search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Petrol Bomb Attack"

    • லிங்கராஜன் வழக்கம் போல தனது பிளக்ஸ் கடையில் வேலைகளை கவனித்து கொண்டிருந்தார்.
    • போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை அடுத்த வீரசோழன் அருகேயுள்ள ஏ.தரைக்குடி பகுதியை சேர்ந்தவர் லிங்கராஜன் (வயது 28). இவர் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும் இவர் வீரசோழன் தொடக்கப்பள்ளி அருகே டிஜிட்டல் பிளக்ஸ் மற்றும் ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார். தற்போது டி.புனவாசல் பகுதியில் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் லிங்கராஜன் வழக்கம் போல நேற்று தனது பிளக்ஸ் கடையில் வேலைகளை கவனித்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம வாலிபர்கள் இவரது கடை மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலில் லிங்கராஜன் காயமின்றி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து வீரசோழன் போலீஸ் நிலையத்தில் லிங்க பாண்டியன் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் மாலை லிங்கராஜனின் ஊரைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் வீரசோழன் அரசுப்பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்கள் பள்ளி முடிந்து பஸ் ஏற வந்தபோது அங்குள்ள கடையில் பாணி பூரி சாப்பிட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த வீரசோழன் தெற்குத்தெருவை சேர்ந்த கொங்குசெல்வம் (19) என்பவர் தான் சப்பிட்டதற்கும் பணம் தருமாறு கூறியுள்ளார்.

    ஆனால் மாணவர்கள் பணம் கொடுக்க மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த கொங்குசெல்வம், சசிகுமார் மற்றும் சாரதி ஆகிய இருவரையும் ராக்கிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன பள்ளி மாணவர்கள் லிங்கராஜனிடம் சென்று அழுதுகொண்டே நடந்ததை கூறியுள்ளனர். இதற்கிடையில் கொங்கு செல்வமும் மாணவர்களை பின் தொடர்ந்து பிளக்ஸ் கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்களை லிங்கராஜன் கண்டித்து அனுப்பியுள்ளார். இந்தநிலையில் தான் கொங்குசெல்வம் தனது கூட்டாளியுடன் சேர்ந்து லிங்கராஜனுக்கு சொந்தமான பிளக்ஸ் கடை மீது பெட்ரோல் குண்டை வீசி தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

    எந்நேரமும் ஆள் நடமாட்டமுள்ள வீரசோழன்-அபிராமம் சாலையில் பிளக்ஸ் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் வீரசோழன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    • வருவாய்த் துறை மற்றும் இந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் சாலையில் உள்ள கேசவன் நகரில் வசித்து வருபவர் பெரி.செந்தில். இவர் அகில பாரத இந்து மகாசபையின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.

    அவர் இன்று காலை வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்தபோது, வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு பெரி.செந்தில் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் குணபாலன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அவரது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் நேற்று நள்ளிரவு 12.10 மணியளவில் 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், பெரி.செந்தில் வீட்டிற்கு வருவதும், பெட்ரோல் நிரப்பபட்ட பாட்டிலில் தீயை வைத்து வீட்டின் வாசலில் வீசி விட்டு அங்கிருந்து செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.

    அந்த பதிவை கைப்பற்றிய போலீசார், பெட்ரோல் குண்டு வீசிய நபர் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையம் எதிரில் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான இடம் பலரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதனை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அகில பாரத இந்து மகா சபா சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    இது தொடர்பான கூட்டம் உளுந்தூர்பேட்டை தாசில்தார் தலைமையில் 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அகில பாரத இந்து மகா சபாவின் பொதுச்செயலாளர் பெரி.செந்தில், கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதற்கு வருவாய்த் துறை மற்றும் இந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். எனவே நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களில் யாரேனும் பெரி.செந்தில் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசினார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் குண்டை சரவணபிரபுவின் கடை முன்பு வீசி உள்ளார்.
    • ஷேக்முகமதுவை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்தவர் தனவீரபாண்டியன். இவர் தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கத்தின் பகுதி தலைவராக இருந்து வருகிறார். இருவரது மகன் சரவணபிரபு (வயது 29). இவர் திருச்செந்தூர் பிரதான சாலை முத்தையாபுரத்தில் இ-சேவை மையம் மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இவரது ஓட்டல் பக்கத்தில் கடை நடத்தி வருபவர் ஷேக்முகமது. இவருக்கும், சரவண பிரபுவுக்கும் நிலம் சம்பந்தமாக கடந்த 2005-ம் ஆண்டு முதல் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் ஷேக்முகமது, நேற்று முன்தினம் இரவு தனது கடையில் வேலை செய்யும் மாரிகணேஷ் என்பவரிடம் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொடுத்து அனுப்பி உள்ளார். அவர் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் குண்டை சரவணபிரபுவின் கடை முன்பு வீசி உள்ளார். பெட்ரோல் குண்டு கடையின் முன்பு இருந்த விறகுகளில் பட்டு தீப்பற்றி எரிந்து அணைந்தது. இதனால் பெரிய அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.

    இது தொடர்பாக சரவணபிரபு அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தர், மகாராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஷேக்முகமது, தனது கடையில் வேலை செய்யும் மாரிகணேஷ் என்பவரிடம் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொடுத்து அனுப்புவதும், அவர் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் குண்டை சரவணபிரபுவின் கடை முன்பு வீசுவதும் பதிவாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஷேக்முகமதுவை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பெட்ரோல் வெடிகுண்டு மாதிரிகளை சேகரித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரைச் சேர்ந்தவர் ராஜா முகமது. இவர் அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு ராஜா முகமது வழக்கம் போல் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் ராஜா முகமது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் பெட்ரோல் குண்டு வெடித்ததில் வீட்டின் வெளியே இருந்த திரைச்சீலை எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜா முகமது உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    அதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மேலூர் டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி, மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பெட்ரோல் வெடிகுண்டு மாதிரிகளை சேகரித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று மாலை ராஜா முகமது, தனது மனைவி ரம்ஜானுடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ராஜா முகமது ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி கீழே விழுந்தனர். இது தொடர்பாக ராஜா முகமது, விபத்தை ஏற்படுத்திய நபர்களிடம் தட்டிக்கேட்ட போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே அந்த நபர்கள் தான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாட்டிற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது உறுதியான நடவடிக்கை.
    • சோதனை தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் நடைபெற்றது.

    ராமநாதபுரத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய சிறு குறு தொழில்துறை இணை மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    தமிழகத்தில் பாஜக நிர்வாகிகளின் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து மாநில அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

    நாட்டிற்கு எதிராக செயல்படுபவர்கள் குறித்து சோதனை நடத்திய தேசிய புலனாய்வு நிறுவனம் உறுதியான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இந்த சோதனை தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் நடைபெற்றது.

    மத்திய அரசு 89 தொழில் குழுமங்களை உருவாக்கி உள்ளது, அவற்றில் 27 தொழில் குழுமங்கள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பெட்ரோல் குண்டுவீச்சு எதிரொலியாக அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். #TTVDhinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளரும், எம்.எல். ஏ.வுமான டி.டி.வி. தினகரனின் வீடு அடையாறில் உள்ளது.

    கடந்த 29-ந்தேதி, அ.ம.மு.க. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புல்லட் பரிமளம் என்பவர் காரில் அங்கு வந்தார். அவர் தான் கொண்டுவந்த உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி எரித்தார். அப்போது காரும் தீப்பிடித்தது. அதன் கண்ணாடிகளும் உடைந்தன.

    இது தொடர்பாக புல்லட் பரிமளத்தின் கார் டிரைவர் சுப்பையாவை போலீசார் கைது செய்தனர். ஆனால் தினகரன் ஆதரவாளர்கள், வீட்டின் மீது திட்டமிட்டு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

    தினகரன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரது வீட்டுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திலும், சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளரிடமும் கோரிக்கை மனு அளித்தனர்.

    இந்த நிலையில் அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 5 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். #TTVDhinakaran


    ×