search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 children"

    • வீட்டில் இருந்த மாணவி மற்றும் பெற்றோரிடம் செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்கி தர மறுத்ததால் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    தேனி:

    தேனி மாவட்டம் கூடலூர் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகள் அம்பிகா (வயது15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கூலி வேலை பார்த்து வந்த சுப்பிரமணி கடந்த 2 மாதத்துக்கு முன்பு கேரளாவுக்கு தனது மகளை அழைத்து சென்றார்.

    அதன்பிறகு மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார். இது குறித்து கூடலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பழனிசெட்டிபட்டி வடக்கு ஜெகநாதபுரத்தை சேர்ந்த மகேஷ்வரன் மகன் சுந்தரபாண்டியன் (14). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவந்தான். சம்பவத்தன்று உடல்நிலை சரியில்லாததால் வீட்டில் இருந்தார். அப்போது கடைக்கு செல்வதாக கூறி சென்ற சுந்தரபாண்டியன் மாயமானார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ராயப்பன்பட்டி அருகில் உள்ள காமயகவுண்டன்பட்டி கருமாரிபுரத்தை சேர்ந்தவர் சுகுமார் மகன் ரஞ்சித்குமார் (19). இவர் தனது பெற்றோரிடம் செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அவர்கள் வாங்கி தர மறுத்ததால் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    அதன்பிறகு எங்கே சென்றார் என தெரிய வில்லை. இது குறித்து அவரது தாய் லதா கொடுத்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அயனாவரம் அருகே நடத்தை பற்றி பக்கத்து வீட்டு பெண்கள் தவறாக பேசியதால் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து பெண் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அம்பத்தூர்:

    அயனாவரம் கெல்லீஸ் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி திவ்யா (28). இவர்களுக்கு விக்னேஷ் (11), என்ற மகனும், அபிநயா (8), செந்தமிழ் (5) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக மனைவி குழந்தைகளை பிரிந்து சென்ற வெங்கடேஷ் ஒருவருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார்.

    இந்தநிலையில் திவ்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் திவ்யா வீட்டுக்கு வந்து சென்றார். இதை பக்கத்து வீட்டு பெண்கள் தவறாக பேசினார்கள். திவ்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டனர்.

    இதனால் மனவருத்தம் அடைந்த திவ்யா நேற்று இரவு பாலில் எலிமருந்து கலந்து குடித்தார். தனது குழந்தைகள் விக்னேஷ், அபிநயா மற்றும் செந்தமிழ் ஆகியோருக்கும் கொடுத்தார். வயிறு மற்றும் தொண்டை எரிந்ததால் நள்ளிரவு 12 மணியளவில் குழந்தைகள் அலற தொடங்கினர்.

    உடனே அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தலைமை செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தார். பக்கத்து வீடுகளை சேர்ந்த 3 பெண்களிடம் விசாரணை நடத்தினார். #tamilnews
    ×