search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "childrens"

    • முண்டகம்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் கலெக்டர் கார்மேகம் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • குறித்த நேரத்தில் சமைத்து வழங்கிய சமையலர் சோனியாவிற்கு பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    சேலம்:

    ஏற்காட்டில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் குறித்து முண்டகம்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் கலெக்டர் கார்மேகம் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இப்பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவினை தரமாகவும், சுவையாகவும், குறித்த நேரத்தில் சமைத்து வழங்கிய சமையலர் சோனியாவிற்கு பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    மேலும், காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் நாள்தோறும் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு, திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • நெல்லை மேலப்பாளை யத்தை அடுத்த சிவராஜபுரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் நேற்று தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.
    • இது குறித்து சிறுவர்களிடம் கேட்டபோது தந்தை திட்டிய கோபத்தில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளை யத்தை அடுத்த சிவராஜபுரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் நேற்று தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் சரியாக பள்ளிக்கு செல்வதில்லை என்று கூறி அவரது தந்தை திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் கோபமடைந்த அந்த சிறுவன் வீட்டில் இருந்த பணத்தில் ரூ. 500-ஐ எடுத்துக் கொண்டு தனது வீட்டின் எதிரே வசிக்கும் ஒருவரது 9 வயது மகனை அழைத்துக் கொண்டு சென்று விட்டான். இரவு வெகு நேரம் ஆகியும் அவர்கள் 2 பேரும் வீட்டுக்கு வரவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த 2 சிறுவர்களின் பெற்றோரும் மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் 2 பேரையும் தேடி வந்த நிலையில் சிறுவர்கள் நள்ளிரவு நேரத்தில் புதிய பேருந்து நிலையத்தில் திருச்செந்தூரில் இருந்து வந்த பஸ்ஸில் இருந்து இறங்கியுள்ளனர்.

    அவர்களை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து சிறுவர்களிடம் கேட்டபோது தந்தை திட்டிய கோபத்தில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.




    • ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
    • கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி மகாவிஷ்ணு, பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    கூடலூர்

     கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி மகாவிஷ்ணு, பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    கூடலூர் புத்தூர்வயல், பொன்னானி மகா விஷ்ணு கோவில்களில் காலை முதல் அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பல இடங்களில் சிறுவர் சிறுமிகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு ஊர்வலமாக சென்றனர்.

    கூடலூர் எம்.ஜி.ஆர். நகரில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ஏராளமான சிறுவர்கள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர். ராதை வேடம் ஊர்வலம் நர்த்தகி பகுதியில் இருந்து தொடங்கி முக்கிய சாலை வழியாக சக்தி முனிஸ்வரர் கோவிலை வந்தடைந்தது. அப்போது பக்தி கோஷமிட்டவாறு ஏராளமான பக்தர்களும் சென்றனர்.


    தொடர்ந்து நம்பாலகோட்டை கிரிவலம் குழு தலைவர் நடராஜ், பிரம்ம குமாரிகள் இயக்க நிர்வாகி ரேணுகா உள்பட பலர் பேசினர். விழாவில் விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் ஆனந்தன், குமார், கிருஷ்ணதாஸ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் கூடலூர் தொரப்பள்ளி ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து குனில் பாலத்தில் இருந்து ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். கூடலூர் அருகே பாடந்தொரையிலும் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஊர்வலம் நடைபெற்றது. இதேபோல் ஊட்டி, பந்தலூர், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மேலும் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தன.

    • போதை பழக்கம் உள்ளவர்கள் நிம்மதி இழந்து காணப்படுவார்கள்.
    • குழந்தைகளின் நடவடிக்கையை அன்றாடம் கண்காணிக்கவேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக இன்று கல்லூரி வளாகத்தில் போதை இல்லா தமிழகம் என்ற திட்டத்தின் கீழ் போதை பொருட்கள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் துரைராஜ் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், போதை பொருட்களை பயன்படுத்தும் போது எண்ணற்ற விளைவுகள் நேரிடும். குடும்பம் சிதைந்து விடும். போதை பழக்கம் உள்ளவர்கள் நிம்மதி இழந்து காணப்படுவார்கள். அதை உட்கொள்வதால் துக்கம் போய் விடும் என்று தவறான கருத்துகள் நிலவுகிறது. உயிரை அழிக்கும் நோய்களும் உருவாகிறது. மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசவேண்டும். அவர்களின் நடவடிக்கையை அன்றாடம் கண்காணிக்கவேண்டும்.போதை பழக்கம் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும். வீடு வீடாக சென்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி போதை இல்லா தமிழகமாக மாற்ற வேண்டும் என்று சிறப்புரையாற்றினார்.

    பிறகு மாணவ செயலர்கள் சுந்தரம், அருள்குமார், பூபதிராஜா, அரவிந்தன் ஆகியோர் தலைமையில் அலகு - 2 மாணவர்கள் "எக்காரணத்தைக் கொண்டும் போதையில் ஈடுபடமாட்டேன், போதையெனும் சாக்கடையில் விழமாட்டேன், நான் என் குடும்பத்தினரையும், நண்பர்களையும் ஒருபோதும் போதையில் ஈடுபட விடமாட்டேன், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை கண்டறிந்து தக்க ஆலோசனைகளை வழங்குவேன் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். மேலும் அனைவருக்கும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்கள். ஏராளமான மாணவ மாணவிகள், பெற்றோர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் விழிப்புணர்வில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • மோட்டார் சைக்கிளை தடாகம் ரோடு பாரதி நகரில் நிறுத்தி விட்டு நண்பரை பார்க்க சென்றார்.
    • சிறுவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    கோவை 

    கோவை சாமிஅய்யர் புதுவீதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் பிஷ்ணு பிரசாத் (வயது 25). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை தடாகம் ரோடு பாரதி நகரில் நிறுத்தி விட்டு நண்பரை பார்க்க சென்றார்.


    திரும்பி வந்த பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து விஷ்ணு பிரசாத் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய 18, 17 வயதுடைய 2 சிறுவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். 

    • குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு வருவதாக கூறி ஸ்டோனா மாயமானார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் விசாரித்து காணாமல் போனவர்களை தேடி வருகிறார்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் எடிசன் (வயது 58). இவரது மகள் ஸ்டோனா (26). இவரது கணவர் வெளிநாட்டில் கப்பலில் வேலை செய்து வருகிறார்.இதனால் தந்தை வீட்டிலேயே ஸ்டோனா வசித்து வருகிறார். இவர்களுக்கு 6, 5 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று காலை குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு வருவதாக கூறி ஸ்டோனா மாயமானார். எனவே தனது மகளையும், 2 குழந்தைகளையும் கண்டுபிடித்து தருமாறு எடிசன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இவ் வழக்கை பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் விசாரித்து காணாமல் போனவர்களை தேடி வருகிறார்.

    • புதுவை மிஷன் வீதி, நேரு வீதி சந்திப்பில் உள்ள பிளாட் பாரத்தில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை இரும்பு தடுப்பில் கயிற்றால் கட்டிப்போடப்பட்டு இருந்தது.
    • பெற்ற பிள்ளையை கடை முன்பு கயிற்றில் தாய் கட்டிப்போட்டு சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    புதுவை மிஷன் வீதி, நேரு வீதி சந்திப்பில் உள்ள பிளாட் பாரத்தில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை இரும்பு தடுப்பில் கயிற்றால் கட்டிப்போடப்பட்டு இருந்தது. அதன் அருகில் 3 வயது மதிக்கத்தக்க மற்றொரு ஆண் குழந்தை உட்கார்ந்து கொண்டிருந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்பகுதியில் ஒரு பெண் தனது குழந்தைகளுடன் பிளாட்பாரத்தில் வசித்து வருவதும், அவர் தனது குழந்தையை கட்டிப்போட்டு வெளியே சென்றிருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தையை கயிற்றில் கட்டுப்போட்டு சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ஊட்டியில் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். #PolioDropsCamp
    ஊட்டி:

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமுக்காக 770 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. சிறப்பு வாகனங்கள் போலியோ சொட்டு மருந்து வழங்க பயன்படுத்தப்படுகிறது.

    பஸ் நிலையம், ரெயில் நிலையம், மார்க்கெட், சோதனைச்சாவடிகள், 29 கோவில்கள், 52 கிறிஸ்தவ ஆலயங்கள், 6 மசூதிகள் மற்றும் அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களிலும் போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. நகர்புற பகுதிகளில் 135 போலியோ சொட்டு மருந்து முகாம்களும், கிராம பகுதியில் 635 போலியோ சொட்டு மருந்து முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளன. மாவட்ட அளவில் 42,558 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ நோயினை அறவே ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி மற்றும் பலர் கலந்து கொண்டனர். #PolioDropsCamp
    சென்னை குன்றத்தூரில் தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தப்பி ஓடிய பெண்ணை நாகர்கோவிலில் இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருபவர் விஜய் (வயது 30). இவர், சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வீடுகள் வாங்க, கடன் வாங்கி கொடுக்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார்.

    இவருடைய மனைவி அபிராமி (25). இவர்களுக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர்.  கணவன்-மனைவி இருவரும் பட்டப்படிப்பு படித்து உள்ளனர்.

    மாத கடைசி என்பதால் நேற்று முன்தினம் விஜய், நிலுவையில் உள்ள ஆவணங்களை முடிக்க மதியம் வங்கிக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவருடைய மனைவியும், குழந்தைகளும் மட்டும் இருந்தனர்.

    வேலை அதிகம் இருந்ததால் விஜய், நேற்று முன்தினம் இரவு வங்கியில் தங்கி விட்டார். நேற்று அதிகாலையில் அவர், தனது வீட்டுக்கு வந்தார். வீட்டின் வெளியே அபிராமியின் மொபட் இல்லை. எனவே அருகில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று இருக்கலாம் என்று கருதிய விஜய், தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.

    ஆனால் அபிராமி அங்கு வரவில்லை என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த விஜய், தனது மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் பதறிப்போன விஜய், மீண்டும் தனது வீட்டுக்கு சென்று பார்த்தார். வீட்டின் கதவு சாத்தப்பட்டு, வெளிப்புறமாக தாழ்ப்பாள் மட்டும் போடப்பட்டு இருந்தது. விஜய், கதவை திறந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

    அங்கு தனது 2 குழந்தைகளும், வாயில் நுரை தள்ளிய நிலையில் கட்டிலில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தைகளின் உடலை பார்த்து விஜய் கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    தனது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, போலீசுக்கு பயந்து அபிராமி தப்பிச்சென்று விட்டது தெரிந்தது. இதுபற்றி குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையில் நேற்று காலை விஜய் மற்றும் அபிராமியின் உறவினர்களின் செல்போன்களுக்கு அபிராமியிடம் இருந்து ஒரு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்தது. அதில் அவர், “எனது குழந்தைகளே சென்று விட்டபிறகு, இனி நான் இருந்தால் என்ன?, செத்தால் என்ன?” என குறிப்பிட்டு இருந்தார்.

    அதை பார்த்த விஜய், “ஏன் இப்படி செய்தாய்? எனக்கேட்டு மீண்டும் மனைவியின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பினார். ஆனால் அவரிடம் இருந்து அதற்கு பதில் வரவில்லை. இதனால் அவரது செல்போனுக்கு விஜய், தொடர்பு கொண்ட போது மீண்டும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

    அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் விசாரித்தபோது, கடைசியாக கோயம்பேடு பஸ் நிலையத்தை காட்டியது. எனவே அபிராமி, தனது வீட்டில் இருந்து மொபட்டில் கோயம்பேடு சென்று அங்கிருந்து பஸ்சில் வெளியூர் தப்பிச்சென்று இருக்கலாம் என தெரிய வந்தது.

    குழந்தைகளை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அபிராமியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் நாகர்கோவில், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு விரைந்தனர்.

    இந்த நிலையில், பாலில் விஷம் கலந்து கொடுத்து தனது 2 குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி நாகர்கோவிலில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.  அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    தூத்துக்குடி மாவட்டத்தில் 22,862 பெண்களுக்கு 16 வகையான தரமான பொருட்கள் உள்ளடங்கிய அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி:

    மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏழை மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அவரது வழியில் தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜெயலலிதா தொடங்கிவைத்த அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம் எல்லோராலும் பாராட்டு பெற்றுள்ளது.

    இந்த திட்டத்தில், குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்கு தேவையான பராமரிப்புத் துண்டு, குழந்தைக்கான உடை, படுக்கை, கொசு வலை, நாப்கின், 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட எண்ணெய் டப்பா, பிளாஸ்டிக் குப்பியில் 60 மில்லி லிட்டர் ஷாம்பு, சோப்புடன் கூடிய சோப்புப் பெட்டி, நகவெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, சுத்தமான கைகளுடன் குழந்தையை பராமரிக்க பிளாஸ்டிக் டப்பாவில் 250 மில்லி லிட்டர் அளவு கை கழுவும் திரவம்,

    பிரசவித்த தாய்க்கு 100 கிராம் எடையுள்ள சோப்பு, பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தாய்ப்பாலை அதிகரிக்கவும் சவுபாக்கியா சுண்டிலேகியம், தாய் மற்றும் பச்சிளம் குழந்தையை பராமரிக்க தேவையான பொருட்களை வைத்துக் கொள்ள ஒரு பெட்டகம் உட்பட 16 வகையான பொருட்கள் உள்ளன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் சுகாதாரத்துறையின் மூலம், தூத்துக்குடி வட்டத்தில் உள்ள 28 அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையங்களில் 2108 பெண்களுக்கும், 7 நகர் புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 91 பெண்களுக்கும், 5 அரசு மருத்துவமனையில் 7214 பெண்களுக்கும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 6739 பெண்களுக்கும்,

    கோவில்பட்டி வட்டத்தில் உள்ள 22 அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையங்களில் 1598 பெண்களுக்கும், 2 நகர் புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8 பெண்களுக்கும், 4 அரசு மருத்துவமனையில் 5104 பெண்களுக்கும், என மொத்தம் 22,862 பெண்களுக்கு 16 வகையான தரமான பொருட்கள் உள்ளடங்கிய அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் பயன்பெற்ற அத்திமரப்பட்டி வடக்குத்தெருவை சேர்ந்த நாகதுரை மனைவி முத்துக்கனி கூறுகையில், "அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகத்தின் மூலம் எங்கள் சுமை எங்களுக்கு குறைந்துள்ளது. இதில் உள்ள அனைத்து பொருட்களும் தரமானதாக உள்ளது" என்றார்.

    மேலதட்டப்பாறை யாதவர்தெருவை சேர்ந்த கந்தவடிவேல் மனைவி மாரியம்மாள் கூறுகையில், "இப்பொருட்களை நாங்கள் வெளியே வாங்க வேண்டுமென்றால் அதிகமாக செலவாகும். மகப்பேறு சிகிச்சையும் இலவசமாக அளித்து குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தையையும் கவனிப்பதற்கு இலவசமாக பொருட்கள் வழங்கிய அம்மா அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்” என்றார்.
    பீகாரின் முசாபர்பூர் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.#MuzaffarpurShelterHome
    புதுடெல்லி:

    பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரித்து வருகிறது.

    சிறுமிகள் சீரழிக்கப்பட்ட பாதுகாப்பு இல்லத்திற்கு மாநில சமூக நலத்துறை மந்திரி குமாரி மஞ்சு வர்மாவின் கணவர் சந்தேஷ்வர் வர்மா அடிக்கடி சென்று வந்ததாகவும், அதனால் பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தேஷ்வர் வர்மாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. 

    இதனை அடுத்து, குமாரி மஞ்சு வர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், காப்பகத்தில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று நீதிபதிகள் மதன் பி லோகுர், அப்துல் நசீர், தீபக் குப்தா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, நாடு முழுவதும் 286 சிறுவர்கள் உள்பட 1575 சிறார்கள் உடல் ரீதியான, பாலியல் ரீதியிலான துன்புறுத்தலை சந்தித்துள்ளதாக மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்திருந்தது. 

    இதனை அடுத்து, ‘1575 சிறார்கள் துன்புறுத்தலை சந்தித்துள்ளனர். அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இதுபோன்ற காப்பகங்களை இன்னும் ஏன் வைத்துள்ளீர்கள்?’ என நீதிபதிகள் அரசு வழக்கறிஞரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். 
    மேலும், குழந்தைகள் பாதுகாப்பு கொள்கையை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். 
    ×