search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே குடும்ப தகராறில் ஆட்டோ டிரைவர்  தற்கொலை
    X

    பண்ருட்டி அருகே குடும்ப தகராறில் ஆட்டோ டிரைவர் தற்கொலை

    • கடந்த மூன்று மாத காலமாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
    • சிகிச்சை பலனின்றி ஞானவேல் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே சிறு வத்தூர் 7-வது தெருவை சேர்ந்தவர் ஞானவேல் (வயது 40),ஆட்டோ டிரை வர். கடந்த மூன்று மாத காலமாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்ச லில் இருந்த ஞானவேல் நேற்று இரவு 10 வீட்டி லிருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் ஞான வேலுவை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஞானவேல் பரிதாபமாக உயிர் இழந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×