search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boy friend"

    • கொலைக்கு பயன்படுத்திய கத்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
    • அக்கம்பக்கத்தில் வசித்து வரும் பொதுமக்கள் தம்பதிகள் இருவரும் அடிக்கடி சண்டை போடுவதாக தெரிவித்தனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சன்ஹகி பால் (வயது 32). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கணருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று மகனுடன் தனியாக வசித்தார்.

    இந்த நிலையில் அவருக்கு சமூகவலைதளம் மூலம் சந்தக் தாஸ் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் புகைப்பட கலைஞர் ஆவார். இருவரும் தொடர்ந்து செல்போனில் பல மணி நேரம் பேசி காதலை வளர்த்து வந்தனர். பின்னர் இருவரும் தாலி கட்டாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்வது என முடிவு செய்தனர்.

    கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருவரும் கொல்கத்தா டம் டம் மதுகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்தனர்.

    சம்பவத்தன்று சந்தக்தாஸ் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுக்க சென்றார். பின்னர் அவர் மதுபோதையில் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கும் சன்ஹகி பாலுக்கும் இடையில் கடும் சண்டை மூண்டது. இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த சன்ஹகி பால் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சரமாரியாக சந்தக் தாசை குத்தினார். ஆத்திரம் தீரும் வரை 10 தடவை அவர் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்த சந்தக் தாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதையடுத்து அவர் நேராக போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்த கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று விசாரித்தபோது அக்கம்பக்கத்தில் வசித்து வரும் பொதுமக்கள் தம்பதிகள் இருவரும் அடிக்கடி சண்டை போடுவதாக தெரிவித்தனர்.

    கொலை நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு சந்தக் தாஸ் தனது காதலி சன்ஹகி பால் மற்றும் அவரது குழந்தையுடன் உள்ள புகைப்படத்தை சமூக வலைதளத்தில் குடும்பம் என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் 3 பேரும் சிரித்த முகத்துடன் இருந்தனர்.

    சன்ஹகிபால் மாடர்ன் உடை அணிந்து இருந்தார்.

    காதலனை கொன்று ஜெயிலுக்கு சென்றதால் அவரது மகனை போலீசார் தாத்தா-பாட்டியிடம் ஒப்படைத்துள்ளனர்.

    கணவனை கை விட்டு காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் சின்ன ஓவுலாபுரத்தைச் சேர்ந்தவர் விஜயராம் (வயது 25). இவருக்கும் சிவரஞ்சனி (21) என்பவருக்கும் கடந்த வருடம் தேனியில் திருமணம் நடந்தது. அரசு சார்பில் நடந்த இந்த திருமணத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தார். பின்னர் அவர்களுக்கு அரசு சார்பில் சீர் வரிசைகளும் வழங்கப்பட்டது.

    திருமணத்துக்கு பிறகு விஜயராம் சென்னைக்கு வேலைக்கு சென்று விட்டார். அவ்வப்போது ஊருக்கு வந்த தனது மனைவியை பார்த்து சென்றுள்ளார்.

    இந்நிலையில் சிவரஞ்சனிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேன் டிரைவர் அஜித்குமார் (24) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டு தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    போலீசார் அவர்களது பெற்றோரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    வீட்டு வேலைக்கு அழைத்து சென்ற சிறுமியை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள காதலனை தேடி வருகிறார்கள். #girlmolestation

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த உத்தரமேரூர் மானாம்பதி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த அற்புதராஜ் மற்றும் வேளாங்கண்ணி ஆகியோர் சென்னையில் வீட்டு வேலைக்கு ஆள் தேவை எனக் கூறி அழைத்து சென்றனர்.

    குடும்ப வறுமையால் சிமியை வீட்டு வேலைக்கு பெற்றோர் அனுப்பி வைத்தனர்.

    ஈஸ்டர் பண்டிகைக்கு வீட்டிற்கு வந்த சிறுமி தான் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன் கொடுமையில் வேளாங்கண்ணியும், அற்புதராஜும் ஈடுபடுத்தியதாகவும் கூறியதை தொடர்ந்து இந்த சம்பவம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    போலீஸ் சூப்பிரண்டிடம் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து வேளாங்கண்ணியையும் அற்புதராஜுவையும் தேடி வருகிறார்கள்.

    போலீசார் விசாரணையில் வேளாங்கண்ணியின் கணவர் மறைவிற்கு பிறகு 2 மகன்களுடன் காஞ்சீபுரத்தில் வசித்து வருகிறார். அற்புதராஜின் சொந்த ஊர் நெமிலி. இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கோனேரி குப்பத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார்கள்.

    இருவரும் கிராமங்களில் வறுமையில் உள்ள சிறுமிகளை கண்டறிந்து பணக்காரர்கள் வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தொழிலை செய்து வருவது தெரியவந்தது. போலீசார் தேடுவது தெரிந்ததும் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

    இந்த நிலையில் கோனேரிக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த வேளாங்கண்ணியை போலீசார் கைது செய்தனர். மகளிர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாலியல் வன்கொடுமையில் எத்தனை சிறுமிகளை பயன்படுத்தினார்? யார்- யாருக்கு அவர்களை அனுப்பி வைத்தார்? இதில் வேறு யாரும் முக்கிய புள்ளிகள் ஈடுபட்டு இருக்கிறார்களா? என விசாரணை நடைபெற்று வருகிறது. அற்புதராஜையும் தொடர்ந்து தேடி வருகிறார்கள். #girlmolestation

    உத்திரமேரூர் அருகே வீட்டு வேலைக்கு அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த பெண்-காதலனை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. #girlmolestation

    காஞ்சீபுரம்:

    உத்திரமேரூர் அருகே உள்ள மானாம்பதி கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவர் அதே பகுதியை சேர்ந்த தம்பதியிடம் 16 வயது மகளை வீட்டு வேலைக்காக அழைத்து சென்றார்.

    கடந்த வாரம் சிறுமி வீட்டிற்கு வந்த போது வேளாங்கண்ணியும், அவரது காதலன் அற்புதராஜும் தன்னை சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் கொடுமை செய்ததாக பெற்றோரிடம் கூறினார்.

    அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து காஞ்சீபுரம் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானியிடம் புகார் அளித்தனர்.

    இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புகார் பற்றி அறிந்ததும் வேளாங்கண்ணியும், அவரது காதலன் அற்புதராஜும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க டி.எஸ்.பி.மனோகரன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    சிறுமியை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய போது அவர்கள் அதனை வீடியோவாகவும் பதிவு செய்து உள்ளனர். இதனை வைத்தே சிறுமியை மிரட்டி தொடர்ந்து பலருக்கு பாலியலுக்காக அனுப்பி உள்ளனர்.

    இதில் வேளாங்கண்ணி, அற்புதராஜுடன் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்கள் கும்பலாக இதேபோல் பலரை வேலைக்கு அழைத்து சென்று பாலியலில் ஈடுபடுத்தி இருக்கலாம் என்று தெரிகிறது.

    இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய வேளாங்கண்ணி, அற்புதராஜ் சிக்கினால்தான் இந்த விவகாரத்தில் மேலும் பல விவரங்கள் வெளியாகும். #girlmolestation

    தன்னை காதலித்து ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு இளம் பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    லால்குடி: 

    திருச்சி மாவட்டம், சமயபுரம் இனாம்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மகன் வெங்கடேஷ்(வயது 28). இவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் உதவி என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். தஞ்சை மாவட்டம் திருவையாறு தேர்முட்டி தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் கண்மணி(25). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

    கண்மணியின் அத்தை மகன் தர்மராஜுக்கு, வெங்கடேஷ் நண்பர் ஆவார். இதனால் டால்மியாவில் உள்ள தர்மராஜ் வீட்டுக்கு வெங்கடேஷ் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அத்தை வீட்டில் தங்கி படித்த கண்மணிக்கும், வெங்கடேசுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு முதல் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது.

    கடந்த 9 ஆண்டுகளாக 2 பேரும் காதலித்து வந்தனர். கண்மணியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவருடன் பலமுறை வெங்கடேஷ் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வெங்கடேசை கண்மணி வற்புறுத்தினார். ஆனால் வெங்கடேஷ் மறுத்து விட்டார்.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கண்மணி, கடந்த 2-ந் தேதி லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், புகார் கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் கவிதா மனு ரசீது பதிவு செய்தார்.

    இந்நிலையில் நேற்று காலை லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்ற கண்மணி, போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து, தன்னை காதலித்து ஏமாற்றிய வெங்கடேசுடன் திருமணம் செய்து வைக்க கோரி தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததையடுத்து, கண்மணி அங்கிருந்து சென்றார். 
    இனிமேல் சந்திக்க வரவேண்டாம் என கூறியதால் கள்ளக்காதலனை உயிருடன் எரித்து கொல்ல முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவில் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செந்தில் என்ற சந்திரசேகர் (வயது 43). கொத்தனார். இவருடைய மனைவி பரிமளம். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்தநிலையில் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தை சேர்ந்த கருணாநிதி மனைவி செல்வி (45). சித்தாள் வேலை செய்து வரும் இவருக்கும், சந்திரசேகருக்கும் கட்டிட வேலை செய்யும் இடத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறி உள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு செல்வி, சந்திரசேகர் வீட்டிற்கு வந்து இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.அப்போது சந்திரசேகர் என்னை பார்க்க பெண் வீட்டார் வருகிறார்கள். எனவே நீ இனிமேல் என்னை சந்திக்க வரவேண்டாம் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வி, வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து சந்திரசேகர் மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த சந்திரசேகர் அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து படுகாயமடைந்த சந்திரசேகரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் வைத்தீஸ்வரன்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வியை கைது செய்தனர்.
    திருமணத்துக்கு மறுத்ததால் காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
    கடமலைக்குண்டு:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள பொன்னார் கிராமத்தை சேர்ந்தவர் நந்தினி (வயது 25). இவர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தார். அதே கல்லூரியில், தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் (27) என்பவரும் படித்தார்.

    இவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். கல்லூரி படிப்பு முடிந்து 2 பேரும் அவரவர் கிராமங்களுக்கு சென்று விட்டனர். இந்தநிலையில் குமணன்தொழு கிராமத்தில் உள்ள ரஞ்சித் வீட்டுக்கு நந்தினி வந்தார். ரஞ்சித்தை சந்தித்த அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.

    அப்போது, தனது தங்கை திருமணம் நடைபெற இருப்பதாகவும் அது முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்வதாகவும் ரஞ்சித் தெரிவித்தார். ஆனால் இதனை நந்தினி ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னை திருமணம் செய்ய ரஞ்சித் மறுப்பதாக நந்தினி நினைத்தார். இதனையடுத்து, தான் கொண்டு வந்த பூச்சி மருந்தை (விஷம்) ரஞ்சித் வீட்டின் முன்பு வைத்து நந்தினி குடித்தார். சிறிதுநேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடமலைக்குண்டுவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இது குறித்து நந்தினி மீது தற்கொலைக்கு முயன்றதாக மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாரமங்கலம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியின் கணவர் கள்ளக்காதலனுடன் கட்டி புரண்டு சண்டைபோட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் திருமணம் ஆகி அதே பகுதியில் மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது மனைவியிடம் அதே ஊரை சேர்ந்த கட்டிட மேற்பார்வையாளர் ரவி (28) என்பவர் ஆரம்பத்தில் சாதாரணமாக பேசி பழகி வந்தார்.

    ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் அழகில் மயங்கிய ரவி எப்படியாவது தன்னுடைய வலையில் அவரை வீழ்த்த வேண்டும் என எண்ணினார்.

    இதற்காக அவர் அடிக்கடி அந்த பெண்ணை நேரில் சந்தித்து ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார். இதில் அந்த பெண் மயங்கினார். பின்னர் இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.

    இதையறிந்த கணவர், தனது மனைவியை சத்தம் போட்டார். ரவியுடன் பழகாதே, இனிமேல் பேசினால் நடப்பதே வேறு என கண்டித்தார்.

    இதையடுத்து அந்த பெண், ரவியுடன் பழகுவதை நிறுத்தி விட்டு வெளியே செல்வதையும் நிறுத்திக் கொண்டு வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் ரவி, கள்ளக்காதலியை பார்க்க முடியாமல் தவித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று ரவி கள்ளக்காதலியை பார்ப்பதற்காக அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டு வெளியே வருமாறு சிக்னல் கொடுத்தார்.

    அப்போது அங்கு வந்த அந்த பெண்ணின் கணவர் இங்கு ஏன் வந்தாய்? எதற்காக இங்கு நிற்கிறாய்? என கேட்டார். அதற்கு ரவி நான் அப்படித்தான் வருவேன், உனது மனைவியை மரியாதையாக இருக்க சொல் என்று கூறியதாக தெரிகிறது.

    இதனால் 2 பேருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர். பின்னர் இரண்டு பேரும் கட்டிபுரண்டு வீட்டின் முன்பு சண்டை போட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஊர் மக்கள் அங்கு கூடினர்.

    காயம் அடைந்த 2 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து தாரமங்கலலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் அருகே பெண் வார்டன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான காதலனை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகள் செந்தமிழ்ச்செல்வி (வயது 24). இவர் திருச்சி மத்திய பெண்கள் சிறையில் சிறை வார்டனாக பணியாற்றி வந்தார். திருச்சி கே.கே.நகர் காவலர் குடியிருப்பில் தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் செந்தமிழ்ச்செல்வி, தான் தங்கியிருந்த வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செந்தமிழ்ச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செந்தமிழ்ச்செல்வி இறந்தது பற்றிய தகவல் பெரியகாட்டுப்பாளையத்தில் உள்ள அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் உள்ளே சென்ற அவர்கள் அங்கிருந்த போலீசாரிடம், செந்தமிழ்ச்செல்வி சாவுக்கு அவரது காதலனே காரணம்.

    செந்தமிழ்ச்செல்வியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி விட்டு தற்போது மறுத்துள்ளார். இதனால் அவளின் காதலன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

    அதற்கு அங்கிருந்த போலீசார், சம்பவம் நடந்த ஊரில் உள்ள போலீசில்தான் நீங்கள் புகார் செய்ய வேண்டும். அவர்கள்தான் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்ட செந்தமிழ்ச்செல்வியின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியேறினர்.

    பின்னர் அவர்கள் இது தொடர்பாக திருச்சி கே.கே.நகர் போலீசில் புகார் அளிக்க சென்றனர். அங்கு இவர்கள் கொடுத்த புகாரை போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து இன்று காலை பெரியகாட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கடலூர்- புதுவை சாலையில் செந்தமிழ்ச்செல்வியின் உறவினர்கள் திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது பற்றிய தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, போராட்டக்காரர்கள் செந்தமிழ்ச்செல்வியின் சாவுக்கு காரணமான அவரது காதலனை கைது செய்யும்வரை எங்களது போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு அதிவிரைவு படை போலீசார் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டனர். அந்த பகுதியில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் அவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    போராட்டக்காரர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உங்களது கோரிக்கையை ஒரு மனுவாக எழுதி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுங்கள். அதன் பின்னர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இந்த போராட்டத்தை கைவிட்டு இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று கூறினர்.


    இதனை ஏற்றுக் கொண்ட செந்தமிழ்ச்சசெல்வியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு சாலையோரம் திரண்டு நிற்கின்றனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட ஆசிரியர் பயிற்சி மாணவி பாதுகாப்பு கேட்டு காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள பெத்தகல்லுபள்ளி பகுதியை சேர்ந்தவர் பூவிழி (வயது 21).நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட்.2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (25). டெய்லர். என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இவர்கள் காதல் குறித்து அறிந்த பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காதல் ஜோடி இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியேறி பெங்களூருவில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    போலீசார் இருவரது பெற்றோரையும் வரவழைத்து அறிவுரை கூறி காதல் ஜோடியை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

    அந்தியூர் அருகே கள்ளக்காதல் தகராறில் கணவரை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே புன்னத்தை சேர்ந்த கைலாசம் (வயது40). என்ற லேத் பட்டறை அதிபர் கடந்த 2 நாட்களுக்கு முன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.

    மனைவி ஹேமலதாவுடன் சென்ற அவரை மர்ம ஆசாமி வழிமறித்து கொலை செய்தான்.

    கள்ளக்காதலில் இந்த சம்பவம் நடந்ததை தனிப்படை போலீசார் கண்டு பிடித்தனர்.

    மனைவி ஹேமலதாவின் உறவினரான வாலிபர் ஆனந்துக்கும் (23) ஹேமலதாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்தனர்.

    இதை கணவர் கண்டித்தார். இதில் ஏற்பட்ட தகராறில் ஆனந்த் சம்பவத்தன்று கைலாசத்தை வழிமறித்து கொலை செய்தார்.

    போலீசார் தீவிர விசாரணை நடத்தி மனைவி ஹேமலதா, கள்ளக்காதலன் ஆனந்த் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

    அந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புன்னம் கிராமத்தை சேர்ந்தவர் கைலாசம் (வயது 40). இவர் அப்பகுதியில் லேத் ஒர்க்ஷாப் பட்டறை வைத்து நடத்தி வந்தார்.

    இவரது மனைவி பெயர் ஹேமலதா (21). நேற்று மாலை வேலை முடிந்து கைலாசம் தனது மனைவி ஹேமலதாவுடன் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அந்தியூர் அருகே காட்டூர் பக்கம் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி வேமாக வந்து கைலாசத்தை வழி மறித்தார். திடீரென இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த வழிமறித்த ஆசாமி திடீரென தான் கொண்டு வந்த கத்தியால் கைலாசத்தின் கழுத்தை அவரது மனைவி கண்முன்னால் அறுத்தார். இதில் அவரது கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. இதைகண்டு மனைவி ஹேமலதா சத்தம்போடவே அவன் தப்பி ஓடிவிட்டான்.

    ரத்த வெள்ளத்தில் துடித்த கைலாசத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த படுகொலை குறித்து அந்தியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கைலாசத்தை கொலை செய்த ஆசாமி தலைமறைவாக உள்ளான். அவன் யார்? எதற்காக இந்த கொலையை செய்தான்? முன்பகை அல்லது தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் கொலையை பற்றி துப்பு துலக்கவும், கொலையாளியை பிடிக்கவும் பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் தனிபோலீஸ் படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களும் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    மனைவி கண் எதிரே கணவன் கொலை செய்யப்பட்டாலும் மனைவி ஹேமலதாவுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார்.

    மேலும் கொலைகாரன் பற்றியும் இந்த கொலைக்கு காரணம் எதுவும் உண்டா? என்று மனைவியிடமும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

    இன்று காலை நடந்த தொடர் விசாரணை மூலம் கைலாசம் கள்ளக்காதல் காரணமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கைலாசம் மனைவி ஹேமலதாவுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவர்தான இந்த கொலையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

    ×