search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "survivors disappointed"

    குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல், பழங்காலத்தில் அதீத மதநம்பிக்கை கொண்டவர்கள் மனிதர்களை பலி கொடுத்ததை எனக்கு நினைவூட்டுகிறது என போப் ஆண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். #PopFrancis
    வாடிகன் சிட்டி:

    குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சர்வதேச மாநாடு வாடிகனில், போப் ஆண்டவர் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது. 4 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களை சேர்ந்த பேராயர்கள் மற்றும் பாதிரியார்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய போப் ஆண்டவர் பிரான்சிஸ், குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

    குழந்தைகளை பாலியல் ரீதியில் துன்புறுத்துபவர்கள் சாத்தானின் கருவிகள் ஆவர். தற்போது நடைபெற்று வரும் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் சம்பவங்கள், பழங்காலத்தில் அதீத மதநம்பிக்கை கொண்டவர்கள் மனிதர்களை பலி கொடுத்ததை எனக்கு நினைவூட்டுகிறது. இது மிகவும் வேதனை தரக்கூடியது.

    பாலியல் துன்புறுத்தல் தொடர்பான ஒவ்வொரு வழக்கும் மிக தீவிரமாக விசாரிக்கப்படும். பேராயர்கள் தங்கள் தேவாலயங்களில் உள்ள பல்வேறு விதிமுறைகளை ஆய்வு செய்வதுடன், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல்களை தடுக்கும் வலுவான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×