search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dindigul collector office"

    • பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு உள்ளிட்ட மற்ற பொருட்களையும் சேர்த்து வழங்க கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானை வழங்க கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் தலையில் மண்பானையை சுமந்து வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் அரிசி, சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு உள்ளிட்ட மற்ற பொருட்களையும் சேர்த்து வழங்க கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் மாவட்ட விவசாய அணி தலைவர் சக்திவேல் மற்றும் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அதன் பிறகு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தங்கள் கோரிக்கை மனுவினையும் அளித்தனர்.

    இதே போல பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானை வழங்க கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் தலையில் மண்பானையை சுமந்து வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மேலும் தங்கள் கைகளில் கரும்பு ஏந்தி வந்து ஊர்வலமாக போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல் அருகே வீட்டை அபகரித்து கொண்டதால் 3 மகள்களுடன் பெண் கலெக்டர் ஆபீசில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள நவாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் நல்லம்மாள். (வயது 50). இவர் இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    அதிர்ச்சி அடைந்த டி.எஸ்.பி. பிரபாகரன் மற்றும் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது நல்லம்மாள் போலீசாரிடம் கூறியதாவது:-

    நான் வேடசந்தூர் அருகே உள்ள நவாமரத்துப்பட்டியில் வசித்து வருகிறேன். எனது கணவர் வேல்முருகன் 4 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். எனக்கு 3 மகள்கள் உள்ளனர். சிறுகுழந்தைகளான அவர்களை நான் கூலி வேலைக்கு சென்று காப்பாற்றி வருகிறேன்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் வசித்த வீட்டை அதே பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவர் அபகரித்து கொண்டு வீட்டை விட்டு துரத்தினார். இதனால் நான் எனது குழந்தைகளுடன் நாடக மேடையில் தங்கி பாதுகாப்பாற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறேன்.

    இதுகுறித்து கடந்த டிசம்பர் மாதம் கலெக்டர் ஆபீசில் மனு அளித்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் நான் எனது குழந்தைகளுடன் கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க வந்தேன்.

    இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.

    இதனையடுத்து போலீசார் அவரை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் தாயுடன் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து மனுக்கள் அளிக்க ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது 2 பெண்கள் திடீரென தங்கள் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைக்க முயன்றனர். இதை பார்த்ததும் அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் அந்த பெண் கூறியதாவது:-

    செம்பட்டி அருகே உள்ள பிரணவபட்டியைச் சேர்ந்த எனது பெயர் சாந்தி (வயது 35). எனது கணவர் செல்லபாண்டி போடி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். எனக்கு சொந்தமான பூர்வீக நிலம் 1½ ஏக்கர் கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தை பழனிச்சாமி என்பவர் அபகரித்துக் கொண்டு என்னையும், எனது தாயார் பாக்கியலெட்சுமி (58) என்பவரையும் உள்ளே விட மறுக்கிறார். மேலும் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.

    இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முடிவு செய்தோம். அதன்படி நானும் எனது தாய் பாக்கிய லெட்சுமியும் தீக்குளிக்க வந்தோம் என்றார்.

    இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கலெக்டர் அலுவலகத்துக்குள் மனு அளிக்க அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் தங்கள் கோரிக்கை மனுவை அளித்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    தனிநபர் கழிப்பிடம் கட்டுவதில் நடந்த ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டர் ஆபிசில் பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஒரு பெண் திடீரென தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதை பார்த்ததும் அங் கிருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், எனது பெயர் திண்டுக்கல் அடுத்துள்ள ரெட்டியபட்டியை சேர்ந்த பூசாரி மனைவி பஞ்சு ஆகும். 100 நாள் வேலை திட்டத்தில் பணிதள பொறுப்பாளராக பணியாற்றி வந்தேன்.

    பாரத பிரதமரின் தனிநபர் கழிப்பறை கட்டுவதற்காக ரெட்டியப்பட்டி ஊராட்சி புதுக்கோட்டையில் ஒப்பந்த காரராக பணியாற்றினேன். ரெட்டியப்பட்டி ஊராட்சி செயலாளர் மணி மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி இதற்கான ஆணையை வழங்கினார். ஆனால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி எனக்கு வழங்கிய காண்டிராக்டை ரத்து செய்து விட்டனர். இதனை நம்பி ரூ.3.5 லட்சம் மதிப்பில் செங்கல், மணல் உள்ளிட்ட தளவாட பொருட்கள் வாங்கி வைத்துள்ளேன்.

    வேறு நபர் கழிப்பறை கட்டுவதில் ஊழல் நடப்பதையும் அறிந்தேன். இதுகுறித்து அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே என்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவே தீக்குளிக்க முயன்றேன் என்றார். இதனையடுத்து அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கழுத்தில் மாலையுடன் நூத முறையில் மனு அளிக்க வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தாண்டிக்குடியைச் சேர்ந்த கணேஷ்பாபு (வயது 37) என்பவர் மனு அளிக்க வந்தார்.

    அவர் தனது கழுத்தில் மாலை அணிந்து தரையில் பிணம் போல் படுத்து கிடந்தார். இதைப்பார்த்ததும் அங்கிருந்த போலீசார் அவரை அப்புறப்படுத்த முயன்றனர். இது குறித்து அவர் கூறுகையில், தாண்டிக்குடி பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும். மற்றும் ஊழல் முறைகேட்டை தடுக்க வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பல மனுக்கள் அளித்துள்ளேன். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வருவதே எனக்கு கவலையாக உள்ளது. இதனால் இறந்து விடுவதே மேல் என்பதை உணர்த்தும் வகையில் பிணம் போல் படுத்து மனு அளிக்க வந்துள்ளேன் என்றார்.

    இதனையடுத்து தனது கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்துச் சென்றார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதே போல் முன்னாள் ராணுவத்தினர் குறைதீர்ப்பு முகாம் முறையாக நடத்தப்படுவதில்லை என்றும் பெயரளவுக்கு மனுக்கள் மட்டும் வாங்கி வைத்துக் கொள்வதாக கூறி ஏராளமான முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவரது குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். #tamilnews
    குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பாடியூர் கிராமம் கிரியம்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வந்தனர். காலிக்குடங்களுடன் வந்த அவர்கள் தெரிவிக்கையில், எங்கள் கிராமத்தில் 220 குடும்பங்கள் உள்ளன.

    கடந்த 7 மாதமாக குடிநீர் வரவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இன்று கலெக்டர் அலுவலகத்தில் முறையிட வந்தோம் என்று தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்துச் சென்றனர்.

    தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கம் திண்டுக்கல் மாவட்ட குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வந்தனர். அவர்கள் தெரிவிக்கையில், தமிழகத்தில் 55 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளனர்.

    பெரும்பாலானோர் தற்போது வேலையின்றி தவித்து வருகின்றனர். நல வாரியம் மூலம் அவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதில்லை. விபத்து நடந்தால் மருத்துவ சிகிச்சைக்கான நிதி, ஊனம் ஏற்பட்டால் நிதி உதவி போன்றவை வழங்க வேண்டும்.

    கட்டிட தொழிலாளர்கள் இறந்தால் ரூ.5 லட்சம் நிதி வழங்க வேண்டும். வெளி மாநிலங்களில் வழங்கப்படுவது போல ரூ.3 ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும். கர்ப்பிணி தொழிலாளர்களுக்கு 6 மாதம் பேறுகால விடுப்பு சம்பளத்துடன் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    மாவட்ட செயலாளர் பாலன், பொருளாளர் பிச்சை மணி தலைமையில் நிர்வாகிகள் சுப்பையா, பழனியப்பன், இளங்கோ, முனீஸ்வரன் உள்பட 100-க் கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    ×