search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளியன்று மகன் கறி சாப்பிட வராததால் தந்தை தற்கொலை
    X

    தீபாவளியன்று மகன் கறி சாப்பிட வராததால் தந்தை தற்கொலை

    • தாரமங்கலம் அருகே உள்ள தொளசம்பட்டி பிரிவு ரோடு கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்தவர் செல்வபெருமாள் (47).
    • மகனை விட்டுவிட்டு தீபாவளி கொண்டாட முடியாத மனவேதனையில் இருந்த செல்வபெருமாள் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள தொளசம்பட்டி பிரிவு ரோடு கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்தவர் செல்வபெருமாள் (47).

    தாயுடன் சண்டை

    கூலி தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் மூர்த்தி (25) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது தாய் கோவிந்தம்மாளிடம் சண்டை போட்டுக்கொண்டு தாரமங்கலத்தில் உள்ள ஒரு பூக்கடையில் தங்கி வேலை செய்து வருகிறார்.

    கடந்த 3 மாதமாக மூர்த்தி வீட்டிற்கு வராததால் தந்தை செல்வபெருமாள் தீபாவளியன்று வீட்டில் கறி குழம்பு சமைத்து வைத்துவிட்டு மகனை சாப்பிடுவதற்காக அழைக்க சென்றுள்ளார்.

    அப்போது பூக்கடையில் இருந்த மூர்த்தி தனது தந்தையிடம் கோபமாக பேசி வீட்டிற்கு வர முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

    தற்கொலை

    இதனால் மகனை விட்டுவிட்டு தீபாவளி கொண்டாட முடியாத மனவேதனையில் இருந்த செல்வபெருமாள் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த செல்வபெருமாள் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

    இது பற்றி செல்வபெருமானின் மனைவி கோவிந்தம்மாள் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகனை விட்டுவிட்டு பண்டிகை கொண்டாட முடியாமல் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தாரமங்கலம் அருகே உள்ள தொளசம்பட்டி பிரிவு ரோடு கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்தவர் செல்வபெருமாள் (47).

    Next Story
    ×