என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "develop"
ஊட்டி:
ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். மாணவர்கள் தங்களின் திறமைகளை காலத்திற்கேற்ப ஆர்வத்துடன் வளர்த்து கொள்ள வேண்டும். தமிழக அரசு உங்களுக்காக புதிய தொழில் தொடங்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே ஒவ்வொருவரும் திட்டங்கள் என்ன என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும். அவ்வாறு செய்தால் நீங்களே ஒரு தொழில் தொடங்கி அதன் மூலம் மற்றவர்களுக்கு வேலை கொடுக்கலாம்.
படித்து விட்டு அரசாங்க தொழிலையே நம்பாமல் தாங்களாகவே தொழில் தொடங்கி கடுமையாக உழைத்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். அதன் மூலம் வாழ்வில் முன்னேறி நல்ல நிலைக்கு வர முடியும் எனவும் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும், இப்பயிற்சி கூட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலைக் கல்லூரிகளில் நடத்தப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன உதவி இயக்குநர் டேனியல் பிரேம்நாத், கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி, அரசுத்துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்