search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petition for recovery"

    • வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைக்கேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது‌.
    • கிரிஜா என்பவர் கலெக்டர் பாலசுப்ரமணியத்திடம், கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார்.

    கடலூர்: 

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைக்கேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது‌. அதன்படி இன்று காலை நடந்த கூட்டத்தில் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வருகின்றனர்‌.

    இன்று காலை வெளிநாடு வாழும் தமிழர் நலச் சங்கம் மாநில அமைப்பு செயலாளர் நூருல்லா தலைமையில் வடலூர் பார்வதிபுரம் சேர்ந்த கிரிஜா கலெக்டர் பாலசுப்ரமணியத்திடம், கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், எனது தந்தை அன்பு (வயது 54) கடந்த 2017 ஆம் ஆண்டு அரேபியாவில் உள்ள ரியாத்திற்கு வேலைக்கு சென்றார். கடந்த செப்டம்பர் 21- ந் தேதி எனது தந்தை அன்புக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். எனவே தமிழக அரசு இதற்கு தனி கவனம் செலுத்தி இறந்த தந்தை அன்பு உடலை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    ×