search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்து வட்டி கேட்டு மிரட்டிய பெண்களிடம் விசாரணை
    X

    கந்து வட்டி கேட்டு மிரட்டிய பெண்களிடம் விசாரணை

    • கந்து வட்டி கேட்டு மிரட்டிய பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகோபால், ராதாகரன், சாந்தி மற்றும் சேர்மலதா ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பசுமலையை சேர்ந்தவர் வேலவன் (வயது 48). இவர் பழைய விளாச்சேரி ரோட்டில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் வேலவன் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார்.

    அந்த மனுவில், "நான் தொழில் அபிவிருத்திக்காக பசுமலை, மந்தையம்மன் கோவில் தெரு விஜயகோபால், பைபாஸ் ரோடு ராதாகரன், பழைய விளாச்சேரி ரோடு சாந்தி மற்றும் திருநகர் சேர்மலதா ஆகிய 4 பேரிடம் ரூ. 5 லட்சத்து 85 ஆயிரம் கடன் வாங்கினேன். அவற்றை படிப்படியாக திருப்பி செலுத்தி வந்தேன்.

    இந்த நிலையில் அவர்கள் கூடுதலாக கந்துவட்டி கேட்டு மிரட்டுகின்றனர். எனவே போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகோபால், ராதாகரன், சாந்தி மற்றும் சேர்மலதா ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×