search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dealer"

    • பெட்ரோல் குண்டை வீசியதாக கைதான முரளி கிருஷ்ணன் வாக்குமூலம் அளித்தார்.
    • போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்கிற சந்தேகம் ஏற்பட்டது.

    ராயபுரம்:

    சென்னை பாரிமுனை கொத்தவால்சாவடி கோவிந்தப்பன் நாயக்கன் தெரு சந்திப்பில் ஸ்ரீ வீரபத்ர சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் மீது கடந்த 10-ந்தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொத்தவால் சாவடி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சவுகார் பேட்டை ஆதியப்ப நாயக்கன் தெருவை சேர்ந்த வியாபாரி முரளி கிருஷ்ணா என்பவர் பெட்ரோல் குண்டுகளை வீசியது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பீர்பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி கோவில் மீது அவர் வீசியது தெரியவந்தது. தினமும் சாமி தரிசனம் செய்து வந்த போதிலும் எனக்கு கடவுள் அருள் தரவில்லை என்று கூறி பெட்ரோல் குண்டை வீசியதாக கைதான முரளி கிருஷ்ணன் வாக்குமூலம் அளித்தார்.

    இருப்பினும் போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்கிற சந்தேகம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து வியாபாரி முரளி கிருஷ்ணனை காவலில் எடுக்க முடிவு செய்தனர். இதன்படி கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இன்று 7 நாட்கள் காவலில் எடுத்தனர். பெட் ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    "கடவுள் எனக்கு அருள் தரவில்லை. அதனால் பெட்ரோல் குண்டை வீசினேன்" என்று முரளிகிருஷ்ணன் வாக்குமுலம் அளித்திருந்தாலும், வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்பது பற்றி விசாரணை நடத்துவதற்காகவே முரளி கிருஷ்ணனை காவலில் எடுத்துள்ளோம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவில்தான் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • முதலியார் பேட்டை போலீசில் சஞ்சய்குமார் அளித்த புகார் அளித்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மணி, வெங்கடேசன் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி தேங்காய்திட்டு செல்வா நகர் பகுதியைசேர்ந்த சஞ்சய்குமார் (வயது23). பழ வியாபாரி. இவரது தம்பிக்கும் அதே பகுதியை சேர்ந்த மணி (21) மற்றும் வெங்கடேசன் (21) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு இருதரப்பினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.இதனை சஞ்சய்குமார் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த மணி, வெங்கடேசன் ஆகியோர் சாலையில் கிடந்த ஒரு மதுபாட்டிலில் பெட்ரோலை நிரப்பி அதில் திரியை கொளுத்தி சஞ்சய்குமார் வீட்டில் தூக்கி எறிந்தனர்.

    இதில் அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. இதனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

    இதுகுறித்து முதலியார் பேட்டை போலீசில் சஞ்சய்குமார் அளித்த புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மணி, வெங்கடேசன் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வியாபாரி மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருே உள்ள கூமாபட்டியை சேர்ந்தவர் ஜெகபர்சாதிக் (42). இவர் திருப்பூரில் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதத்தில் குடும்பத்துடன் கூமாபட்டிக்கு வந்தார். இந்த நிலையில் ராஜபாளையம் செல்வதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து ஜெகபர்சாதிக்கின் மனைவி அபிராஜ் பேகம் கொடுத்தபுகாரின்பேரில் கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வியாபாரியை சரமாரியாக அடித்து உதைத்த 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • சுதந்திரமாக வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    மதுரை

    மதுரை அனுப்பானடி பஸ் நிலையம் பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் ஒருவரை நடுரோட்டில் சரமாரி தாக்கி வேட்டியை உருவி, விரட்டு அடிப்பது போன்ற காட்சி கடந்த சில நாட்களாக சமூக வலை தளத்தில் வேகமாக பரவியது. நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்துக்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து போலீ சாரின் கவனத்துக்கு வந்தது. அதன் அடிப்படை யில் தெப்பக்குளம் போலீ சார் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், தாக்கப்பட்டவர் மதுரை காமராஜர் சாலை சீனிவாச பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர் (வயது 27) என தெரியவந்தது.நுங்கு வியாபாரியான இவர் சம்பவத்தன்று வியா பாரத்துக்காக மோட்டார் சைக்கிளில் அனுப்பானடி பஸ் நிலைய பகுதிக்கு வந்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் முன்னால் நின்றிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது தவறுதலாக லேசாக உரசியுள்ளது.

    உடனே மோட்டார் சைக்கிளில் இருந்த அனுப்பானடி அம்பேத்கார் நகரை சேர்ந்த போஸ் மகன் செந்தில்குமார் (20), சகோதரர்கள் அருண்குமார் (23), செல்வகுமார் மற்றும் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த அழகன் மகன் கார்த்திக் பிரபு (23), முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த காமராஜ் மகன் தீபக்ராஜா (23) ஆகியோர் சுந்தரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தோடு தரக்குறைவாக பேசியுள்ளனர்.

    மேலும் சுந்தரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கி, அவரது வேட்டியை உருவி விரட்டி அடித்தனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதையடுத்து போலீசார் மேற்கண்ட 5 பேரையும் கைது செய்தனர்.

    மதுரை நகரில் அண்மைக்காலமாக இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. சாலையோரத்தில் கடை வைத்து பிழைப்பு நடத்தும் சிறுவியாபாரிகள் ரவுடிகளால் தாக்கப்பட்டு பணம் பறிக்கும் சம்பவம் சர்வ சாதரணமாக நடந்து வருகிறது. எனவே போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி வியாபாரிகள் சுதந்திரமாக வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பெட்ரோல் வெடிகுண்டு மாதிரிகளை சேகரித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரைச் சேர்ந்தவர் ராஜா முகமது. இவர் அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு ராஜா முகமது வழக்கம் போல் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் ராஜா முகமது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் பெட்ரோல் குண்டு வெடித்ததில் வீட்டின் வெளியே இருந்த திரைச்சீலை எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜா முகமது உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    அதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மேலூர் டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி, மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பெட்ரோல் வெடிகுண்டு மாதிரிகளை சேகரித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று மாலை ராஜா முகமது, தனது மனைவி ரம்ஜானுடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ராஜா முகமது ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி கீழே விழுந்தனர். இது தொடர்பாக ராஜா முகமது, விபத்தை ஏற்படுத்திய நபர்களிடம் தட்டிக்கேட்ட போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே அந்த நபர்கள் தான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆலங்குளம் அருகே உள்ள ஆ.மருதப்பபுரம் கிராமத்தில் அதிக அளவில் கஞ்சா நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஆ.மருதப்பபுரம் வடக்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து அவற்றை வாலிபர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள ஆ.மருதப்பபுரம் கிராமத்தில் அதிக அளவில் கஞ்சா நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சந்தேகப்படும்படியான இடங்களில் சோதனை செய்தனர்.

    அப்போது ஆ.மருதப்பபுரம் வடக்கு தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் செல்வராஜ்(வயது 34) என்பவர் தனது வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து அவற்றை வாலிபர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரது வீட்டில் இருந்த சுமார் 1 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். மேலும் செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட செல்வராஜ் பெயர் ரவுடிகள் பட்டியலில் உள்ளது. இவர் மீது கொலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வியாபாரியிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்த பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணன் மற்றும் 5 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    மதுரை

    மதுரை மேலமாசி வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 57). அந்த பகுதியில் கார்மெண்ட்ஸ் கடை நடத்தி வரும் இவர், திடீர் நகர் போலீசில் புகார் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    சங்கரநாராயணன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கார்மெண்ட்ஸ் கடை நடத்தி வருகி றேன். இதற்காக சங்கர நாராயணனின் தந்தை நாகலிங்கத்திடம் ரூ.25 லட்சம் கொடுத்தேன். இந்த நிலையில் நாகலிங்கம் இறந்துவிட்டார்.

    நான் கொடுத்த ரூ.25 லட்சத்தை சங்கரநாராயணன் திருப்பி தராமல், கடையை காலி பண்ண சொல்லி நெருக்கடி கொடுத்து வருகிறார். இதற்கு சங்கரநாராயணனின் தாய், மனைவி மற்றும் உறவினர் உள்பட 6 பேர் உடந்தையாக உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் திடீர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரநாராயணன், அவரது மனைவி, தாய் மற்றும் உறவினர் உள்பட சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே வழக்கில் சங்கரநாராயணன் கொடுத்த புகாரின் அடிப்ப டையில், திடீர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணன் மற்றும் 5 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    சிதம்பரத்தில் பணம் கேட்டு மிரட்டி வியாபாரியை தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் பொன்னம்பலம் நகரை சேர்ந்தவர் ராமநாதன்(வயது 42). இவர் சிதம்பரம் பகுதியில் உள்ள கடைகளுக்கு குளிர்பானம் விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ராமநாதன் தனது வீட்டில் மினி லாரியில் இருந்து குளிர்பான பாட்டில்களை இறக்கி கொண்டிருந்தார்.

    அப்போது சிதம்பரம் சிவசக்தி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன்கள் புருஷோத்தமன்(26), சுந்தர்ராஜன்(22), ஓமகுளம் பன்னீர் செல்வம் மகன் முரளி(30), சிதம்பரம் செங்கட்டான் தெருவை சேர்ந்த கணேசன் மகன் பரணிதரன்(28), மணி(53), சுப்புரமணி மகன் சூரியமுர்த்தி(26) ஆகியோர் அங்கு வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் ராமநாதனிடம் தங்களுக்கு பணம் வேண்டும் என்று கேட்டனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை, நான் எதற்கு உங்களுக்கு பணம் தர வேண்டும், தர முடியாது என்று கூறியுளளார்.

    இதனால் ஆத்திரமடைந்த 6 பேரும் சேர்ந்து ராமநாதனை உருட்டு கட்டை, இரும்பு கம்பியால் தாக்கினர். மேலும் அவரது மினி லாரியையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். ராமநாதன் காயத்துடன் கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் புருஷோத்தமன் உள்பட 6 பேர் மீதும் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குபதிவு செய்து, அவர்கள் அனைவரையும் கைது செய்தார்.
    சேலத்தில் மனைவியை கொலை செய்ய முயன்ற கவரிங் வியாபாரி மாடியில் இருந்து கீழே தள்ளி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் இருளப்பட்டியை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 47).

    கவரிங் வியபாரியான இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மனைவி காமதேனு (45) மற்றும் 2 குழந்தைகளுடன் சேலம் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினார்.

    இந்த நிலையில் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவும் 8 மணியளவில் மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த திருமுருகன், மனைவி காமதேனுவை முதல் மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில் கால் உள்பட பல பகுதிகளில் படுகாயம் அடைந்த அவர் கதறி துடித்தார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் திருமுருகனை பிடித்த போலீசார் எதற்காக அவர் மனைவியை தள்ளி விட்டார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ததுடன் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மேட்டுப்பாளையம் அருகே மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை கத்தியால் குத்திய வியாபாரியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள எடுக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மனைவி ஜெனீபர் அகல்யா (வயது 26). கணவன்- மனைவி இருவரும் தென்னம் பாளையம் அவினாசி மார்க் கெட்டில் வாழைப்பழம் மற்றும் வாழை இலை வியாபாரம் செய்து வருகின்றனர்.

    சின்னராஜூக்கு அவரது மனைவியின் நடத்தையில் சந்தேம் ஏற்பட்டது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று சின்னராஜ் தனது மனைவியை மேட்டுப்பாளையம் பாரதி நகரில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு அழைத்து சென்றார். பின்னர் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார். இரவு குடிபோதையில் வீட்டுக்கு திரும்பிய அவர் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனால் 2 பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சின்னராஜ் அங்கு இருந்த கத்தியை எடுத்து ஜெனீபர் அகல்யாவின் கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் குத்தி கிழித்தார். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஜெனிபர் அகல்யாவை அங்கு இருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வியாபாரியிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டிய 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சென்றாயன் (வயது38). காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் கம்பத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரிடம் ரூ.1.20 லட்சம் வாரவட்டிக்கு கடன் வாங்கினார்.

    இதற்காக வட்டி மட்டும் ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார். மேலும் சரவணன் என்பவரிடம் ரூ.50 ஆயிரம், ரவியிடம் ரூ.15 ஆயிரம், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த கார்த்திக்கிடம் ரூ.20 ஆயிரம், ராமராஜிடம் ரூ.50 ஆயிரம், அணைப்பட்டி குட்டியிடம் ரூ.20 ஆயிரம், சிவாவிடம் ரூ.80 ஆயிரம், குணசேகரனிடம் ரூ.60 ஆயிரம், சுருளிபட்டியை சேர்ந்த இளம்பருதியிடம் ரூ.25 ஆயிரம், கே.எம்.பட்டியை சேர்ந்த ஜக்கப்பனிடம் ரூ.10 ஆயிரம், நல்லதம்பியிடம் ரூ.20 ஆயிரம், முருகனிடம் ரூ.20 ஆயிரம், மணிகண்டனிடம் ரூ.10 ஆயிரம் என 13 பேரிடம் கடன் வாங்கி வியாபாரம் செய்து வந்தார்.

    இதனால் அவருக்கு தொழிலில் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டது. வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். இதனால் கடன் கொடுத்தவர்கள் சென்றாயனிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டி உள்ளனர்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அவர் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்த ராயப்பன்பட்டி போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் கந்துவட்டி கேட்டு மிரட்டிய 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    வலங்கைமான் அருகே வியாபாரிக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவரை டாக்டர்கள் தனிவார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    வலங்கைமான்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள லாயம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 50). இவர் அதே பகுதியில் சொந்தமாக பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் குமார் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை. இதை தொடர்ந்து குமாரை அவரது உறவினர்கள் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் ரத்த பரிசோதனை செய்தனர். அதில் குமாருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து அவரை தனிவார்டில் அனுமதித்து தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இதுப்பற்றி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவுப்படி லாயம் கிராமத்தில் வேறு யாருக்காவது டெங்கு காய்ச்சல் உள்ளதா? என பரிசோதனை செய்ய ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்ளனர்.

    அங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை ரத்த பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் கொடுத்தனர். தொடர்ந்து அந்த கிராமத்தில் டாக்டர்கள் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். டெங்கு காய்ச்சலால் வியாபாரி பாதிக்கப்பட்ட சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    ×