search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman suicide attempt"

    திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    சேதராப்பட்டு:

    புதுவை அருகே திருச் சிற்றம்பலம் கூட்டு ரோடு சப்தகிரி நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். டிரைவர். இவரது மனைவி அமுதமொழி (வயது 32).

    வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இதற்கிடையே ஆறுமுகத்துக்கும், அவரது மனைவி அமுதமொழிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் நேற்றும் அவர்களுக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அமுதமொழி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில், உடல் முழுவதும் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அமுதமொழி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அயனாவரம் அருகே நடத்தை பற்றி பக்கத்து வீட்டு பெண்கள் தவறாக பேசியதால் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து பெண் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அம்பத்தூர்:

    அயனாவரம் கெல்லீஸ் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி திவ்யா (28). இவர்களுக்கு விக்னேஷ் (11), என்ற மகனும், அபிநயா (8), செந்தமிழ் (5) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக மனைவி குழந்தைகளை பிரிந்து சென்ற வெங்கடேஷ் ஒருவருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார்.

    இந்தநிலையில் திவ்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் திவ்யா வீட்டுக்கு வந்து சென்றார். இதை பக்கத்து வீட்டு பெண்கள் தவறாக பேசினார்கள். திவ்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டனர்.

    இதனால் மனவருத்தம் அடைந்த திவ்யா நேற்று இரவு பாலில் எலிமருந்து கலந்து குடித்தார். தனது குழந்தைகள் விக்னேஷ், அபிநயா மற்றும் செந்தமிழ் ஆகியோருக்கும் கொடுத்தார். வயிறு மற்றும் தொண்டை எரிந்ததால் நள்ளிரவு 12 மணியளவில் குழந்தைகள் அலற தொடங்கினர்.

    உடனே அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தலைமை செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தார். பக்கத்து வீடுகளை சேர்ந்த 3 பெண்களிடம் விசாரணை நடத்தினார். #tamilnews
    தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தருமபுரி:

    தருமபுரி செங்கொடிபுரம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனைவி ராணி. இவர்களது மகன் சிவா. இவர் வாய்பேச முடியாதவர்.

    இன்று காலை நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு ராணி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தார்.

    அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.

    பின்னர் ராணியை தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நான் தருமபுரி செங்கொடிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது கணவர் முனியப்பன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். இதனை நான் பலமுறை கண்டித்துள்ளேன். நமக்கு வாய் பேச முடியாத மகன் உள்ளார். அதனை கருத்தில் கொண்டு கள்ளத்தொடர்பை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் இதுவரை அவர் கேட்கவில்லை.

    இது குறித்து நான் மாவட்ட கலெக்டரிடம் 2 முறை மனு கொடுத்தேன். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலும் எனது கணவர் முனியப்பன் என்னிடம் இருந்த சொத்துக்களை எல்லாம் எழுதி வாங்கினார். பின்னர் தினமும் என்னை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினார். இதனால் எனது கணவர் முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஓசூரில் உள்ள துணை கலெக்டர் அலுவலகம் அருகே பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த குமுதேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சர்குணம் (வயது 38).நேற்று பிற்பகலில் இவர் தனது 9 வயது மகளுடன் வந்து ஓசூரில் உள்ள துணை கலெக்டர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்றார். 

    மயங்கி விழுந்த அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சிகிச்சை முடிந்து மயக்கம் தெளிந்தபிறகு தான் அவர் என்ன காரணத்துக்காக தற்கொலைக்கு முயன்றார் என்பது தெரியும்.
    தனிநபர் கழிப்பிடம் கட்டுவதில் நடந்த ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டர் ஆபிசில் பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஒரு பெண் திடீரென தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதை பார்த்ததும் அங் கிருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், எனது பெயர் திண்டுக்கல் அடுத்துள்ள ரெட்டியபட்டியை சேர்ந்த பூசாரி மனைவி பஞ்சு ஆகும். 100 நாள் வேலை திட்டத்தில் பணிதள பொறுப்பாளராக பணியாற்றி வந்தேன்.

    பாரத பிரதமரின் தனிநபர் கழிப்பறை கட்டுவதற்காக ரெட்டியப்பட்டி ஊராட்சி புதுக்கோட்டையில் ஒப்பந்த காரராக பணியாற்றினேன். ரெட்டியப்பட்டி ஊராட்சி செயலாளர் மணி மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி இதற்கான ஆணையை வழங்கினார். ஆனால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி எனக்கு வழங்கிய காண்டிராக்டை ரத்து செய்து விட்டனர். இதனை நம்பி ரூ.3.5 லட்சம் மதிப்பில் செங்கல், மணல் உள்ளிட்ட தளவாட பொருட்கள் வாங்கி வைத்துள்ளேன்.

    வேறு நபர் கழிப்பறை கட்டுவதில் ஊழல் நடப்பதையும் அறிந்தேன். இதுகுறித்து அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே என்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவே தீக்குளிக்க முயன்றேன் என்றார். இதனையடுத்து அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட பட்டதாரி பெண் காதலனுடன் தஞ்சம் அடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை:

    பாளை அருகேயுள்ள சிவந்திபட்டியை சேர்ந்தவர் கோட்டையப்பன்(வயது23). இவர் கேரளாவில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். நெல்லையை அடுத்த தாழையூத்து சாரதாம்பாள் நகரை சேர்ந்த மாரியப்பன் மகள் சுஷ்மிதா(22). பட்டதாரியான இவர் தென்காசியில் ஒரு ஸ்கேன் சென்டரில் வேலை செய்து வருகிறார்.

    சுஷ்மிதா இந்த ஆண்டு தான் கல்லூரி படிப்பை முடித்தார். பாளையில் ஒரு தனியார் கல்லூரியில் இவர் படித்தபோது அப்பகுதியில் உள்ள மற்றொரு கல்லூரியில் கோட்டையப்பன் படித்தார். இருவரும் வேறு வேறு பஸ்சில் வந்து கல்லூரிக்கு செல்வது வழக்கம்.

    பஸ் நிலையத்தில் அவர்கள் சந்தித்துக்கொண்ட போது அவர்களுக்கிடையே காதல் உண்டானது. இதனால் பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்கள் தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர். கல்லூரி படிப்பை முடித்து அவர்கள் வேலைக்கு சென்றபின்னரும் அவர்களது காதல் தொடர்ந்தது. இந்த காதல் விவகாரம் சுஷ்மிதாவின் பெற்றோருக்கு தெரியவந்தது.

    சுஷ்மிதாவின் காதலுக்கு அவரது வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து சுஷ்மிதாவுக்கு அவரது வீட்டினர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் சுஷ்மிதாவுக்கு நிச்சயம் செய்ய ஏற்பாடு நடந்தது. இதை அறிந்த சுஷ்மிதா தனது காதலரிடம் இதுபற்றி கூறினார்.

    இதையடுத்து கடந்த 14-ந்தேதி சுஷ்மிதா வீட்டை விட்டு வெளியேறி காதலன் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் காதல்ஜோடி அப்பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். இதனிடையே மகளை காணவில்லை என சுஷ்மிதாவின் தந்தை மாரியப்பன் தாழையூத்து போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி சுஷ்மிதாவை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் தேடுவதை அறிந்த காதல் ஜோடி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கழுத்தில் மாலை அணிந்தபடி வந்தனர். தங்களை பிரிக்க பெற்றோர் முயற்சிக்கின்றனர், தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று கூறி சுஷ்மிதா தனது காதலனுடன் எஸ்.பி.அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்.

    அலுவலகத்தில் இருந்த போலீஸ் உயர் அதிகாரிகள் காதல் ஜோடியை தாழையூத்து போலீஸ் நிலையத்துக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். தாழையூத்து போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை இறுதியில் சுஷ்மிதாவை அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் கணவருடன் வசித்து வந்த சுஷ்மிதா திருமணம் செய்த 2-வது நாளான நேற்று திடீரென வி‌ஷத்தை குடித்து விட்டார். மயங்கி கிடந்த சுஷ்மிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் அங்கு சுஷ்மிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிவந்திபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கணவரின் 2-வது திருமணத்தை தடுக்கக் கோரி 3 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்ப்பு கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக கலெக்டரிடம் கொடுக்க வந்திருந்தனர்.

    அப்போது 3 குழந்தைகளுடன் வந்திருந்த பெண் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த மண்எண்ணை பாட்டிலை எடுத்து குழந்தைகள் மீதும், அவர் மீதும் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

    பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்ணை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். கையில் வைத்திருந்த மண்எண்ணை பாட்டிலையும் கைப்பற்றினர்.

    பின்னர் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் விழுப்புரம் வி.மருதூர் பகுதியை சேர்ந்த கோபி என்பவரது மனைவி வள்ளியம்மை (வயது 29) என்பதும், இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ள விவரம் தெரிய வந்தது.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டார். கடந்த மாதம் ஊருக்கு வந்தார். அவருக்கு அவரது தாயும், தந்தையும் சேர்ந்து 2-வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

    இதையறிந்த நான், இனி உயிர் வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணினேன். இந்த நிலையில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க முடிவு செய்தேன். அதற்காக 3 குழந்தைகளுடன் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் வந்தேன்.

    மிகுந்த மனவேதனையில் இருந்த நான் மண்எண்ணையை எனது குழந்தைகள் மீதும் ஊற்றி, நானும் தீக்குளிக்க முயன்றேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து வள்ளியம்மையை விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    3 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Villupuramcollectoroffice

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை பெண் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மதுரை:

    மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு நாள் தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் வந்து கோரிக்கை மனு கொடுத்து வருகின்றனர்.

    இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க பெண் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலக வாயில் முன்பு நின்று கொண்டிருந்தார். திடீரென அவர் போலீசாரை கண்டித்து கோ‌ஷமிட்டவாறு தான் கொண்டு வந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு அந்த பெண் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிக்க விடாமல் தடுத்து காப்பாற்றினர்.

    தகவல் அறிந்த தல்லாகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தீக்குளிக்க முயன்றது மதுரை மாவட்டம் மேலூர் நேதாஜி ரோட்டை சேர்ந்த சலீம் மனைவி ‌ஷகிராபானு (வயது 43) என்பது தெரிய வந்தது. இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக அதே பகுதியை சேர்ந்த 5 பேரிடம் கடன் வாங்கியுள்ளார். பல்வேறு தவனைகளில் கடன் பணத்தை வட்டியுடன் செலுத்திய பின்பும் கடன் கொடுத்தவர்கள் கூடுதல் வட்டி கேட்டு துன்புறுத்தியதாகவும் இதுகுறித்து மேலூர் போலீசார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிகிறது.

    இதனால் கடன் கொடுத்தவர்கள் அதிக வட்டி கேட்டு தொந்தரவு செய்வதாகவும், கொலைமிரட்டல் விடுப்பதாக கூறி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ‌ஷகிரா பானு தீக்குளிக்க முயன்றுள்ளார்.
    ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடிப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையத்தில் கெடிலம் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. மழைக்காலங்களில் இந்த ஆற்றங்கரையோரம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அப்போது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

    இதனை தடுக்க கெடிலம் ஆற்றங்கரையை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கெடிலம் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடு மற்றும் கடைகள் இடித்து அகற்றப்பட்டன. இதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் தீக்குளிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை புதுப்பாளையம் காமராஜர் நகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடிப்பதற்காக பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.

    அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதையறிந்த அந்த பகுதி பெண்கள் உள்பட ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இங்குள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் இன்று இடிக்கப்படும் என்று உங்களுக்கு ஏற்கனவே நோட்டீசு அனுப்பி உள்ளோம். அதன்படிதான் இன்று வந்துள்ளோம். எனவே, இந்த பணியை யாரும் தடுக்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறினர்.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த ராதா (வயது 69) என்ற பெண் திடீரென்று தான் கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.


    அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார், ராதாவின் கையில் இருந்த மண்எண்ணை பாட்டிலை பறித்தனர். அந்த பெண்ணின் உடலில் தண்ணீரை ஊற்றினர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது. இதனை கண்டித்து அந்த பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வீடுகளை இடிக்கக்கூடாது என்று கோ‌ஷமிட்டனர்.

    அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இதன் பின்னர் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    கந்துவட்டிக்கு வீட்டை அபகரித்த கும்பலிடம் இருந்து மீட்டுத் தரக் கோரி கலெக்டர் ஆபீஸ் முன்பு பெண் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க ஏராளமான பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர். அப்போது ஒரு பெண் தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைக்க முயன்றார்.

    உடனே அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் கண்ணீர் மல்க தெரிவிக்கையில், நான் வடமதுரை இ.பி. காலனியில் வசித்து வருகிறேன். எனது பெயர் டெய்சி ராணி (வயது 35). எனது கணவர் சேகருக்கு சொந்தமாக 3 செண்ட் இடத்தில் வீடு கட்டி வசித்து வந்தோம். கணவரின் சகோதரர் தேவராஜ் மற்றும் அவரது மனைவி வெங்கடேஸ்வரி ஆகியோர் கடந்த 2011-ம் ஆண்டு தங்கள் குடும்ப தேவைக்காக எங்களிடம் பணம் கேட்டனர்.

    நாங்கள் பெருமாள் மற்றும் வீரணன் ஆகியோரிடம் வீட்டு பத்திரத்தை வைத்து ரூ.10 லட்சம் கடன் வாங்கினோம். அதன் பிறகு மாதம் தோறும் வட்டி கட்டி வந்த நிலையில் ரூ.50 லட்சம் பணம் கொடுத்தால்தான் வீட்டு பத்திரத்தை தர முடியும் என எங்களை மிரட்டி வந்தனர்.

    இது தொடர்பாக எனது கொழுந்தன் தேவராஜிடம் கூறியபோது அவர் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். பணத்தை தராவிட்டால் வீட்டை தங்களது பெயரில் மாற்றி எழுதிக் கொள்வோம் என என்னையும், என் கணவரையும் அடியாட்களை வைத்து மிரட்டி வந்தனர்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு சொந்தமான வீட்டை அபகரித்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தற்கொலை செய்ய முடிவு செய்தோம் என்று தெரிவித்தார். இதனையடுத்து மாவட்ட கலெக்டரிடம் தனது கோரிக்கை மனுவை அளித்துச் சென்றார்.

    ×