search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "usury"

    • கந்து வட்டி கேட்டு மிரட்டிய பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகோபால், ராதாகரன், சாந்தி மற்றும் சேர்மலதா ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பசுமலையை சேர்ந்தவர் வேலவன் (வயது 48). இவர் பழைய விளாச்சேரி ரோட்டில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் வேலவன் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார்.

    அந்த மனுவில், "நான் தொழில் அபிவிருத்திக்காக பசுமலை, மந்தையம்மன் கோவில் தெரு விஜயகோபால், பைபாஸ் ரோடு ராதாகரன், பழைய விளாச்சேரி ரோடு சாந்தி மற்றும் திருநகர் சேர்மலதா ஆகிய 4 பேரிடம் ரூ. 5 லட்சத்து 85 ஆயிரம் கடன் வாங்கினேன். அவற்றை படிப்படியாக திருப்பி செலுத்தி வந்தேன்.

    இந்த நிலையில் அவர்கள் கூடுதலாக கந்துவட்டி கேட்டு மிரட்டுகின்றனர். எனவே போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகோபால், ராதாகரன், சாந்தி மற்றும் சேர்மலதா ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமை குறித்து புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வைக்கின்றனர்.

    ஈரோடு:

    கடலூரை சேர்ந்த ஆயுத ப்படை போலீசார் சமீபத்தில் கந்துவட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் கந்துவட்டி சம்பந்தமான புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதனை உடனே விசாரித்து முடித்து வைக்க வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி உத்தரவிட்டார்.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட போலீசார் கந்துவட்டி கொடுமை குறித்த விசாரணையை தீவிரப்படுத்தினர்.ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வைக்கின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி புகார் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் கந்து வட்டி சம்பந்தமாக ஈரோடு நேரு வீதியை சேர்ந்த கறி கடை நடத்தி வரும் மோகமத் ஷெரிப் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.

    எனவே கந்து வட்டி சம்பந்தமாக யாராவது புகார் அளிக்க விருப்பமிருந்தால் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரடியாகவே, அல்லது போலீஸ் சூப்பிரண்டு வாட்ஸ்-அப் எண் 9655220100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    மேலும் போலீஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி ஆப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். இது குறித்து விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுப்பதுடன் தகவல் தருபவர்களின் பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    வியாபாரியிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டிய 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சென்றாயன் (வயது38). காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் கம்பத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரிடம் ரூ.1.20 லட்சம் வாரவட்டிக்கு கடன் வாங்கினார்.

    இதற்காக வட்டி மட்டும் ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார். மேலும் சரவணன் என்பவரிடம் ரூ.50 ஆயிரம், ரவியிடம் ரூ.15 ஆயிரம், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த கார்த்திக்கிடம் ரூ.20 ஆயிரம், ராமராஜிடம் ரூ.50 ஆயிரம், அணைப்பட்டி குட்டியிடம் ரூ.20 ஆயிரம், சிவாவிடம் ரூ.80 ஆயிரம், குணசேகரனிடம் ரூ.60 ஆயிரம், சுருளிபட்டியை சேர்ந்த இளம்பருதியிடம் ரூ.25 ஆயிரம், கே.எம்.பட்டியை சேர்ந்த ஜக்கப்பனிடம் ரூ.10 ஆயிரம், நல்லதம்பியிடம் ரூ.20 ஆயிரம், முருகனிடம் ரூ.20 ஆயிரம், மணிகண்டனிடம் ரூ.10 ஆயிரம் என 13 பேரிடம் கடன் வாங்கி வியாபாரம் செய்து வந்தார்.

    இதனால் அவருக்கு தொழிலில் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டது. வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். இதனால் கடன் கொடுத்தவர்கள் சென்றாயனிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டி உள்ளனர்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அவர் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்த ராயப்பன்பட்டி போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் கந்துவட்டி கேட்டு மிரட்டிய 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    கூடுதல் வட்டி கேட்டு ஏற்பட்ட பிரச்சினையில் வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மேலும் மனைவி மீது தாக்குதல் நடத்திய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் முத்தாள் நகரைச்சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி கோதையம்மாள் (வயது 32).

    இவர் கடந்த ஜூன் மாதம் பாண்டியன் நகரைச் சேர்ந்த உமா மகேஸ்வரி (35) என்பவரிடம் ரூ.45 ஆயிரம் கடன் வாங்கினார். ரூ.25 ஆயிரம் கடனை திருப்பிச் செலுத்திய நிலையில் மீதமுள்ள பணத்தை செலுத்த காலதாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் உமா மகேஸ்வரி அசல், வட்டியைச் சேர்த்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதை கேட்டு கோதையம்மாள் அதிர்ச்சியடைந்தார்.

    மேலும் பணத்தை கேட்டு உமா மகேஸ்வரி அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் விரக்தியடைந்த கோதையம்மாளின் கணவர் நாகராஜ் சம்பவத்தன்று வி‌ஷம் குடித்து மயங்கினார். அவரை மீட்ட அக்கம், பக்கத்தினர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனாலும் உமா மகேஸ்வரி தொடர்ந்து பணத்தை கேட்டு வந்துள்ளார்.

    சம்பவத்தன்று உமா மகேஸ்வரி, அவரது தாயார் பூமணி ஆகியோர் வீட்டுக்கு வந்து தன்னை தாக்கியதாக கோதையம்மாள் பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உமா மகேஸ்வரி, பூமணியை கைது செய்தனர்.

    இரணியல் அருகே தொழில் அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கந்து வட்டி கொடுமையா? இருக்குமோ என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இரணியல்:

    இரணியல் அருகே கண்டன் விளை வலியவீடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெப்ரின் ஜோஸ் (வயது 34).

    இவருக்கு பேபி லிசா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். தொழில் அதிபரான ஜெப்ரின் ஜோஸ் அந்த பகுதியில் ஹாலோபிளாக் கற்கள் தயாரிக்கும் தொழிற் சாலை நடத்தி வந்தார்.

    நேற்று காலை அவர், வழக்கம்போல வீட்டில் இருந்து புறப்பட்டு தனது தொழிற்சாலைக்கு சென்றார்.

    அந்த தொழிற்சாலையில் உள்ள தனது அறைக்கு சென்று பணிகளை ஜெப்ரின் ஜோஸ் கவனித்து வந்தார். பகல் நேரத்தில் அவரது அறைக்கு சென்ற ஊழியர்கள் ஜெப்ரின் ஜோஸ் வி‌ஷம் குடித்த நிலையில் அறையில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக ஊழியர்களும், உறவினர்களும் சேர்ந்து அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஜெப்ரின் ஜோஸ் இறந்து விட்டார்.

    இதுபற்றி அவரது மனைவி பேபி லிசா இரணியல் போலீசில் புகார் செய்தார். இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    போலீசார் விசாரணையில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஜெப்ரின் ஜோஸ் கடன் வாங்கியிருந்ததாகவும், அதில் ஏற்பட்ட மனவேதனையில் அவர், தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. கந்து வட்டி கொடுமை காரணமாக தொழில் அதிபர் ஜெப்ரின் ஜோஸ் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அதுபற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவண்ணாமலையில் வட்டி பணத்திற்காக 2 மாத குழந்தை, மூதாட்டியை கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #usury #tamilnadu
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பே கோபுரம் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி பாரதி (வயது 22). இவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்(31) என்பவரிடம் ரூ.3 ஆயிரம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார்.

    இந்த பணத்திற்கு பாரதி 10 நாட்களுக்கு ஒரு முறை ரூ.300 வட்டியாக மணிகண்டனிடம் செலுத்தி வந்து உள்ளார். இதற்கிடையில் பாரதியின் தாயார் கண்ணாத்தாள் மணிகண்டனிடம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார்.

    இவர்கள் இருவரும் வாங்கிய கடன் பணத்தை வட்டியுடன் மணிகண்டனிடம் செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

    இருப்பினும் மணிகண்டன், பாரதி மற்றும் அவரது தாயாரிடம் ரூ.80 ஆயிரம் நீங்கள் தர வேண்டியது உள்ளது. அதனை உடனே வழங்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று காலை மணிகண்டன், பாரதியின் வீட்டிற்கு வந்து அவரது 2 மாத பெண் குழந்தையையும், பாரதியின் பாட்டி குப்புவையும் கடத்தி சென்றார். 2 பேரையும் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் சிறை வைத்திருந்தார்.

    இது குறித்து பாரதி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தியிடம் புகார் செய்தார்.

    அவரது உத்தரவின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். டி.எஸ்.பி. அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் மணிகண்டனின் வீட்டிற்கு விரைந்து சென்று அங்கு கடத்தி சிறை வைக்கப்பட்டிருந்த 2 மாத குழந்தையையும், மூதாட்டி குப்புவையும் மீட்டனர். குழந்தையை பாரதியிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்த மணிகண்டனை கைது செய்தனர்.

    இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வட்டி பணத்திற்காக 2 மாத குழந்தை, மூதாட்டியை கடத்தி சென்ற சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கந்து வட்டி குறித்து தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். #usury #tamilnadu
    திண்டுக்கல் அருகே கந்துவட்டி கொடுமையால் விவசாயி வி‌ஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை ஈ.பி.காலனியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி டெய்சிராணி. இவர்களுக்கு சொந்தமான 3 செண்ட் இடத்தில் வீடுகட்டியுள்ளனர். கணவரின் சகோதரர் தேவராஜ் என்பவர் தேவைக்காக அதேபகுதியை சேர்ந்த சிலரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கி இருந்தனர்.

    அதற்கு மாதந்தோறும் வட்டி கொடுத்து வந்த நிலையில் மேலும் ரூ.50 லட்சம் கொடுத்தால்தான் வீட்டு பத்திரத்தை திருப்பித்தர முடியும் என அவர்கள் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர்.

    போலீசார் அவர்களை தடுத்து கலெக்டரிடம் மனுஅளிக்க அறிவுறுத்தினர். அதன்பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்காத தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமதுரை காந்திசிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.

    இருந்தபோதும் பிரச்சினை தீராததால் சேகர் கடும் மனஉளைச்சலில் இருந்தார். இன்று வீட்டிலேயே வி‌ஷம் குடித்து மயங்கினார். இதைப்பார்த்து அவரது மனைவி டெய்சிராணி அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய சேகரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கந்துவட்டிக்கு வீட்டை அபகரித்த கும்பலிடம் இருந்து மீட்டுத் தரக் கோரி கலெக்டர் ஆபீஸ் முன்பு பெண் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க ஏராளமான பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர். அப்போது ஒரு பெண் தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைக்க முயன்றார்.

    உடனே அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் கண்ணீர் மல்க தெரிவிக்கையில், நான் வடமதுரை இ.பி. காலனியில் வசித்து வருகிறேன். எனது பெயர் டெய்சி ராணி (வயது 35). எனது கணவர் சேகருக்கு சொந்தமாக 3 செண்ட் இடத்தில் வீடு கட்டி வசித்து வந்தோம். கணவரின் சகோதரர் தேவராஜ் மற்றும் அவரது மனைவி வெங்கடேஸ்வரி ஆகியோர் கடந்த 2011-ம் ஆண்டு தங்கள் குடும்ப தேவைக்காக எங்களிடம் பணம் கேட்டனர்.

    நாங்கள் பெருமாள் மற்றும் வீரணன் ஆகியோரிடம் வீட்டு பத்திரத்தை வைத்து ரூ.10 லட்சம் கடன் வாங்கினோம். அதன் பிறகு மாதம் தோறும் வட்டி கட்டி வந்த நிலையில் ரூ.50 லட்சம் பணம் கொடுத்தால்தான் வீட்டு பத்திரத்தை தர முடியும் என எங்களை மிரட்டி வந்தனர்.

    இது தொடர்பாக எனது கொழுந்தன் தேவராஜிடம் கூறியபோது அவர் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். பணத்தை தராவிட்டால் வீட்டை தங்களது பெயரில் மாற்றி எழுதிக் கொள்வோம் என என்னையும், என் கணவரையும் அடியாட்களை வைத்து மிரட்டி வந்தனர்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு சொந்தமான வீட்டை அபகரித்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தற்கொலை செய்ய முடிவு செய்தோம் என்று தெரிவித்தார். இதனையடுத்து மாவட்ட கலெக்டரிடம் தனது கோரிக்கை மனுவை அளித்துச் சென்றார்.

    மதுரை அருகே பெண்ணிடம் கந்துவட்டி கேட்டு தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், சோழவந்தான் பங்களா பேட்டையைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி மாயக்காள் (வயது 38). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சபரிமலை என்பவரது மகன் சுரேஷிடம் ரூ. 10 ஆயிரம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.

    இந்த நிலையில் மாத வட்டியை சரியாக கொடுத்து வந்ததாகவும், ஆனால் சுரேஷ் மற்றும் அவரது உறவினர்கள் கந்து வட்டி கேட்டு தாக்கியதாக மாயக்காள் சோழவந்தான் போலீசில் புகார் செய்தார்.

    இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலாஜி விசாரணை நடத்தினார். சுரேஷ், அவரது சகோதரர் முத்துக்குமார் மற்றும் மாரிச்சாமி ஆகிய 3 பேர் மீது கந்து வட்டி வழக்கில் வழக்குப்பதிவு செய்து சுரேஷை, போலீசார் கைது செய்தனர்.

    கும்பகோணத்தில் கந்துவட்டிகாரர்கள் கொடுமையால் வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே திருநீலக்குடி, சீனிவாச நல்லூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இவர் தனது நண்பர் ஒருவர் கந்துவட்டிகாரர்களிடம் கடன் வாங்கும்போது ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளார்.

    இந்நிலையில் அவரது நண்பர் கடந்த 2 மாதம் முன்பு இறந்துவிட்டார். இதனால் கந்துவட்டி காரர்கள் ரமேசிடம் சென்று பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் அவர் கடந்த 2 மாதமாக வேறு சிலரிடம் பணம் வட்டிக்கு வாங்கி மாதம் ரூ.2½ லட்சம் வட்டி கட்டி வந்துள்ளார்.

    கடந்த மாதம் வட்டி கட்ட முடியாமல் இருந்தபோது கந்துவட்டிகாரர்கள் மீண்டும் நெருக்கடி கொடுத்ததால் அவர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி உள்ளனர்.

    இந்நிலையில் கடன்வாங்கி இறந்த தனது நண்பர் வீட்டுக்கு கந்துவட்டி காரர்களை ரமேஷ் அழைத்து சென்றுள்ளார். அப்போது நண்பரின் மனைவி தனது கணவர் வாங்கிய கடனை சொத்துக்களை விற்று கட்டி விடுவதாக கூறியுள்ளார். அதற்கு சில காலமாகும் என்று கூறியுள்ளார். ஆனால் கந்துவட்டிகாரர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் நேற்று மீண்டும் ரமேசிடம் நீதான் பணத்தை உடனடியாக திருப்பி தரவேண்டும். இல்லையென்றால் மாதம் தவறாமல் ரூ.2½ லட்சம் தர வேண்டும் என்று டார்ச்சர் செய்யதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த ரமேஷ் நேற்று மாலை வீட்டில் இருந்தபோது வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை கண்ட நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவி மற்றும் உறவினர்கள் ரமேசை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் ரமேசுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×