என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டு மனைவியை கொல்ல முயன்ற கவரிங் வியாபாரி
Byமாலை மலர்8 May 2019 9:15 AM GMT (Updated: 8 May 2019 9:15 AM GMT)
சேலத்தில் மனைவியை கொலை செய்ய முயன்ற கவரிங் வியாபாரி மாடியில் இருந்து கீழே தள்ளி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
தர்மபுரி மாவட்டம் இருளப்பட்டியை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 47).
கவரிங் வியபாரியான இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மனைவி காமதேனு (45) மற்றும் 2 குழந்தைகளுடன் சேலம் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினார்.
இந்த நிலையில் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவும் 8 மணியளவில் மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த திருமுருகன், மனைவி காமதேனுவை முதல் மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில் கால் உள்பட பல பகுதிகளில் படுகாயம் அடைந்த அவர் கதறி துடித்தார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் திருமுருகனை பிடித்த போலீசார் எதற்காக அவர் மனைவியை தள்ளி விட்டார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ததுடன் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி மாவட்டம் இருளப்பட்டியை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 47).
கவரிங் வியபாரியான இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மனைவி காமதேனு (45) மற்றும் 2 குழந்தைகளுடன் சேலம் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினார்.
இந்த நிலையில் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவும் 8 மணியளவில் மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த திருமுருகன், மனைவி காமதேனுவை முதல் மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில் கால் உள்பட பல பகுதிகளில் படுகாயம் அடைந்த அவர் கதறி துடித்தார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் திருமுருகனை பிடித்த போலீசார் எதற்காக அவர் மனைவியை தள்ளி விட்டார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ததுடன் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X