search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "separate ward"

    • பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது
    • முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை யினை பார்வையிட்டார்.

    கள்ளக்குறிச்சி, செப்.16-

    கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மரு த்துவமனையில், மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் அவர் கூறிய தாவது:- தமிழகத்தில் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மூலமாக மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக தனி வார்டுகளை அமைத்தி ட டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

    கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்ட ரிடம் கேட்டறிந்தார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைப்பெற்று வரும் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை யினை பார்வையிட்டார். பின்னர், மாணவ ர்களுக்கு சேர்க்கைக்கான ஆணைகளை மாண வர்களுக்கு வழங்கினர். இந்த ஆய்வின்போது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் உஷா, மருத்துவ கண்காணிப்பாளர் நேரு, இணை பேராசிரியர் பொற்செல்வி, சமீம் பேராசிரியர் தீபா மற்றும் அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. #Swineflu
    திண்டுக்கல்:

    பருவமழை தொடங்க உள்ள சூழ்நிலையில் தற்போது ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக டெங்கு, மலேரியா, பன்றிகாய்ச்சல் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    இதனால் உயிரிழப்புகளும் தொடர்ந்துகொண்டே உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இது குறித்து நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மாலதிபிரகாஷ் தெரிவிக்கையில், திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தற்போது வழக்கத்தை விட கூடுதலாக காய்ச்சல், சளி, இருமல் தாக்கத்தால் நோயாளிகள் வருகின்றனர். அவர்களுக்கு போதிய மருத்துவ உதவிகள் செய்து வருகிறோம்.

    டெங்கு பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பன்றி காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என்ற சோதனை நடத்த திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் வசதி இல்லை.

    மதுரை அல்லது கோவை அரசு ஆஸ்பத்திரிக்குதான் செல்ல வேண்டும். தனியார் ஆஸ்பத்திரிகளில் ரூ.3500 செலவில் இதற்கான சோதனை நடத்தப்படுகிறது. பன்றி காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அவர்களுக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படும். அதற்கான மருந்து மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நோய் தொற்று உள்ளவர்கள் மூலம் மற்றவர்களுக்கு இது பரவும் என்பதால் குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் உடனடியாக ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோரை விரைவில் தாக்கும். வெளியூர்களுக்கு செல்வது, சுகாதாரமற்ற குடிநீரை குடிப்பதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினர். #Swineflu

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நிபா வைரஸ் காய்ச்சலுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. #nipahvirus
    கோவை:

    கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் காய்ச்சலுக்கு 10 பேர் பலியாகி உள்ளனர். காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்த மாவட்டங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் நிபா வைரஸ் காய்ச்சல் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நிபா வைரஸ் காய்ச்சலுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.



    இது குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அசோகன் கூறியதாவது:-

    நிபா வைரஸ் காய்ச்சல் என்பது நிபா வைரசால் பாதிக்கப்பட்ட பழந்தின்னி வவ்வால் மற்றும் பன்றிகள் மூலம் மனிதனுக்கு பரவுகிறது. இந்த காய்ச்சல் 1998-ம் ஆண்டு மலேசிய நாட்டில் உள்ள நிபா என்ற பகுதியில் இருந்து பரவியதால் நிபா என்று அழைக்கப்படுகிறது.

    நிபா வைரசால் பாதிக்கப்பட்ட பழந்தின்னி வவ்வாலின் எச்சம், சீறுநீர் மூலமும் பன்றிகள் மூலமும் மனிதனுக்கு பரவுகிறது. டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை போல இந்த காய்ச்சல் வேகமாக பரவாது.

    நிபா வைரசால் பாதிக்கப்பட்ட வவ்வாலின் எச்சம், சீறுநீர் மனிதனின் உடலில் படும்போது இது பரவுவது இல்லை. மாறாக வவ்வாலின் எச்சம் மற்றும் சீறுநீர் உணவு பொருள் மற்றும் தண்ணீர் மீது படும்போது அதனை மனிதன் தெரியாமல் சாப்பிடுவதால் பரவுகிறது. எனவே பொது மக்கள் தேவையில்லாமல் பீதியடைய வேண்டாம்.

    நிபா வைரசுக்கு இதுவரை மருந்துகள் கண்டு பிடிக்கப்படவில்லை. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் அளவுக்கு அதிகமான வெப்பம், மற்றும் கடுமையான தலைவலி ஏற்படும். பின்னர் ரத்த அழுத்தம் அதிகமாகி மூளையை பாதித்து மரணம் ஏற்படும்.

    இவ்வாறான அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும். நிபா வைரசுக்கு மருந்து இல்லாததால் ஆரம்ப கால கட்டத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் போது டாக்டர்கள் காய்ச்சலை கட்டுபடுத்த மருந்து கொடுப்பார்கள். இதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக குணம்பெறலாம்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு அமைக்கப்பட்டுள்ளதை போல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிபா வைரஸ் காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் நோயாளிகளை கண்காணிக்க டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எனவே நிபா வைரஸ் பாதிப்பு உள்ளவர் சிகிச்சை பெற்று குணம்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #nipahvirus


    ×