என் மலர்
நீங்கள் தேடியது "physical pain"
- மன அழுத்தம் தலை வலியினை ஏற்படுத்தலாம்.
- சரியான முடிவுகளை எடுக்கத் தெரியாதவர்களுக்கு இடுப்பு வலி ஏற்படுகின்றதாம்.
அடிக்கடி உடம்பு வலி அல்லது உடம்பில் ஏதோ ஒரு இடத்தில் வலி என்று நாம் கூறுகின்றோம். இந்த வலிகளுக்கு காரணம் பல இருக்கின்றன. இதற்கு உடல், மனம் உளைச்சல், வேதனை உணர்ச்சிகள் ஆகியவை காரணமாக இருக்கலாம்.

மன அழுத்தம் தலைவலியினை ஏற்படுத்தலாம். தொடர்ந்து வேலை செய்யாமல் தினமும் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.
தோள் பட்டை வலி
மிக அதிக கவலை உணர்ச்சிகளை சுமப்பது, அதிக பொறுப்பு சுமை இவை தோள்பட்டை வலியினை ஏற்படுத்தலாம்.

கழுத்து வலி
பிறரை மன்னிக்க முடியாத கோப உணர்ச்சி, தன்னையே மன்னித்துக் கொள்ள முடியாத கோப உணர்ச்சி, ஆக்கப்பூர்வமான சிந்தனைகளில் கவனம் செலுத்த முடியாமை போன்றவை கழுத்து வலிக்கு காரணமாக இருக்கும் என்கின்றனர்.
மேல் முதுகு வலி
யாரும் தன் மீது அன்பு செலுத்தவில்லை என்ற உணர்வு, யாருக்கும் தன்னை பிடிக்கவில்லை என்ற உணர்வு மேல் முதுகு வலியினை ஏற்படுத்துமாம்.
கீழ் முதுகு வலி
பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுபவர்களுக்கு கீழ் முதுகு வலி ஏற்படுகின்றதாம்.
முழங்கை வலி
சில மாறுதல்களை ஏற்க முடியாமல் அவதிப்படுபவர்களுக்கு முழங்கை வலி ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்கின்றனர்.
கை வலி- தனிமை இதற்கு ஒரு காரணம்.

இடுப்பு வலி
வாழ்க்கையின் பாதையில் சரியான முடிவுகளை எடுக்கத் தெரியாதவர்களுக்கு இடுப்பு வலி ஏற்படுகின்றதாம்.
முட்டி வலி
எதனையும் தானே செய்து கொள்ள வேண்டும். யாரையும் எதற்கும் எதிர்பாராத வாழ்க்கை வேண்டும் என்ற ஒரு அடமும் இதற்கு ஒரு காரணமாம். எளிமை, பிறருக்கு உதவுதல் போன்றவை நன்மை பயக்கும் என்கின்றனர்.
தசை வலி
மனக் கசப்புகளை மறக்காது மனதில் வைத்திருப்பவர்களுக்கு தசை வலி ஏற்படலாம். மனதில் நன்றியுணர்வு, ஆக்கப் பூர்வமான எண்ணங்கள் இவை நலன் அளிக்கும் என்கின்றனர்.
பாத வலி
அதிக மனச்சோர்வு, அழிவுப் பூர்வமான எண்ணங்கள் உடையவர்களுக்கு ஏற்படுகின்றதாம். ஆக்கப் பூர்வமான எண்ணங்கள் உடையவர்களுடன் இருப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகின்றது.

கணுக்கால் வலி
தன் மீதே ஒருவர் மிகக் கடுமையாக இருப்பவர்களுக்கு கணுக்கால் வலி ஏற்படலாம். ஒருவர் தன்னை நேசிக்கவும் பழக வேண்டும்.
சரி, இதையெல்லாம் யார் சொன்னார்கள்? பொதுவில் மன நலமின்மை உடல் நலத்தினை பாதிக்கும் என்பது மருத்துவ ரீதியான கூற்றுதான்.
அதற்காக தானே செயல்படாமல் எந்த ஒரு அறிகுறியினையும் மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவரின் ஆலோசனை, மருந்து, சிகிச்சை இவற்றினை முறையாய் கடை பிடிக்க வேண்டும் என்பதே என்றென்றும் சரியான ஒன்று.
மனநல ஆலோசகர்களும், யோகா பயிற்சியாளர்களும் நம் உடல், மனம், ஆன்மா ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது என்பதனை அறிவுறுத்துவர்.
* வலி நிவாரணம் பெற்றாலும் மீண்டும் திரும்ப வரும் வாய்ப்புகள் அதிகம் என்பதை உணர வேண்டும். எனவே தொடர்ந்து மருத்துவர் குறிப்பிட்ட பயிற்சிகள், யோகா, அமரும் போதும், நடக்கும் பொழுதும் முறையாய் இருத்தல் ஆகியவற்றினை தொடர்ந்து செய்ய வேண்டும்.
* வலி லேசாக இருக்கிறது என்று அலட்சியமாக இருந்து விடக்கூடாது. கவனிப்பு இல்லாமல் இருப்பது பாதிப்பினை மிக அதிகப்படுத்தி ஆபத்தான நிலைக்கு கொண்டு விடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
* முதுகுவலி முதுமை கூடுதலின் ஒரு வெளிப்பாடு என்று வலியோடு வாழக் கற்றுக்கொள்ளாதீர்கள். தகுந்த கவனிப்பு முறைகளின் மூலம் வலியின்றி வாழ முடியும்.
* அதிக ஓய்வு முதுகுவலியினை தீர்க்கும் என்பது தவறான கருத்து. ஒரிரு நாட்கள் ஓய்வு எடுங்கள். பொதுவில் நாள் முழுவதும் சுறு சுறுப்பாக இருப்பதே முதுகுவலி இல்லாமல் வைக்கும். பாதிப்பு ஏற்படும் நேரத்தில் அளவான நடை போன்றவற்றினை கையாளலாம்.
இன்று அனேகருக்கு சுவீட்ஸ் அடிக்கடி, அன்றாடம் எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது. காரணம் சர்க்கரை உள்ளே சென்றவுடன் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. இதற்கான காரணத்தினை மற்றொரு கட்டுரையில் விரிவாக பார்ப்போம். ஆனால் இந்த அதிக சர்க்கரை உடலில் கொலஜன் உருவாகுவதனை தருகின்றது. இதன் வெளிப்பாடாக சுருக்கம், சோர்ந்த சருமம், சரும வெடிப்புகள் போன்றவை ஏற்படும்.
ஆனால் பலவகை சுவீட் உணவுகளால் பழக்கப்பட்ட நமக்கு, திடீரென சுவீட்சை முற்றிலும் தவிர்த்து விடுங்கள் என்று சொன்னால் அனேகருக்கு இது கடினமாக இருக்கலாம். ஆகவேதான் பழங்களை வெட்டி உண்ணுங்கள். காய்கறிகளை சாலட் முறையில் உண்ணுங்கள். காய்கறி சாறு அருந்துங்கள் என அறிவுறுத்தப்படுகின்றனர். இது சுவீட்ஸ் உண்ணும் பழக்கத்தினை வெகுவாய் கட்டுப்படுத்தும்.
அதிக சர்க்கரையினை நிறுத்திய உடன்
* உடலில் புது சக்தி உருவாகும்.
* தேவையற்று கூடிய இதய துடிப்பு சீராக இருக்கும். எடை குறையும்.
* எளிதில் சோர்வடையாது நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இருப்பர்.
* பல் ஆரோக்கியம் கூடும்.
* உடல் உப்பிசம் இராது. இன்றிலிருந்து நமக்கு சர்க்கரை நோய் இல்லாவிட்டாலும் இனிப்புகளை தவிர்ப்போம்.
* இஞ்சிக்கு மருத்துவத்தில் அதிக முக்கியத்துவம் உள்ளது. ஏதோ ஒரு விதத்தில் சமையலில் இஞ்சி சேர்த்துக் கொள்ளுங்கள். சில மெல்லிய துண்டுகள் இஞ்சியினை 2 கப் நீர் 15 நிமிடங்கள் மெல்லிய தீயில் கொதிக்க விட்டு வடிகட்டி அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்துங்கள்.
* சோம்பு, பூண்டு இவற்றினை உணவில் சேருங்கள்.
* கைகளுக்கு, விரல்களுக்கு வேலை கொடுங்கள். முதலில் வெதுவெதுப்பான நீரில் கையை வையுங்கள். பின்னர் சிறு சிறு சாமான்களான தட்டு, டம்ளர் இவற்றினை நீங்களே நன்கு சுத்தம் செய்யுங்கள். வலியும் குறையும். வேலை செய்வதால் உங்கள் தன்னம்பிக்கை கூடும்.
* தவிடு ஒத்தடம், வெந்நீர் ஒத்தடம் இவைகளை வீட்டிலேயே செய்து கொள்ளலாமே.
* காய்கறி, முழு தானியம், பழங்கள், வெங்காயம், மீன் இவை வீக்கத்தினை குறைக்கும் உணவுகள் ஆகும்.
* முடிந்தால் நீச்சல் செய்யுங்கள்.
* க்ரீன் டீ 2 கப் தினமும் சாப்பிடுங்கள்.
* எலுமிச்சை, நெல்லி அதாவது வைட்டமின் ‘சி’ சத்து தினமும் தேவை.
* சாப்பிட்ட பிறகு ஒரு கிராம்பு மெல்லுங்கள்.
* ஓமேகா 3 மருத்துவ ஆலோசனை படி எடுத்துக் கொள்ளுங்கள்.
* வீட்டினுள் வெறும் காலில் நனங்கள்.
* கால்ஷியம் மாத்திரை தேவையா என்பதனைப் பற்றி மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
ஓமம்:- ஆங்கில முறை மருத்துவம் என்றால் அதில் அறிவுறுத்தும் உணவு நிபுணர்கள் பூண்டு, மஞ்சள் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வலியுறுத்துகின்றனர். அவ்வகையில் ஓமம் இன்று அறிவுறுத்தப்படுகின்றது. இதன் மருத்துவ குணங்களான கிருமி நாசினியும், பூஞ்ஞை நாசினியும் வெகுவாய் மருத்துவ உலகம் அறிந்து சிபாரிசு செய்கின்றது. இதனை டீ போல் நீரில் கொதிக்க வைத்து குடிக்க
* சிறுநீர் நன்கு செல்லுதல் (ஆனால் சிறுநீரக கோளாறு இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று செய்யவும்)
* பல் பாதிப்பின்மை
* ஜீரணம் சீராய் இருத்தல்
* மனச் சோர்வின்றி இருத்தல்
* உடல்வலி இன்றி இருத்தல்
* உள் வீக்கங்கள் குறைதல்
ஆகியவை ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.
2 க்ளாஸ் நீரில் 1/2 டீஸ்பூன் ஓமம் போட்டு டீ போல் கொதிக்க வைத்து வாரம் இரு முறை டீக்கு பதிலாக அருந்தலாமே.
முதுகுத்தண்டின் வட்டுக்களின் இடையே உள்ள திரவம் குறைந்து சுருங்கி விடுகிறது. கழுத்தில் ஏற்படும் காயங்கள் காரணமாக இந்நோய் வரலாம், மதுப்பழக்கம் காரணமாக வரலாம்; பரம்பரை காரணமாக வரலாம்; கழுத்தை ஒரே நிலையில் அதிகநேரம் வைத்திருக்க வேண்டிய நிலையில் உள்ள தொழில் காரணமாக வரலாம்.
65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவீத மக்களுக்கு இந்நோய் இருப்பதை கழுத்து எக்ஸ்ரேக்கள் காட்டுகின்றன. பலருக்கு இந்நோய் அதிக தீவிரமாகும் வரை, அறிகுறிகள் ஏதும் தென்படாது. திடீரென பாதிப்பு வரும். வலியும், இறுக்கமும் உண்டாகும்.
முதுகுத்தண்டுக்கும், அதனுடே பயணிக்கும் நரம்புகளுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைவதால், நரம்போ, முதுகுத்தண்டோ அழுத்தப்படுவதால் வரலாம். அவ்வாறு அழுத்தப்படும்போது, கை, கால், தோள், பாதம் ஆகிய உறுப்புகளில் நடுக்கம், உணர்ச்சியின்மை, வலுவிழத்தல் ஆகியன நேரலாம். நடக்கச் சிரமம் ஏற்படும். உறுப்புகளுக்கிடையேயான தொடர்பு இணைப்பு பாதிக்கப்படலாம். சிறுநீர், மலம் கழிப்பதில் கட்டுப்பாடு இழக்க நேரிடும்.
முதுகுத்தண்டின் ஒவ்வொரு கண்ணிக்கும் இடையே உள்ள வட்டு ஆனது அதிர்வைத் தடுக்கும் மெத்தை போல இயங்கும். 40 வயதாகும்போது, பெரும்பாலானவர்களின் முதுகுத்தண்டு வட்டு உலர்ந்து, சுருங்கி ஒரு வட்டு உடன் மற்றொன்று உராய்ந்து போகத் தொடர்கிறது.வட்டு இன் வெளிப்புறம் பாதிக்கப்படலாம். வெடிப்புகள் உண்டாகி, எலும்பு உப்பி விடுவோ அல்லது டிஸ்க் இடையே உள்ள ஜவ்வு இடம் பெயர்வதோ நடக்கிறது.
அவை நரம்பு/முதுகுத்தண்டை அழுத்த நேரலாம். டிஸ்க் தேய்மானம் காரணமாக, நமது நோய் எதிர்ப்புத் திறன் சக்தியானது, முதுகுத்தண்டை பலப்படுத்தும் நோக்கில் கால்சியத்தை படியச் செய்யும். அது சரியான இடத்தில் படியாமல் அதிகப்படியான வளர்ச்சியாக உருவாகி, நரம்புகளை அழுத்தும். ஓர் எலும்பை மற்றொன்றுடன் இணைக்கும் திசுக்கள் வயதாவதால் இறுகிவிடும். அதனால் கழுத்தின் அசைவு சிரமமாகும். அதிகம் அழுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும்போது நிரந்தரமான பழுது/ பாதிப்பு ஏற்படும்.
ஆயுர்வேத சிகிச்சை முறை:
அடிப்படையில், ஆயுர்வேத சிகிச்சை முறையானது வாத, பித்தம் எனப்படும் 3 தோஷங்களையும் சமநிலையில் வைப்பதே ஆகும். ஆரோக்கியமான ஒருவருக்கு, இந்த 3 தோஷமும் சமநிலை ஆக இருக்கும். இவற்றின் முக்கிய வேலைகள், அசைவுகளில் மற்றும், வளர்ச்சி, வளர்ச்சிதை மாற்றம், ஸ்திரத்தன்மையைக் காத்தல் ஆகியன ஆகும்.
இந்த 3 தோஷங்களின் சமநிலையில் மாறுதல் ஏற்படும் போது, ஆரோக்கியம் கெடுகிறது; நோய் வருகிறது சோதனா (சுத்திகரிப்பு/கழிவுநீக்கம்) சமனா. யோகா ஆகிய சிகிச்சைகள் ஆகியவற்றின் மூலம் தோஷங்களின் சீர்குலைவை மாற்றி, சமநிலைக்கு கொண்டுவருவதே ஆகும்.
உணவுப்பழக்கம், வாழ்க்கை முறைமாற்றம் ஆகியனவற்றில் மாறுதல் கொண்டு வருவதன் மூலம் ஆன்மிகம், மனம், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை நல்லமுறையில் காக்கவும், முன்னேற்றம் காணவும் முடிகிறது.
மூன்றுவித சிகிச்சை முறைகள்:
சமன சிகிச்சை:
பல்வேறு மருந்துகள், மூன்று தோஷங்களைச் சமநிலைப்படுத்துவதற்காகக் கொடுக்கப்படுகின்றன. சிறு குழந்தைகள், வயதானவர்கள், உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்ள முடியாதவர்கள், நடைமுறை மாற்றங்களை அனுசரிக்க முடியாதவர்கள் ஆகியோருக்கு பஞ்சகர்மா சிகிச்சை தர முடியாது; பஞ்சகர்மா சிகிச்சை தரமுடியாத போது, மருந்துகள் மூலமாக மட்டுமே, நோயைத் தீர்க்க முடியும்.
சோதனா சிகிச்சை முறை:
பஞ்சகர்மா சிகிச்சை மூலம், உடலில் இருக்கும், அதிகப்படியான தோஷங்களை நீக்குவதே சோதனா சிகிச்சை, இதை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். சரியான முறையில் இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால், விரைந்து குணம் கிடைக்கும் தவறு நேரும் பட்சத்தில் மிகுந்த பிரச்சனைகள், குழப்பங்கள் வரும்.
பஞ்சகர்மா சிகிச்சை முன்பும், மருத்துவம் கூறும் உணவுமுறை, வாழ்வியல் முறையை அனுசரிக்க வேண்டும். பஞ்சகர்மா சிகிச்சை முறை சரியாக மேற்கொள்ளப்பட்டு, உணவுமுறை, பிறவாழ்வியல் முறை மாற்றங்களைப் பின்பற்றாவிட்டால், குழப்பங்கள் வரும்.

ரசாயன சிகிச்சை:
உடல் இயற்கையான உறுதி நிலைப்பாடு பெற்று, திசுக்கள் புத்துணர்ச்சி அடைந்து, அவற்றின் இயல்பான வேலைகளை மாற்றிவிடும் காரணிகளைச் சரி செய்வதே இந்த சிகிச்சை ஆகும்.வாத தோஷம் உடலில் இருக்கும் அசைவுகளுக்கானது நரம்பு மண்டலம், தசைநார் மண்டலம் ஆகியவற்றோடு முக்கியமான தொடர்பு உடையது. வாத தோஷ நிலைப்பாட்டில் மாறுதல் வரும்போது, இவ்விரு மண்டலங்களிலும் நோய் வருகிறது.
வாத தோஷ மாறுபாடு இருவகைகளில் ஏற்படலாம்.
(1) வாத தோஷம் தன்னிச்சையாக அதிகமாவது.
(2) பித்தம், கபம் ஆகிய தோஷங்களில் ஏற்படும் மாறுபாட்டால் வாதம் தடைப்படுதல் என்பன அவை.
வாதம் தடைப்படுவதால் நீர்கோர்த்து, பலூன்போல உடல் உப்பிவிடும். எங்கே வலி இருக்கிறது என்பதே தெரியாமல் ஒருவிதவலி உண்டாகும். வாதம் மிகமிக அதிகமாகும்போது, எலும்பு வட்டுகளுக்கிடையேயான தாறுமாறான வளர்ச்சி ஆகியன உண்டாகும்.
சிகிச்சை முறைகள்:
சோதன, சமன சிகிச்சைகள் மூலம் தடைப்பட்ட அதிகப்படுத்தப்பட்ட வாத தோஷத்தை சமநிலைப்படு-த்தி பாதிக்கப்பட்ட திசுக்களை, புத்துணர்வு பெறச்செய்வதே சிகிச்சையின் நோக்கம். இந்நோய் காரணமாக மன அழுத்தம் ஆகியன நேர வாய்ப்பு இருப்பதால் உணவு முறை மாற்றம், குறைந்த அளவிலாவது உடற்பயிற்சிகள், யோகா ஆகிய ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை மேற்கொள்வது நல்லது.
வாத தோஷ சீர்குலைவு இரண்டு வகையில் நேர்வதால் அதற்கான சிகிச்சை முறையும் வெவ்வேறாக இருக்கிறது. பிற தோஷங்களால் வாத, தோஷ மாறுபாடு நேரும்போது, அதைச் சரி செய்ய சோதன, சமன சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன.வாதம் தன்னிச்சையாக மாறும்போது, பாதிப்புகளைக் குறைக்கும் புத்துணர்வு தரும் சிகிச்சைகள் தரப்படும்.
சிகிச்சை முறைகளை வைத்து இவ்வியாதி 3 நிலைகளாக வகைப்படுத்தப்படும்.
முதல் நிலை
ஆரம்ப நிலையில் அவ்வப்போது லேசானவலி இருக்கும்; அவ்வப்போது இறுக்கமாக இருப்பது போல உணரப்படும். அப்போது வாத, கப, சமன மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் தரப்படவேண்டும்.
இரண்டாம் நிலை
இந்நிலையில் கழுத்தை அசைக்கும் போது வலி மற்றும் இறுக்கம், கழுத்தின் பின்பகுதியில் வலி, அங்கிருந்து தோள், தோள்பட்டை ஆகிய பகுதிகளுக்கு வலி பரவுதல் ஆகிய காணப்படும். அதற்கு வாத-பித்த சமன மருந்துகள் மற்றும் வாத-பித்த சமன சிகிச்சை தரப்படும்.
மூன்றாம் நிலை
வாந்தி வருவது போன்ற உணர்வு, நடக்கும் நடை மாறிப்போதல், மயக்கம், சிறுநீர், மலம் கழிப்பதில் கட்டுப்பாடு இல்லாத நிலை ஆகியன காணப்படும். இதற்கு வாதசமன மருந்துகளும், வாத சமன சிகிச்சையும் தரப்படும்.
- டாக்டர். ஜெ. விஜயாபிரியா
(போன் 0422-2367200, 2313188, 2313194)