search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணை கலெக்டர் அலுவலகம் அருகே பெண் தற்கொலை முயற்சி
    X

    துணை கலெக்டர் அலுவலகம் அருகே பெண் தற்கொலை முயற்சி

    ஓசூரில் உள்ள துணை கலெக்டர் அலுவலகம் அருகே பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த குமுதேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சர்குணம் (வயது 38).நேற்று பிற்பகலில் இவர் தனது 9 வயது மகளுடன் வந்து ஓசூரில் உள்ள துணை கலெக்டர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்றார். 

    மயங்கி விழுந்த அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சிகிச்சை முடிந்து மயக்கம் தெளிந்தபிறகு தான் அவர் என்ன காரணத்துக்காக தற்கொலைக்கு முயன்றார் என்பது தெரியும்.
    Next Story
    ×