என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
பூச்சிக் கொல்லி மருந்துகள் உற்பத்திக்கான பயிற்சி
- சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தில் உயிர் பூச்சிக்கொல்லிகள் உற்பத்தி பயிற்சி நடைபெற உள்ளது.
- கிராம அறிவு மையத்தை அணுகி பயிற்சிக்கான விண்ணப்பத்தை பெறலாம்.
புதுச்சேரி:
புதுவை மா. சா. சுவாமி நாதன் ஆராய்ச்சி நிலை யத்தின் வளர்ச்சி ஒருங்கிணை ப்பாளர் கிரிஜா வெளியிட்டு ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-
மத்திய அரசின் விவசாய விரிவாக்க திட்டத்தின் கீழ் புதுவை காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வில்லியனூர் பகுதி பிள்ளையார்குப்பம் மா. சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தில் உயிர் பூச்சிக்கொல்லிகள் உற்பத்தி பயிற்சி நடைபெற உள்ளது.
இதில் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம். பயிற்சி 6 நாட்கள் நடக்கும். பயிற்சியில் தசகாவியம், அக்னி அஸ்திரம், பிர ம்மாஸ்திரம், கற்பூரகரை சல், வேப்பங்கொட்டை கரைசல், மீன் அமினோ அமிலம், ஐந்திலை கரைசல், இதுபோன்ற பல உயிர் பூச்சிக்கொல்லிகள் உற்பத்தி பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியில் சேர 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதார் நகலுடன் ஆராய்ச்சி நிலையம் மற்றும் கிராம அறிவு மையத்தை அணுகி பயிற்சிக்கான விண்ண ப்பத்தை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






