search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dream"

    • சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் “மாபெரும் தமிழ் கனவு” நிகழ்ச்சி கலெக்டர் கார்மேகம் தலைமையில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
    • இந்நிகழ்ச்சியில் “தொன்மை மறவேல்” என்ற தலைப்பில் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகிறார்.

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் "மாபெரும் தமிழ் கனவு" நிகழ்ச்சி கலெக்டர் கார்மேகம் தலைமையில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் "தொன்மை மறவேல்" என்ற தலைப்பில் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் கலை, இலக்கியம், தொன்மை மற்றும் வாழ்வின் முன்னேற்றம் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பல்வேறு துறை வல்லுநர்கள் பதில் அளிக்க உள்ளனர்.

    மேலும் மகளிர் திட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், உதவி இயக்குநர் (நான் முதல்வன்) திறன் பயிற்சி, மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், மாவட்ட நூலகம், புதுமைப் பெண் திட்டம் மற்றும் தாட்கோ உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமாய் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    • பாராம்பரியம் மற்றும் தொன்மையினை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி சேலம், மாசிநாயக்கன்பட்டி, நோட்டரி டேம் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
    • சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு சொற்பொழிவுகள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

    சேலம்:

    தமிழகத்தின் பாராம்பரியம் மற்றும் தொன்மையினை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சி சேலம், மாசிநாயக்கன்பட்டி, நோட்டரி டேம் மேல்நிலைப்பள்ளியில் நாளை(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.

    தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகளையும், இளம்தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது. நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒருமுக்கியமான பகுதியாகும்.

    சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு சொற்பொழிவுகள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், சொற்பொழிவுகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழர் பெருமிதம் குறித்த குறிப்பேடுகள் அச்சடித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே, சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேடுக்கொண்டுள்ளார்.

    • கல்லூரி கனவு நிகழ்ச்சி மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு வழிவகை செய்யும் சேலம் கலெக்டர் கார்மேகம் பேச்சினார்.
    • “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    தமிழக முதல்- அமைச்சர் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, இன்று சேலம் அம்மாப்பேட்டையில், மாவட்ட கலெக்டர் கார்மேகம் இந்த நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து நான் முதல்வன் "கல்லூரி கனவு " எனும் மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் புத்தகத்தினை வெளியிட்டார்.

    இதையடுத்து கலெக்டர் கார்மேகம், பேசியதாவது-

    சேலம் மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயின்ற 1,600 மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த வழிகாட்டி நிகழ்ச்சி சேலம் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது. மேலும், மாணவ, மாணவியர்களின் உயர்கல்விக்கு தேவையான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய நான் முதல்வன் "கல்லூரி கனவு" எனும் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

    மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், போட்டித் தேர்வுகள் மற்றும் தொழில் வழிகாட்டல், ஊக்கப்படுத்துதல், வங்கிக்கடன் மற்றும் உதவித்தொகை பெறுதல் போன்ற விவரங்கள் புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றது. இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும். மேலும், தோல்விகளை வெற்றிகளின் தொடக்கமாக மாணவர்கள் எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் பார்த்திபன், செந்தில்குமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், அருள், எஸ்.சதாசிவம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு தலைவர் ஹேமலதா விஜயக்குமார் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

    வருகிற 23-ந் தேதிக்கு பின்னர் ஸ்டாலின் தான் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சாராக வருவார். அவரை விமர்சிக்கும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கோ, அ.தி.மு.க.வினருக்கோ இல்லை என்று கனிமொழி கூறியுள்ளார். #kanimozhimp #mkstalin #edappadipalanisamy

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்துநகர் சி. சவேரியார்புரத்தில் தி.மு.க. காரியாலயத்தை இன்று கனிமொழி எம்.பி. திறந்து வைத்து நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவையில் இருந்து நேற்று 50 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தேனி தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை வேட்பாளர்களிடம் கூறிய பின்னர் மாற்றி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இதனால் தேர்தல் ஆணையம் மீது எதிர்கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் நம்பிக்கை இல்லை. நான் ஏற்கனவே கூறிய படி தேர்தல் தோல்வி பயத்தால் ஆளுங்கட்சி, தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்துள்ளது. 

    தேர்தல் ஆணையம் சுகந்திரமாக செயல்படவில்லை. மக்களின் நம்பகத்தன்மையை பெறவில்லை. மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சராக கனவு தான் காணமுடியும் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இதற்கு முன்பு தான் முதலமைச்சர் ஆகுவோம் என்று கனவு கண்டிருக்கமாட்டார்.

    வருகிற 23-ந் தேதிக்கு பின்னர் ஸ்டாலின் தான் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சாராக வருவார். அதற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி தாம் முதலமைச்சர் ஆகுவோம் என்று கனவு கூட காணமுடியாது. ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கோ, அ.தி.மு.க.வினருக்கோ இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #kanimozhimp #mkstalin #edappadipalanisamy

    ரஷ்யாவில் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனின் ஆசையை அதிபர் புதின் பூர்த்தி செய்துள்ளார். #Kremlin #Putin
    ரஷ்யாவின் தெற்கே ஸ்டாவ்ரோபோல் பகுதியில் வசித்து வரும் 10 வயது சிறுவனுக்கு தீவிர நோய் இருந்தது.  இதனால் அவன் விரும்பிய சம்போ என்ற விளையாட்டில் தொடர்ந்து பயிற்சி பெற முடியாமல் அதில் இருந்து விலக வேண்டியிருந்தது.

    அவனுக்கு ரஷ்ய அதிபர் புதினுடன் கைகுலுக்க வேண்டும் என்ற நீண்டநாள் ஆவல் இருந்தது.  இந்த ஆசை நிறைவேறியுள்ளது.  சிறுவனை கிரெம்ளின் மாளிகைக்கு புதின் வரவழைத்துள்ளார். அங்கு தனது தாயுடன் சென்ற சிறுவனை புதின் சந்தித்து சிறிது நேரம் பேசினார். அதன்பின் அவனிடம் கைகுலுக்கி அவனது ஆசையை பூர்த்தி செய்து வைத்துள்ளார்.

    அவனது போட்டிக்கான ஆடையிலும் புதின் கையெழுத்து இட்டு உள்ளார். நோயை விரட்டிய பின் முதல் போட்டியில் கலந்து கொள்ளும்பொழுது இந்த ஆடையை அணிந்து கொள்ளலாம் என சிறுவனின் தாய் அவனிடம் உறுதி கூறியுள்ளார்.

    ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையில் சுற்றி பார்த்த அந்த சிறுவன் அங்குள்ள பல அறைகளுக்கும் சென்றுள்ளான்.  ஆண்டிரீவ்ஸ்கை என்ற அறைக்கும் அவன் சென்றுள்ளான். இங்கு முக்கிய தலைவர்கள் பதவி ஏற்று கொள்வது வழக்கம்.

    இதுபற்றி சிறுவன் கூறும்பொழுது, நான் மாஸ்கோ நகருக்கு முதன்முறையாக வந்துள்ளேன்.  இதில் நான் ஆர்வமுடன் இருந்தேன். அதிபர் புதின் எனது கைகளை வலிமையுடன் குலுக்கினார் என கூறியுள்ளான்.#Kremlin #Putin
    அ.தி.மு.க. ஆட்சி கவிழும் என நினைத்த எதிர்கட்சிகளின் கனவு பலிக்காமல் 17 மாத காலமாக ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது என்று அமைச்சர் உதயகுமார் பேசினார். #ADMK #TNMinister #Udhayakuamr
    ஆரணி:

    திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் 17 மாத ஆட்சி குறித்து சாதனை விளக்க 3-வது கட்ட சைக்கிள் பேரணி ஆரணியில் தொடங்கியது.

    இதன் தொடக்க நிகழ்ச்சி ஆரணி-சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள அம்மா திடலில் நடந்தது. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வரவேற்றார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-


    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிறகு இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று எதிர்க்கட்சியினர் கனவு கண்டனர். புதிய முதல்-அமைச்சர்கள் நாங்கள்தான் என்று கூறினர். அவர்களுடைய கனவு பலிக்காமல் 17 மாத காலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி நடத்தி நம்மை வழிநடத்திசெல்கின்றனர்.

    தொடர்ந்து நீதிமன்றம் மூலம் ஆட்சியை கவிழ்த்து விடலாம் என நினைத்து வருகிறார்கள். அது நடக்காது. அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்கள் வீறுகொண்டு எழுவார்கள்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 1, 250 இளைஞர்கள் சீருடை அணிந்து அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் இந்த சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். தினமும் இந்த சைக்கிள் பேரணி காலை 7 மணிக்கு தொடங்கும். சில பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்படும். ஒரு சில பகுதிகளில் பள்ளி மாணவர்களிடத்தில் வாசிப்புத் திறன் மேற்கொள்ளப்படும். நீங்கள் சைக்கிள் ராஜாவாக இனியும், எப்போதும் உலா வருவீர்கள்.

    இந்த சைக்கிள் பயணம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 300 கி.மீ. தொலைவிற்கு நடக்கிறது. நிறைவு நிகழ்ச்சி இதே இடத்தில் 28-ந் தேதி நடக்கிறது என்றார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். #ADMK #TNMinister #Udhayakuamr
    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகி விடுவோம் எனும் பகல் கனவை மம்தா பானர்ஜி நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ராகுல் சின்ஹா குறிப்பிட்டுள்ளார். #BJP #RahulSinha
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக இன்று நடைபெற்ற பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, 2019 பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தின் 42 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், மம்தா பானர்ஜியின் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் பா.ஜ.க தேசிய செயலாளர் ராகுல் சின்ஹா, ‘மம்தா பானர்ஜி மீண்டும் மாநில அரசை கைப்பற்றுவதே சந்தேகத்தில் இருக்கும் நிலையில், அவர் டெல்லிக்கு கனவு காண்கிறார். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகி விடுவோம் எனும் பகல் கனவை மம்தா பானர்ஜி நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். #BJP #RahulSinha
    காந்தி கண்ட கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #BJP #PonRadhakrishnan
    மதுரை:

    மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி 4 ஆண்டுகள் முடிந்து 5-வது ஆண்டு தொடங்கி உள்ள நிலையில் இதை கொண்டாடும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.

    மதுரை கோச்சடையில் நடைபெற்ற தூய்மை பணியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு குப்பைகளை அகற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5-வது ஆண்டு தொடக்கம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.

    இந்தியாவை உலக அளவில் முதல்நிலை நாடாக மாற்றுவதற்கு பிரதமர் மோடி மிகப்பெரிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். தூய்மை நிறைந்த இந்தியாவை உருவாக்கும் வகையில் தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டுவந்தது மட்டுமின்றி, பிரதமர் மோடி தனது கையிலே துடப்பத்தை எடுத்து சுத்தம் செய்தார்.

    தூய்மை இந்தியா திட்டத்தினால் உலக அளவில் இந்தியாவிற்கு பல மடங்கு பெருமை அதிகரித்துள்ளது. இன்று நாடு முழுவதும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, உறுப்பினர்கள், பாரதிய ஜனதா ஆளும் 21 மாநில முதல்-அமைச்சர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டமன்ற, மேலவை உறுப்பினர்கள், பாரதிய ஜனதா தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.


    சுதந்திர இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று காந்தி கனவு கண்டாரோ அந்த கனவுகளை நிறைவேற்றும் வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் பல மடங்கு பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இன்றைக்கு தூய்மைப்படுத்தப்பட்டுள்ள மதுரை கோச்சடை பகுதி ஒரு ஆண்டாக குப்பைகளை அகற்றாத பகுதியாகும். இதேபோன்று எல்லா இடங்களிலும் தூய்மை பணியை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan
    காமராஜர் கண்ட கனவு பலித்துள்ளது. அவர் வழங்கிய இலவச உணவை சாப்பிட்ட மாணவ-மாணவிகள் இன்று ஆசிரியர்களாகி இந்த சாதனை மாணவர்களை உருவாக்கி உள்ளனர் என்று விருதுநகரில் கமல்ஹாசன் பேசினார்.
    விருதுநகர்:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 2 நாட்களாக குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்தார்.

    நேற்று விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகரில் பொதுமக்களை சந்தித்தார்.

    சிவகாசியில் பஸ் நிலையம் அருகே திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் பேசும் போது, இப்போது இங்கு பெய்துள்ள மழையில் நீங்கள் நனைந்துள்ளீர்கள். நான் உங்கள் அன்பு மழையில் நனைகிறேன். இந்த அன்பை தரிசிக்கத்தான் நான் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.

    வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் நீங்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். நமது அமைப்பின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள விசில் செயலி அமைப்பை நீங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    அதைத் தொடர்ந்து விருதுநகர் தேசபந்து திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசும்போது, நான் விருதுநகர் வரும் போது ஒரு நல்ல மகிழ்ச்சியான செய்தியை கேட்டேன். இந்த மாவட்ட மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பது தான் அந்த செய்தி. இதன்மூலம் காமராஜர் கண்ட கனவு பலித்துள்ளது. அவர் கண்ட கனவுகள் மீண்டும் பலிக்கும். அவர் வழங்கிய இலவச உணவை சாப்பிட்ட மாணவ-மாணவிகள் இன்று ஆசிரியர்களாகி இந்த சாதனை மாணவர்களை உருவாக்கி உள்ளனர்.

    நான் தற்போது காமராஜர் வீட்டுக்கு சென்று வந்தேன். சிறிய தெருவில் அவரது வீடு உள்ளது. ஆனால் விசாலமான பாதையை அவர் மாணவர்களுக்கு காட்டியுள்ளார். கல்விக்கு காமராஜர் செய்த சேவை மகத்தானது. காமராஜர் நமக்கு காட்டிய பாதையை தற்போது செப்பனிட வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. நானும், மக்கள் நீதி மய்ய தொண்டர்களும் அதனை செய்வோம்.

    இங்கு என்னைவிட மூத்தவர்கள் உள்ளனர். அவர்கள் காமராஜர் கண்ட கனவு பலிக்குமா? பலிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் இருந்த நிலை மாறி இன்று அவர்கள் முகத்தில் புன்னகை தெரிகிறது. கால சுழற்சியில் காமராஜர் கண்ட கனவு பலிக்கும் நிலை ஏற்படும்.

    நாம் மேற்கொள்ளும் பணியில் பல்வேறு இடையூறுகள் வரலாம். அதனை எதிர்கொண்டு நாம் வெற்றிபெற வேண்டும். இங்கு திரண்டுள்ள உங்களை பார்க்கும்போது எனக்குள் உத்வேகம் பிறக்கிறது. உங்களது ஆசியுடன் லட்சியங்களை நிறைவேற்றுவேன்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.


    ×