search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puzhal Prison"

    சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை அம்பலமானதால் 2 தலைமை வார்டர்கள் உள்பட 8 வார்டர்கள் வெவ்வேறு சிறைகளுக்கு அதிரடி மாற்றம் செய்யப்பட்டனர். #PuzhalJail
    செங்குன்றம்:

    சென்னை அருகே உள்ள புழல் சிறையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கு, பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய கைதிகள் உள்ளிட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக புகைப்படங்கள் சமீபத்தில் அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



    இது குறித்த புகாரின் பேரில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து 5 கைதிகள் திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த சிறை காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க ஆலோசனை நடந்து வருகிறது.

    இந்நிலையில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லா உத்தரவின் பேரில் தண்டனை சிறையில் பணிபுரிந்த தலைமை வார்டர்கள் விஜயராஜ் ஊட்டி கிளை சிறைக்கும், கணேசன் செங்கம் கிளை சிறைக்கும் மாற்றப்பட்டனர்.

    இதேபோல் வார்டர்கள் பாவாடைராயர், செல்வகுமார் ஆகியோர் வேலூர் சிறைக்கும், ஜெபஸ்டீன் செல்வக்குமார், பிரதாப்சிங் ஆகியோர் கோவை சிறைக்கும், சிங்காரவேலன் சேலம் சிறைக்கும், சுப்பிரமணியன் திருச்சி சிறைக்கும் அதிரடியாக மாற்றப்பட்டனர்.  #PuzhalJail
    ஜெயில்களில் சோதனை நடத்துவது காலம் கடந்த நடவடிக்கை என்று நல்லக்கண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #TNPrisons #Nallakannu

    நாகர்கோவில்:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புழல் ஜெயிலில் கைதிகள் அறையில் பயன்படுத்தப்பட்ட டி.வி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் துணை இல்லாமல் ஜெயிலுக்குள் டி.வி. கொண்டு செல்ல முடியாது. இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்போது தமிழகம் முழுவதும் ஜெயில்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சோதனை காலம் கடந்து நடத்தப்படும் நடவடிக்கை ஆகும்.

    தமிழகம் முழுவதும் மின்சார தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதாக கூறி வருகிறார்கள். ஆனால் மின்சாரம் தட்டுப்பாடு உள்ளது. இதை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. அரசு மின்சார வாரியத்தை தனியார் மயமாக்க முயற்சி செய்து வருகிறது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


    27 ஆண்டுகள் அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்வதில் சட்ட சிக்கலும் இல்லை. மக்கள் ஆதரவும் அளித்துள்ளனர். எனவே அவர்களை தாமதம் இல்லாமல் உடனே விடுதலை செய்ய வேண்டும்.

    தமிழக அமைச்சர்கள் அனைவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது. குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயபாஸ்கர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். தமிழக அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிக்கிறது.

    ஆட்சியை தக்க வைக்க வேண்டும், வரும் தேர்தலை அதிகாரத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதை மனதில் கொண்டே அவர்கள் செயல் படுகிறார்கள். மக்களை பற்றி கவலைப்பட வில்லை. ஜனநாயக விரோத ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.

    அ.தி.மு.க. அரசு பாரதிய ஜனதாவின் கை பொம்மையாக உள்ளது. எச். ராஜா உள்பட ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் வரைமுறை இல்லாமல் பேசுகிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தூத்துக்குடிக்கு தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமானத்தில் வந்தபோது, அதே விமானத்தில் வந்த மாணவி சோபியா பாரதிய ஜனதாவுக்கு எதிராக கோ‌ஷமிட்டதால் அவர் கைது செய்யப்பட்டும், அவரது பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

    குமரி மாவட்டத்தில் ஒகி புயல் தாக்கிய பிறகு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், பிரதமர் மோடியும் காலம் கடந்து வந்தே இங்கு பார்வையிட்டனர். அப்போது அவர்கள் அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மீனவர்களுக்கு, விவசாயிகளுக்கு, மலை வாழ் மக்களுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை.

    நாகர்கோவிலில் தற்போது 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மக்களுக்கான அடிப்படை வசதி பற்றி அரசு கவலைப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #TNPrisons #Nallakannu

    முதல் வகுப்பு கைதிகள் தொலைக்காட்சி பெட்டிகளை வைத்துக்கொள்ள சிறை விதிகள் அனுமதிக்கிறது என சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். #PuzhalPrison #CVeShunmugam
    சென்னை:

    சென்னை புழல் மத்திய சிறையில் 750-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.

    இந்நிலையில் புழல் சிறையில் தண்டனை கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சில கைதிகள் சொகுசு மெத்தையுடன் கூடிய அறை, ஆடம்பர உடை, விதவிதமான உணவுகள், செல்போன்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது.

    மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக இன்று விளக்கமளித்த சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் கூறியதாவது:-

    முதல் வகுப்பு சிறைகளில் கைதிகள் தொலைக்காட்சிகளை வைத்துக்கொள்ள சிறை விதி அனுமதிக்கிறது. சிறை விதிகளின்படி கைதிகள் தங்களின் அறைகளில் வர்ணம் பூசிக் கொள்ளலாம். சிறையின் உள்ளே கலைகள் வரைய படிக்கும் கைதிகள் சிறை அதிகாரிகள் அனுமதியுடன் இதுபோல வரைந்து கொள்கின்றனர். 

    சில அதிகாரிகள் உதவியுடன் செல்போன்கள் மட்டும் சிறைக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    என தெரிவித்தார். 
    சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசாக வாழ்ந்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோவை, சேலம் மற்றும் கடலூர் மத்திய சிறைகளில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். #TNPrisons
    சென்னை:

    சென்னை புழல் மத்திய சிறையில் 750-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.

    இந்நிலையில் புழல் சிறையில் தண்டனை கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சில கைதிகள் சொகுசு மெத்தையுடன் கூடிய அறை, ஆடம்பர உடை, விதவிதமான உணவுகள், செல்போன்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது.

    இதனால் சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்த டி.வி.க்கள், எப்.எம். ரேடியோக்கள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். சிறை அறைக்குள் இவை எப்படி வந்தன? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சிறையில் இருந்தவாறே வங்காளதேசம், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்போன்களில் சிலர் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த சிறைக் காவலர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதனிடையே புழல் சிறையில் கைதிகள் சொகுசாக இருப்பதாக புகைப்படங்கள் வெளியானதை அடுத்து சேலம், கடலூர், கோவை மத்திய சிறையில் 180க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

    சேலத்தில் துணை ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையில்  40 போலீசாரும், கடலூரில் டிஎஸ்பி லாமேக் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசாரும் காலை 6 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதே போல் கோவையில் எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சிறை கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் உள்ளதா எனவும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    சென்னை புழல் சிறைச்சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டிகள், எப்எம் ரேடியோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். #PuzhalPrison
    சென்னை:

    சென்னை புழல் சிறையில் சுமார் 3 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களில் சுமார் 750 பேர் தண்டனை கைதிகள். சுமார் 2 ஆயிரம் பேர் விசாரணை கைதிகள். பெண்கள் சிறையில் சுமார் 150 பேர் இருக்கிறார்கள்.



    தண்டனை பெற்ற கைதிகளில் பெரும்பாலானவர்கள் புழல் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருபவதாக சமீபத்தில் புகைப்படங்களுடன் தகவல் வெளியானது. ஆடம்பர உடை-ஷூ அணிந்து ஒரு கைதி சொகுசு மெத்தையில் படுத்து இருக்கும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தின.

    தண்டனை கைதிகள் தினமும் வெளியில் இருந்து வரும் அறுசுவை உணவு சாப்பிடுவதும், செல்போனில் பேசுவதும், செல்பி எடுத்து ஜாலியாக பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 3-ந்தேதி புழல் சிறைக்குள் லஞ்ச ஒழிப்புப் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது தண்டனை கைதிகளிடம் இருந்து 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தீவிரவாதி ஒருவனிடம் இருந்து 2 ஆன்ட்ராய்டு செல்போன்களும், இலங்கையைச் சேர்ந்த கஞ்சா கடத்தல்காரன் ஒருவனிடம் இருந்து நவீன செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    அந்த செல்போன்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போதுதான் தண்டனை கைதிகள் மிகவும் உல்லாசமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது தெரிய வந்தது.

    இதையடுத்து தண்டனை கைதிகள் உள்ள அறைகளில் நேற்று காலை அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சிறைத்துறை தலைவர் அசுதோஷ் சுக்லா, டி.ஐ.ஜி. கனகராஜ் தலைமையில் போலீசார் இந்த சோதனை நடத்தினார்கள். அப்போதும் சில செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அதன்பிறகு தண்டனை கைதிகள் எப்படி சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள்? அவர்களுக்கு யார்-யார் உதவி செய்கிறார்கள் என்று விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

    இதையடுத்து புழல் ஜெயில் விசாரணையை தீவிரப்படுத்த போலீஸ் உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர். தலைமையிடத்து சிறைத்துறை போலீஸ் டி.ஜி.பி. முருகேசனை அழைத்த சிறைத்துறை தலைவர் அசுதோஷ் சுக்லா புழல் ஜெயிலுக்குள் சென்று அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தும்படி உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து நேற்று இரவு தலைமையிடத்து சிறைத்துறை போலீஸ் டி.ஜி.பி. முருகேசன் தலைமையில் போலீஸ் படை ஒன்று புழல் ஜெயிலுக்கு சென்றது. அங்கு அவர்கள் தண்டனை கைதிகளின் அறைகளை சோதனையிட்டனர்.

    முதல் வகுப்பு அறைகளில் உள்ள கைதிகளை குறி வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 24 உயர்மட்ட அறைகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அந்த அறைகளில் உள்ள ஒவ்வொரு பகுதிகளையும் போலீசார் சல்லடை போட்டு ஆய்வு செய்தனர்.

    இரவு 9 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை 11 மணி வரை நீடித்தது. இந்த சோதனையில் முதல் வகுப்பு அறைகளில் தண்டனை கைதிகள் 18 டி.வி.க்களை வைத்து பொழுது போக்கு நிகழ்ச்சிகளை பார்த்து வந்தது தெரிய வந்தது. அந்த 18 டி.வி.க்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அந்த 18 டி.வி.க்களும் உயர்ரக விலைமிகுந்த தொலைக்காட்சி பெட்டிகளாகும். அவை எப்படி புழல் ஜெயிலுக்குள் கொண்டு வரப்பட்டது என்பது சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு மலைப்பை ஏற்படுத்தியது. அந்த தொலைக்காட்சி பெட்டிகளுக்கு மின்இணைப்பு வசதியும் செய்து கொடுக்கப்பட்டது எப்படி என்று அதிகாரிகள் திகைத்தனர்.

    தொலைக்காட்சி பெட்டி தவிர 3 எப்.எம். ரேடியோவையும் போலீசார் கைப்பற்றினார்கள். சில பணக்கார கைதிகள் இந்த எப்.எம். ரேடியோக்களை பயன்படுத்தியது தெரிய வந்தது. ஜாலியாக அவர்கள் அந்த ரேடியோக்களில் பாட்டுகளை கேட்டு பொழுதை கழித்து உள்ளனர்.

    இவை தவிர கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சிறைத்துறை போலீசார் உதவி இல்லாமல் இவை வந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    புழல் ஜெயிலில் கைப்பற்றப்பட்ட செல்போன்களும் அதிநவீனமானவை. அந்த செல்போன்கள் மூலம் வெளிநாடுகளுக்கு பேசப்பட்டு உள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் தனி விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக தனியாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் தண்டனை கைதிகள் மீதும் அவர்களுக்கு உதவி செய்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைத்துறை தலைவர் அசுத்தோஷ் சுக்லா கூறியுள்ளார். #PuzhalPrison

    40 கோடி மோசடி செய்தது தொடர்பாக கைதான தொழில் அதிபரை விசாரணைக்கு பிறகு போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
    சென்னை:

    சென்னை அண்ணா சாலை ஸ்டேட் பேங்க் தெருவை சேர்ந்தவர் ஷிவ் ரத்தன் கன்னா (வயது 56). தொழில் அதிபரான இவர் சென்னை போலீஸ் கமி‌ஷனரை சந்தித்து ஏற்கனவே ஒரு புகார் மனு கொடுத்திருந்தார்.

    அதில் தனது நெருங்கிய உறவினரான மைலாப்பூர் தொழில் அதிபர் சுமித் மல்கோத்ரா (வயது 47)வும் நானும் பங்குதாரர்களாக சேர்ந்து, அலங்கார மின் விளக்குகள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தோம்.

    கடையை பெரும்பாலும் சுமித் மல்கோத்ராதான் கவனித்து வந்தார். எனக்கு ‘லைட்டிங்’ தொழில் தெரியாது என்பதால் என்னை நம்ப வைத்து கடை வருமானத்தில் ரூ.40 கோடியை சுருட்டி அம்பத்தூரில் தனக்கென தனியாக ஒரு கடையை தொடங்கி விட்டார்.

    இந்த மோசடியை கண்டு பிடித்த நான், அவரிடம் பணத்தை திருப்பி தரும்படி கேட்டேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றியது மட்டுமின்றி பணம் தராமல் மோசடி செய்கிறார்.

    எனவே சுமித் மல்கோத்ரா மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி பூஜா மல்கோத்ரா, ரேவதிராமன் மல்கோத்ரா, உமேஷ் மல்கோத்ரா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவு துணை கமி‌ஷனர் மல்லிகா, உதவி கமி‌ஷனர் சச்சிதானந்தம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி விசாரணை நடத்தினார்.

    பணம் மோசடி, கையாடல் நடந்தது தெரிய வந்துள்ளதால் இந்திய தண்டனை சட்டம் 406, 420, 120பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தொழில் அதிபர் சுமித் மல்கோத்ராவை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

    சுமித் மல்கோத்ரா ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு செய்திருந்தார். அந்த மனுவும் தள்ளுபடி ஆகிவிட்டது.

    பூஜா மல்கோத்ரா, உமேஷ் மல்கோத்ரா, ரேவதிராமன் மல்கோத்ரா ஆகியோர் ஐகோர்ட்டில் முன்ஜாமீனுக்கு முயற்சி செய்து வருகின்றனர்.#tamilnews
    ×