என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 100147"

    மாட்டை அழைத்து சென்ற சிறுவன் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    மேலூர்

    அழகர் கோவில் கோட்டைவாசல் பகுதியை சேர்ந்த அம்மாசி.  வேன் டிரைவர். இவரது மனைவி சுனிதா. 

    இந்த தம்பதியினருக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர்.   நேற்று இரவு 7 மணியளவில் மழை பெய்தது. இதனால் மாட்டை பிடித்து கட்டுவதற்காக வீட்டுக்கு வெளியே அம்மாசி, மனைவி சுனிதா, மகன்  அர்ஜூன் (6) ஆகியோர் சென்றனர்.

     அப்போது  பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியதில்,  3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அம்மாசியும், சுனிதாவும் காயமின்றி தப்பினர். சிறுவன் அர்ஜூன் பரிதாபமாக உயிரிழந்தான். 

    இதுகுறித்து மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.
    ஜேடர்பாளையம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன் போக்சோவில் கைது.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்த  17 வயது சிறுமி வெளியில் செல்வதாக கூறி சென்றார். அங்கிருந்து திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில்  சிறுமியை தேடிப்பார்த்தனர். இருப்பினும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

    இது குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யாக்கண்ணு வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார். 

    இந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த சிறுமியை  ஈரோடு மாவட்டம் கருமாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த   17 வயது சிறுவன் கடத்தி  பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.  

    இதையடுத்து அவரை போலீசார்  போக்சோ சட்டத்தில் கைது செய்து  நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    ஓமலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 7 வயது சிறுவனை பைக் ஓட்ட வைத்த தந்தை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா நாச்சனம்பட்டி பிரிவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 40), பைக் மெக்கானிக்.  இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு கீர்த்திகா (15), கேசிகா (13) என்ற மகள்களும்,  மோகித் (7) என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் தந்தையிடம் மகன் மோகித் பைக் கேட்டார். இதனால் தங்கராஜ்    பழைய பைக்கை வாங்கி அவற்றை மகன் ஓட்டும்படி சிறியதாக  மாற்றி வடிவமைத்தார்  .  கியர் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோலில்  40 கி.மீ. தூரம் செல்லும் படி 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ரேஸ் பைக் போல  அதனை உருவாக்கினார். ெதாடர்ந்து மகனுக்கு அதனை பரிசாக வழங்கினார்.

    இந்த நிலையில்   சேலம்பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில்  ஓமலூர் அருகே 7 வயது சிறுவனான   மோகித் பைக்கை ஓட்ட தங்கராஜ் பின்னால் அமர்ந்து சென்ற வீடியோ சமூக வலை தளங்களில் பரவியது. இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  

    இதற்கிடையே  தீவட்டிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராமசந்திரன் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதில் சிறுவன் தந்தையை அமர வைத்து பைக் ஓட்டும் வீடியோ பரவியதால் அதை பார்க்கும் சிறுவர்கள் இது போன்ற அபாய செயலில் ஈடுபட வாய்ப்புள்ளது.

    அதனால் தங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.   அதன்படி தங்கராஜ் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ்   போலீசார்   வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    பாகிஸ்தான் பள்ளிக்கூடத்தில் பாடம் படிக்காத சிறுவனை புல் தின்ன வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.






    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லோத்ரான் நகரில் உள்ள பதேபூர் என்ற இடத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஹமீத் ராசா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். அப்போது, கஸ்கான் (வயது 7) என்கிற சிறுவனை அழைத்து, சக மாணவர்கள் முன்பு நின்று பாடத்தை படிக்கும்படி கூறினார். ஆனால் சிறுவன் பாடத்தை படிக்காமல் நின்றுகொண்டிருந்தான். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் வகுப்பறைக்கு வெளியே இருந்து புல், பூண்டுகளை எடுத்து வந்து, கட்டாயப்படுத்தி சிறுவனை தின்ன வைத்தார்.

    இது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், சிறுவனின் பெற்றோர், ஆசிரியர் தங்களது உறவுக்காரர் என்றும், இதை தாங்கள் பெரிதுபடுத்தவில்லை என்றும் கூறிவிட்டனர். ஆனாலும் இந்த விவகாரம் மாவட்ட போலீஸ் அதிகாரியின் கவனத்துக்கு வந்ததும், இது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் பதேபூர் போலீசார் ஹமீத் ராசா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஷ்மீர் மாநிலத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் பசியால் தவித்தபோது மத்திய துணை ராணுவப்படை வீரர் உணவூட்டும் வீடியோ வைரலாகிவரும் வேளையில் அவருக்கு பாராட்டுகளும் குவிகின்றது.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் சென்ற வாகன வரிசையின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய கார் குண்டு தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த வீரர்களில் ஒருவரான இக்பால் சிங் என்பவர் ஸ்ரீநகரில் உள்ள நவகடால் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தனது வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை பிற்பகல் வேளையில் சாப்பிட தொடங்கினார்.

    அப்போது எதிரே உள்ள ஒரு கடை வாசலில் அமர்ந்திருக்கும் சிறுவன் அவரைப் பார்த்து தனக்கும் பசிக்கிறது என்று சைகை காட்டவே மனமிரங்கிய இக்பால் சிங், சிறுவனை நோக்கிச் சென்றார்.

    தனது டிபன் பாக்ஸை அந்த சிறுவனிடம் நீட்டியபோது அதை வாங்கி சாப்பிட முடியாதவாறு கைகள் செயல்படாத நிலையில் அவன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த இக்பால் சிங், தனது கையால் அவனுக்கு உணவூட்டி, தண்ணீர் குடிக்க வைத்து, வாயை கழுவிவிடும் வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.



    இதை கண்ட காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி உள்ளிட்ட பலர் இக்பால் சிங்கின் மனிதநேயத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

    பிறருக்கு உதவ வேண்டும் என்ற கொள்கை எங்களது பயிற்சிக்காலத்தில் கற்றுத்தரப்பட்டது. அதன்படி அந்த சிறுவனுக்கு நான் உதவி செய்தேன். இந்த சம்பவம் வீடியோவாகி இப்படி பரவும் என்று எதிர்பார்த்து நான் அப்படி செய்யவில்லை என்று கூறும் இக்பால் சிங்குக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் அளித்து கவுரவிக்க மத்திய துணை ராணுவப்படை உயரதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

    மும்பையில் 7 வயது சிறுவன் பீர்பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவனது சித்தப்பாவை போலீசார் கைது செய்தனர். #Mumbai #ManHeld #Murder
    மும்பை:

    மும்பை பைகன்வாடி ரபீக் நகரை சேர்ந்த சிறுவன் முகமது இர்பான் அஸ்காரலி(வயது7). கடந்த சனிக்கிழமை காலை வீட்டில் இருந்து விளையாட வெளியே சென்ற சிறுவன் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கலக்கம் அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர். ஆனால் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் சிவாஜி நகர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடிவந்தனர். இந்தநிலையில் தேவ்னார் தியோனர் சொசைட்டி பகுதியில் உள்ள வாகன நிறுத்தத்தில் சிறுவன் முகமது இர்பான் அஸ்காரலி பலத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டான்.

    இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், சிறுவனை அவனது சித்தப்பா முகமது நவ்சத் அலாவூதின் அப்பாசி(22) என்பவருடன் பார்த்ததாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். எனவே போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், சிறுவனை அவர் தான் கடத்தி கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

    முகமது நவ்செத் அலாவூதின் அப்பாசி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது அண்ணன் மற்றும் மனைவி திட்டி வந்துள்ளனர். இதனால் அவர்களை பழிவாங்குவதற்காக முகமது இர்பான் அஸ்காரலியை கடத்தி பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முகமது நவ்செத் அலாவூதின் அப்பாசியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Mumbai #ManHeld #Murder

    மத்திய பிரதேசத்தில் 70 அடி ஆழ்குழாய் கிணற்றுக்குள் சிக்கிய சிறுவன் 12 மணி நேரம் போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டான்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள கேர்கர் கிராமத்தில் வசித்து வருபவர் ஆதித்யா பிரதாப். இவரது மகன் தேஜ்பிரதாப்.

    2 வயதான அவன் நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகில் உள்ள வயல் பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்தான். அன்று இரவு 10.30 மணி அளவில் அவன் மீண்டும் வயல் ஓரத்தில் சென்று தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டு இருந்தான்.

    அந்த பகுதியில் ஆழ்குழாய் கிணறுக்காக தோண்டிய இடம் மூடப்படாமல் இருந்தது. அதை கவனிக்காமல் ஓடிய தேஜ்பிரதாப் கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்த ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழுந்து விட்டான். அவனது தந்தை ஆதித்ய பிரதாப் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அவர் சிங் ராங்கி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்து உதவி கோரினார். போலீசார் அந்த வயல் பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    சனிக்கிழமை இரவு 11 மணிக்கு ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு ஆழ்குழாய் கிணறு அருகே குழி தோண்டப்பட்டது. இதற்கிடையே குழாய் மூலம் அந்த சிறுவனுக்கு ஆக்சிசன் செலுத்தப்பட்டது. மேலும் தொலைத் தொடர்பு கருவி மூலம் அந்த சிறுவனுக்கு தைரியம் அளிக்கும் வகையில் உறவினர்கள் பேசிக் கொண்டே இருந்தனர்.

    நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்ததில் அந்த சிறுவன் ஆழ்குழாய் கிணற்றுக்குள் சுமார் 70 அடி ஆழத்தில் சிக்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 70 அடி ஆழத்துக்கு அருகில் பள்ளம் தோண்டப்பட்டு அந்த குழாய் துண்டிக்கப்பட்டது. 12 மணி நேரம் இந்த மீட்பு பணி நடந்தது.

    நேற்று பகல் 11 மணிக்கு அந்த சிறுவன் சிக்கியிருந்த குழாய் ஓட்டை போடப்பட்டு அதிலிருந்து தேஜ்பிரதாப்பை மீட்டனர். அவன் மயங்கிய நிலையில் இருந்தான்.

    உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளித்து அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் கழித்து அவன் சகஜ நிலைக்கு திரும்பினார். 70 அடி ஆழம் வரை சென்று உயிர் தப்பிய அந்த சிறுவனை மாவட்ட அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    ரஷ்யாவில் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனின் ஆசையை அதிபர் புதின் பூர்த்தி செய்துள்ளார். #Kremlin #Putin
    ரஷ்யாவின் தெற்கே ஸ்டாவ்ரோபோல் பகுதியில் வசித்து வரும் 10 வயது சிறுவனுக்கு தீவிர நோய் இருந்தது.  இதனால் அவன் விரும்பிய சம்போ என்ற விளையாட்டில் தொடர்ந்து பயிற்சி பெற முடியாமல் அதில் இருந்து விலக வேண்டியிருந்தது.

    அவனுக்கு ரஷ்ய அதிபர் புதினுடன் கைகுலுக்க வேண்டும் என்ற நீண்டநாள் ஆவல் இருந்தது.  இந்த ஆசை நிறைவேறியுள்ளது.  சிறுவனை கிரெம்ளின் மாளிகைக்கு புதின் வரவழைத்துள்ளார். அங்கு தனது தாயுடன் சென்ற சிறுவனை புதின் சந்தித்து சிறிது நேரம் பேசினார். அதன்பின் அவனிடம் கைகுலுக்கி அவனது ஆசையை பூர்த்தி செய்து வைத்துள்ளார்.

    அவனது போட்டிக்கான ஆடையிலும் புதின் கையெழுத்து இட்டு உள்ளார். நோயை விரட்டிய பின் முதல் போட்டியில் கலந்து கொள்ளும்பொழுது இந்த ஆடையை அணிந்து கொள்ளலாம் என சிறுவனின் தாய் அவனிடம் உறுதி கூறியுள்ளார்.

    ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையில் சுற்றி பார்த்த அந்த சிறுவன் அங்குள்ள பல அறைகளுக்கும் சென்றுள்ளான்.  ஆண்டிரீவ்ஸ்கை என்ற அறைக்கும் அவன் சென்றுள்ளான். இங்கு முக்கிய தலைவர்கள் பதவி ஏற்று கொள்வது வழக்கம்.

    இதுபற்றி சிறுவன் கூறும்பொழுது, நான் மாஸ்கோ நகருக்கு முதன்முறையாக வந்துள்ளேன்.  இதில் நான் ஆர்வமுடன் இருந்தேன். அதிபர் புதின் எனது கைகளை வலிமையுடன் குலுக்கினார் என கூறியுள்ளான்.#Kremlin #Putin
    உக்ரைனில் தானே தயாரித்த பாராசூட்டை பரிசோதிக்க 14-வது மாடியில் இருந்து குதித்த சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Jump #Stunt #Homemade #Ukraine #Parachute
    கீவ்:

    உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மக்கீவ்கா நகரை சேர்ந்த 15 வயது சிறுவன் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகும் வகையில் வித்தியாசமான சாகசத்தில் ஈடுபட முடிவு செய்தான்.

    இதற்காக அவன் வீட்டிலேயே பாராசூட் ஒன்றை தயார் செய்தான். பின்னர் அந்த பாராசூட்டை பரிசோதித்து பார்க்க முடிவு செய்த சிறுவன் வீட்டின் அருகே உள்ள 14 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் உச்சிக்கு சென்றான்.

    சிறுவனின் சாகசத்தை பார்க்க அவனது தாய், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு குவிந்தனர். அவர்கள் அனைவரும் சிறுவனை உற்சாகப்படுத்தியதோடு, பலர் அங்கு நடப்பதை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். இதனால் உற்சாகம் அடைந்த அந்த சிறுவன் தனது இரு கைகளையும் உயர்த்தி காட்டியபடி, மாடியில் இருந்து கீழே குதித்தான்.

    பின்னர் அவன் தனது பாராசூட்டை இயக்கினான். அந்த பாராசூட் சரியான நேரத்தில் விரிந்த போதிலும், முறையாக இயங்கவில்லை. இதனால் சிறுவன் தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தான். தன் கண் முன்னே மகன் கீழே விழுந்து உயிர் இழந்ததை கண்டு அவனது தாய் அதிர்ச்சியில் உறைந்தார்.

    சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர், “அங்கு ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் சிறுவனின் விபரீத முயற்சியை தடுக்கவில்லை. மாறாக அவர்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்துக்கொண்டிருந்தனர்” என வேதனையுடன் தெரிவித்தார்.

    சிறுவன் பாராசூட்டை முறையாக தயார் செய்யாததால் இந்த விபரீதம் நடந்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் முறையாக தயார் செய்யப்பட்ட பாராசூட்டை பயன்படுத்தி இருந்தாலும் கூட சிறுவன் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  #Jump #Stunt #Homemade #Ukraine #Parachute
    அபிராமபுரத்தில் சிறுவனை மிரட்டி பணம், செல்போன் பறித்த கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை அபிராமபுரத்தில் இட்லி மாவு கடையில் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் கார்த்திக் வேலை செய்து வந்தான்.

    இவன் கடை உரிமையாளருக்கு உணவு வாங்குவதற்கு மோட்டார்சைக்கிளில் சென்றான். அப்போது 2 வாலிபர்கள் சிறுவனை வழி மறித்தனர்.

    அவனை மிரட்டி செல்போனை பறித்த கொள்ளையர்கள் ரூ.300 பணத்தையும் பறித்தனர். அதோடு நிற்காமல் சிறுவன் அணிந்திருந்த சட்டையையும் கொள்ளையர்கள் கழற்ற சொன்னார்கள். பின்னர் அதனையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

    இதுபற்றி சிறுவன் கார்த்திக் அபிராமபுரம் போலீசில் புகார் அளித்தான். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செல்போன்-பணத்துடன் தப்பிய ஓடிய கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள 6 வயது சிறுவனின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் இணைந்து பயிற்சி செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. #AUSvIND #Australia #ViratKohli
    முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியையொட்டி ஆஸ்திரேலிய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து ஆஸ்திரேலிய சீருடையுடன் 6 வயது சிறுவனும் துருதுருவென வலம் வருவதை பார்க்க முடிகிறது. யார் அந்த சிறுவன் என்று விசாரித்தபோது, அந்த சிறுவனின் பெயர் ஆர்ச்சி ஷில்லர் என்பதும், இதய பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள அவனுக்கு இதுவரை 13 முறை ஆபரேஷன் நடந்திருக்கும் அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.

    ‘லெக்-ஸ்பின்னர்’ ஆக வேண்டும் என்பது அவனது விருப்பம். அவனது உடல்நிலையையும், கிரிக்கெட் ஆவலையும் தனியார் அமைப்பு மூலம் அறிந்து கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், அவனை தங்கள் அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சி செய்ய அனுமதித்துள்ளது.

    மெல்போர்னில் நடக்கும் 3-வது டெஸ்ட் போட்டி வரை ஆஸ்திரேலிய வீரர்களுடன் தங்கியிருந்து பயிற்சி உள்ளிட்ட விஷயங்களில் ஜாலியாக நேரத்தை செலவிடுவான். தனது சுழற்பந்து வீச்சால் விராட் கோலியை அவுட் ஆக்க வேண்டும் என்பதே இந்த சிறுவனின் மிகப்பெரிய ஆசையாகும்.  #AUSvIND #Australia #ViratKohli
    மகளிர் சுய உதவிக்குழு தவணை செலுத்தாததால் சிறுவனை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    மேலசொக்கநாதபுரம்:

    போடி பரமசிவன் கோவில் தெருவை சேர்ந்த ராஜூ மனைவி சுலோச்சனா (வயது48). இவர் மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக உள்ளார். இந்த குழுவில் குலாளர்பாளையத்தை சேர்ந்த வீரணன் மனைவி ராணி (29). உறுப்பினராக உள்ளார்.

    இவர் ரூ.25 ஆயிரம் கடன் பெற்றிருந்தார். அதற்காக 15 நாட்களுக்கு ஒருமுறை தவணை செலுத்தி வந்தார். கடந்த 2 மாதமாக ராணி தான் வாங்கிய கடனுக்கு தவணை கட்டாமல் இருந்துள்ளார்.

    ஆத்திரம் அடைந்த சுலோச்சனா, ராணியின் வீட்டில் வந்து சத்தம்போட்டு சென்றார். நேற்று மாலையில் ராணியின் மகன் செல்வகணபதி (11) என்பவனை சுலோச்சனா பள்ளி முடிந்து வரும்போது வழியிலேயே மடக்கி கடத்தி சென்று விட்டார். தன் மகன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததை அறிந்த ராணி பள்ளியில் தேடி பார்த்தார். அங்கு தனது மகன் இல்லை. அவனது நண்பர்களிடம் கேட்டபோது சுலோச்சனா அழைத்து சென்றதாக கூறினர்.

    அப்போது ராணியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய சுலோச்சனா நீ கட்ட வேண்டிய தவணை தொகையை செலுத்தி விட்டு உன் மகனை அழைத்து செல் என கூறினார். இதை கேட்டதும் பதறி போன ராணி போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சுலோச்சனா வீட்டிற்கு சென்று அங்கிருந்த சிறுவன் செல்வகணபதியை மீட்டனர். மேலும் பணத்திற்காக சிறுவனை கடத்தி சென்ற சுலோச்சனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். #tamilnews
    ×