search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே மாணவி உள்பட 3 சிறுவர்கள் மாயம்
    X

    கோப்பு படம்.

    தேனி அருகே மாணவி உள்பட 3 சிறுவர்கள் மாயம்

    • வீட்டில் இருந்த மாணவி மற்றும் பெற்றோரிடம் செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்கி தர மறுத்ததால் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    தேனி:

    தேனி மாவட்டம் கூடலூர் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகள் அம்பிகா (வயது15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கூலி வேலை பார்த்து வந்த சுப்பிரமணி கடந்த 2 மாதத்துக்கு முன்பு கேரளாவுக்கு தனது மகளை அழைத்து சென்றார்.

    அதன்பிறகு மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார். இது குறித்து கூடலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பழனிசெட்டிபட்டி வடக்கு ஜெகநாதபுரத்தை சேர்ந்த மகேஷ்வரன் மகன் சுந்தரபாண்டியன் (14). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவந்தான். சம்பவத்தன்று உடல்நிலை சரியில்லாததால் வீட்டில் இருந்தார். அப்போது கடைக்கு செல்வதாக கூறி சென்ற சுந்தரபாண்டியன் மாயமானார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ராயப்பன்பட்டி அருகில் உள்ள காமயகவுண்டன்பட்டி கருமாரிபுரத்தை சேர்ந்தவர் சுகுமார் மகன் ரஞ்சித்குமார் (19). இவர் தனது பெற்றோரிடம் செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அவர்கள் வாங்கி தர மறுத்ததால் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    அதன்பிறகு எங்கே சென்றார் என தெரிய வில்லை. இது குறித்து அவரது தாய் லதா கொடுத்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×