search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவுக்கு ரூ.57¼ லட்சம் வெள்ள நிவாரணம்- கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தகவல்
    X

    கேரளாவுக்கு ரூ.57¼ லட்சம் வெள்ள நிவாரணம்- கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தகவல்

    கேரள மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.57¼ லட்சம் வெள்ள நிவாரணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ஊட்டி:

    கேரள மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு, மலப்புரம், பாலக்காடு ஆகிய மாவட்ட மக்களுக்கு உதவிடும் பொருட்டு மாவட்ட சமூக நலத்துறை சார்பில் புடவைகள், சேனிட்டரி நாப்கின்ஸ், குழந்தைகளுக்கான ஆடைகள், சோப்பு, சேம்பு, மற்றும் ஆண்களுக்கான பேண்டுகள், டிசர்ட்டுகள் ஆகியவைகளும், உதகை நகராட்சி சார்பில் பிஸ்கட், சோப்பு, அரிசி போன்ற பொருட்களும், தோட்டக் கலைத்துறை சார்பில் கடநாடு, உல்லத்தி, இத் தலார், மீக்கேரி, சோலாடா, கேத்தி, கூக்கல்தொரை ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டுப்பண்ணை மற்றும் உழவர் உற்பத்தி நல குழு சார்பில் 3 டன் காய்கறிகள் மற்றும் 800 கிலோ அரிசி, பருப்பு, சர்க்கரை, சோப்பு, பிஸ்கட் போன்ற பொருட்கள் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் சார்பில் ரூ.25 ஆயிரம் நிதியுதவியும், 1 டன் பால் பவுடர், மலப்புரம் மாவட்டத்திற்கு 6 டன் அரிசி மற்றும் 1 டன் பால் பவுடர் 500 சமையல் பாத்திர பண்டங்கள் மொத்தம் ரூ.47 லட்சம் 20 ஆயிரம் மதிப்பிலும், தோட்டக்கலைத்துறை பணியாளர்கள் சார்பில் ரூ.25,150, (கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி, பிரிதெளஸ் பாத்திமா ரூ.1,122, பைக்காராவை சேர்ந்த ஜெயராமன் ரூ.1000, சண்முகம் ரூ.2000, கேப்டன் கே.ஆர்.மணி ரூ.10,000, ஓட்டல் ஜெம்பார்க் பணியாளர்கள் சார்பில் ரூ.61,605, மாவட்ட ஹோட்டல் பார் அசோஷியேசன் சார்பில் ரூ.1,00,000, ஓட்டல் மோனார்க் சார்பில் ரூ.60,000, வருவாய்துறை அலுவலர்கள் சார்பில் ரூ.80,000, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சார்பில் ரூ.1,05,000, கக்குச்சி ஊர் பொதுமக்கள் சார்பில் ரூ.20,000, பேலிதளா ஊர் பொதுமக்கள் சார்பில் ரூ.13,000, அதிகரட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் ரூ.50,000, ஆர்.கே.பி லைன் ஊர் பொதுமக்கள் சார்பில் ரூ.37,500 ,கோத்தகிரி ஓட்டல் அண்டு ரிசார்ட் சங்கம் உதகை சார்பில் ரூ.50,000, குந்தசப்பை ஊர் பொதுமக்கள் சார்பில் ரூ.13,000, உழவர்சந்தை டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் உதகை சார்பில் ரூ.25,000, எல்லநள்ளி வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் ரூ.1,06,300 ஆக மொத்தம் ரூ.4,54,317 மதிப்பில் கேரள முதல்-மந்திரி பொது நிவாரண நிதிக்கு காசோலையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் மருந்து கட்டுப் பாட்டு துறை அலுவலர்கள், மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ரூ.1,00,000 மதிப்பில் அத்தியாவசிய மருந்து பொருட்கள் மற்றும் ரூ.1,45,000 நிதியுதவியும் ஆக மொத்தம் ரூ.57,25,677மதிப்பில் இதுவரையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் மற்றும் பல்வேறு அமைப்புகள், தனியர்கள், மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நிவாரண பொருட்கள் மற்றும் நிதியுதவி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

    மேலும், நீலகிரி மாவட்டத்திலிருந்து மூன்று குழுக்கள் போதிய மருந்துகளுடன் மருத்துவர்கள் சென்று பொதுமக்களுடன் முகாமில் தங்கி அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளித்தார்கள். அதற்காக பொது மக்களும், அங்குள்ள மருத்து வர்களும் தக்க சமயத்தில் உதவி செய்ததற்காக மருத்துவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்தனர் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    Next Story
    ×