முதுகு வலி அலட்சியம் வேண்டாம்

முதுகுவலி முதுமை கூடுதலின் ஒரு வெளிப்பாடு என்று வலியோடு வாழக் கற்றுக்கொள்ளாதீர்கள். தகுந்த கவனிப்பு முறைகளின் மூலம் வலியின்றி வாழ முடியும்.
முதுகு வலி அலட்சியம் வேண்டாம்
Published on

* முதுகு வலி என்றாலே தண்டு வட பாதிப்பு மட்டும் தான் என்று பொருள் அல்ல. அநேகர் இவ்வாறு பயந்து விடுகின்றனர். சில நேரங்களில் முறையற்று கோணலாக அமரும் பழக்கம், பலமிழந்த தசைகள். இறுகிய தசைகள் போன்ற காரணங்களாலும் இருக்கலாம். மருத்துவர் மூலம் காரணம் அறிந்து எளிதில் நிவாரணம் பெற முடியும்.

* வலி நிவாரணம் பெற்றாலும் மீண்டும் திரும்ப வரும் வாய்ப்புகள் அதிகம் என்பதை உணர வேண்டும். எனவே தொடர்ந்து மருத்துவர் குறிப்பிட்ட பயிற்சிகள், யோகா, அமரும் போதும், நடக்கும் பொழுதும் முறையாய் இருத்தல் ஆகியவற்றினை தொடர்ந்து செய்ய வேண்டும்.

* வலி லேசாக இருக்கிறது என்று அலட்சியமாக இருந்து விடக்கூடாது. கவனிப்பு இல்லாமல் இருப்பது பாதிப்பினை மிக அதிகப்படுத்தி ஆபத்தான நிலைக்கு கொண்டு விடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

* முதுகுவலி முதுமை கூடுதலின் ஒரு வெளிப்பாடு என்று வலியோடு வாழக் கற்றுக்கொள்ளாதீர்கள். தகுந்த கவனிப்பு முறைகளின் மூலம் வலியின்றி வாழ முடியும்.

* அதிக ஓய்வு முதுகுவலியினை தீர்க்கும் என்பது தவறான கருத்து. ஒரிரு நாட்கள் ஓய்வு எடுங்கள். பொதுவில் நாள் முழுவதும் சுறு சுறுப்பாக இருப்பதே முதுகுவலி இல்லாமல் வைக்கும். பாதிப்பு ஏற்படும் நேரத்தில் அளவான நடை போன்றவற்றினை கையாளலாம்.

இன்று அனேகருக்கு சுவீட்ஸ் அடிக்கடி, அன்றாடம் எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது. காரணம் சர்க்கரை உள்ளே சென்றவுடன் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. இதற்கான காரணத்தினை மற்றொரு கட்டுரையில் விரிவாக பார்ப்போம். ஆனால் இந்த அதிக சர்க்கரை உடலில் கொலஜன் உருவாகுவதனை தருகின்றது. இதன் வெளிப்பாடாக சுருக்கம், சோர்ந்த சருமம், சரும வெடிப்புகள் போன்றவை ஏற்படும்.

ஆனால் பலவகை சுவீட் உணவுகளால் பழக்கப்பட்ட நமக்கு, திடீரென சுவீட்சை முற்றிலும் தவிர்த்து விடுங்கள் என்று சொன்னால் அனேகருக்கு இது கடினமாக இருக்கலாம். ஆகவேதான் பழங்களை வெட்டி உண்ணுங்கள். காய்கறிகளை சாலட் முறையில் உண்ணுங்கள். காய்கறி சாறு அருந்துங்கள் என அறிவுறுத்தப்படுகின்றனர். இது சுவீட்ஸ் உண்ணும் பழக்கத்தினை வெகுவாய் கட்டுப்படுத்தும்.

அதிக சர்க்கரையினை நிறுத்திய உடன்

* உடலில் புது சக்தி உருவாகும்.

* தேவையற்று கூடிய இதய துடிப்பு சீராக இருக்கும். எடை குறையும்.

* எளிதில் சோர்வடையாது நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இருப்பர்.

* பல் ஆரோக்கியம் கூடும்.

* உடல் உப்பிசம் இராது. இன்றிலிருந்து நமக்கு சர்க்கரை நோய் இல்லாவிட்டாலும் இனிப்புகளை தவிர்ப்போம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com