என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடத்தை பற்றி தவறாக பேசியதால் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து பெண் தற்கொலை முயற்சி
Byமாலை மலர்5 Feb 2019 11:46 AM GMT (Updated: 5 Feb 2019 11:46 AM GMT)
அயனாவரம் அருகே நடத்தை பற்றி பக்கத்து வீட்டு பெண்கள் தவறாக பேசியதால் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து பெண் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அம்பத்தூர்:
அயனாவரம் கெல்லீஸ் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி திவ்யா (28). இவர்களுக்கு விக்னேஷ் (11), என்ற மகனும், அபிநயா (8), செந்தமிழ் (5) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக மனைவி குழந்தைகளை பிரிந்து சென்ற வெங்கடேஷ் ஒருவருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்தநிலையில் திவ்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் திவ்யா வீட்டுக்கு வந்து சென்றார். இதை பக்கத்து வீட்டு பெண்கள் தவறாக பேசினார்கள். திவ்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டனர்.
இதனால் மனவருத்தம் அடைந்த திவ்யா நேற்று இரவு பாலில் எலிமருந்து கலந்து குடித்தார். தனது குழந்தைகள் விக்னேஷ், அபிநயா மற்றும் செந்தமிழ் ஆகியோருக்கும் கொடுத்தார். வயிறு மற்றும் தொண்டை எரிந்ததால் நள்ளிரவு 12 மணியளவில் குழந்தைகள் அலற தொடங்கினர்.
உடனே அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தலைமை செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தார். பக்கத்து வீடுகளை சேர்ந்த 3 பெண்களிடம் விசாரணை நடத்தினார். #tamilnews
அயனாவரம் கெல்லீஸ் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி திவ்யா (28). இவர்களுக்கு விக்னேஷ் (11), என்ற மகனும், அபிநயா (8), செந்தமிழ் (5) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக மனைவி குழந்தைகளை பிரிந்து சென்ற வெங்கடேஷ் ஒருவருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்தநிலையில் திவ்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் திவ்யா வீட்டுக்கு வந்து சென்றார். இதை பக்கத்து வீட்டு பெண்கள் தவறாக பேசினார்கள். திவ்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டனர்.
இதனால் மனவருத்தம் அடைந்த திவ்யா நேற்று இரவு பாலில் எலிமருந்து கலந்து குடித்தார். தனது குழந்தைகள் விக்னேஷ், அபிநயா மற்றும் செந்தமிழ் ஆகியோருக்கும் கொடுத்தார். வயிறு மற்றும் தொண்டை எரிந்ததால் நள்ளிரவு 12 மணியளவில் குழந்தைகள் அலற தொடங்கினர்.
உடனே அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தலைமை செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தார். பக்கத்து வீடுகளை சேர்ந்த 3 பெண்களிடம் விசாரணை நடத்தினார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X