search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "father suicide"

    • தாரமங்கலம் அருகே உள்ள தொளசம்பட்டி பிரிவு ரோடு கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்தவர் செல்வபெருமாள் (47).
    • மகனை விட்டுவிட்டு தீபாவளி கொண்டாட முடியாத மனவேதனையில் இருந்த செல்வபெருமாள் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள தொளசம்பட்டி பிரிவு ரோடு கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்தவர் செல்வபெருமாள் (47).

    தாயுடன் சண்டை

    கூலி தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் மூர்த்தி (25) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது தாய் கோவிந்தம்மாளிடம் சண்டை போட்டுக்கொண்டு தாரமங்கலத்தில் உள்ள ஒரு பூக்கடையில் தங்கி வேலை செய்து வருகிறார்.

    கடந்த 3 மாதமாக மூர்த்தி வீட்டிற்கு வராததால் தந்தை செல்வபெருமாள் தீபாவளியன்று வீட்டில் கறி குழம்பு சமைத்து வைத்துவிட்டு மகனை சாப்பிடுவதற்காக அழைக்க சென்றுள்ளார்.

    அப்போது பூக்கடையில் இருந்த மூர்த்தி தனது தந்தையிடம் கோபமாக பேசி வீட்டிற்கு வர முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

    தற்கொலை

    இதனால் மகனை விட்டுவிட்டு தீபாவளி கொண்டாட முடியாத மனவேதனையில் இருந்த செல்வபெருமாள் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த செல்வபெருமாள் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

    இது பற்றி செல்வபெருமானின் மனைவி கோவிந்தம்மாள் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகனை விட்டுவிட்டு பண்டிகை கொண்டாட முடியாமல் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தாரமங்கலம் அருகே உள்ள தொளசம்பட்டி பிரிவு ரோடு கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்தவர் செல்வபெருமாள் (47).

    • 3 மகள்களின் கழுத்தை அறுத்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • ஜோமோனின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜோமோன் (வயது 40). இவரது மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ஜோமோன், தனது மகள்கள் அனன்யா (13), அனாமிகா (10), அமேயா (7) ஆகிய 3 பேரையும் பராமரித்து வந்தார்.

    இந்த நிலையில் நள்ளிரவு ஜோமோன் தனது 3 மகள்களின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயன்றுள்ளார். பின்பு அவர், வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தையால் கழுத்து அறுக்கப்பட்ட சிறுமிகள் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.

    இதனை அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் இன்று காலை பார்த்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 சிறுமிகளையும் மீட்டு கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    ஜோமோனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர், எதற்காக 3 குழந்தைகளையும் கழுத்து அறுத்து கொல்ல முயன்று தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மனைவி பிரிந்து சென்ற விரக்தியில், அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அது தொடர்பாக ஜோமோனின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிகள் 3 பேரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். 3 மகள்களின் கழுத்தை அறுத்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோட்டயத்தை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விருதுநகர் அருகே மகன் இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
    • நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கட்டய தேவன் பட்டியை சேர்ந்தவர் பாண்டி என்ற பெரியபாண்டி. இவரது கடைசி மகன் கடந்த மாதத்தில் திடீரென இறந்து விட்டார். இதனால் அவர் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரத்தில் மரத்திலிருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டதால் வெளியே செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரிய பாண்டி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சையில் இருந்த ராகுல்ராஜ் மற்றும் நம்பெருமாள் ராஜ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
    • ஆனந்தகுமார் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அணைக்கரைக்கப்பட்டி காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் நம்பெருமாள் ராஜ் (வயது 49). இவரது மனைவி நிர்மலா தேவி (45). இவர்களது மகன் ராகுல்ராஜ் (15). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இவரை தாய் நிர்மலா தேவி கவனித்து வந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நோய்வாய்பட்டு இறந்து விட்டார்.

    அப்போது முதல் நம்பெருமாள் ராஜ் தனது மகனை கவனித்து வந்துள்ளார். மேலும் மனைவி இறந்ததால் மகனை சரிவர கவனிக்க முடியாமல் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். தான் இறந்து விட்டால் தனது மகனை யாரும் கவனிக்க மாட்டார்கள் என நினைத்து அவருக்கு விஷம் கொடுத்து தானும் அதே விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சையில் இருந்த ராகுல்ராஜ் மற்றும் நம்பெருமாள் ராஜ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

    இது குறித்து அவரது உறவினர் ஆனந்தகுமார் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதல்கட்ட விசாரணையில் நாகராஜன் தினமும் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்வது வழக்கம் என்றும் நேற்று குடிபோதையில் அவர் வீட்டிற்கு வந்ததும் தெரியவந்தது.
    • மனைவி வீட்டில் இல்லாத ஆத்திரத்தில் குழந்தைகள் மீது தீ வைத்து விட்டு நாகராஜனும் தற்கொலை செய்து இருப்பதாக போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான் கடை பரசேரி ராஜகோபால் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 45), எலக்ட்ரீசியன்.

    இவரது மனைவி அனிதா (35). இவர்களுக்கு சுஷ்மிகா (12), தன்ஷிகா (10) என்ற மகள்கள் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள கடையில் அனிதா வேலை பார்த்து வருகிறார். அவரது மகள்கள் 2 பேரும் பரசேரி அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

    நேற்று மதியம் அனிதா வழக்கம்போல் வேலைக்கு சென்றார். வீட்டில் சுஷ்மிகாவும், தன்ஷிகாவும் இருந்தனர். கடையில் கூடுதலாக வேலை இருந்ததால் அனிதா இரவு வீட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. நாகராஜனும் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.

    இதையடுத்து குழந்தைகள் சாப்பிட்டு விட்டு தூங்கினார்கள். அப்போது நாகராஜன் வீட்டிற்கு வந்தார். குழந்தைகள் இருவரும் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்த அவர், மனைவி வீட்டில் இல்லாததால் ஆத்திரம் அடைந்தார்.

    அப்போது அவர் குடிபோதையில் இருந்ததால் நிதானம் இழந்து காணப்பட்டார். மனைவி மீதான நாகராஜனின் கோபம், குழந்தைகள் மீது திரும்பியது. தான் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் குடிபோதையில் வீட்டின் பீரோவில் இருந்த துணிகளை எடுத்து குழந்தைகள் மீது வீசி உள்ளார்.

    பின்னர் சமையல் அறையில் இருந்த மண்எண்ணையை எடுத்து வந்து தனது உடலில் ஊற்றிக் கொண்டார். தொடர்ந்து குழந்தைகள் மீது வீசிய துணிகள் மீதும் மண்எண்ணையை தெளித்து தீயை வைத்தார். துணிகளின் மீது பரவிய தீ குழந்தைகள் மீதும் பிடித்தது. மேலும் நாகராஜனும் தீயில் சிக்கினார்.

    இதற்கிடையில் தீயின் வெப்பம் தாங்காமல் குழந்தைகள் சுஷ்மிகா, தன்ஷிகா இருவரும் கூச்சலிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ஓடி வந்தனர். ஆனால் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    அங்கு வீட்டின் அறையில் தீ எரிவதையும் நாகராஜன் கருகிய நிலையில் பிணமாக கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் குழந்தைகள் இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து, அவர்களை மீட்டனர். இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து குழந்தைகளை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். நாகராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைகளுக்கு தீ வைத்து விட்டு நாகராஜன் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    முதல்கட்ட விசாரணையில் நாகராஜன் தினமும் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்வது வழக்கம் என்றும் நேற்று குடிபோதையில் அவர் வீட்டிற்கு வந்ததும் தெரியவந்தது. அப்போது மனைவி வீட்டில் இல்லாத ஆத்திரத்தில் குழந்தைகள் மீது தீ வைத்து விட்டு அவரும் தற்கொலை செய்து இருப்பதாக போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.

    இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 குழந்தைகளுக்கு தீ வைத்துவிட்டு எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நரசிம்ம ரெட்டிக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதால் குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
    • நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டு விட்டு அறைகளில் தூங்கிக் கொண்டு இருந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஒய்.எஸ்.ஆர் மாவட்டம் புரட்டுத்துரு மண்டலம், நக்கலடின்னா பகுதியை சேர்ந்தவர் நரசிம்ம ரெட்டி (வயது 47). இவரது மனைவி துளசியம்மா.

    தம்பதிக்கு அபிதேஜா ரெட்டி (15) என்ற மகனும், பவானி (14) என்ற மகளும் உள்ளனர். அங்குள்ள பள்ளியில் அபி தேஜா 10-ம் வகுப்பும், பவானி 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    நரசிம்ம ரெட்டிக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதால் குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டு விட்டு அறைகளில் தூங்கிக் கொண்டு இருந்தனர். அதிகாலை அபி தேஜா பவானி தூங்கிக் கொண்டிருந்த அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது.

    அவர்களின் அலறல் சத்தம் கேட்ட தாய் துளசியம்மா அறை கதவை தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது மகனும் மகளும் கோடாரியால் தலையில் வெட்டப்பட்டு படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவர்களது அருகில் நரசிம்ம ரெட்டி மயங்கிய நிலையில் கிடந்தார்.

    3 பேரையும் மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். நரசிம்ம ரெட்டியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பவானி கடப்பா ரிம்ஸ் ஆஸ்பத்திரிக்கும், அபி தேஜா ஐதராபாத் அரசு ஆஸ்பத்திரிக்கும் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மனநலம் பாதிக்கப்பட்டதால் நரசிம்மா ரெட்டி, பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக கதவை தாழிட்டு கொண்டு கோடாரியில் தலையில் தாக்கி விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

    மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள கன்னிகாளிபுரத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது42). முன்னாள் ராணுவ வீரர். தற்போது கேரளாவில் ஜீப் ஓட்டி வருகிறார். இவருக்கு வேல்மணி என்ற மனைவியும், கீர்த்தனா என்ற மகளும், ஹரீஸ் என்ற மகனும் உள்ளனர்.

    தமிழ்ச்செல்வனின் தங்கையின் மகன் சுதர்சனை கீர்த்தனா காதலித்து வந்துள்ளார். இதற்கு தமிழ்ச்செல்வன் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். தந்தையின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் கீர்த்தனா அவரையே திருமணம் செய்து கொண்டார்.

    இதனால் மன வேதனையடைந்த தமிழ்ச் செல்வன் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தட்டாஞ்சாவடி அருகே மகன்கள் வேலைக்கு செல்லாததால் விரக்தி அடைந்த தந்தை தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    தட்டாஞ்சாவடி கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் என்கிற சங்கர் (வயது 52). மரச்சாமான்கள் செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இவரது மனைவி ஜெயசக்தி 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    அவர்கள் சரியாக படிக்கவில்லை. வேலைக்கும் செல்லவில்லை. தாய் இல்லா பிள்ளைகளான உங்களை கஷ்டப்பட்டு வளர்த்துள்ளேன். நீங்கள் ஏதாவது வேலைக்கு செல்லுங்கள் என்று கூறி கண்ணன் வற்புறுத்தி வந்தார்.

    ஆனாலும், அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. இதனால் வீட்டில் நைலான் கயிறால் தூக்கு மாட்டி தொங்கினார். அதன் சத்தம் கேட்டு அவரது அண்ணன் ஓடி வந்தார். மற்றவர்களும் அங்கு வந்தனர்.

    அவர்கள் கண்ணனை தூக்கில் இருந்து இறக்கி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

    இது தொடர்பாக கோரி மேடு சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கபிஸ்தலம் அருகே கல்லூரிக்கு சென்ற மகள் மாயமானதால் மனமுடைந்த தந்தை வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள உம்பளப்பாடி தெற்குத் தெருவில் வசிப்பவர் செல்வமணி (வயது 50) சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமுதா. இவர்களது மகள் தேவிகா (18). கும்பகோணம் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் இவர் கடந்த 4-ந் தேதி கல்லூரிக்கு சென்ற தேவிகா அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதை அறிந்த அவரது தந்தை செல்வமணி உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மகளை தேடி பார்த்தார். ஆனால் தேவிகாவை காணாததால் செல்வமணி மனமுடைந்தார்.

    இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு வைத்திருந்த வி‌ஷ பூச்சி மருந்தை சாப்பிட்டு செல்வமணி மயங்கி விட்டார். மயங்கிய நிலையில் இருந்த செல்வமணியை உடனடியாக சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வமணி பலனின்றி பரிதாபமாக இறந்தார் .

    இது குறித்து அவரது மனைவி அமுதா கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்- இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடன்குடியில் வேறு மதத்தை சேர்ந்தவருடன் மகளுக்கு நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில், விரக்தி அடைந்த அந்த பெண்ணின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    உடன்குடி,:

    வேறு மதத்தை சேர்ந்தவருடன் மகளுக்கு நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில், விரக்தி அடைந்த அந்த பெண்ணின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடன்குடியில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சாதரக்கோன்விளையை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 47). இவர் உடன்குடி தேரியூரில் டீக்கடை வைத்து உள்ளார். இவருடைய மனைவி தேவி. இவர்களுக்கு 6 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களின் மூத்த மகளுக்கும், வேறு மதத்தை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க தேவி ஏற்பாடு செய்ததாக தெரிகிறது. இதற்கு ஜெயபால் ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இருந்த போதும் அதனை பொருட்படுத்தாமல் தேவி திருமணத்துக்கு நாள் குறித்து, அழைப்பிதழ் அடித்து உறவினர்களுக்கு கொடுத்து வந்தார். திருமணம் நாளை (வியாழக்கிழமை) நடக்க இருந்தது.

    தான் சொல்வதை கேட்காமல் தனது மகளுக்கு வேறு மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து வைக்க மனைவி முடிவு செய்ததால் ஜெயபால் கடந்த சில நாட்களாக விரக்தியுடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் கடையை முடித்து விட்டு ஜெயபால் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டில் யாரும் இல்லை. ஏற்கனவே மனவேதனையில் இருந்த அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து இது குறித்து உடனடியாக குலசேகரன்பட்டினம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் உடன்குடியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கோவை அருகே கண்ணாம்மூச்சி விளையாடிய போது தண்ணீர் தொட்டியில் விழுந்து மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை கணுவாய் அருகே உள்ள சி.வி.சி சாய் அவென்யூவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் அந்த பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி பூவிதா. இவர்களுக்கு தேவதர்சினி (4) என்ற மகளும், தேஜூ அஸ்வீன் (2) என்ற மகனும் உள்ளனர். நேற்று இரவு வீட்டில் இருந்த மணிகண்டன் தனது மகள், மகனுடன் சேர்ந்து கண்ணாம்மூச்சி விளையாட்டு விளையாடி கொண்டு இருந்தார்.

    அப்போது தேவதர்சினி வீட்டின் மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியின் அருகில் சென்று ஒளிந்து கொண்டார். தேஜூ அஸ்வீன் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த கார் அருகில் ஒளிந்து கொள்ள சென்றார். அப்போது அங்கு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் சிறுவன் தவறி விழுந்து பலியானான். குழந்தைகளை தேடி வெளியே வந்த மணிகண்டன் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி தனது மகன் தேஜூஅஸ்வின் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் தனது மகனின் சாவுக்கு தானே காரணமாகி விட்டோமே என மனவேதனை அடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தந்தை மற்றும் தம்பியை தேடி மாடியில் இருந்து இறங்கி வந்த தேவதர்சினி தந்தை தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். குழந்தையின் சத்தம் கேட்டு சமையல் செய்து கொண்டு இருந்த பூவிதா ஓடிவந்து பார்த்த போது கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பூவிதாவை சமாதானம் செய்தனர். பின்னர் தேஜூ அஸ்வினை தேடினர். ஆனால் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    பின்னர் இது குறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தேஜூஅஸ்வினை வீடு முழுவதும் தேடினர்.

    அப்போது வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து சிறுவனின் உடலை போலீசார் மீட்டனர். பின்னர் மணிகண்டன், தேஜூஅஸ்வின் ஆகியோரின் உடலை பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்தபகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மகன் குடிப்பழக்கத்தை கைவிட மறுத்ததால் தந்தை வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை உசிலம்பட்டி அருகேயுள்ள பூச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் மாயாண்டி (வயது 45). இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது மகன் ரஞ்சித்குமார்.

    குடிப்பழக்கத்துக்கு அடிமையான ரஞ்சித்குமார், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதையடுத்து மாயாண்டி, தனது மகனிடம் குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கண்டித்தார். ஆனாலும் ரஞ்சித்குமார் குடிப்பழக்கத்தை நிறுத்த வில்லை.

    இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மாயாண்டி சம்பவத்தன்று மாலையில் வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    உறவினர்கள் அவரை மதுரை அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாயாண்டி பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக ஜெயலட்சுமி உசிலம்பட்டி டவுன் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வாசு வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×