search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "medical team"

    • இதற்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர்‌ டாக்டர்‌ கமலக்கண்ணன்‌ தலைமை தாங்கினார்‌.
    • முடிவில் தொகுதி அமைப்பாளர் டாக்டர்‌ கார்த்திக்கேயன்‌ நன்றி கூறினார்.

    கடலூர்:

    கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பாக மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடை பெற்றது. இவ்விழாவில் வேளா ண்மை துறை அமைச்ச ரும், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரு மான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலந்து கொண்டு முட்டம் ஆரம்ப சுகாதார நிலை யத்தில் கூடுதல் மருத்துவ உபகர ணங்களை வழங்கினார். இதற்கு மாவட்ட மருத்து வர் அணி அமைப்பாளர் டாக்டர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர். ராமச் சந்திரன் வரவேற்றார். தொகுதி அமைப்பாளர்கள் டாக்டர்கள் கடலூர் கலைக் கோவன், சிவசெந்தில், கிருஷ்ணராஜ், வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணை அமைப்பாளர் டாக்டர்கள் அவினாஷ், அருண், மாவட்டத் துணைத் தலைவர் செல்வம், வடி வேலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் முட்டம், வடலூர், கடலூர் புதுப்பாளையம், புதுச்சத்திரம், புவனகிரி, கிருஷ்ணாபுரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்க ளுக்கு மருத்துவ உபகர ணங்கள் வழங்கப் பட்டது. முடிவில் தொகுதி அமைப்பாளர் டாக்டர் கார்த்திக்கேயன் நன்றி கூறினார்.

    • 35 வயது மதிக்கத்தக்க ஒற்றை காட்டு யானையை பிடிக்க மருத்துவ குழு வரவழைக்கப்பட்டுள்ளது.
    • வனத்துறையினருடன் இணைந்து கடம்பூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைகிராமத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை கடந்த ஒரு வருடமாக உணவுக்காக பூதிக்காடு, செங்காடு உள்ளிட்ட வனத்தை யொட்டிய விவசாயம் நிலங்களில் புகுந்து சோளம், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கடம்பூர் வனத்துறையில் இது குறித்து புகார் அளித்து இருந்தனர்.

    மேலும் பயிர்களை நாசம் செய்து வரும் இந்த ஒற்றை காட்டு யானை பிடித்து வேறொரு பகுதியில் விட வேண்டும் எனவும் வனத்துறைக்கு விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கையும் விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கடம்பூர் வனத்துறையினர் உயரதிகாரிகளின் அனுமதியை தற்போது பெற்றுள்ள நிலையில் 35 வயது மதிக்கத்தக்க அந்த ஒற்றை காட்டு யானையை பிடிக்க மருத்துவ குழு வரவழைக்கப்பட்டுள்ளது.

    அதே போன்று காட்டு யானை பிடித்து மற்றொரு வனப்பகுதியில் கொண்டு செல்ல விடுவதற்கு வனத்துறை சார்பில் ஒசூர் பகுதியில் இருந்து லாரியும் வரவழைக்கப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து மருத்துவ குழு மற்றும் கடம்பூர் வனச்சரக அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான வனத்துறையினர் இணைந்து அந்த ஒற்றை யானை செல்லும் வழி தடங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்த ஒற்றை காட்டு யானையானது சமதளமான விவசாய நிலங்களையொட்டி வரும் போது தான் மருத்துவ குழுவால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

    வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழு இணைந்து ஒற்றை காட்டு யானையை கண்காணித்து வரும் நிலையில் மயக்க ஊசி செலுத்தி இந்த காட்டு யானை வேறு எந்த வனப்பகுதியில் கொண்டு விடப்படும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

    இந்த நிகழ்வை பார்க்க மலைகிராம மக்கள் ஆங்காங்கே வேடிக்கை பார்த்து வருவதால் காட்டு யானையால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் வனத்துறையினருடன் இணைந்து கடம்பூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • குப்பாண்டம் பாளையம் கிராமம் இடையார் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
    • இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்திக்கு கடந்த 29-ம் தேதி காய்ச்சல் வந்துள்ளது. இதனையடுத்து, அவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம், குப்பாண்டம் பாளையம் கிராமம் இடையார் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்திக்கு கடந்த 29-ம் தேதி காய்ச்சல் வந்துள்ளது. இதனையடுத்து, அவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து 4 மாணவர் களுக்கும் காய்ச்சல் வந்துள்ளது. இதனால் நேற்று பள்ளிக்கு யாரும் வரவில்லை.

    இதனால் அதிகாரிகள் பள்ளி குழந்தைகள் 17 பேரின் வீட்டிற்கு சென்று மருத்துவ குழு பரிசோதனை செய்தனர். எலச்சிபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் கருணாகரன் தலைமையில், நடமாடும் மருத்துவ குழு டாக்டர் வசந்தபிரியா, பள்ளி சிறார் மருத்துவக்குழு டாக்டர் கிருஷ்ணகாந்த் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சுகாதார கிராம செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ குழு இடையார்பாளையம் வந்து முகாமிட்டு அனைத்து குழந்தைகளையும் பரிசோதித்து ரத்த பரிசோதனை செய்து காய்ச்சலுக்கான காரணங்களை ஆய்வு செய்தனர்.

    பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிகிச்சைகள், மாத்திரைகள் அளிக்கப்பட்டது. மலேரியா, டெங்கு காய்ச்சலுக்கான ரத்த பரிசோதனை நடைபெற்றது. அதில் யாருக்கும் மலேரியா, டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படவில்லை

    அதுமட்டுமல்லாது, இடையார்பாளையம் கிராமம் முழுவதும் கொசுப்புழு ஒழித்தல், புகை மருந்து அடித்தல், பிளீச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல், இருமல், சளி தொந்தரவுகள் உள்ளதா? எனவும் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மாத்திரை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • லாலி மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ பிரிவுகள் இயங்கி வருகின்றன.
    • அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்துப் பிரிவுகளிலும் மத்தியக் குழுவினா் சிறப்பு ஆய்வு செய்துள்ளனா்.

    ஊட்டி,

    குன்னூரில் உள்ள அரசு லாலி மருத்துவமனை நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இந்த அரசு லாலி மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ பிரிவுகள் இயங்கி வருகின்றன. இந்த மருத்துவமனையில் மத்திய குழு மருத்துவா்கள் அரவிந்த் ஜெயின், ரெஜி குமாா், சஞ்சுலால் பாா் யுவா ஆகியோா் அடங்கிய குழுவினா் கடந்த 2 நாள்களாக ஆய்வு செய்து வருகின்றனா். மூன்றாவது நாளாக நேற்றும் ஆய்வு மேற்கொண்டனா்.

    இது குறித்து மருத்துவா்கள் கூறுகையில், அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்துப் பிரிவுகளிலும் மத்தியக் குழுவினா் சிறப்பு ஆய்வு செய்துள்ளனா். மருத்துவமனையை மேம்படுத்துதல், வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசித்துள்ளனா். இது குறித்த ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் வழங்குவா் என்றனா்.

    ஆய்வின்போது மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் பழனிசாமி, மருத்துவமனை முதன்மை மருத்துவா் விஸ்வநாதன், மருத்துவர் ரமேஷ் ஆகியோா் உடன் இருந்தனா். 

    • மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
    • '108' அவசரகால ஊர்தி சேவை திட்டம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

    காங்கயம் :

    பொது மக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகளை வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கும் விதமாக தமிழ்நாடு அரசுமக்களைத் தேடி மருத்துவம் என்னும் திட்டத்தை துவக்கியது.இத்திட்டத்தின் கீழ் சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற செவிலியர், பெண் சுகாதார தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்கள் மூலம் சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, முடக்குவாதம், பெண்களுக்கு கருப்பை,வாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிவதற்காக ஆய்வுக்கு பரிந்துரைத்தல் மற்றும் நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டு அதற்குரிய மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமப் பகுதிகளுக்கு மருத்துவக் குழுவினர் கிராம பகுதிகளில் உள்ள படுத்த படுக்கையாக மருத்துவமனைக்கு வர முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று சந்தித்து, மருத்துவ ஆலோசனைகள் வழங்கி சிகிச்சை மேற்கொண்டனர். மேலும் அவர்களுக்கு மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது.

    மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பட்டியல் சேகரித்து, அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் தினசரி காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒவ்வொரு பகுதியாகச் சென்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் என மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

    முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் 2008 ம் ஆண்டு பொதுமக்களின் இன்னுயிரை காக்கும் '108' அவசரகால ஊர்தி சேவை திட்டம் பொதுமக்களிடையே வரவேற்ப்பை பெற்றது போல மக்களைத் தேடி மருத்துவம் திட்டமும் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டானது தொடர்பாக மருத்துவமனை நர்சுகள் மற்றும் தாயிடம் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர். #BabyBeheaded
    செங்கல்பட்டு:

    ஆவடியை அடுத்த அயபாக்கத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி பொம்மி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் பிரசவத்திற்காக கல்பாக்கத்தை அடுத்த கடலூர் கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து இருந்தார்.

    நேற்று அதிகாலை பொம்மிக்கு பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அருகில் உள்ள கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் பணியில் இல்லாததால் நர்சுகளே பிரசவம் பார்த்ததாக தெரிகிறது. அப்போது குழந்தையின் தலைமட்டும் துண்டாகி தனியாக வந்தது. இதையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த பொம்மிக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வயிற்றில் இருந்த குழந்தையின் உடலை டாக்டர்கள் அகற்றினர்.

    பொம்மிக்கு தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாததால் நர்சுகளே சிகிச்சை அளித்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் பொம்மியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து விசாரிக்க சுகாதாரத்துறை செயலரின் உத்தரவின் படி 5 பேர்கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இதில் தேசிய நல்வாழ்வு குழுமத்தை சேர்ந்த குமுதா, பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பழனி, கூடுதல் இயக்குனர் டாக்டர் தாமரைச்செல்வி, செங்கல்பட்டு மருத்துவமனை முதல்வர் டாக்டர் உஷா உள்ளிட்ட 5 பேர் இடம்பெற்று உள்ளனர்.

    அவர்கள் தங்களது விசாரணையை உடனடியாக தொடங்கினர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பொம்மியிடம் இது பற்றி கேட்டறிந்தனர்.

    அப்போது இதற்கு முன்பு எடுக்கப்பட்ட குழந்தையின் எக்ஸ்ரே படங்கள், அதன் வளர்ச்சி பற்றிய ஆவணங்களை சேகரித்தனர். இன்று காலை கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்துகிறார்கள்.

    இதில் பொம்மிக்கு பிரசவம் பார்த்த நர்சுகள் யார்? யார்? டாக்டர் பணியில் இருந்தாரா? என்பது பற்றிய விபரங்கள் கேட்டு அறிகிறார்கள்.

    இதற்கிடையே பொம்மியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் பிரசவத்தில் குழந்தையின் சாவை சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். போலீசாரும் தனியாக விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    இறந்துபோன குழந்தையின் உடலும், தலையும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க மருத்துவ குழுவினர் முடிவு செய்து உள்ளனர். மேலும் 5 பேர் குழு கொடுக்கும் அறிக்கையின்படி பொம்மிக்கு பிரசவம் பார்த்தவர்கள் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
    சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு உடல்நிலை மோசமாக உள்ளதால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவக்குழு பரிந்துரைத்துள்ளது. #NawazSharif #Pakistan
    லாகூர்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு ஊழல் வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடந்த மாதம் 24-ந் தேதி தீர்ப்பளித்தது.

    இதையடுத்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.

    நவாஸ் செரீப்புக்கு இதய நோய் பாதிப்பு இருக்கிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைக்குப் பின் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நவாஸ் செரீப்பின் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாக அவரது டாக்டரும், இருதய நோய் நிபுணருமான அட்னன் கான் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    நவாஸ் செரீப்பின் இருதய நோய் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி உள்ளது. சிறையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாது. எனவே அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

    நவாஸ் செரீப்பை மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டும் என்று ஏற்கனவே மருத்துவக்குழு பரிந்துரைத்துள்ளது. அந்த பரிந்துரையை அரசு ஏற்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #NawazSharif #Pakistan
    நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை கண்காணிக்க 45 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் சேகர் கூறினார்.
    நாமக்கல்:

    தமிழக பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பயிற்சி) டாக்டர் சேகர், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அப்போது பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு தனியாக வார்டு அமைக்கப்பட்டு இருப்பதை பார்வையிட்ட அவர், அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும், நோயாளிகளிடமும், சிகிச்சை முறைகள், மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்ளும் விதம், டாக்டர்களின் கவனிப்பு குறித்தும் கேட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில், அவர்கள் குணமாகி வீடு திரும்புவார்கள்.

    அதேபோல், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனும் அனுமதிக்கப்பட்டு உள்ளான். அவனும், நல்ல நிலையில் இருக்கிறான். விரைவில் குணமாகி வீடு திரும்புவான்.

    அடுத்த 2 மாதங்களுக்கு டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை கண்காணித்து தடுப்பு நடவடிக்கையை தொடரும் வகையில், 45 மருத்துவ குழுவினர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த குழுவில் ஒரு டாக்டர், நர்சு உள்பட 5 பேர் இடம் பெற்று உள்ளனர். இவர்கள் மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வார்கள்.

    பன்றி காய்ச்சலுக்கு உரிய 15 ஆயிரம் மாத்திரைகள் இருப்பு உள்ளது. அதேபோல், ஊசியும் 2 ஆயிரம் இருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் என்ற அச்சுறுத்தல் இல்லை. மேலும், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 76 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் உஷா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 
    கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 13 நடமாடும் மருத்துவ குழுக்களை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று தொடங்கி வைத்தார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளின் தொடக்க நிகழ்ச்சி கடலூர் மஞ்சக்குப்பம் டவுன்ஹாலில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் முன்னிலையில் 13 நடமாடும் மருத்துவ குழுக்களை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தமிழகத்தில் தற்போது காய்ச்சல் பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு சில இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்துவதால் அதனை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், உரிய தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.

    இதுபற்றி ஒவ்வொரு மாவட்டத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாநிலம் தழுவிய அளவில் பிரத்யேகமான ஒரு மெகா பணியை தொடங்க வேண்டும் என்று அரசு உயர் அலுவலர்கள் அறிவுறுத்தியதின் அடிப்படையில் இந்த பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாமில் சுகாதாரத்துறையின் அனைத்துதுறை அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட நடமாடும் மருத்துவ குழுக்கள் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து ஈடுபட்டுள்ளனர்.

    இந்த பணிகளின்போது ஆங்காங்கே உள்ள குப்பைகளை அகற்றுதல், வீடுகள்தோறும் சென்று தேவையற்ற பொருட்களை கண்டறிந்து அவற்றை அழிப்பது, குடிநீர் ஆதாரங்களை தூய்மைப்படுத்துதல், பொதுமக்களிடம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

    இப்பணிகளில் மாவட்டத்தில் 26 ஆர்.பி.எஸ்.கே. குழுக்கள், 13 நடமாடும் மருத்துவ குழுக்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து துப்புரவு ஆய்வாளர்களும் மற்றும் நியமனம் செய்யப்பட்டுள்ள 740 கொசு ஒழிப்பு பணியாளர்களும், கடலூர் கிருஷ்ணா மருத்துவமனை மற்றும் அரசு தலைமை மருத்துவமனையை சேர்ந்த பயிற்சி மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டு 1,599 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு(2018) இதுவரை 295 பேர் மட்டுமே காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் காய்ச்சல் கண்டறியப்பட்ட 246 பேர்களில் 12 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே இது போன்ற மெகா விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்வதன் மூலம் டெங்கு காய்ச்சலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதால் பொதுமக்கள் இப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வதோடு நமது மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பினை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து கடலூர் பஸ்நிலையத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை அமைச்சர் எம்.சி. சம்பத் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், இணை இயக்குனர்(மருத்துவ பணிகள்) கலா, துணை இயக்குனர்(சுகாதாரம்) டாக்டர் கீதா, நகராட்சி ஆணையர்(பொறுப்பு) ராமசாமி, மாவட்ட மலேரியா அலுவலர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    மூளை பாதித்த சிறுவனை கருணைக் கொலைக்கு அனுமதிக்கலாமா? என்பது குறித்து உரிய முடிவு எடுக்க மருத்துவ நிபுணர்கள் குழுவை ஏற்படுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    கடலூரைச் சேர்ந்தவர் திருமேனி. டெய்லர். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    எனக்கு 14 மற்றும் 12 வயதில் 2 மகள்களும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். எனது மகன் பிறந்தது முதல் அவனால் பேச முடியவில்லை. அவனுக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படுவதால் மூளை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. பல மருத்துவர்களிடம் காண்பித்தும் அவன் குணமடையவில்லை. தற்போது அவனுக்கு தினமும் 20 முறை வலிப்பு ஏற்படுகிறது.

    இதை குணப்படுத்த முடியாது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் எனது குடும்பமே நிம்மதி இழந்து தவிக்கிறது. நோய் பாதிப்பை குணப்படுத்த முடியாத நிலையில் பாதிப்புக்கு உள்ளானவரை கருணைக் கொலை செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, எனது மகனை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று அந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    சிறுவன் குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளானா? என்பதை கண்டறியவும், அவனை கருணை கொலை செய்ய அனுமதிக்கலாமா? என்பது குறித்து முடிவு எடுக்கவும் தகுதியான மருத்துவ நிபுணர்களை கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். இந்தக்குழுவில் இடம் பெறும் மருத்துவர்கள் 2 வாரங்களுக்குள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    அப்பல்லோ மருத்துவ மனையின் நரம்பியல் துறை பேராசிரியர் ரெஜினால்டு, ஓய்வு பெற்ற குழந்தைகள் நல மருத்துவர் ராமச்சந்திரன், மத்திய அரசின் சுகாதார திட்டங்களுக்கான தலைமை மருத்துவ அதிகாரி உமா மகேஸ்வரி ஆகியோர் அந்த மருத்துவர்கள் குழுவை தேர்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    விசாரணை அடுத்த மாதம்(செப்டம்பர்) 10-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×