search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Death of father"

    • வி.சாலை அகரம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிர்பாராத விதமாக லாரி மீது பைக் மோதியது.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திருக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன் (வயது 52). வீடூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருந்தார். இவரது மகன் சஞ்சய் (18) இவர்கள் இருவரும் பைக்கில் கூட்டேரிப்பட்டு பகுதியில் இருந்து விழுப்புரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். சஞ்சய் இரு மோட்டார் சைக்கிளை ஓட்டினார். அப்போது வி.சாலை அகரம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிர்பாராத விதமாக லாரி மீது பைக் மோதியது. இதில் விபத்தில் பைக்கில் இருந்து சஞ்சய் மற்றும் சகாதேவன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் சகாதேவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். மேலும் சஞ்சய்க்கு வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த விக்கிரவாண்டி போலீசார் சகாதேவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திருக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் படுகாயமடைந்த சஞ்சய் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மகன் கண்முன்னே தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைக்கேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது‌.
    • கிரிஜா என்பவர் கலெக்டர் பாலசுப்ரமணியத்திடம், கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார்.

    கடலூர்: 

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைக்கேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது‌. அதன்படி இன்று காலை நடந்த கூட்டத்தில் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வருகின்றனர்‌.

    இன்று காலை வெளிநாடு வாழும் தமிழர் நலச் சங்கம் மாநில அமைப்பு செயலாளர் நூருல்லா தலைமையில் வடலூர் பார்வதிபுரம் சேர்ந்த கிரிஜா கலெக்டர் பாலசுப்ரமணியத்திடம், கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், எனது தந்தை அன்பு (வயது 54) கடந்த 2017 ஆம் ஆண்டு அரேபியாவில் உள்ள ரியாத்திற்கு வேலைக்கு சென்றார். கடந்த செப்டம்பர் 21- ந் தேதி எனது தந்தை அன்புக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். எனவே தமிழக அரசு இதற்கு தனி கவனம் செலுத்தி இறந்த தந்தை அன்பு உடலை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    ×