என் மலர்
நீங்கள் தேடியது "Dindigul government hospital"
- சிறுமி வயிற்றில் சேப்டி பின் இருப்பதை பார்த்த டாக்டர்கள் அதனை அகற்ற 3 முறை முயற்சித்தும் முடியவில்லை.
- சிறுமிக்கு மலக்குடல் வழியாக ரத்தம் வெளியேறியது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லை சேர்ந்த 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தவறுதலாக ஊக்கு எனப்படும் சேப்டி பின்னை விழுங்கி விட்டார். அதன் பிறகு சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு சரியாக உணவு உட்கொள்ள முடியாத நிலை உருவானது.
அவரை அங்குள்ள ஆஸ்பத்திரியில் பெற்றோர்கள் சேர்த்தனர். பரிசோதனைக்குப் பிறகு வயிற்றில் சேப்டி பின் இருப்பதை பார்த்த டாக்டர்கள் அதனை அகற்ற 3 முறை முயற்சித்தும் முடியவில்லை. இந்நிலையில் சேப்டி பின்னில் வாய் திறந்த நிலையில் குடலுக்குள் இருப்பதால் அதனை அகற்ற முடியாது என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சொந்த ஊர் திரும்பினர்.
அதன் பிறகு சிறுமிக்கு மலக்குடல் வழியாக ரத்தம் வெளியேறியது. இதனால் பெற்றோர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தங்கள் மகளை சிகிச்சைக்காக சேர்த்தனர். அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குடல் உள்நோக்கி (எண்டோஸ்கோபி) மூலம் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து சேப்டி பின்னை அகற்றினர்.
தற்போது சிறுமி இயல்பு நிலைக்கு திரும்பியதால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்து டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். இதேபோல தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளும் அறுவை சிகிச்சை போல அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களும் சாதித்து காட்டியதால் அவர்களுக்கு டீன் சுகந்தி ராஜகுமாரி, கண்காணிப்பாளர் வீரமணி ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.
பருவமழை தொடங்க உள்ள சூழ்நிலையில் தற்போது ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக டெங்கு, மலேரியா, பன்றிகாய்ச்சல் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இதனால் உயிரிழப்புகளும் தொடர்ந்துகொண்டே உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது குறித்து நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மாலதிபிரகாஷ் தெரிவிக்கையில், திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தற்போது வழக்கத்தை விட கூடுதலாக காய்ச்சல், சளி, இருமல் தாக்கத்தால் நோயாளிகள் வருகின்றனர். அவர்களுக்கு போதிய மருத்துவ உதவிகள் செய்து வருகிறோம்.
டெங்கு பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பன்றி காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என்ற சோதனை நடத்த திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் வசதி இல்லை.
மதுரை அல்லது கோவை அரசு ஆஸ்பத்திரிக்குதான் செல்ல வேண்டும். தனியார் ஆஸ்பத்திரிகளில் ரூ.3500 செலவில் இதற்கான சோதனை நடத்தப்படுகிறது. பன்றி காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அவர்களுக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படும். அதற்கான மருந்து மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நோய் தொற்று உள்ளவர்கள் மூலம் மற்றவர்களுக்கு இது பரவும் என்பதால் குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் உடனடியாக ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோரை விரைவில் தாக்கும். வெளியூர்களுக்கு செல்வது, சுகாதாரமற்ற குடிநீரை குடிப்பதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினர். #Swineflu
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்கு தாய்ப்பால் அவசியமாகும். சில தாய்மார்களின் குழந்தைகளுக்கு தேவையான தாய்ப்பால் கிடைப்பதில்லை. இதனை தவிர்க்க அரசு சார்பில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது.
தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு இவ்வங்கி மூலம் பால் கொடுக்கப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் இதுவரை 165 தாய்மார்களிடம் இருந்து 19.5 லிட்டர் தாய்ப்பால் பெறப்பட்டுள்ளது.
இந்த வங்கியில் பாலை பதப்படுத்தி குழந்தைகளுக்கு வழங்குகின்றனர். இத்திட்டத்தின் மூலம் திண்டுக்கல்லில் 415 குழந்தைகள் பயனடைந்துள்ளனர். தாய்ப்பால் இல்லாத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தேவையான பாலை வங்கியில் பெறலாம். மேலும் தானமாக தாய்ப்பால் கொடுக்க விரும்பும் தாய்மார்களும் இந்த வங்கியில் தொடர்பு கொள்ளலாம் என நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மாலதி பிரகாஷ் தெரிவித்துள்ளார். #tamilnews
திண்டுக்கல் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக, திண்டுக்கல் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டாரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.அந்த வகையில் முதியோர்களும் கணிசமான அளவில் இங்கு சிகிச்சை பெற வருகின்றனர்.
இவர்களுக்கு சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, மனநலம் உள்பட பல்வேறு நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக சர்க்கரை, ரத்தக்கொதிப்பு போன்றவை முதியோர்களை அதிகம் தாக்கும் நோயாக உள்ளது. இதற்காக சிகிச்சை பெற இங்கு வரும் முதியோர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு சிகிச்சை பிரிவுகளில் முதியோருக்காக தனி வரிசை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பொதுவாக முதியோர்கள் இங்கு சிகிச்சை பெற வரும் போது நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் அவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இதனை தவிர்க்க மருத்துவமனையின் புறநோயாளிகளுக்கான சீட்டு வாங்கும் இடம், ரத்தவங்கி, மருந்தகம், ஆண்கள், பெண்கள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு மற்றும் ஊசி போடும் இடம் ஆகிய இடங்களில் முதியோருக்காக தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் இது நடைமுறைப்படுத்தப்படும். எனவே முதியோர்கள் இந்த சிறப்பு சலுகையை பயன் படுத்தி விரைவாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி. புறநகர் பகுதி மற்றும் வேடசந்தூர், வத்தலக்குண்டு, அய்யலூர், வடமதுரை, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர். மேலும் அவரது உறவினர்கள் என எப்போதுமே ஆஸ்பத்திரி வளாகம் பரபரப்பாக காணப்படும்.
திருச்சி சாலை, சத்திரம் தெரு ஆகிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போலீசார் இப்பகுதியில் ஒருவழிச்சாலை அமல்படுத்தி போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர்.
ஆனால் சில தனியார் பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் விதிகளை மீறி நிறுத்திச்செல்வதால் போக்குவரத்து நெரிசலால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாலையின் நடுவிலேயே வாகனங்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் மற்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பஸ்கள் நிறுத்தக்கூடாது என போக்குவரத்து போலீசார் அறிவிப்பு பலகை வைத்துள்ள இடத்தில் தனியார் பஸ்கள் பலமணி நேரம் காத்திருந்து பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் ஆஸ்பத்திரி முன்பு வாகன நெரிசல் ஏற்படுகிறது.
ஆம்புலன்ஸ் கூட செல்லமுடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே விதிமீறி நிறுத்தப்படும் பஸ்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






