சிகிச்சை:

    உடல் இயற்கையான உறுதி நிலைப்பாடு பெற்று, திசுக்கள் புத்துணர்ச்சி அடைந்து, அவற்றின் இயல்பான வேலைகளை மாற்றிவிடும் காரணிகளைச் சரி செய்வதே இந்த சிகிச்சை ஆகும்.வாத தோஷம் உடலில் இருக்கும் அசைவுகளுக்கானது நரம்பு மண்டலம், தசைநார் மண்டலம் ஆகியவற்றோடு முக்கியமான தொடர்பு உடையது. வாத தோஷ நிலைப்பாட்டில் மாறுதல் வரும்போது, இவ்விரு மண்டலங்களிலும் நோய் வருகிறது.
    வாத தோஷ மாறுபாடு இருவகைகளில் ஏற்படலாம்.

    (1) வாத தோஷம் தன்னிச்சையாக அதிகமாவது.

    (2) பித்தம், கபம் ஆகிய தோஷங்களில் ஏற்படும் மாறுபாட்டால் வாதம் தடைப்படுதல் என்பன அவை.

    வாதம் தடைப்படுவதால் நீர்கோர்த்து, பலூன்போல உடல் உப்பிவிடும். எங்கே வலி இருக்கிறது என்பதே தெரியாமல் ஒருவிதவலி உண்டாகும். வாதம் மிகமிக அதிகமாகும்போது, எலும்பு வட்டுகளுக்கிடையேயான தாறுமாறான வளர்ச்சி ஆகியன உண்டாகும்.

    சிகிச்சை முறைகள்:

    சோதன, சமன சிகிச்சைகள் மூலம் தடைப்பட்ட அதிகப்படுத்தப்பட்ட வாத தோஷத்தை சமநிலைப்படு-த்தி பாதிக்கப்பட்ட திசுக்களை, புத்துணர்வு பெறச்செய்வதே சிகிச்சையின் நோக்கம். இந்நோய் காரணமாக மன அழுத்தம் ஆகியன நேர வாய்ப்பு இருப்பதால் உணவு முறை மாற்றம், குறைந்த அளவிலாவது உடற்பயிற்சிகள், யோகா ஆகிய ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை மேற்கொள்வது நல்லது.

    வாத தோஷ சீர்குலைவு இரண்டு வகையில் நேர்வதால் அதற்கான சிகிச்சை முறையும் வெவ்வேறாக இருக்கிறது.  பிற தோஷங்களால் வாத, தோஷ மாறுபாடு நேரும்போது, அதைச் சரி செய்ய சோதன, சமன சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன.வாதம் தன்னிச்சையாக மாறும்போது, பாதிப்புகளைக் குறைக்கும் புத்துணர்வு தரும் சிகிச்சைகள் தரப்படும்.

    சிகிச்சை முறைகளை வைத்து இவ்வியாதி 3 நிலைகளாக வகைப்படுத்தப்படும்.

    முதல் நிலை

    ஆரம்ப நிலையில் அவ்வப்போது லேசானவலி இருக்கும்; அவ்வப்போது இறுக்கமாக இருப்பது போல உணரப்படும். அப்போது வாத, கப, சமன மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் தரப்படவேண்டும்.

    இரண்டாம் நிலை

    இந்நிலையில் கழுத்தை அசைக்கும் போது வலி மற்றும் இறுக்கம், கழுத்தின் பின்பகுதியில் வலி, அங்கிருந்து தோள், தோள்பட்டை ஆகிய பகுதிகளுக்கு வலி பரவுதல் ஆகிய காணப்படும். அதற்கு வாத-பித்த சமன மருந்துகள் மற்றும் வாத-பித்த சமன சிகிச்சை தரப்படும்.

    மூன்றாம் நிலை

    வாந்தி வருவது போன்ற உணர்வு, நடக்கும் நடை மாறிப்போதல், மயக்கம், சிறுநீர், மலம் கழிப்பதில் கட்டுப்பாடு இல்லாத நிலை ஆகியன காணப்படும். இதற்கு வாதசமன மருந்துகளும், வாத சமன சிகிச்சையும் தரப்படும்.

    - டாக்டர். ஜெ. விஜயாபிரியா
    (போன் 0422-2367200, 2313188, 2313194)
    கவுட் எனப்படுவதும் ஒருவகை ஆர்த்தரைட்டிஸ், வாத நோய்தான். இந்த நோய்க்கு ஆயுர்வேதத்தில் என்ன சிகிச்சை செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
    கவுட் எனப்படுவதும் ஒருவகை ஆர்த்தரைட்டிஸ், வாத நோய்தான். இது திடீரென வரும். பாதிக்கப்பட்ட இடத்தில் எரிச்சலுடன் கூடிய வலி இருக்கும். அந்த இடம் சிவந்து போகும். பெரும்பாலும் பாதத்தில் கால் பெருவிரல் அடியில் வரும். சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் மீண்டும், மீண்டும் வரும். காலப்போக்கில் மூட்டுக்கள், பிடி திசுக்கள், டென்டன்ஸ் எனப்படும் ஜவ்வு ஆகியவற்றையும் பாதிக்கும்.

    இந்நோய், ரத்தத்தில் யூரிக் அமிலம் அளவுக்கு அதிகமாகும்போது வரும். யூரிக் அமிலம் படிகங்களாகி அவை மூட்டுக்கள், ஜவ்வு மற்றும் சுற்றியுள்ள திசுக்களையும் பாதிக்கும். ஆண்களே இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுவர். பெண்கள் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நின்ற பின் இந்நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம்.

    அறிகுறிகள் :

    * இரவில் திடீரென வரும்.
    * வந்து 24 மணிநேரம் வரை வலி மிகக்கடுமையாக இருக்கும்.
    * பெரும்பாலும் பாதத்தில் பெருவிரல் அடியில் வந்தாலும், பாதம், கணிக்கால், முழங்கால், கை, மணிக்கட்டு ஆகிய இடங்களிலும் வரலாம்.
    * கடுமையான வலி குறைந்தபின்னும், ஒ
    ருவித சவுகரியம் இருந்து கொண்டே இருக்கும். அவை நீண்ட நாட்கள் இருப்பதோடு, பிற மூட்டுக்களையும் பாதிக்கும்.
    * பாதித்த இடம் சிவந்து உப்பி விடும்.

    கவுட் தீவிரமாகும்போது, யூரிக் அமில படிகங்கள் (டோபி) உடலின் எல்லா பகுதிகளிலும் இருக்கும் மென்மையான திசுக்களை பாதிக்கும். பெரும்பாலும் விரல்களில் முடிச்சு முடிச்சாக காணப்பட்டாலும், நோய் தீவிரமாகும்போது, தோள் பட்டை துனி, காது ஆகிய இடங்களிலும் வரலாம். சில சமயம் குரல்வளை, முதுகுத்தண்டு ஆகிய இடங்களில் வரவாய்ப்பு இருக்கிறது. சிறுநீரகம், இதயம் ஆகியவற்றில் கூட யூரிக் அமிலப்படிகங்கள் வர வாய்ப்பு இருக்கிறது.

    அதிக யூரியா தான் கவுட் நோய்க்கு காரணம் என்றாலும் வேறுசில காரணங்களாலும் இந்நோய் வரலாம். உணவு முறை பரம்பரை, யூரிக் அமில உப்பான யூரேட் குறைவாக சுரப்பது ஆகியன அவற்றுள் சில மதுப்பழக்கம், இளமையிலேயே அதிக உடல் எடை, அதிக இரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாட்டில் குறைபாடு, செயற்கை ரசாயனங்கள் சேர்ந்து வளர்ந்த உணவை உண்டு வளர்த்த இறைச்சி, மீன் ஆகியவற்றை அதிகம் உண்பது ஆகியனவும் சில காரணங்கள்.

    வழக்கமாக யூரிக் அமிலம் ரத்தத்தில் கலந்து சிறுநீர் வழியாக வெளியேறி விடும். யூரிக் அமிலம் குறைவாக சுரப்பதன் காரணமாக 90 சதவீத கவுட் நோய் வருகிறது. அதிக உற்பத்தியால் 10 சதவீத கவுட் நோய் வருகிறது. மூட்டுக்களை சுற்றியுள்ள திரவத்தில் யூரிக் அமில படிகங்கள் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும்.

    * ரத்தத்தில் யூரியாவின் அளவு எவ்வளவு என்று பார்க்க வேண்டும்.
    * ரத்தத்தில் எலக்ட்ரோலைட், எரித்ரோசைட் அளவு பார்க்க வேண்டும்.
    * வெள்ளை அணு எண்ணிக்கை எவ்வளவு என்று அறிய வேண்டும்.
    * சிறுநீரக செயல்பாடு பற்றி அறிய வேண்டும்.
    * எக்ஸ்ரே மூலம் யூரேட் படிகங்கள் எவ்வாறு இருக்கிறது என்பதையும், எலும்பின் பாதிப்பு அளவையும் அறியலாம்.

    ஆயுர்வேத சிகிச்சை முறை

    வாத ரக்தம், ஆத்ய வாதம் என்பது தான் ஆயுர்வேதத்தில் கவுட் நோய்க்கான பெயர். வாததோஷம், பித்த தோஷம் ரக்ததாது ஆகியவை நிலைப்பாடு மாறுவதே இந்நோய்க்கான காரணம். ஆயுர்வேத கூற்றுப்படி, அதிக உப்பு, புளிப்பு, கசப்பு கார சுவையுள்ள உணவுகள், அதிக எண்ணெய் உணவுகள், அதிக சூடான உணவுகள், உலர்ந்த, பாதுகாக்கப்பட்ட, கெட்டுப்போன இறைச்சி, மீன் உணவுகள், கொள்ளு, உளுந்து, புளித்த மோர், தயிர், மது, பகல் தூக்கம், இரவில் தூங்காமை, கோபம் சேர்க்கக்கூடாத முறைகளில் சேர்த்த உணவுகள் (எ.காட்டு: பாலுடன் அல்லது பால் பொருட்களுடன் மீன் சேர்க்கக்கூடாது) ஆகியன கவுட் நோயை அதிகமாக்கும்.

    உள்ளே சாப்பிடும் மருந்துகள்

    * நீர்முள்ளி கஷாயம் எனப்படும் (கோகிலாஜகம் கஷாயம்). 15 மீ. கஷாயம் + 60 மீ. தண்ணீர் சேர்த்து காலை மாலை வெறும் வயிறில் உணவுக்கு ஒரிரு மணிநேரம் முன்பு

    * சீந்தில்கொடி எனப்படும் குடூச்சி கஷாயம் மேற்சொன்னவாறே எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * பால் முதுக்கன் கிழங்கு எனப்படும் விதாரி கஷாயம் மேற்சொன்னபடியே எடுக்கலாம்.

    * நெருஞ்சில் முள் + சதாவரி (தண்ணீர் விட்டான் கிழங்கு) இரண்டையும் 1 டம்ளர் பால், 4 டம்ளர் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க வைத்து 1 டம்ளர் ஆக குறைந்தவுடன் இறக்கி, அதை காலை, மாலை இருவேளையும் அல்லது இரவு படுக்கு முன் எடுக்கலாம். சந்திரபிரபா வடி, கைஷேநர குக்குலு எனப்படும் மாத்திரைகள் வலியை கட்டுப்படுத்தும்.

    மேலே பூசுவதற்கு

    பிண்டத்தைலம் மேலே பூசி, 1 மணிநேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். காஞ்சிரை வேரை கஷாயமாக்கி, வலி உள்ள இடங்களில் தாரா செய்வதுபோல ஊற்ற வேண்டும். (அரை மணிநேரம்) அத்தி, ஆல், அரசு, இத்தி ஆகிய மரப்பட்டைகளை கஷாயம் வைத்து மேற்சொன்னபடி செய்ய வேண்டும்.
    கழிவு வெளியேற்றம்

    திரிபலாசூரணம் உள்ளே சாப்பிடவும்

    கழிவுகளை வெளியேற்றி, தோஷங்களை சமனப்படுத்தி ரசாயனம் ஆக செயல்படும்.

    யூரிக் அமிலம் நீண்ட காலம் உடலில் தங்கும்போது, அவை படிகங்களாகி விடுகின்றன. உடலில் பிற கழிவுகள் தேங்கி விடுவது தான் நோய்க்கு முக்கிய காரணம். ஆகவே கழிவுகளை வெளியேற்றுவதுதான் சிகிச்சையின் முதற்படி ஆகும். தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் விரையேச்சனம் (பேதி) எடுப்பது நல்லது.

    உள்ளே மருந்து சாப்பிடுவது, பாதிக்கப்பட்ட இடங்களில் தைலம், கஷாயம் பூசுவது இவற்றோடு சரியான உணவு முறை மாற்றம், சரியான வாழ்க்கை முறை மாற்றம் ஆகியன மிகவும் அவசியமாகும்.

    -டாக்டர். ஜெ. விஜயாபிரியா
    (போன் 0422&2367200, 2313188, 2313194)
    ×