search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடையார்பாளையம் கிராமத்தில் மருத்துவ குழுவினர் முகாம்
    X

    இடையார்பாளையம் பகுதியில் டாக்டர்கள் குழுவினர் ஆய்வு செய்த காட்சி.

    இடையார்பாளையம் கிராமத்தில் மருத்துவ குழுவினர் முகாம்

    • குப்பாண்டம் பாளையம் கிராமம் இடையார் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
    • இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்திக்கு கடந்த 29-ம் தேதி காய்ச்சல் வந்துள்ளது. இதனையடுத்து, அவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம், குப்பாண்டம் பாளையம் கிராமம் இடையார் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்திக்கு கடந்த 29-ம் தேதி காய்ச்சல் வந்துள்ளது. இதனையடுத்து, அவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து 4 மாணவர் களுக்கும் காய்ச்சல் வந்துள்ளது. இதனால் நேற்று பள்ளிக்கு யாரும் வரவில்லை.

    இதனால் அதிகாரிகள் பள்ளி குழந்தைகள் 17 பேரின் வீட்டிற்கு சென்று மருத்துவ குழு பரிசோதனை செய்தனர். எலச்சிபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் கருணாகரன் தலைமையில், நடமாடும் மருத்துவ குழு டாக்டர் வசந்தபிரியா, பள்ளி சிறார் மருத்துவக்குழு டாக்டர் கிருஷ்ணகாந்த் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சுகாதார கிராம செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ குழு இடையார்பாளையம் வந்து முகாமிட்டு அனைத்து குழந்தைகளையும் பரிசோதித்து ரத்த பரிசோதனை செய்து காய்ச்சலுக்கான காரணங்களை ஆய்வு செய்தனர்.

    பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிகிச்சைகள், மாத்திரைகள் அளிக்கப்பட்டது. மலேரியா, டெங்கு காய்ச்சலுக்கான ரத்த பரிசோதனை நடைபெற்றது. அதில் யாருக்கும் மலேரியா, டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படவில்லை

    அதுமட்டுமல்லாது, இடையார்பாளையம் கிராமம் முழுவதும் கொசுப்புழு ஒழித்தல், புகை மருந்து அடித்தல், பிளீச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல், இருமல், சளி தொந்தரவுகள் உள்ளதா? எனவும் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மாத்திரை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×