என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கழுத்தில் மாலை அணிந்து நூதன முறையில் மனு அளிக்க வந்த வாலிபர்
Byமாலை மலர்24 Sep 2018 12:32 PM GMT (Updated: 24 Sep 2018 12:32 PM GMT)
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கழுத்தில் மாலையுடன் நூத முறையில் மனு அளிக்க வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தாண்டிக்குடியைச் சேர்ந்த கணேஷ்பாபு (வயது 37) என்பவர் மனு அளிக்க வந்தார்.
அவர் தனது கழுத்தில் மாலை அணிந்து தரையில் பிணம் போல் படுத்து கிடந்தார். இதைப்பார்த்ததும் அங்கிருந்த போலீசார் அவரை அப்புறப்படுத்த முயன்றனர். இது குறித்து அவர் கூறுகையில், தாண்டிக்குடி பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும். மற்றும் ஊழல் முறைகேட்டை தடுக்க வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பல மனுக்கள் அளித்துள்ளேன். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வருவதே எனக்கு கவலையாக உள்ளது. இதனால் இறந்து விடுவதே மேல் என்பதை உணர்த்தும் வகையில் பிணம் போல் படுத்து மனு அளிக்க வந்துள்ளேன் என்றார்.
இதனையடுத்து தனது கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்துச் சென்றார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதே போல் முன்னாள் ராணுவத்தினர் குறைதீர்ப்பு முகாம் முறையாக நடத்தப்படுவதில்லை என்றும் பெயரளவுக்கு மனுக்கள் மட்டும் வாங்கி வைத்துக் கொள்வதாக கூறி ஏராளமான முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவரது குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். #tamilnews
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தாண்டிக்குடியைச் சேர்ந்த கணேஷ்பாபு (வயது 37) என்பவர் மனு அளிக்க வந்தார்.
அவர் தனது கழுத்தில் மாலை அணிந்து தரையில் பிணம் போல் படுத்து கிடந்தார். இதைப்பார்த்ததும் அங்கிருந்த போலீசார் அவரை அப்புறப்படுத்த முயன்றனர். இது குறித்து அவர் கூறுகையில், தாண்டிக்குடி பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும். மற்றும் ஊழல் முறைகேட்டை தடுக்க வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பல மனுக்கள் அளித்துள்ளேன். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வருவதே எனக்கு கவலையாக உள்ளது. இதனால் இறந்து விடுவதே மேல் என்பதை உணர்த்தும் வகையில் பிணம் போல் படுத்து மனு அளிக்க வந்துள்ளேன் என்றார்.
இதனையடுத்து தனது கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்துச் சென்றார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதே போல் முன்னாள் ராணுவத்தினர் குறைதீர்ப்பு முகாம் முறையாக நடத்தப்படுவதில்லை என்றும் பெயரளவுக்கு மனுக்கள் மட்டும் வாங்கி வைத்துக் கொள்வதாக கூறி ஏராளமான முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவரது குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X