search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அபாயமான பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்கக்கூடாது - உரக்கடைகளுக்கு அதிகாரிகள் உத்தரவு
    X

    கோப்புபடம்.

    அபாயமான பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்கக்கூடாது - உரக்கடைகளுக்கு அதிகாரிகள் உத்தரவு

    • 6 மருந்துகளுக்கு அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டது.
    • 1,220 லிட்டர் அளவுக்கு மருந்து விற்பனைக்கு இருந்தது.

    உடுமலை :

    விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தவிர்க்கும் நோக்கில் நச்சு த்தன்மை நிறைந்த பூச்சிக் கொல்லி மருந்து களான மோனோகுரோ ட்டோபாஸ், புரோபெனோ பாஸ், அசிபேட், சைபர்மெ த்ரின், குளோர்பைரிபாஸ் என 6 மருந்துகளுக்கு அரசு தடை விதித்து அரசாணை வெளி யிட்டது.

    ஆனால் அபாயக ரமான பூச்சி க்கொல்லி மருந்துகளை அரசு தடை செய்த போதும் திருப்பூரில் உள்ள உரக்கடைகளில் அவற்றின் விற்பனை தொடர்கிறது என்ற புகார் எழுந்துள்ளது. இது குறித்து விவசாய சங்கத்தினர் சிலர் கூறியதாவது:- விவசாயிகளின் பாது காப்பு கருதி பூச்சிக்கொல்லி மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் சில கடைகளில் அவை தொ டர்ந்து விற்கப்படுகின்றன. அந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை தென்னை விவசாயிகள், வெள்ளை ஈ தாக்குதலை தடுக்க பயன்படுத்துகின்றனர்.தென்னையில் தேங்காய் அளவு அதிகரிக்க இந்த மருந்து உதவுகிறது. சில வினியோகஸ்தர்கள், தென்னந்தோப்பு அதிகமு ள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் ஆன்லைன் வாயிலாக அத்தகைய மருந்துகளை கொள்முதல் செய்து விற்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர். திருப்பூர் மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் மாரியப்பன் கூறியதாவது:- அரசால் தடை செய்ய ப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்க கூடாது என அறிவுறுத்தியுள்ளோம்.

    திருப்பூர் மாவட்டத்தில் 208 உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துவிற்பனைக் கடைகளில்ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அரசால் தடை செய்ய ப்பட்ட,மோனோகு ரோட்டோபாஸ் 717 லிட்டர், புரோபெனோபாஸ் 160 லிட்டர், அசிபேட் 78.35 லிட்டர் புரோபெ னோபாஸ் மற்றும் சைபர்மெத்ரின் இணைந்த மருந்து 39.2 லிட்டர்., குளோர்பைரிபாஸ் மற்றும் சைபர்மெத்ரின் இணைந்த மருந்து 53.85 லிட்டர்., குளோர்பைரிபாஸ் மருந்து 179.55 லிட்டர்., என 1,220 லிட்டர் அளவுக்கு மருந்து விற்பனைக்கு இருந்தது. அரசின் தடை உத்தரவுக்கு பின் இந்த மருந்துகளை விற்ககூடாது என உத்தரவு வழங்க ப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×