search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 Motorcycle"

    • கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் இயங்கி வருகிறது.
    • ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் கேபிள் வயர் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் இயங்கி வருகிறது.

    இந்த நிறுவன வளாகத்தில் விலை உயர்ந்த கேபிள் வயர்கள் மற்றும் இரும்பு பொருட்கள் உள்ளன.

    இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள கேபிள் வயரை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள இடத்திற்குள் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வடக்கு தெருவைச் சேர்ந்த சத்யன் (வயது 24), கடலூர் சுனாமி நகர் வடக்கு தெருவை சேர்ந்த மதன் (28), கொள்ளிடம் அருகே உள்ள வழுதலைகுடி கிராமம் முத்து (26), செல்வராஜ்( 55) ஆகிய 4 பேரும் புகுந்து கேபிள் வயர்களை திருடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது அதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அந்த 4 பேரையும் பிடித்து புதுப்பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் மேற்கண்ட நான்கு பேரையும் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    ×