search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mercy killing"

    • ஓவி ரெட்டி, (வயது 82). இவர் இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
    • எனது 3 மகன்களுக்கு நிலத்தை சரிசம பாகங்களாகவும், எனக்கு 10½ சென்ட் நிலம் மட்டும் பாகங்களாக காண்பித்து எனது கையொப்பம் பெற்று பாகப்பிரிவினை பத்திரம் செய்து கொண்டனர்.

    சேலம்:

    மேட்டூர் அருகே குட்டப்பட்டி அம்மன் கோவிலூரை சேர்ந்தவர் ஓவி ரெட்டி, (வயது 82). இவர் இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    என் மனைவி லட்சுமிக்கு 65 வயதாகிறது. நரசிம்மன், வெங்கடாஜலபதி,கிருஷ்ண மூர்த்தி என 3 மகன்கள் உள்ளனர். குட்டப்பட்டி கிராமத்தில் 4.79 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நிலத்தை எனக்கு, மகன்களுக்கு என 4 பாகங்களாக பிரித்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

    மோசடி

    இதற்காக மேச்சேரி சார்பதிவாளர் அலுவ லகத்துக்கு சில வருடத்திற்கு முன்பு என்னை அழைத்து சென்றனர். அங்கு எனது 3 மகன்களுக்கு நிலத்தை சரிசம பாகங்களாகவும், எனக்கு 10½ சென்ட் நிலம் மட்டும் பாகங்களாக காண்பித்து எனது கையொப்பம் பெற்று பாகப்பிரிவினை பத்திரம் செய்து கொண்டனர்.

    10½ சென்ட் நிலத்தில் நான் குடியிருந்து வரும் நிலையில் அதில் உள்ள பழைய வீடு அவர்களுக்கு பாகமாக காண்பித்து என்னை மோசடி செய்துள்ளனர். பத்திரப் பதிவு செய்யும்போது படித்து பார்க்க வில்லை. எனது பாகத்தை சரிவர ஒதுக்கீடு செய்யாமல், அவர்கள் மட்டுமே பிரித்து கொண்டு என்னை மோசடி செய்துள்ளனர்.

    இது குறித்து மேட்டூர் கோட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தோம். கோட்டாட்சியர் விசாரணை நடத்தி மாதம் தோறும் எனக்கும், மனைவிக்கும் 3000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டனர்.

    கருணை கொலை

    இதையடுத்து வீட்டிற்கு வந்த எனது மகன்கள் எங்கு வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கலாம். நான் பணம் தர முடியாது என மிரட்டுகின்றனர். தற்போது உணவுக்கு வழியில்லாமலும் மருந்து, மாத்திரை வாங்கக்கூட பணம் இல்லாமல் நானும், மனைவியும் அவதியுற்று வருகிறோம். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நாள்தோறும் உணவு அருந்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும். மருத்துவ செலவிற்கு பணம் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எங்களை கருணை கொலை செய்து விட வேண்டும்.

    இவ்வாறு அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.ஓவி ரெட்டி, (வயது 82). இவர் இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

    • ஆள் ஒல்லியாக இருந்தால் நரம்பு நன்றாக தெரியும். 2 நொடியில் முடித்து விடலாம்.
    • ஊசி போட்ட பிறகு வழக்கமான மரணம் போல் தெரியும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 33). இவர் பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சுற்றித்திரிவது வழக்கம்.

    மேலும் இவர் பிணவறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருடன் சேர்ந்து அவர் சொல்லும் வேலைகளை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி சமூக வலைதளங்களில் இவர் கருணைக்கொலை செய்வதாக கூறிய தகவல் பரவியது.

    வயது முதிர்ந்த, உடல் நலம் பாதிக்கப்பட்ட, நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருப்பவர்களையும் தொடர்ந்து பராமரித்து கவனிக்க முடியாதவர்களையும் சம்பந்தபட்ட குடும்பத்தினர் அழைப்பின் பேரில் விஷ ஊசி போட்டு கொன்று வருவதாகவும், இதற்காக ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் பெற்றதாகவும் தகவல் பரவியது.

    இதுபற்றி வெளியான வீடியோவில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோரை விஷ ஊசி போட்டு கொன்றுள்ளேன். கடந்த 10 ஆண்டாக இந்த வேலையை செய்து வருகிறேன் என மோகன் ராஜ் கூறி இருந்தார்.

    மேலும் அந்த உரையாடலில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஊசி போடுவதற்கு முன்னால் சாப்பிட்டால் 2 டோஸ் ஆகிவிடும். அதனால் செலவு அதிகரிக்கும். எனவே கொலை செய்வதற்கு முன் சாப்பிட எதுவும் கொடுத்துவிடக்கூடாது. கையையும், காலையும் பிடித்து வாய், மூக்கில் ஊற்றும் வகையிலும் மருந்து உள்ளது.

    ஆள் ஒல்லியாக இருந்தால் நரம்பு நன்றாக தெரியும். 2 நொடியில் முடித்து விடலாம்.

    ஊசி போட்ட பிறகு வழக்கமான மரணம் போல் தெரியும். சென்னை, பெங்களூரு வரை கருணைக்கொலை கேஸ்களுக்கு போய் வந்துள்ளேன். கணக்கே இல்லாமல் கருணைக் கொலைகளை செய்துக் கொண்டிருக்கிறேன்.

    இன்று கூட 2 கருணைக்கொலை கேஸ்கள் கைவசம் உள்ளது. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் 2 நொடியில் கருணைக்கொலை செய்வேன்.

    இவ்வாறு அந்த உரையாடலில் உள்ளது.

    இந்த வீடியோ வைரல் ஆனதால் பள்ளிபாளையம் போலிசார் மோகன்ராஜை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது குடிபோதையில் உளறியதாக அவர் கூறி உள்ளார். இதற்கிடையே சமூக ஆர்வலர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் வீடியோ ஆதாரத்தில் அடிப்படையில் அவர் மீது உயிருக்கு ஆபத்தான பொருட்களை வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கூடுதல் ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவரை கைது செய்து சிறையில் அடக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இது போன்ற கொலை செய்ததை உறவினர்கள் யாரும் புகார் அளிக்க முன் வரமாட்டார்கள். இது ரகசியமாக நடந்து வரும் செயல், என்பதால் யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. இதுபோல செய்ய மோகன்ராஜிக்கு பள்ளிபாளையம் பகுதியில் உள்ள போலி டாக்டர்கள் சிலரும் உதவியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் போலி கிளினிக் நடத்தி வந்த அய்யாவு (75) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடையவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் மோகன்ராஜிக்கு ஊசி மற்றும் விஷ மருந்து எப்படி கிடைத்தது? என்பது குறித்தும் மோகன்ராஜிடம் தொடர்பில் இருந்தவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் விரிவாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் அரசு ஆஸ்பத்திரியை சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    • ஊதிய உயா்வு உள்பட ஒரு சில சலுகைகள் 7 ஆண்டுகளாக கிடைக்கவில்லை.
    • தன்னை கருணை கொலை செய்யும்படி மனு கொடுத்ததால் பரபரப்பு நிலவியது.

     ஊட்டி

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கொ ணவக்கரை ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக துரைராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறாா். தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், ஊராட்சி நிா்வாகம் கடந்த பல மாதங்களாக தனக்கு ஊதியம் தரவில்லை என குற்றம் சாட்டி உள்ளார்.

    இது தொடா்பாக அவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் மனு கொடுத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கொணவக்கரை ஊராட்சியில் 1997-ம் ஆண்டில் நிரந்தரப் பணியாளராகப் பணியில் சோ்ந்தேன். எனக்கு ஊதிய உயா்வு உள்பட ஒரு சில சலுகைகள் 7 ஆண்டுகளாக கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    நான் அண்மையில் பக்கவாத நோயால் பாதிக்க ப்பட்டேன். சுய நினைவு இல்லாமல் இருந்த என்னை எனது குடும்பத்தாா் மைசூரு அழைத்து சென்று 2 மாதங்கள் மருத்துவமனை யில் வைத்து தீவிர சிகிச்சை அளித்தனா். இந்நிலையில், கடந்த பல மாதங்களாக எனக்கு ஊராட்சி நிா்வாகம் ஊதியம் அளிக்கவில்லை. இதனால், மருந்து வாங்கவோ, மருத்துவமனைக்கு செல்லவோ முடியாமல் அவதியடைந்து வருகிறேன். எனவே, என்னை கருணை கொலை செய்து விடுங்கள்.

    இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார். கலெக்டர் அலுவலகம் வந்து தூய்மை பணியாளர்ஒருவர் தன்னை கருணை கொலை செய்யும்படி மனு கொடுத்ததால் பரபரப்பு நிலவியது. 

    10 வயது மகனை கருணைக்கொலை செய்ய அனுமதி கோரி கடலூரை சேர்ந்த பெற்றோர் தொடர்ந்த வழக்கில், மருத்துவ அறிக்கையை பார்த்ததும் நீதிபதி கிருபாகரண் கண்ணீர் சிந்தினார். #MercyKilling #MAdrasHC
    சென்னை:

    கடலூர் மாவட்டம் சோழத்தரத்தை சேர்ந்த திருமேனி என்ற தையல் தொழிலாளியின் 10 வயது மகனுக்கு வாய்பேச முடியாது, அடிக்கடி வலிப்பு ஏற்படுவதோடு, மூளையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    தனது மகனுக்கு பல்வேறு குழந்தைகள் நல மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லாததாலும், தையல் தொழிலாளி என்பதால் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாலும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

    மேலும் தினம்தோறும் தனது மகனுக்கு 20 முறை வலிப்பு வருகிறது. மருந்துகள் கொடுத்தால் வலிப்பு ஏற்படும் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அவனை பரிசோதித்த மருத்துவர்கள் தனது மகனை குணப்படுத்த முடியாது என தெரிவித்துவிட்டனர்.

    எனவே தனது மகனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் அடங்கிய அமர்வு சிறுவனை பரிசோதனை செய்வதற்கான தகுதியான மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான மூன்று மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டனர்.

    இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், மருத்துவ குழு தாக்கல் செய்த அறிக்கையில் சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள அரிய நோயை சிகிச்சை மூலமாக குணப்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கையை படித்ததும் நீதிபதி கிருபாகரன் கண்ணீர் சிந்தினார். சக நீதிபதி பாஸ்கரனும் சோகமானார்.

    இதனை அடுத்து, சிறுவனின் பெற்றோருக்கு மாதம் தோறும் நிதியுதவி வழங்க முடியுமா? இது போன்ற பிரச்சனைகளுக்கு என தனி திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ஏன் உருவாக்க கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
    மூளை பாதித்த சிறுவனை கருணைக் கொலைக்கு அனுமதிக்கலாமா? என்பது குறித்து உரிய முடிவு எடுக்க மருத்துவ நிபுணர்கள் குழுவை ஏற்படுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    கடலூரைச் சேர்ந்தவர் திருமேனி. டெய்லர். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    எனக்கு 14 மற்றும் 12 வயதில் 2 மகள்களும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். எனது மகன் பிறந்தது முதல் அவனால் பேச முடியவில்லை. அவனுக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படுவதால் மூளை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. பல மருத்துவர்களிடம் காண்பித்தும் அவன் குணமடையவில்லை. தற்போது அவனுக்கு தினமும் 20 முறை வலிப்பு ஏற்படுகிறது.

    இதை குணப்படுத்த முடியாது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் எனது குடும்பமே நிம்மதி இழந்து தவிக்கிறது. நோய் பாதிப்பை குணப்படுத்த முடியாத நிலையில் பாதிப்புக்கு உள்ளானவரை கருணைக் கொலை செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, எனது மகனை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று அந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    சிறுவன் குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளானா? என்பதை கண்டறியவும், அவனை கருணை கொலை செய்ய அனுமதிக்கலாமா? என்பது குறித்து முடிவு எடுக்கவும் தகுதியான மருத்துவ நிபுணர்களை கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். இந்தக்குழுவில் இடம் பெறும் மருத்துவர்கள் 2 வாரங்களுக்குள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    அப்பல்லோ மருத்துவ மனையின் நரம்பியல் துறை பேராசிரியர் ரெஜினால்டு, ஓய்வு பெற்ற குழந்தைகள் நல மருத்துவர் ராமச்சந்திரன், மத்திய அரசின் சுகாதார திட்டங்களுக்கான தலைமை மருத்துவ அதிகாரி உமா மகேஸ்வரி ஆகியோர் அந்த மருத்துவர்கள் குழுவை தேர்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    விசாரணை அடுத்த மாதம்(செப்டம்பர்) 10-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×