search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector innocent divya"

    ஊட்டியில் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். #PolioDropsCamp
    ஊட்டி:

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமுக்காக 770 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. சிறப்பு வாகனங்கள் போலியோ சொட்டு மருந்து வழங்க பயன்படுத்தப்படுகிறது.

    பஸ் நிலையம், ரெயில் நிலையம், மார்க்கெட், சோதனைச்சாவடிகள், 29 கோவில்கள், 52 கிறிஸ்தவ ஆலயங்கள், 6 மசூதிகள் மற்றும் அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களிலும் போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. நகர்புற பகுதிகளில் 135 போலியோ சொட்டு மருந்து முகாம்களும், கிராம பகுதியில் 635 போலியோ சொட்டு மருந்து முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளன. மாவட்ட அளவில் 42,558 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ நோயினை அறவே ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி மற்றும் பலர் கலந்து கொண்டனர். #PolioDropsCamp
    ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ரூ.6 லட்சம் மதிப்பில் ஊட்டசத்து உணவுகளை வழங்கினார். #CollectorInnocentDivya
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி வண்ணாரப்பேட்டை அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் விழாவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு 1,876 குழந்தைகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் ஊட்டசத்து உணவுகளை குழந்தைகளுக்கு வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவின் எதிர்காலங்கள். பிறந்த குழந்தை 1 முதல் 5 வயது வரை தான் அதிக அளவு மூளை வளர்ச்சி அடைகிறது. அச்சமயத்தில் தான் குழந்தைகளுக்கு அதிகபடியான ஊட்டசத்து வழங்க வேண்டும். அப்பொழுது தான் ஊட்டசத்து குறைபாடு இல்லாத குழந்தைகளாக வளர்க்க முடியும்.

    மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுள்ள கர்ப்பிணி தாய்மார்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனை மற்றும் ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டு கர்ப்பிணி தாய்மார்களின் இறப்பு விகிதம் 100 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

    போ‌ஷன் அபியான் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் நீலகிரி மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்டத்தில் தேசிய குடும்ப சுகாதாரம் மூலம் கணக்கெடுக்கப்பட்டதில் குள்ளத்தன்மை, ஊட்டச்சத்து குறைபாடு, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, ரத்தசோகை, எடைகுறைவு உள்ள ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    மேற்கண்ட குறைபாடுகளை குறைக்க வேண்டுமெனில் புரதசத்து, இரும்புச்சத்து நிறைந்த உணவு பொருட்களை தவறாது உண்ண வேண்டும். இதன் அடிப்படையில் மாவட்டத்தில் 1,876 குழந்தைகளுக்கு மும்பையை சேர்ந்த இஷ்பிரவா என்ற அமைப்பின் மூலம் நெய், கடலைமிட்டாய், எள்ளுமிட்டாய், மற்றும் பேரீச்சம்பழம் ஆகிய ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறி அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கோப £லகிருஷ்ணன் எம்.பி., போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தேவகுமாரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிவேலன், இஷ்பிரவா அமைப்பின் தலைவர் தர்சன்ஷா, அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். #CollectorInnocentDivya
    கேரள மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.57¼ லட்சம் வெள்ள நிவாரணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ஊட்டி:

    கேரள மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு, மலப்புரம், பாலக்காடு ஆகிய மாவட்ட மக்களுக்கு உதவிடும் பொருட்டு மாவட்ட சமூக நலத்துறை சார்பில் புடவைகள், சேனிட்டரி நாப்கின்ஸ், குழந்தைகளுக்கான ஆடைகள், சோப்பு, சேம்பு, மற்றும் ஆண்களுக்கான பேண்டுகள், டிசர்ட்டுகள் ஆகியவைகளும், உதகை நகராட்சி சார்பில் பிஸ்கட், சோப்பு, அரிசி போன்ற பொருட்களும், தோட்டக் கலைத்துறை சார்பில் கடநாடு, உல்லத்தி, இத் தலார், மீக்கேரி, சோலாடா, கேத்தி, கூக்கல்தொரை ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டுப்பண்ணை மற்றும் உழவர் உற்பத்தி நல குழு சார்பில் 3 டன் காய்கறிகள் மற்றும் 800 கிலோ அரிசி, பருப்பு, சர்க்கரை, சோப்பு, பிஸ்கட் போன்ற பொருட்கள் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் சார்பில் ரூ.25 ஆயிரம் நிதியுதவியும், 1 டன் பால் பவுடர், மலப்புரம் மாவட்டத்திற்கு 6 டன் அரிசி மற்றும் 1 டன் பால் பவுடர் 500 சமையல் பாத்திர பண்டங்கள் மொத்தம் ரூ.47 லட்சம் 20 ஆயிரம் மதிப்பிலும், தோட்டக்கலைத்துறை பணியாளர்கள் சார்பில் ரூ.25,150, (கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி, பிரிதெளஸ் பாத்திமா ரூ.1,122, பைக்காராவை சேர்ந்த ஜெயராமன் ரூ.1000, சண்முகம் ரூ.2000, கேப்டன் கே.ஆர்.மணி ரூ.10,000, ஓட்டல் ஜெம்பார்க் பணியாளர்கள் சார்பில் ரூ.61,605, மாவட்ட ஹோட்டல் பார் அசோஷியேசன் சார்பில் ரூ.1,00,000, ஓட்டல் மோனார்க் சார்பில் ரூ.60,000, வருவாய்துறை அலுவலர்கள் சார்பில் ரூ.80,000, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சார்பில் ரூ.1,05,000, கக்குச்சி ஊர் பொதுமக்கள் சார்பில் ரூ.20,000, பேலிதளா ஊர் பொதுமக்கள் சார்பில் ரூ.13,000, அதிகரட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் ரூ.50,000, ஆர்.கே.பி லைன் ஊர் பொதுமக்கள் சார்பில் ரூ.37,500 ,கோத்தகிரி ஓட்டல் அண்டு ரிசார்ட் சங்கம் உதகை சார்பில் ரூ.50,000, குந்தசப்பை ஊர் பொதுமக்கள் சார்பில் ரூ.13,000, உழவர்சந்தை டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் உதகை சார்பில் ரூ.25,000, எல்லநள்ளி வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் ரூ.1,06,300 ஆக மொத்தம் ரூ.4,54,317 மதிப்பில் கேரள முதல்-மந்திரி பொது நிவாரண நிதிக்கு காசோலையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் மருந்து கட்டுப் பாட்டு துறை அலுவலர்கள், மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ரூ.1,00,000 மதிப்பில் அத்தியாவசிய மருந்து பொருட்கள் மற்றும் ரூ.1,45,000 நிதியுதவியும் ஆக மொத்தம் ரூ.57,25,677மதிப்பில் இதுவரையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் மற்றும் பல்வேறு அமைப்புகள், தனியர்கள், மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நிவாரண பொருட்கள் மற்றும் நிதியுதவி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

    மேலும், நீலகிரி மாவட்டத்திலிருந்து மூன்று குழுக்கள் போதிய மருந்துகளுடன் மருத்துவர்கள் சென்று பொதுமக்களுடன் முகாமில் தங்கி அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளித்தார்கள். அதற்காக பொது மக்களும், அங்குள்ள மருத்து வர்களும் தக்க சமயத்தில் உதவி செய்ததற்காக மருத்துவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்தனர் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    ஊட்டியில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பேசிய கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, மாணவர்கள் காலத்திற்கேற்ப திறமைகளை வளர்க்க வேண்டும் என்றார்.

    ஊட்டி:

    ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். மாணவர்கள் தங்களின் திறமைகளை காலத்திற்கேற்ப ஆர்வத்துடன் வளர்த்து கொள்ள வேண்டும். தமிழக அரசு உங்களுக்காக புதிய தொழில் தொடங்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே ஒவ்வொருவரும் திட்டங்கள் என்ன என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும். அவ்வாறு செய்தால் நீங்களே ஒரு தொழில் தொடங்கி அதன் மூலம் மற்றவர்களுக்கு வேலை கொடுக்கலாம்.

    படித்து விட்டு அரசாங்க தொழிலையே நம்பாமல் தாங்களாகவே தொழில் தொடங்கி கடுமையாக உழைத்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். அதன் மூலம் வாழ்வில் முன்னேறி நல்ல நிலைக்கு வர முடியும் எனவும் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும், இப்பயிற்சி கூட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலைக் கல்லூரிகளில் நடத்தப்படவுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன உதவி இயக்குநர் டேனியல் பிரேம்நாத், கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி, அரசுத்துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டியில் சுதந்திர தின விழாவையொட்டி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நாளை(புதன்கிழமை) தேசியக்கொடியை ஏற்றுகிறார். நீலகிரி மாவட்டம் முழுவதும் 570 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். #IndependenceDay
    ஊட்டி:

    நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை (புதன்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நாளை காலை 10 மணியளவில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. விழாவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். அதனை தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இதில் தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் அணிவகுப்பும் நடக்க உள்ளது.



    விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெறுகிறது. தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இந்த விழாவில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். விழாவையொட்டி மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு கொடிக்கம்பம் நடப்பட்டு, மேடை அமைக்கப்பட்டு உள்ளது. விழாவை பொதுமக்கள் பார்ப்பதற்காகவும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தற்காலிகமாக கழிப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    விழாவுக்காக ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கடந்த சில நாட்களாக தினமும் காலையில் ஆயுதப்படை போலீசார் துப்பாக்கியுடன் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடைபெற்ற போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகையை போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா பார்வையிட்டார். மேலும் ஊட்டி அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவர் படை மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். விழா நடைபெறும் மைதானம் மற்றும் அங்குள்ள சாலையை தூய்மையான வைக்கும் பணியில் நகராட்சி சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    விழாவை முன்னிட்டு போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா உத்தரவின்பேரில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய 3 தாலுகாக்களில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு(மதுவிலக்கு) கோபி தலைமையிலும், கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தம்பிதுரை தலைமையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் 570 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். சேரம்பாடி, தாளூர், அய்யங்கொல்லி, கக்கனல்லா, எருமாடு, பாட்டவயல், நாடுகாணி, முள்ளி, மஞ்சூர், கெத்தை, குஞ்சப்பணை உள்ளிட்ட 16 சோதனைச்சாவடிகளில் இரவும், பகலும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்துகிறார்கள். சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. குன்னூரில் 4 இடங்கள், ஊட்டியில் 4 இடங்கள், கூடலூரில் 1 இடம், கோத்தகிரியில் 1 இடம் என வாகன சோதனை நடத்தப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகளிலும் தங்கும் நபர்கள் குறித்த விவரங்களை போலீசார் கேட்டறிந்து சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். மாவட்ட கலெக்டர் பங்களாவில் இருந்து ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானம் வரை நாளை போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. மைதானம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பில் உள்ளது. 
    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொட்டபெட்டா ஊராட்சிக்குட்பட்ட சின்கோனா பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.3 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் 400 மீட்டர் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியினை பார்வையிட்டார்.

    தும்மனட்டி ஊராட்சி முனியாபுரம், எப்பநாடு ஊராட்சி கோயில்மேடு, கங்கா நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஆதிதிராவிடர் பழங்குடியினர்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு, போக்குவரத்து வசதி போன்றவை உள்ளனவா? என்றும் சுகாதாரம் குறித்தும் ஆய்வு செய்து அப்பகுதி பொதுமக்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பில் 1500 சதுர அடியில் கட்டப்பட்டு வரும் தூனேரி ஊராட்சி அலுவலக கட்டிட பணியினையும் அவர் பார்வையிட்டார்.

    மேலும் வேளாண் பொறியியல் துறை சார்பில் கடநாடு ஊராட்சிக்குட்பட்ட பெந்தட்டி பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 2010 மீட்டர் வெள்ள தடுப்பு மேம்படுத்துதல் பணிகளையும்,

    ஆக மொத்தம் ரூ.33 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பணிகளை விரைவில் முடிக்குமாறு உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொறுப்பு) சுமதி, செயற்பொறியாளர் பசுபதி, வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் பாலசுப்ரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமன், நாகராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தில் 8 கல்லூரி மாணவிகளுக்கு பத்திர முதிர்வு தொகையை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சமூக நலத்துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் 8 கல்லூரி மாணவிகளுக்கு வைப்புத் தொகை பத்திர முதிர்வு தொகை ரூ.3,27,296-க்கான காசோலையை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது-:

    இரண்டு பெண் குழந்தைகள் பெற்றவர்கள் முதல்-அமைச்சரின்பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதல் குழந்தைக்கு ரூ.50ஆயிரமும், இரண்டாம் குழந்தைக்கு ரூ.25 ஆயிரமும் பெறுவதற்கு தேவையான சான்றிதழ்கள் தாயின் பெயரில் பெறப்பட்ட குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் இருக்க வேண்டும். ஆண்டு வருமான சான்றிதழ் தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட சான்றிதழாக இருக்க வேண்டும்.

    இருப்பிட சான்று பத்து வருடங்களுக்கும், ஆண்வாரிசு இல்லை என்ற சான்றிதழும், தாய் மற்றும் தந்தையின் வயதுச் சான்று (மதிப்பெண் சான்று அல்லது மாற்றுச் சான்றிதழ் அல்லது அரசு மருத்துவரிடமிருந்து வயதுச் சான்று), குழந்தைகளின் பெயருடன் பிறப்பு சான்று, தாய் மற்றும் தந்தையின் சாதி சான்று, குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைச் சான்று, அறுவை சிகிச்சையின் போது 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப புகைப்படம், பெற்றோர்களின் திருமண பத்திரிக்கை, முதல் குழந்தை மட்டும் இருந்தால் முதல் குழந்தை பிறந்து 3 வருடத்திற்குள்ளும், இரண்டாவது குழந்தை இருந்தால் இரண்டாவது குழந்தை பிறந்து 3 வருடத்திற்குள்ளும் இருக்க வேண்டும்.

    அனைத்து சான்றிதழ் களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம் எனவும், தாய் இல்லை எனில் தாயின் இறப்புச் சான்றுடன் அனைத்து சான்றிழ்களும் தந்தையின் பெயரில் சமர்பிக்கப்பட வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அலுவலர் தேவகுமாரி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு ஒழிப்பு குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு ஒழிப்பு குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்று ச்சூழலை மாசுபடுவதை தடுக்கவும் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக பசுமைப்படை உருவாக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ் டிக் பொருட்கள் அரசி தழில் வெளியிடப்பட்டது. அவைகள் அனைத்து தடிமனாலான பிளாஸ்டிக் பைகள், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கப்புகள், ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், கத்திகள், முள்கரண்டிகள், பிளாஸ்டிக் உறிஞ்சும் குழல், காகித கப்புகள், காகித டம்ளர்கள், பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், ஸ்டைலோபோம் தெர்மாகோல் தட்டுகள் மற்றும் பிறவகை தெர்மகோல், நெய்யப்படாத வகையிலான பைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் சமையலர் தொப்பிகள், பிளாஸ்டிக் கையுறைகள், பிளாஸ்டிக் குடிநீர் பாக்கெட்டுகள், சில்வர் பூச்சு கொண்ட பைகள், பிளாஸ்டிக் பேக்கிங் செய்யப்படும் பொருட்கள், பூச்செண்டுகள் மற்றும் பரிசு பொருட்கள் சுற்றப்பயன்படும் பிளாஸ் டிக்குகள், லாமினே‌ஷன் செய்யப்பட்ட காக்கி தாள்கள், லாமினே‌ஷன் செய்யப்பட்ட பேக்கரி அட்டை பெட்டிகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவ தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் போன்றவைகள் ஆகும்.

    மாவட்டத்தின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு 51 மைக்ரானுக்கு மேற்பட்ட கவர்கள் (மளிகை தேயிலை மற்றும் பேக்கரி பொருட்களை பேக்கிங் செய்ய மட்டும், முடிச்சு கவர்களாக பயன்படுத்தக்கூடாது. உணவகங்களில் பயன்படுத்தும் சில்வர் பாயில் கண்டெயினர்கள் மற்றும் பேக்கரி பொருட்கள், சாக்லெட் பேக்கிங் செய்ய பயன்படுத்தும் பிளாஸ்டிக் கண்டெயினர்கள் , கட்டை கைப்பிடியுடன் கூடிய நெய்யப்படாத பைகள் ஆகியவற்றிற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுப்பொருட்கள் கண்டறியும் வரை இந்த விதிவிலக்கு அளிக்கப்படு கிறது. இத்தடையை செவ்வனே பயன்படுத்தி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை பெருமளவில் குறைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைத்து வணிகர்களும், பொதுமக்களும் ஒத்து ழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வ ராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    ×