search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "River dam"

    • வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இந்த சம்பவம் அந்த பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    கடலூர், ஜூன்.5-

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் போலீஸ் சரகம் கீழ் அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் கெடிலம் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

    தற்போது கோடை மழை பெய்ததால் இந்த தடுப்பணையில் ஓரளவு தண்ணீர் உள்ளது. எனவே இந்த தடுப்பணையில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள், சிறுமிகள் குளிப்பது வழக்கம்.

    அதன்படி இன்று காலை அதே பகுதியை சேர்ந்த பெண் பிரியா, மாணவிகள் மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷிணி, நவி ஆகியோர் தடுப்பணையில் குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் ஆழமான பகுதியில் இறங்கினர்.

    இதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கினார்கள். உயிர் பிழைக்க அவர்கள் கூச்சலிட்டனர். சத்தம்கேட்டு கிராம மக்கள் திரண்டு வந்தனர். உடனடியாக ஆற்றில் மூழ்கிய 7 பேரையும் மீட்டனர். அவர்கள் மயங்கிய நிலையில் காணப்பட்டனர்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வேன் வரவழைக்கப்பட்டது. அந்த வேனில் 7 பேரும் ஏற்றி செல்லப்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    ஆனால் சிறுமிகள் உள்பட 7 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக்கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் விஜய லட்சுமி தலைமையில் நடைபெற்றது. #farmers

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக்கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் விஜய லட்சுமி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட திட்ட அலுவலர் லோகேஸ் வரி,கோட்டாட்சியர் சத்தியநாராயணன், மாவட்ட கூடுதல் எஸ்பி. பெரியய்யா, தாசில்தார் முத்து லெட்சுமி, கூட்டுறவு இணை பதிவாளர் பழனிவேல், துணை பதிவாளர் செல்வராஜ், வேளாண் துறை இணை இயக்குனர் உதய குமார், வேளாண்மை அதிகாரி வடிவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன், விவசாய சங்க பிரதிநிதி அரியலூர் பிச்சபிள்ளை, செங்கமுத்து, வாரணவாசி ராஜேந்திரன், ஆண்டிமடம் ஜெயசந்திரன், தூத்தூர் தர்மராஜ், திருமானூர் சண்முகசுந்தரம், அம்பேத்கர் வழியன், பாண்டியன், ஏரிமற்றும் ஆற்று பாசன விவசாய சங்க தலைவர் விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்,

    கூட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் 5 இடங்களில் தடுப்பனை கட்ட வேண்டும், புள்ளம் பாடி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும், ஏரி, குளம், வாய்க்கால் பகுதியில் குடிமராமத்து திட்டத்தில் நடை பெற்ற முறைகேடுகளை விசாரிக்க வேண்டும்,ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது,

    இக்கூட்டத்தில் கலெக்டர் விஜய லெட்சுமிபேசும் போது, அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம் இது நாள் வரை 196.98 மி.மீ. மழை பெய்துள்ளது. வேளாண்மை மற்றும் தோட்டக் கலை பயிர்களுக்கு தேவையான 1306 மெ.டன் யூரியா, 856 மெ.டன் டி.ஏ.பி, 637 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 1066 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளது. இதுவரை சான்று பெற்ற நெல் விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் 15 மெ.டன், தனியார் விதை விற்பனை மையங்கள் மூலம் 5 மெ.டன் என கூடுதலாக 20 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

    தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் 129 மெ.டன் மற்றும் தனியார் கடைகளில் 30 மெ.டன் ஆக மொத்தம் 159 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×