search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "childrens"

    • வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதாக பரவக்கூடியது என்பதால் வீட்டில் ஒரு குழந்தைக்கு வந்தால் அனைவருக்கும் பரவி விடுகிறது.
    • காய்ச்சல் மாத்திரை சாப்பிட்ட பிறகும் கடுமையான சோர்வு இருந்தால் எக்ஸ்ரே போன்ற பரிசோதனை செய்வது நல்லது.

    சென்னை:

    பருவ மழை காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு வழக்கமானதுதான். அக்டோபர் மாதம் கொஞ்சம் கொஞ்சமாக கூடி நவம்பரில் அதிகரித்த 'புளூ' வைரஸ் காய்ச்சல் பாதிப்பு டிசம்பரில் பெரு மளவில் பாதிப்பை ஏற்ப டுத்தி வருகிறது.

    சளியில் தொடங்கி இருமல், தொண்டை வலி உடல் சோர்வு என படிப்படியாக பல்வேறு கஷ்டங்களை 'புளூ' வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தி விடும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இத னால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த வைரஸ் பாதிப்பு பெரியவர்களை விட சிறு குழந்தைகளை அதிகளவில் பாதித்துள்ளன. சென்னையில் காய்ச்சல் பாதிப்பு இல்லாத வீடே இல்லை என்ற நிலையில் புளூ காய்ச்சல் பரவி வருகிறது.

    இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதாக பரவக்கூடியது என்பதால் வீட்டில் ஒரு குழந்தைக்கு வந்தால் அனைவருக்கும் பரவி விடுகிறது. எல்லாருமே இருமல், தொண்டை வலியால் பாதிக்கப்படுகிறார்கள்.

    இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பிரிவில் கூட்டம் அலைமோதுகிறது. காய்ச்சல் உபாதையால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் மருத்துவர்களை அணுகி மாத்திரை வாங்கி செல்ல காத்து நின்றனர்.

    இதே போல் தனியார் மருத்துவமனைகள், கிளி னிக்குகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. குழந்தைகளுடன் பெற்றோர்கள் நள்ளிரவு வரை காத்து நின்று சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தனியார் மருத்துவர்களிடமும், குழந்தைகள் டாக்டர்களிடமும் நோயாளி கள் கூட்டம் காத்திருப்பதை காண முடிகிறது.

    இதுகுறித்து ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி பொதுநல மருத்துவர் சந்திரசேகர் கூறியதாவது:-

    புளூ வைரஸ் காய்ச்சல் 95 சதவீதம் மருந்து இல்லாமலே தானாகவே குணமாகி விடும். தற்போது பெரியவர்களை விட குழந்தைகள்தான் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். இந்த வைரஸ் மழை-குளிர் காலத்தில் வரக்கூடியதுதான். இணை நோய் உள்ளவர்களுக்கு உடல் வலி, இருமல், தலைவலி போன்ற பாதிப்புகள் கடுமையாக இருக்கும். எதிர்ப்பு சக்தி குறைவின் காரணமாக புளூ வைரஸ் தொற்றி விடுகிறது.

    'பாரசிட்டமால்' உள்ளிட்ட காய்ச்சல் மாத்திரை சாப்பிட்ட பிறகும் கடுமையான சோர்வு இருந்தால் எக்ஸ்ரே போன்ற பரிசோதனை செய்வது நல்லது.

    காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளை தனிமைப்படுத்த வேண்டும். முகக்கவசம் அணிவது, சளியை கண்ட இடங்களில் துப்பாமல் பிளாஸ்டிக் கவரில் சேகரித்து அப்புறப்படுத்துவது, இருமல் வந்தால் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க முகத்தை கை விரல்களால் மூடுவது போன்றவற்ளை பின்பற்ற வேண்டும்.

    புளூ காய்ச்சல் பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தடுப்பூசி ஒவ்வொரு ஆண்டும் போட வேண்டும். பெரியவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் காய்ச்சல் பாதிப்பு வராது. வந்தாலும் கூட தீவிரம் குறையும். வீசிங், ஆஸ்துமா உள்ளவர்கள் போட்டுக்கொண்டால் 95 சதவீதம் பாதுகாப்பாகும். இருதய நோய் பாதிப்பு உள்ளவர்களும் போட்டுக் கொள்ளலாம்.

    இந்த காய்ச்சல் பாதிப்பு 3 முதல் 5 நாட்களில் குணமாகி விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தன.
    • மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியது.

    உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் ஜான்சி லட்சுமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் வார்டில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

    இந்த தீ விபத்தில் 11 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன. 43 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டன.

    குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியது. தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சமும் உ.பி. முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 5 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த தீ விபத்தின்போது மருத்துவமனைக்கு வெளியே படுத்திருந்த யாகூப் மன்சூரி என்ற கூலித் தொழிலாளி மருத்துவமனை ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று கரும் புகைக்கு இடையே 7 பச்சிளம் குழந்தைகளை தூக்கி வந்து காப்பாற்றியுள்ளார்.

    ஆனால் இதே மருத்துவமனையில் பிறந்த யாகூப்பின் இரட்டை பெண் குழந்தைகள் மறுதினம் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று யாகூப் உருக்கத்துடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜான்சி லட்சுமிபாய் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • தீ விபத்தினால் உடல்கருகி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் ஜான்சி லட்சுமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் வார்டில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

    இந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன. 44 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டன.

    குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் சிக்கிய மேலும் சில குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது

    இந்நிலையில், தீ விபத்தினால் உடல்கருகி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உத்தரபிரதேசத்தில் உள்ள ஜான்சி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு 5 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவித்தார்

    • முண்டகம்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் கலெக்டர் கார்மேகம் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • குறித்த நேரத்தில் சமைத்து வழங்கிய சமையலர் சோனியாவிற்கு பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    சேலம்:

    ஏற்காட்டில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் குறித்து முண்டகம்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் கலெக்டர் கார்மேகம் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இப்பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவினை தரமாகவும், சுவையாகவும், குறித்த நேரத்தில் சமைத்து வழங்கிய சமையலர் சோனியாவிற்கு பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    மேலும், காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் நாள்தோறும் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு, திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • நெல்லை மேலப்பாளை யத்தை அடுத்த சிவராஜபுரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் நேற்று தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.
    • இது குறித்து சிறுவர்களிடம் கேட்டபோது தந்தை திட்டிய கோபத்தில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளை யத்தை அடுத்த சிவராஜபுரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் நேற்று தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் சரியாக பள்ளிக்கு செல்வதில்லை என்று கூறி அவரது தந்தை திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் கோபமடைந்த அந்த சிறுவன் வீட்டில் இருந்த பணத்தில் ரூ. 500-ஐ எடுத்துக் கொண்டு தனது வீட்டின் எதிரே வசிக்கும் ஒருவரது 9 வயது மகனை அழைத்துக் கொண்டு சென்று விட்டான். இரவு வெகு நேரம் ஆகியும் அவர்கள் 2 பேரும் வீட்டுக்கு வரவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த 2 சிறுவர்களின் பெற்றோரும் மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் 2 பேரையும் தேடி வந்த நிலையில் சிறுவர்கள் நள்ளிரவு நேரத்தில் புதிய பேருந்து நிலையத்தில் திருச்செந்தூரில் இருந்து வந்த பஸ்ஸில் இருந்து இறங்கியுள்ளனர்.

    அவர்களை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து சிறுவர்களிடம் கேட்டபோது தந்தை திட்டிய கோபத்தில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.




    • ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
    • கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி மகாவிஷ்ணு, பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    கூடலூர்

     கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி மகாவிஷ்ணு, பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    கூடலூர் புத்தூர்வயல், பொன்னானி மகா விஷ்ணு கோவில்களில் காலை முதல் அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பல இடங்களில் சிறுவர் சிறுமிகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு ஊர்வலமாக சென்றனர்.

    கூடலூர் எம்.ஜி.ஆர். நகரில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ஏராளமான சிறுவர்கள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர். ராதை வேடம் ஊர்வலம் நர்த்தகி பகுதியில் இருந்து தொடங்கி முக்கிய சாலை வழியாக சக்தி முனிஸ்வரர் கோவிலை வந்தடைந்தது. அப்போது பக்தி கோஷமிட்டவாறு ஏராளமான பக்தர்களும் சென்றனர்.


    தொடர்ந்து நம்பாலகோட்டை கிரிவலம் குழு தலைவர் நடராஜ், பிரம்ம குமாரிகள் இயக்க நிர்வாகி ரேணுகா உள்பட பலர் பேசினர். விழாவில் விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் ஆனந்தன், குமார், கிருஷ்ணதாஸ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் கூடலூர் தொரப்பள்ளி ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து குனில் பாலத்தில் இருந்து ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். கூடலூர் அருகே பாடந்தொரையிலும் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஊர்வலம் நடைபெற்றது. இதேபோல் ஊட்டி, பந்தலூர், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மேலும் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தன.

    • போதை பழக்கம் உள்ளவர்கள் நிம்மதி இழந்து காணப்படுவார்கள்.
    • குழந்தைகளின் நடவடிக்கையை அன்றாடம் கண்காணிக்கவேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக இன்று கல்லூரி வளாகத்தில் போதை இல்லா தமிழகம் என்ற திட்டத்தின் கீழ் போதை பொருட்கள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் துரைராஜ் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், போதை பொருட்களை பயன்படுத்தும் போது எண்ணற்ற விளைவுகள் நேரிடும். குடும்பம் சிதைந்து விடும். போதை பழக்கம் உள்ளவர்கள் நிம்மதி இழந்து காணப்படுவார்கள். அதை உட்கொள்வதால் துக்கம் போய் விடும் என்று தவறான கருத்துகள் நிலவுகிறது. உயிரை அழிக்கும் நோய்களும் உருவாகிறது. மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசவேண்டும். அவர்களின் நடவடிக்கையை அன்றாடம் கண்காணிக்கவேண்டும்.போதை பழக்கம் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும். வீடு வீடாக சென்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி போதை இல்லா தமிழகமாக மாற்ற வேண்டும் என்று சிறப்புரையாற்றினார்.

    பிறகு மாணவ செயலர்கள் சுந்தரம், அருள்குமார், பூபதிராஜா, அரவிந்தன் ஆகியோர் தலைமையில் அலகு - 2 மாணவர்கள் "எக்காரணத்தைக் கொண்டும் போதையில் ஈடுபடமாட்டேன், போதையெனும் சாக்கடையில் விழமாட்டேன், நான் என் குடும்பத்தினரையும், நண்பர்களையும் ஒருபோதும் போதையில் ஈடுபட விடமாட்டேன், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை கண்டறிந்து தக்க ஆலோசனைகளை வழங்குவேன் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். மேலும் அனைவருக்கும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்கள். ஏராளமான மாணவ மாணவிகள், பெற்றோர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் விழிப்புணர்வில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • மோட்டார் சைக்கிளை தடாகம் ரோடு பாரதி நகரில் நிறுத்தி விட்டு நண்பரை பார்க்க சென்றார்.
    • சிறுவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    கோவை 

    கோவை சாமிஅய்யர் புதுவீதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் பிஷ்ணு பிரசாத் (வயது 25). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை தடாகம் ரோடு பாரதி நகரில் நிறுத்தி விட்டு நண்பரை பார்க்க சென்றார்.


    திரும்பி வந்த பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து விஷ்ணு பிரசாத் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய 18, 17 வயதுடைய 2 சிறுவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். 

    • குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு வருவதாக கூறி ஸ்டோனா மாயமானார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் விசாரித்து காணாமல் போனவர்களை தேடி வருகிறார்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் எடிசன் (வயது 58). இவரது மகள் ஸ்டோனா (26). இவரது கணவர் வெளிநாட்டில் கப்பலில் வேலை செய்து வருகிறார்.இதனால் தந்தை வீட்டிலேயே ஸ்டோனா வசித்து வருகிறார். இவர்களுக்கு 6, 5 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று காலை குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு வருவதாக கூறி ஸ்டோனா மாயமானார். எனவே தனது மகளையும், 2 குழந்தைகளையும் கண்டுபிடித்து தருமாறு எடிசன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இவ் வழக்கை பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் விசாரித்து காணாமல் போனவர்களை தேடி வருகிறார்.

    • புதுவை மிஷன் வீதி, நேரு வீதி சந்திப்பில் உள்ள பிளாட் பாரத்தில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை இரும்பு தடுப்பில் கயிற்றால் கட்டிப்போடப்பட்டு இருந்தது.
    • பெற்ற பிள்ளையை கடை முன்பு கயிற்றில் தாய் கட்டிப்போட்டு சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    புதுவை மிஷன் வீதி, நேரு வீதி சந்திப்பில் உள்ள பிளாட் பாரத்தில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை இரும்பு தடுப்பில் கயிற்றால் கட்டிப்போடப்பட்டு இருந்தது. அதன் அருகில் 3 வயது மதிக்கத்தக்க மற்றொரு ஆண் குழந்தை உட்கார்ந்து கொண்டிருந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்பகுதியில் ஒரு பெண் தனது குழந்தைகளுடன் பிளாட்பாரத்தில் வசித்து வருவதும், அவர் தனது குழந்தையை கட்டிப்போட்டு வெளியே சென்றிருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தையை கயிற்றில் கட்டுப்போட்டு சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ஊட்டியில் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். #PolioDropsCamp
    ஊட்டி:

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமுக்காக 770 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. சிறப்பு வாகனங்கள் போலியோ சொட்டு மருந்து வழங்க பயன்படுத்தப்படுகிறது.

    பஸ் நிலையம், ரெயில் நிலையம், மார்க்கெட், சோதனைச்சாவடிகள், 29 கோவில்கள், 52 கிறிஸ்தவ ஆலயங்கள், 6 மசூதிகள் மற்றும் அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களிலும் போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. நகர்புற பகுதிகளில் 135 போலியோ சொட்டு மருந்து முகாம்களும், கிராம பகுதியில் 635 போலியோ சொட்டு மருந்து முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளன. மாவட்ட அளவில் 42,558 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ நோயினை அறவே ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி மற்றும் பலர் கலந்து கொண்டனர். #PolioDropsCamp
    சென்னை குன்றத்தூரில் தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தப்பி ஓடிய பெண்ணை நாகர்கோவிலில் இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருபவர் விஜய் (வயது 30). இவர், சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வீடுகள் வாங்க, கடன் வாங்கி கொடுக்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார்.

    இவருடைய மனைவி அபிராமி (25). இவர்களுக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர்.  கணவன்-மனைவி இருவரும் பட்டப்படிப்பு படித்து உள்ளனர்.

    மாத கடைசி என்பதால் நேற்று முன்தினம் விஜய், நிலுவையில் உள்ள ஆவணங்களை முடிக்க மதியம் வங்கிக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவருடைய மனைவியும், குழந்தைகளும் மட்டும் இருந்தனர்.

    வேலை அதிகம் இருந்ததால் விஜய், நேற்று முன்தினம் இரவு வங்கியில் தங்கி விட்டார். நேற்று அதிகாலையில் அவர், தனது வீட்டுக்கு வந்தார். வீட்டின் வெளியே அபிராமியின் மொபட் இல்லை. எனவே அருகில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று இருக்கலாம் என்று கருதிய விஜய், தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.

    ஆனால் அபிராமி அங்கு வரவில்லை என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த விஜய், தனது மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் பதறிப்போன விஜய், மீண்டும் தனது வீட்டுக்கு சென்று பார்த்தார். வீட்டின் கதவு சாத்தப்பட்டு, வெளிப்புறமாக தாழ்ப்பாள் மட்டும் போடப்பட்டு இருந்தது. விஜய், கதவை திறந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

    அங்கு தனது 2 குழந்தைகளும், வாயில் நுரை தள்ளிய நிலையில் கட்டிலில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தைகளின் உடலை பார்த்து விஜய் கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    தனது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, போலீசுக்கு பயந்து அபிராமி தப்பிச்சென்று விட்டது தெரிந்தது. இதுபற்றி குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையில் நேற்று காலை விஜய் மற்றும் அபிராமியின் உறவினர்களின் செல்போன்களுக்கு அபிராமியிடம் இருந்து ஒரு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்தது. அதில் அவர், “எனது குழந்தைகளே சென்று விட்டபிறகு, இனி நான் இருந்தால் என்ன?, செத்தால் என்ன?” என குறிப்பிட்டு இருந்தார்.

    அதை பார்த்த விஜய், “ஏன் இப்படி செய்தாய்? எனக்கேட்டு மீண்டும் மனைவியின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பினார். ஆனால் அவரிடம் இருந்து அதற்கு பதில் வரவில்லை. இதனால் அவரது செல்போனுக்கு விஜய், தொடர்பு கொண்ட போது மீண்டும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

    அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் விசாரித்தபோது, கடைசியாக கோயம்பேடு பஸ் நிலையத்தை காட்டியது. எனவே அபிராமி, தனது வீட்டில் இருந்து மொபட்டில் கோயம்பேடு சென்று அங்கிருந்து பஸ்சில் வெளியூர் தப்பிச்சென்று இருக்கலாம் என தெரிய வந்தது.

    குழந்தைகளை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அபிராமியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் நாகர்கோவில், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு விரைந்தனர்.

    இந்த நிலையில், பாலில் விஷம் கலந்து கொடுத்து தனது 2 குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி நாகர்கோவிலில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.  அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    ×