என் மலர்
நீங்கள் தேடியது "vehicle Traffic jam"
தஞ்சாவூர்:
தஞ்சை காந்திஜி சாலையில் வணிக நிறுவனங்கள், மருந்து கடைகள், மருத்துவமனைகள், ஜவுளி கடைகள், ஓட்டல் போன்ற 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
காந்திஜி சாலையில் உள்ள கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் தங்களது வாகனங்களை அப்படியே ரோட்டில் விட்டு விட்டு செல்கின்றனர். இதனால் காலை, மாலை ஆகிய இரு வேளைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அனைத்து வாகனங்களும் ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறது. பணியில் உள்ளனர். இந்த நிலையில் கடைக்கு வருபவர்கள் வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதன் காரணமாக தஞ்சை பழைய பேருந்து நிலையம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒரு சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்படுகிறது. அவசரமாக செல்லும் ஆம்புலன்ஸ் கூட இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
காந்திஜி சாலையில் இருபுறமும் நிறுத்தப்படும் வாகனங்களை போலீசார் அப்புறப் படுத்தி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி. புறநகர் பகுதி மற்றும் வேடசந்தூர், வத்தலக்குண்டு, அய்யலூர், வடமதுரை, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர். மேலும் அவரது உறவினர்கள் என எப்போதுமே ஆஸ்பத்திரி வளாகம் பரபரப்பாக காணப்படும்.
திருச்சி சாலை, சத்திரம் தெரு ஆகிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போலீசார் இப்பகுதியில் ஒருவழிச்சாலை அமல்படுத்தி போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர்.
ஆனால் சில தனியார் பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் விதிகளை மீறி நிறுத்திச்செல்வதால் போக்குவரத்து நெரிசலால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாலையின் நடுவிலேயே வாகனங்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் மற்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பஸ்கள் நிறுத்தக்கூடாது என போக்குவரத்து போலீசார் அறிவிப்பு பலகை வைத்துள்ள இடத்தில் தனியார் பஸ்கள் பலமணி நேரம் காத்திருந்து பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் ஆஸ்பத்திரி முன்பு வாகன நெரிசல் ஏற்படுகிறது.
ஆம்புலன்ஸ் கூட செல்லமுடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே விதிமீறி நிறுத்தப்படும் பஸ்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.