search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தைகள்"

    இலவச மற்றும் கட்டாய கல்வி திட்டத்தில் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.

    கீழக்கரை

    தமிழகம் முழுவதும் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் படி ஏழை, எளிய குழந்தைகள் தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளியில் படிப்பதற்காக இலவச மற்றும் கட்டாய கல்வியை மத்திய அரசு அறிவித்தது. 

    இதன்படி எல்.கே.ஜி.வகுப்பில் சேர்க்க கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளிக்கு 38 இடங்கள் ஒதுக்கப்பட்டது. இது குறித்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை அறிவிக்கப்பட்ட ஆவணங்களுடன் பெற்றோர்கள் இணைய தளத்தில் பதிவு செய்தனர். 

    இஸ்லாமியா பள்ளியில் சேருவதற்காக மொத்தம் 211 மனுக்கள் கல்வித்துறையால் பெறப்பட்டது. இதில் மாவட்ட கல்வித்துறை அதிகாரி அலுவலகத்தில் 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது, மீதமுள்ள 28 இடங்களுக்கு மாவட்ட கல்வி துறையால் பரிந்துரை செய்யப்பட்ட 163 பெயர்கள் எழுதப்பட்டு குலுக்கல்  நடந்தது. 

    ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பெயர் தேர்வு செய்யப்படுமா? என்ற ஆவலில் பள்ளி வளாகத்தில் காத்திருந்தனர். பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் ஆலோசனையின் படி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், மாவட்ட கல்வித்துறை அலு வலக பார்வையாளர் மாயா முன்னிலையில் குலுக்கல் நடந்தது. இதில் 28 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 

    பள்ளி நிர்வாக அலுவலர் மலைச்சாமி தேர்வு செய்யப்பட்ட குழந்தை களின் பெயரை அறிவிப்பு செய்தார். பின்னர் பள்ளி யில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.
    இலவச எல்.கே.ஜி. சேர்க்கை தொடர்பாக சேலம், நாமக்கல் மாவட்ட பள்ளிகளில் இன்று குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு, பெயர் பட்டியல் பலகையில் ஒட்டப்பட்டது.
    சேலம்:

    2022-2023-ம் கல்வியாண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 ன்படி, அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத  இடஒதுக்கீட்டில் சேர்க்கைக்கு 20.04.2022 முதல் 25.05.2022 வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

    இதனை தொடர்ந்து, அவற்றில் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் விவரம் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சம்பந்தப்பட்ட பள்ளித் தகவல் பலகையில் கடந்த 28-ந்தேதி  ஒட்டப்பட்டது.

    தகுதியான விண்ணப்பங்கள் 25 சதவீத  இடஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிடக் கூடுதலாக உள்ள பள்ளிகளில் இன்று (30-ந்தேதி) குலுக்கல் முறையில்    தெரிவு செய்து மாணவர் சேர்க்கை வழங்கப்படும் என கடந்த 3 நாட்களுக்கு முன்பு கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

    குலுக்கல் மூலம் தேர்வு இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிகளில் இருந்து பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு குலுக்கல் நடைபெறும் நேரம் தெரிவிக்கப்பட்டது. மேலும், குழந்தையின் பிறந்த சான்றிதழ், சாதி சான்றிதழ், நலிவடைந்த பிரிவினருக்கான வருமான சான்று, ஆதார்  அட்டை, புகைப்படம், பெற்றோரின் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை பள்ளிக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கூறப்பட்டது.

    அதன்படி இன்று காலை 9 மணிக்கு முன்பாக  பெற்றோர்கள் உரிய ஆவணங்களுடன் தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளுக்கு வந்திருந்தனர்.  ஒரு இடத்திற்கு பலர் விண்ணப்பித்திருந்ததால்  பள்ளி கல்வித்துறை சார்பில்  பள்ளிகளில் குலுக்கல் முறையை கண்காணிக்க  ஆசிரியர் பயிற்றுநர், தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 

    காலை 10 மணி அளவில் வகுப்பறையில்  வைத்து மாணவ- மாணவிகளின் பெயர்கள் துண்டு சீட்டுக்களில் எழுதி அட்டை பெட்டிகளில் போடப்பட்டது. இதையடுத்து பெற்றோர், பள்ளி நிர்வாகம் முன்னிலையில் அரசு அதிகாரி மேற்பார்வையில்  அட்டை பெட்டி குலுக்கப்பட்டது. அதில் ஒவ்வொரு மாணவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

    இன்று  பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு  மையமாக செயல்பட்ட பள்ளிகளில் மட்டும் தேர்வு முடிந்ததும் பிற்பகல் வேளையில்  குலுக்கல்  நடைபெற்றது.

    பெயர் பட்டியல் இந்த குலுக்கல் மற்றும் குலுக்கல் அல்லாத முறையில் தேர்வு   செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் அரசு அதிகாரியிடம் பள்ளி நிர்வாகம் வழங்கியது.  மேலும் இந்த தேர்வு  பட்டியலும் பள்ளி நோட்டீசு பலகையில்   ஒட்டப்பட்டது.  மேலும் உடனுக்குடன்  இந்த குழந்தைகளுக்கு இலவச எல்.கே.ஜி. சேர்க்கை   வழங்கப்பட்டது.
    ×