search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pesticides"

    • சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தில் உயிர் பூச்சிக்கொல்லிகள் உற்பத்தி பயிற்சி நடைபெற உள்ளது.
    • கிராம அறிவு மையத்தை அணுகி பயிற்சிக்கான விண்ணப்பத்தை பெறலாம்.

    புதுச்சேரி:

    புதுவை மா. சா. சுவாமி நாதன் ஆராய்ச்சி நிலை யத்தின் வளர்ச்சி ஒருங்கிணை ப்பாளர் கிரிஜா வெளியிட்டு ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    மத்திய அரசின் விவசாய விரிவாக்க திட்டத்தின் கீழ் புதுவை காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வில்லியனூர் பகுதி பிள்ளையார்குப்பம் மா. சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தில் உயிர் பூச்சிக்கொல்லிகள் உற்பத்தி பயிற்சி நடைபெற உள்ளது.

    இதில் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம். பயிற்சி 6 நாட்கள் நடக்கும். பயிற்சியில் தசகாவியம், அக்னி அஸ்திரம், பிர ம்மாஸ்திரம், கற்பூரகரை சல், வேப்பங்கொட்டை கரைசல், மீன் அமினோ அமிலம், ஐந்திலை கரைசல், இதுபோன்ற பல உயிர் பூச்சிக்கொல்லிகள் உற்பத்தி பயிற்சி அளிக்கப்படும்.

    பயிற்சியில் சேர 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதார் நகலுடன் ஆராய்ச்சி நிலையம் மற்றும் கிராம அறிவு மையத்தை அணுகி பயிற்சிக்கான விண்ண ப்பத்தை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாலமுருகனுக்கு அடிக்கடி கழுத்தில் வலி ஏற்பட்டுள்ளது.
    • நிலத்திற்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரது குடும்பத்தார்,

    கடலூர்:

    சிதம்பரம் அடுத்த வீரசோ ழகன் பகுதியை சேர்ந்த வர் பாலமுருகன் (வயது 50). விவசாயி. இவருக்கு கடந்த சில தினங்க ளுக்கு முன்பாக கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை நடை பெற்றது. இதையடுத்து சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த பாலமுருகனுக்கு அடிக்கடி கழுத்தில் வலி ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென கழுத்துப் பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதற்கு மாத்திரை உட்கொண்டும் வலி குறையாமல் துடித்துள்ளார். வலி பொருக்க முடியாத பால முருகன், நிலத்திற்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    அவரது குடும்பத்தார், பாலமுருகனை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்துபோனார். இது தொடர்பான புகாரின் பேரில் சிதம்பரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்திரபோஸ் விவசாய கூலி இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.
    • சந்திரபோஸ் வாயில் நுரை பொங்க மயங்கி கிடந்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே தரங்கம்பாடி நல்லாடை, கார்குடி பகுதியை சேர்ந்தவர் (மயிலாடுதுறை மாவட்டம்) சந்திரபோஸ் (வயது64). இவர் விவசாய கூலி வேலைசெய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு மனைவி ராதாவிடம் சந்திரபோஸ் மது குடிக்க பணம் கேட்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபப்பட்டு வெளியே சென்றவர் 10 மணி வரை வீடு திரும்பவில்லை.

    இந்நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் ஒருவர், நெடுங்காடு நல்லாத்தூர் மேலபடுகை சாலை பாலத்தில், சந்திரபோஸ், மது மற்றும் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடப்பதாக உறவினர் மூலம் ராதாவிற்கு தகவல் சென்றது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, சந்திரபோஸ் வாயில் நுரை பொங்க மயங்கி கிடந்தார். தொடர்ந்து, நெடுங்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று முதல் உதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்தி ரிக்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர், ராதா, நெடுங்காடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த மூன்று மாத காலமாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
    • சிகிச்சை பலனின்றி ஞானவேல் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே சிறு வத்தூர் 7-வது தெருவை சேர்ந்தவர் ஞானவேல் (வயது 40),ஆட்டோ டிரை வர். கடந்த மூன்று மாத காலமாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்ச லில் இருந்த ஞானவேல் நேற்று இரவு 10 வீட்டி லிருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் ஞான வேலுவை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஞானவேல் பரிதாபமாக உயிர் இழந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விருதுநகர் அருகே மகன் இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
    • நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கட்டய தேவன் பட்டியை சேர்ந்தவர் பாண்டி என்ற பெரியபாண்டி. இவரது கடைசி மகன் கடந்த மாதத்தில் திடீரென இறந்து விட்டார். இதனால் அவர் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரத்தில் மரத்திலிருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டதால் வெளியே செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரிய பாண்டி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 6 மருந்துகளுக்கு அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டது.
    • 1,220 லிட்டர் அளவுக்கு மருந்து விற்பனைக்கு இருந்தது.

    உடுமலை :

    விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தவிர்க்கும் நோக்கில் நச்சு த்தன்மை நிறைந்த பூச்சிக் கொல்லி மருந்து களான மோனோகுரோ ட்டோபாஸ், புரோபெனோ பாஸ், அசிபேட், சைபர்மெ த்ரின், குளோர்பைரிபாஸ் என 6 மருந்துகளுக்கு அரசு தடை விதித்து அரசாணை வெளி யிட்டது.

    ஆனால் அபாயக ரமான பூச்சி க்கொல்லி மருந்துகளை அரசு தடை செய்த போதும் திருப்பூரில் உள்ள உரக்கடைகளில் அவற்றின் விற்பனை தொடர்கிறது என்ற புகார் எழுந்துள்ளது. இது குறித்து விவசாய சங்கத்தினர் சிலர் கூறியதாவது:- விவசாயிகளின் பாது காப்பு கருதி பூச்சிக்கொல்லி மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் சில கடைகளில் அவை தொ டர்ந்து விற்கப்படுகின்றன. அந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை தென்னை விவசாயிகள், வெள்ளை ஈ தாக்குதலை தடுக்க பயன்படுத்துகின்றனர்.தென்னையில் தேங்காய் அளவு அதிகரிக்க இந்த மருந்து உதவுகிறது. சில வினியோகஸ்தர்கள், தென்னந்தோப்பு அதிகமு ள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் ஆன்லைன் வாயிலாக அத்தகைய மருந்துகளை கொள்முதல் செய்து விற்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர். திருப்பூர் மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் மாரியப்பன் கூறியதாவது:- அரசால் தடை செய்ய ப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்க கூடாது என அறிவுறுத்தியுள்ளோம்.

    திருப்பூர் மாவட்டத்தில் 208 உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துவிற்பனைக் கடைகளில்ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அரசால் தடை செய்ய ப்பட்ட,மோனோகு ரோட்டோபாஸ் 717 லிட்டர், புரோபெனோபாஸ் 160 லிட்டர், அசிபேட் 78.35 லிட்டர் புரோபெ னோபாஸ் மற்றும் சைபர்மெத்ரின் இணைந்த மருந்து 39.2 லிட்டர்., குளோர்பைரிபாஸ் மற்றும் சைபர்மெத்ரின் இணைந்த மருந்து 53.85 லிட்டர்., குளோர்பைரிபாஸ் மருந்து 179.55 லிட்டர்., என 1,220 லிட்டர் அளவுக்கு மருந்து விற்பனைக்கு இருந்தது. அரசின் தடை உத்தரவுக்கு பின் இந்த மருந்துகளை விற்ககூடாது என உத்தரவு வழங்க ப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். 

    • அபாயகரமான 6 வகை பூச்சிக்கொல்லி மருந்துகளை 60 நாட்களுக்கு தற்காலிகமாக அரசு தடை விதித்துள்ளது.
    • மஞ்சள் பாஸ்பரஸ் (ரேடால்) எலி மருந்து நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை வேளாண் இணை இயக்குனர் முருகானந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வேளாண் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி அபாயகரமான 6 வகை பூச்சிக்கொல்லி மருந்துகளை 60 நாட்களுக்கு தற்காலிகமாக அரசு தடை விதித்துள்ளது.

    இதன்படி அசிபேட், மோனோ குரோடோபாஸ், குளோரி பைரிபாஸ், புரோபனோபாஸ், குளோரி பைரிபாஸ், சைபர் மெத்ரின், புரோபனோபாஸ், குளோரி பைரிபாஸ் ஆகிய பூச்சிக்கொல்லி மருந்துகள் மார்ச் 1-ந்தேதி முதல் ஏப்ரல் 29-ந்தேதி வரை 60 நாட்களுக்கு அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.

    இதேபோல் 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் (ரேடால்) எலி மருந்து நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள பூச்சிக்கொல்லி விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இந்த 6 பூச்சிக்கொல்லி மருந்துகளை தடையை மீறி விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் நெல்லை மாவட்டத்தில் 39 கடைகளில் ஆய்வு மேற்கொண்டு ரூ.3 லட்சத்து 46 ஆயிரத்து 45 செலவில் பூச்சிக்கொல்லி களுக்கு 13 விற்பனை நிலையங்களில் விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • உரம் விற்பனைக்கு மேற்பட்ட தனியார் விற்பனை கடைகள் உள்ளன.
    • சிறப்பு அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வு செய்வார்கள்.

    மடத்துக்குளம் :

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், சாகுபடிக்கு தேவையான விதை, பூச்சிக்கொல்லி மருந்து, உரம் விற்பனைக்கு 75க்கும் மேற்பட்ட தனியார் விற்பனை கடைகள் உள்ளன.

    மேலும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாகவும், உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. தோட்டக்கலைத்துறை சார்பில் வினியோகிக்கப்பட்ட பப்பாளி விதைகள் போலியானது எனவும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் 3 வட்டார விதை மற்றும் உரம் விற்பனையாளர்கள், தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை, விதைச்சான்று துறையினர் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற சிறப்பு கூட்டம் உடுமலை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்தது.

    இதில் போலி விதைகளால் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுகிறது. அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகளையும் விற்பனை செய்கின்றனர்.விவசாயிகள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இந்த மருந்துகளை வாங்கி பயன்படுத்தும் போது விளைபொருட்களில் நஞ்சுத்தன்மை அதிகரித்து மக்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதே போல் அந்தியூர் அருகே போலி உரம் தயாரிக்கும் தொழிற்சாலை விவசாயிகளால் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அத்தகைய நிலை மீண்டும் ஏற்படக்கூடாது. தற்போதும் வேப்பம்புண்ணாக்கில் கலப்படம் செய்கின்றனர். காலாவதியான விதைகளை விற்கின்றனர்.முளைப்புத்திறன் இல்லாத விதைகளால் விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகின்றனர். மிளகாய், கத்தரி, தக்காளி சாகுபடியில் மகசூல் பாதியாகி விட்டது.பயோ பெர்டிலைசர் என்ற பெயரில் எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் பல்வேறு பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

    இதே நிலை நீடித்தால் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் நஷ்டத்தால் சாகுபடியை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இவ்வாறு விவசாய சங்க பிரதிநிதிகள் பேசினர்.

    விதை சான்றுத்துறை துணை இயக்குனர் சுரேஷ்ராஜன் பேசியதாவது:- தற்போது விவசாயிகள் பெரும்பாலும் வீரிய ஒட்டு ரக விதைகளையே பயன்படுத்துகின்றனர். எனவே விதை விற்பனையில் ஈடுபடுபவர்கள், உற்பத்தியாளர்களிடம் விதை வாங்கும் போது அனைத்து அம்சங்களையும் சரிபார்த்து வாங்க வேண்டும்.

    துறை சார்பில் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலாவதியான விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

    1967ல் உருவாக்கப்பட்ட விதை சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது புதிய விதை சட்டம் அமலாக்கப்பட்டுள்ளது.எனவே வட்டார வாரியாக வேளாண் உதவி இயக்குனர்களே நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

    திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மாரியப்பன் பேசியதாவது:- விதை, உரம் விற்பனையாளர்கள், சட்டத்தின் அனைத்து விதிகளையும் முறையாக பின்பற்ற வேண்டும்.புதிதாக விதைகளை அறிமுகப்படுத்தும் போது தரம் குறித்த பரிசோதனைகளை செய்வது அவசியம்.தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலை எழுதி வைத்து கொண்டு விற்பனையில் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.அனைத்து கடைகளிலும் இருப்பு மற்றும் விலைப்பட்டியல் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். கடைகளுக்கு கடை விலை வித்தியாசம் இருக்கக்கூடாது.

    பூச்சி மற்றும் நோய்த்தாக்குதலுக்கு பரிந்துரை செய்யப்படும் மருந்துகள் குறித்து விழிப்புணர்வு தேவையாகும். எனவே வரும் காலங்களில் இதுசார்ந்த பட்டயப்படிப்பு படித்து முடிப்பவர்களுக்கே விதை மற்றும் உரம் விற்பனைக்கான உரிமம் வழங்கப்படும்.

    விதிமுறைகளை முறையாக பின்பற்றுவது குறித்து சிறப்பு அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வு செய்வார்கள். விதிமுறை மீறல் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    எவ்விதமான நேரடி தொடர்பு இல்லாமல் நடவடிக்கைகள் குறித்து தபாலில் மட்டுமே தெரிவிக்கப்படும். எனவே விற்பனையாளர்கள் அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றாவிட்டால் பாரபட்சம் இல்லாமல் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார். தொடர்ந்து வேளாண் இணை இயக்குனர் தோட்டக்கலை சுரேஷ்ராஜன் உள்ளிட்ட பலர் பேசினர். உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி நன்றி கூறினார். இதில் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டார விதை, உரம் விற்பனையாளர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    • இயற்கை விவசாயிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    திருவண்ணாமலை:

    கலசபாக்கம் விண்ணுவாம்பட்டு ஏரிகரையில் இயற்கை விவசாயிகள் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் வரும் 9-ந் தேதி போளூரில் மரபணு மாற்றப்பட்ட கடுகு விதையை அனுமதிக்காதே என மத்திய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    மேலும் உணவை நஞ்சாக்கும் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்துகளை தடை செய்யவும் உணவு கலப்படத்தை தடுக்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் கலசப்பாக்கம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த இயற்கை விவசாயிகள் மீனாட்சிசுந்தரம், லெனின், ராஜேந்திரன், சுமதி, கோபி, உமாசங்கர், பிரகலாதன், கமலநாதன்உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அங்கக வேளாண்மையில் முற்றிலுமாக பூச்சிக்கொல்லி தவிர்க்கப்பட்டு பயிர் சுழற்றி கட்டாயப்படுத்தப்படுகிறது.
    • வரவேற்பு, பதப்படுத்துதல், விநியோகம் செய்தல் ஆகியன பற்றிய முழு விபரங்களை எடுத்து கூறினார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டா ரம், இரண்டாம்புளிக்காடு கிராமத்தில், அட்மா திட்டத்தின் கீழ் அங்கக பண்ணையம் குறித்த மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.

    பயிற்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் வளர்மதி நாகராஜன். முன்னிலை வகித்தார்.

    சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.சாந்தி தலைமை வகித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது, "செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணு மாற்றப்பட்ட உயிரினம் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயிரியல் (பூச்சி, நோய் மற்றும் களை) நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை பயன்படுத்தி விவசாயம் செய்யலாம்" என்றார்.

    அங்ககப் பண்ணைய சாகுபடியாளர் ஆர்.கமலக்க ண்ணன் பேசுகையில், "விவசாயிகள் அனைவரும் மண்ணின் அங்ககத் தன்மையை பராமரித்தல், மண் நுண்ணுயிர்களின் செயல்பாட்டினை அதிகரித்தல், மண்வளத்தை நீண்ட நாள் பாதுகாத்தல், நிலத்திற்கு தகுந்த பயிர் வகை உபயோகித்தல், உயிரியல் தழைச்சத்து நிலைநிறுத்தல் மற்றும் அங்ககப் பொருட்களின் சுழற்சி முறை மூலமாக தழைச்சத்து தன்னை அடையப் பெறுகிறது.

    அங்கக வேளாண்மையை பின்பற்று பவர்கள் உற்பத்தியின் தரத்தையும், அளவையும் அதிகப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

    அம்முயற்சி பாதுகாப்பானதாகவும், சிக்கனமானதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு செய்தால் நமது சுற்றுச்சூழலை பேணிக்காக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு தீங்கு விளைவிக்காததாகவும் அமையும்" என்றார்.

    அட்மா திட்டம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் எம்.சுரேஷ், பேசுகையில் அங்கக வேளாண்மை பாரம்பரிய வேளாண்மையிலிருந்த அடிப்படையிலேயே பல மாற்றங்களை கொண்டது.

    அங்கக வேளாண்மை இயற்கையுடன் இணைந்து செயல்படுவதால் இயற்கை சூழலுக்கு பாதுகாப்பாக அமைகிறது.

    அங்கக வேளாண்மையில் முற்றிலு மாக பூச்சிக்கொல்லி தவிர்க்கப்பட்டு பயிர் சுழற்றி கட்டாயப்படுத்தப்படுகிறது" என்றார்.

    அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆ.தமிழழகன் பேசுகையில், அங்கக வெளியீட்டுப் பொருட்களின் சந்தை நிலவரம், வரவேற்பு, பதப்படுத்துதல், விநியோகம் செய்தல் ஆகியன பற்றிய முழு விபரங்களையும் எடுத்துக் கூறினார்.

    ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ரத்தினம், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் கு.நெடுஞ்செழியன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த சிறுமி பரிதாபமாக இறந்தார்.
    • சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள அரச குலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு (வயது 33). விவசாயியான இவருக்கு மனைவி மற்றும் 3 வயதில் சஞ்சனா என்ற பெண் குழந்தை உள்ளது.சம்பவத்தன்று தோட்டத்தில் பூச்சி கொல்லி மருந்து தெளிக்க ராமு தனது மனைவி மற்றும் மகளுடன் சென்றுள்ளார்.

    அங்கு பூச்சிக்கொல்லி மருந்தை தண்ணீர் கலந்து ராமுவும் அவரது மனைவி யும் அதனை பயிர்களுக்கு தெளிக்க சென்று விட்டனர். காலி பாட்டிலை அப்புறப்படுத்தாமல் ராமு அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிட்டதாக தெரி கிறது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பூச்சிக்கொல்லி மருந்தின் காலி பாட்டிலை எடுத்து அதில் தண்ணீரை ஊற்றி குடித்ததாக தெரி கிறது.

    சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய மகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமு உடனே காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிறு சிறுமியின் உடல் நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சனா பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஆவியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெற்றோர் அஜாக்கிர தையாக இருந்ததால் சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×